Monday, September 10, 2012

Cinema : உறக்கமற்றவன் 1

 
 
 
 
 
 
 
 
சினிமாவில் உதவி இயக்குநர்கள் என்பவர்கள் ஒரு முக்கியமான இனம். தம் சுயத்தை மறைத்துக்கொண்டு இயக்குநரின் படைப்புக்கு வடிவமும் வனப்பும் கொடுக்கிறவர்கள். ஒரு நாளைக்கு 25 மணிநேரத்துக்கும் மேல் உழைக்கிற வர்க்கம். ஆயினும் பெரிய பலன் இருக்காது. என்றாவது ஒருநாள் இயக்குநராகிவிடுவோம் என்னும் கனவு கலந்த நம்பிக்கையைத் தின்று ஜீவிக்கும் உதவி இயக்குநர்களைப் பற்றியது இந்தத் தொடர். உதவி இயக்குநர் ஆக விரும்புகிறவர்களுக்கும் உதவி இயக்குநர்களாக இருப்பவர்களுக்கும் இது உதவும். மற்றவர்களுக்கு ஒரு புதிய உலகின் பழைய மனிதர்களைப் புரிந்துகொள்ள வழி செய்யும்.
 
 
 
அத்தியாயம் 1
 
 
 
தவி இயக்குனர்களே இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா?
 
 
வேண்டுமானால் ஒரு புகைப்படத்தை எடுக்கலாம். திரைப்படத்தை முடியாது. இவர்கள் இல்லாமல் சினிமாவே இல்லை. குண்டூசி தேவைப்படுகிறதா? எங்கய்யா அவரு… என்று இயக்குனர்களின் பார்வை இவர்கள் பக்கம்தான் திரும்பும். பீரங்கி தேவைப்படுகிறதா? ஏம்ப்பா நெட்ல தேடி அதுக்கு பர்மிஷன் வாங்குறது எப்படின்னு பாரு… என்று கட்டளையிடுவதும் இவர்களிடம்தான்.
தமிழ்சினிமாவில் 24 சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கத்தினர்களின் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது.
 
 
இத்தனை சங்கத்தையும் தனது திறமையால் ஒருங்கிணைப்பவர்தான் உதவி இயக்குனர். இத்தனை குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டுகிற அசாத்தியமான சாரதி நாம்தான் என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக கடிவாளத்தைப் பிடித்திருக்கிற வேலைதானே என்று அலட்சியம் காட்டினால் குதிரைகள் அத்தனையும் சேர்ந்து குப்புறத் தள்ளிவிடுகிற அபாயமும் உண்டு.
எந்நேரமும் விழிப்போடு இருப்பவரே உதவி இயக்குனர். இரண்டு உதாரணங்களுடன் இதை ஆரம்பிக்கலாம்.
 
 
பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் இன்றைய பிரபல இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. இவர் தொழில் கற்றுக் கொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் இது.
 
 
படத்தின் ஹீரோ, ஹீரோயின் இருவரும் வெவ்வேறு படங்களில் நடிக்கப் போய்விட்டார்கள். அது கடைசி நாள் படப்பிடிப்பு. விட்டுப் போனவற்றுள் ஒரு முக்கியமான காட்சியை எடுக்க வேண்டி, முதல் நாளே சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஒரு கட்டளையிட்டிருந்தார், கேபி.
‘ஒரு க்ளோஸ்-அப் எடுக்க வேண்டியிருக்கு. ஹீரோ, ஹீரோயினுக்கு டூப் போட்டுக்கலாம். யாராவது ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்திரு. கால் அழகா இருந்தா போதும். கால் விரலில் ஹீரோ மெட்டியை மாட்டுவது மாதிரி காட்சி. எடுத்துட்டா பூசணிக்காய் உடைச்சிடலாம்’ என்றார்.
 
 
இந்த பூசணிக்காய் உடைப்பது என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான சம்பிரதாயம். படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளில் ‘உஸ், அப்பாடா…’ என்று அத்தனை நாள் டென்ஷனையும் போட்டு உடைக்கிற சென்ட்டிமென்ட்தான் பூசணிக்காய் உடைப்பு!
 
 
 

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
 
 
குருநாதர் சொன்னபடி மறுநாளே ஒரு துணை நடிகையை செட்டுக்கு வரவழைத்து விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. மெட்டியை மாட்டி விடுகிற டூப்ளிகேட் ஹீரோவும் ரெடி.
 
 
பாலசந்தருக்கு ஒரு வழக்கம். அன்றைய படப்பிடிப்புக்குத் தேவையான எல்லா ஐட்டமும் உள்ளே நுழையும்போதே தயாராக இருக்க வேண்டும். எப்போது எது மனதில் தோன்றுகிறதோ, அதைப் படமாக்குவார்.
காலுக்குத்தான் ஷாட் என்பது தெரியாமல் ஃபுல் மேக்கப்போடு காலையில் இருந்தே காத்திருந்தார் துணை நடிகை. நேரம் போக வேண்டுமே? போகிற வருகிற தொழிலாளிகள் எல்லாம் இவரிடம் வழிந்து நெளிந்து கொண்டிருக்க, வேறொரு பக்கம் படப்பிடிப்பு துரிதமாக நடந்துகொண்டிருந்தது. எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்தபிறகு இறுதியாக இதற்கு வந்த டைரக்டர், “எங்கய்யா அந்த பொண்ணையும் பையனையும் வரச்சொல்லு” என்றார்.
முந்தைய காட்சிகளில் ஹீரோயின் கட்டியிருந்த புடைவையைத் தழையத் தழைய கட்டிக்கொண்டு வந்து நின்றார் டூப்ளிகேட் நாயகி. கையில் மெட்டியுடன் கீழே உட்கார்ந்தார் டூப்ளிகேட் நாயகன். “ஒரு மானிட்டர் போயிடலாம்ப்பா” என்று உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டு, “தம்பி அந்த மெட்டிய மாட்டு பார்க்கலாம்” என்றார் பாலசந்தர்.
 
 
அங்குதான் அதிர்ச்சி. புடைவையை லேசாக உயர்த்தி மெட்டியைக் கொண்டுபோன பையன் பேந்தப் பேந்த விழிக்க, அதைவிட மிரட்சியாக விழித்தார் சுரேஷ்கிருஷ்ணா.
 
 
அந்த பெண்ணுக்கு மெட்டி அணிகிற விரல் மட்டும் இல்லை!
கோபத்தில் முகம் சிவந்தது பாலசந்தருக்கு. வேறொரு பெண்ணை அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தலாம் என்றால், அதற்கான அவகாசம் சுத்தமாக இல்லை. மறுநாள் படப்பிடிப்பைத் தள்ளிப்போடவும் முடியாது. இந்த ஒரு க்ளோஸ்-அப்புக்காக ஒரு லட்ச ரூபாய் எப்படி செலவு செய்ய முடியும்? அதுமட்டுமல்ல, அன்றைய தினம் பூசணிக்காய் உடைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். வேறு வழியில்லாமல் அந்தக் காட்சியை எடுக்காமலேயே படத்தை வெளியிட்டார் பாலசந்தர்.
 
 
உதவி இயக்குனர் செய்த தவறென்ன? முதல்நாளே டைரக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார், இதுதான் காட்சியென்று. பெண்ணை அழைத்து வந்தவர், அவளது கால்களையும் விரல்களையும் கவனித்திருக்க வேண்டுமல்லவா? இதுதான் காட்சி என்று அந்தப் பெண்ணிடம் கூறியிருந்தாலாவது பிரச்னையை வெளிப்படையாகச் சொல்லியிருப்பாள். அதையும் செய்யவில்லை. ஒரு மிகப்பெரிய இயக்குனர், தான் எடுக்க நினைத்த ஒரு காட்சியை எடுக்க முடியாமலே போனது யாருடைய தவறு?
 
 
அதே சுரேஷ்கிருஷ்ணாதான் பின்னாளில் ரஜினி, கமல் என்ற இருபெரும் நட்சத்திரங்களை வைத்து வெற்றிப்படங்களையும் கொடுத்தார். அனுபவங்கள் ஒவ்வொன்றுமே பாடம் அல்லவா?
 
 
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அந்த உதாரணத்தைப் பார்த்தோம். ஓர் உதவி இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு சாம்பிள் பார்த்துவிடலாம். .
 
 

’சத்யம்’ திரைப்படத்தில் விஷால்
விஷால், நயன்தாரா நடித்து, ராஜசேகர் இயக்கிய படம் சத்யம். படப்பிடிப்பில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. நேப்பியர் பாலம் அருகே விடியற்காலையில் கூடியது யூனிட். சன் ரைஸ் ஷாட். சூரியன் மேலெழும்பி வருவதற்குள் ஒரு சண்டைக்கான முன்னோட்டத்தை எடுத்து முடித்திருந்தார்கள். அதற்குள் வெளிச்சம் தனது அடர்த்தியை அதிகப்படுத்த, மீதிக் காட்சியை சூரியன் அடங்குகிற நேரத்தில் எடுத்து, விடியற்காலைக் காட்சியாக மேட்ச் செய்து கொள்ளலாம் என்பது ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஐடியா.
 
 
மாலை நேரம். திட்டமிட்டபடி சுமார் எண்பது பேர் கொண்ட படப்பிடிப்புக்குழு கோவளம் பீச்சில் கூடியது. கதைப்படி வில்லன் தனது துப்பாக்கியை விஷால் நெற்றியில் வைக்க வேண்டும். ஸ்கிரிப்ட் பேப்பரில் எழுதியிருப்பது போல கரையிலிருந்து சில அடி துரத்தில் கடல் நீருக்கு நடுவே அமைந்துள்ள குட்டிப்பாறை ஒன்றில் நின்று கொண்டார் விஷால். அவரது நெற்றியில் துப்பாக்கியை வைக்க வேண்டிய வில்லனும் தயார். மணி ஐந்தரைக்கு வந்ததும் கேமிராவை ஓடவிடலாம் என்பது ஒளிப்பதிவாளரின் முடிவு.
சரியாக ஐந்தரை. ஓ.கே என்பது போல டைரக்டரும் சைகை காட்ட, துப்பாக்கிய கொடுங்க சார் என்றார் வில்லன். அப்போதுதான் தெரிந்தது. முக்கிய பிராப்பர்ட்டியான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வரவேயில்லை யாரும்! ஆர்ட் டிபார்ட்மென்ட் பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர், அங்கிருந்தால் அடி விழும் என்று நினைத்தாரோ என்னவோ, கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப். (இது போன்ற இக்கட்டான நேரத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர் ஓடிவிடுவது சினிமா வழக்கம். கோபம் அடங்கிய பின் குட்டிப்பூனை மாதிரி நைசாக வந்து யூனிட்டில் இணைந்து கொள்வார்கள்)
 
 
படத்தின் ஹீரோ மட்டுமல்ல, தயாரிப்பாளரும் விஷால் என்பதால் அவரது கண்களில் பொறி பறக்கிறது. “என்ன சார் வேலை பார்க்கிறீங்க” என்று அத்தனை பேரையும் காய்ச்ச, மின்னலாக ஒரு வேலை செய்தார் ஒரு அசோசியேட் இயக்குனர்.
 
 
சூரியன் மறையும் இந்த அரை மணி நேரத்திற்குள் இந்தக் காட்சியை எடுக்கவில்லை என்றால், இதற்காக மறுநாளும் இதே யூனிட், இதே இடத்தில் கூட வேண்டும். செலவு நிச்சயம் ஒரு லட்சத்திற்குக் குறையாமல் ஆகும். தேவையா அது? கொஞ்சம் கூட கூச்சமோ, பயமோ இல்லாமல் அங்கே பாராவுக்கு வந்திருந்த காவல் துறை அதிகாரியிடம், “சார் உங்க துப்பாக்கியை கொடுத்திங்கன்னா…” என்று தயக்கத்தோடு தலை சொறிந்தார்.
 
 
அவ்வளவுதான். கடும் கோபம் வந்தது அந்த அதிகாரிக்கு. “ஏன்யா, நீ என்ன லூசா?” என்றார் ஆத்திரம் அடங்காமல்.
 
 
“மேலதிகாரிகளுக்குத் தெரிஞ்சா என் வேலை போயிடும் தெரியுமா. நான் தர மாட்டேன்” என்று அந்த இடத்திலிருந்தே அகல முற்பட்டார். அவர் மீது பாய்ந்தாவது துப்பாக்கியைப் பிடுங்கிவிட வேண்டும் என்கிற அளவுக்கு பரபரப்பான அசோசியேட், “அண்ணே, ப்ளீஸ். அதில இருக்கிற குண்டையெல்லாம் எடுத்துட்டு கொடுங்கண்ணே. ஒரு அஞ்சே நிமிஷம். உங்க கையில பத்திரமா சேர்த்திர்றேன்” என்று கெஞ்ச, விஷாலும் தனது பங்குக்கு ஓடிவந்தார் அதிகாரியிடம்.
 
 
கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்ட போலீஸ் அதிகாரி, “சார். நீங்க தண்ணிக்கு மேல எடுக்கிறீங்க. தவறி தண்ணியில விழுந்திச்சின்னா என் வாழ்க்கையே போயிடும். வேணாம்” என்றார் கெஞ்சாத குறையாக. “இல்ல சார். படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே நீங்களும் வந்து நின்னுக்கலாம். கடல் பகுதி என்பதால் ஏற்கெனவே சில மீனவர்களையும் செக்யூரிடிக்கு வச்சிருக்கோம். துப்பாக்கி கீழே விழவே விழாது. விழுந்தாலும் எடுத்துக் கொடுக்கதான் இவங்க” என்றெல்லாம் மந்திரம் போட்டு துப்பாக்கியைக் கைப்பற்றினார்கள்.
 
 
நினைத்த மாதிரியே பத்தே நிமிடத்தில் ஷாட்டை முடித்துவிட்டு பத்திரமாக துப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
 
 
அந்த அசோசியேட் இயக்குனர் காவல் துறை அதிகாரியை அணுகி அவரது துப்பாக்கியைக் கேட்காமல் போயிருந்தால், மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கூடியிருக்கும். நினைத்த மாதிரி காட்சி அமைந்திருக்குமா என்பதும் சந்தேகம்.
 
 
இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனுக்கும் ஒரு மோசமான அனுபவம் நேர்ந்தது.
 
 
‘பஞ்சு மெத்தைக் கிளியே’ என்றொரு பாடல் அப்படத்தில் உண்டு. இதை செஞ்சி அருகே படமாக்க நினைத்திருந்தார் சிம்புதேவன். அதிகாலையில் சென்னையில் இருந்து கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்குப் போய்விட்டார்கள். நடிக்க வேண்டிய நடிகர் நடிகைகளும் வந்தாயிற்று. காலை டிபனை முடித்துவிட்டு லொகேஷனில் கேமிராவையும் வைத்துவிட்டார். ஷாட் வைக்கப் போகும்போதுதான் தெரிந்தது. பாடலைப் பதிவு செய்து வைத்திருக்கிற நாகராவை எடுத்துக் கொண்டு வரவில்லை என்பது. இந்த வேலையை கவனிக்க வேண்டிய உதவி இயக்குனர் பதறிப் போய் நிற்க, யாரைக் கடிந்து கொள்வது?
 
 
திரும்பி சென்னைக்கு வந்தால் அன்றைய படப்பிடிப்புக்கான செலவுகளை நஷ்டக்கணக்கில்தான் சேர்க்க முடியும். தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பு கேன்சல் ஆனதற்கு இப்படி ஒரு காரணத்தைச் சொல்வது நாகரிகமாகவும் இருக்காது. என்ன செய்வது என்று விரல் நகத்தைக் கடித்துத் துப்பிய சிம்பு தேவனுக்கு ஒரு யோசனை வந்தது. தான் போட்டுக் கேட்பதற்காக அந்தப் பாடலை அவர் ஒரு கேசட்டில் தனியே பதிவு செய்து வைத்திருந்தார். அதை ஒரு மைக் முன் வைத்து பாட வைத்தார். ஒவ்வொரு வரியையையும் ரிவைண்ட் செய்து செய்து படமாக்கினார்.
 
 
கருத்துக்குத் தெரிந்தே இதில் ஒரு தவறு நிகழும். அதாவது நாகராவுக்கும் இந்த டேப் பதிவுக்கும் இரண்டு வினாடி வித்தியாசம் வரும். அதனால் எடிட்டிங்கில் பிரச்னை ஆகும். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் அவர்.
 
 
உதவி இயக்குநராக இருந்த காலத்தில் சமாளித்த அனுபவங்கள் சொல்லிக்கொடுத்த பாடம்!
 
Thanks: Tamilpaper.com
 
 
-தொடரும்-

Sunday, September 9, 2012

இது எப்படியிருக்கு?






வார்த்தைகள் கவனம்!






 

திட்டமிட்டுச் செய்யப்படாத சில விடயங்கள் எதேச்சையாக சுவாரசியமானதாக அமைந்து விடுவதுண்டு. அவற்றில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் விடயங்களுமுண்டு மாறாக தர்ம - அடி வாங்கித் தரும் விடயங்களுமுண்டு.


எடுத்துக் காட்டாக அமிர்தலிங்கம் என்பவர் தனது மகனுக்கு எதேச்சையாக யோக்கியன் என்றும் குகதாசன் எனும் ஒருவர் தனது மகனுக்கு ரங்கன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகன்களின் பெயர்கள் தமிழில் இனிஷயலுடன் எழுதப்பட்டால் எப்படி அமையும் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.


அதுபோல ஒரு நகரின் மத்தியில் மரணச் சடங்குகள் சேவை புரியும் மலர்ச்சாலை ஒன்றுள்ளது. அதன் முகப்பிலே 'அமில மலர்ச்சாலை' என்றுள்ளது. அமில என்பது அதன் உரிமையாளரது பெயர்தான். பாருங்கள், எப்படியான அர்த்தம் தருகின்றது என்பதை.
'சதுரங்க விளையாட்டு மைதானம்' என்பது செஸ் விளையாடும் இடமல்ல என்பதுதான் வேடிக்கை. சதுரங்க எனும் ஊர்ப் பெரியவரின் நினைவாக அமைக்கப்பட்ட மைதானம்தான்.
 
 
-'Mutur' Mohd. Rafi

சிறுகதை : மூதூர் மொகமட் ராபி

சம்பள நிலுவை!



மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், 2ம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு வலயக்கல்வி அலுவலக வாசலில்  போய் நான் இறங்கியபோது நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.


'ம்ம்..என்னப்பா இது....? இங்கேயாப்பா..வந்திருக்கீங்க... ம்ம்.. எனக்கேலா பசிக்கும்' என்று பழைய அனுபவத்தினாலோ என்னவோ அழத் தொடங்கினான் நிரோசன்.

'இல்லடா கண்ணா...! என்ட செல்லம் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்டா..முந்தி மாதிரி சுணங்க மாட்டன் அப்பா. கடிதத்தைக் காட்டினதும் செக்கத் தருவாங்க. அதை வேண்டினதும் உடனே வாறதுதான் இப்படிக் கதிரையில இருடா, ராஜால்ல!' என்று அவனை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி அழைத்தச் சென்றேன். அலுவலக வராந்தாவில் கையில் தோல் பையும் தொப்பையுமாக சிலர் பேசிக்கொண்டே எங்களைக் கடந்து சென்றார்கள்.

 வரவேற்பறையில் இருந்த பிளாஸ்டிக் கதிரையில் நிரோசனை இருத்தி அவனது புத்தகப்பையையும் தண்ணீர்ப் போத்தலையும் அருகே வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மேசையின் பின்னே ஒருவர் குறும்பார்வைக் கண்ணாடி மூக்கில் நழுவ  பத்திரிகை ஒன்றை கையில் பிடித்தவாறு ஏறத்தாழக் கவிழ்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தார் .

'எக்ஸ்க்யூஸ்மி!'

'வே..ஏஏ! என்ன தம்பி?!'    தூக்கம் திடீரெனக் கலைந்த அதிர்ச்சியில் எழுந்து நின்றவரிடம் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டி 'இந்த அஸிஸ்டெண்ட் எக்கவுண்டெண்ட் க்ளார்க் என்றது யார்? எங்க இருக்கிறாங்க?' என்றேன்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை வாசிப்பது போல பாவனை செய்துவிட்டு, 'உங்களை வரச்சொல்லி இருக்காங்க போல..ஆனா இப்ப அவ இல்லியே..எல்லோரும் லஞ்சுக்குப் போயிருக்கிறாங்களே..திரும்பி வரச் சுணங்கும்..' என்றார்.

மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்து விட்டு 'லஞ்ச் 12 மணிக்கல்லவாண்ணே..இப்ப 2.30 ஆகுதே...ஒண்ட ஒண்டரைக்கெல்லாம் இருப்பாங்க என்றுதான் ஸ்கூல் விட்ட பிறகு வந்தனான்' என்று ஆச்சரியமாய் கூறிய என்னை சற்றுப் பரிதாபமாகப் பார்த்தார் அவர்.


இந்த உரையாடலைக் கேட்டதும் என்னருகே ஓடிவந்து, 'வாங்கப்பா ..வீட்ட போவோம்!' என்று சிணுங்க ஆரம்பித்தான் நிரோசன்.

'அது வந்து.. இண்டைக்குக் கொஞ்சம் வேலை கூட...அதுதான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயிருக்கிறாங்க....இருங்க, இப்ப வாற நேரம்தான்'

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளியே இலேசாக மழை தூறத் தொடங்கியிருந்தது.

'இந்நேரம் மூத்தவள் நர்மதாவின் ஸ்கூல் விட்டிருக்கும்..கேற் வாசலில் மழையில் நனைந்து காத்துக் கொண்டிருப்பாள்..என்ன செய்வது? மூன்று மணிக்கு பேங்க் மூடிடுவான்....இன்றைக்குள் எப்படியாவது செக்கை மாற்றி காசு கட்டாவிட்டால் கரண்டை சீஈபிக்(CEB) காரன் வெட்டிவிட்டுப் போய்விடுவான். பிறகு இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்க வேண்டும்..என்ன செய்வது? ..நர்மதாவை போய் எற்றிக் கொண்டு வருவோமா அல்லது இன்னும் கொஞ்சம் காத்திருப்பதா?'

'ஹேய் மச்சான் கார்த்தீ! என்னடா..,  பெரிய யோசனை போல?!'

குரல் வந்த திசையில், கையில் ஹெல்மெட்டுடன் ரெயின் கோட் அணிந்து மழைநீர் சொட்டச்சொட்ட நின்றிருந்தான் முனாஸ். எனது ட்ரெயினிங் கொலிஜ் நண்பன். கலகலப்பான பேர்வழி. இருவரும் சிறிது காலம் இங்குள்ள பாடசாலை ஒன்றில் ஒன்றாக கற்பித்துவிட்டு பின்பு ஆளுக்கொரு திசையாகப் பிரிந்தவர்கள். இப்போதும் அவ்வப்போது சந்தித்து நட்பு பாராட்டிக் கொள்வதுண்டு.

'ஓமடா முனாஸ், பாருடா என் நிலைமையை என்ன செய்யுறதெண்டு விளங்குதில்லடா' என்றேன் உணர்ச்சியில்லாமலே.

'ம்ம்..? அப்பிடி என்னடா தலை போற பிரச்சினை உனக்கு? அதுவும் இங்க வந்து..ஏதும் தூர இடத்துக்கு ட்ரான்ஸ்பராட உனக்கு?'

'சேச்சே! அதெல்லாம் இல்லடா, அது யாராவது பெரிய ஆட்களுக்குசெல்வாக்கான ஆசிரியர்களை டவுனுக்குள்ள போடணுமென்டாத்தான் எங்கள் மேல கை வைப்பாங்க... இப்ப ஏதோ கொஞ்ச காலம் விட்டு வச்சிருக்காங்க!'

'சரி, அப்ப வேற என்னதான் உன் பிரச்சினை?'

'சம்பள அரியர்ஸ் செக் ஒன்று வந்திருக்கு.....அதுவும் எத்தனையோ வருசத்துக்குப் பிறகு. அந்தச் செக்கை இங்க வந்து எடுக்கச் சொல்லி கடிதம் அனுப்பியிருக்காங்கடா மச்சான் எனக்கு!'

' அடப்பாவி! இதுக்காடா கவலை உனக்கு?! ஓ எப்படிச் செலவு செய்யுறது என்ட கவலையோ..அப்படியெண்டா தாவன் எனக்கு..?'

'போடா, உனக்கு எல்லாமே பகிடிதான்.! கடிதம் அனுப்பியிருக்கிறாங்க ..ஆனா இங்க வந்து பார்த்தா ஸீட்டில யாருமில்ல.. சம்பந்தப்பட்ட க்ளார்க்கும் லஞ்சுக்குப் போயிட்டாவாம்டா!'

'இன்டைக்கு நியை வேலை இருந்ததால அதுதான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயிருக்கிறாங்க..இப்ப வாற நேரம்தான் இருங்க என்றிருப்பானே அந்த ஒல்லிப்பிச்சான்' என்று கேட்டான், வரவேற்பு மேசையில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவரைக்காட்டி.

'அட! ஓ..ஓம்டா!' என்றேன் ஆச்சரியம் தாங்காமல்.

'இருங்க... இப்ப வந்திடுவாங்க... என்றும் சொல்லியிருப்பானே?'

'ஓ ..ஓம்டா ..முனாஸ், எப்பிடிடா  உனக்கு இதெல்லாம் தெரியும்? யேய்..! எங்கேயாவது  பின்னால நின்று கேட்டிட்டிருந்தியா..உண்மையைச் சொல்லு!'

'ப்போடா இவனே! இவ்வளவு வருசம் இந்த ஸோனுக்குள்ள  வாத்திவேலை செய்திட்டிருக்கிறம், எவ்வளவு பார்த்திருப்பம்...? இதெல்லாம்  தெரியாதா மச்சான், உனக்கு?'


அவன் சொன்னதைக் கேட்க  சிறிது வெட்கமாகத்தான் இருந்தது.

'டேய் கார்த்தி, இங்க ஒபிஸில வேலை செய்யிறவங்களெல்லாம் ஏன் சரியா 1.30 க்குப்பிறகு லஞ்சுக்கு வீட்டுக்குப் போறாங்க தெரியுமா? கொஞ்சம் யோசிச்சுப் பார். அப்பிடி ஒன்றும் பெரிய வேலைகள் கிடையாது இங்க. ஹேண்ட் பேக்குல ஆனந்த விகடனும் குமுதமும் ரமணி சந்திரண்ட குப்பை நாவல்களையும் கொண்ட வந்து பார்த்திட்டு இருப்பாங்க. பெக்கேஜ் போன்ல சாறி ப்ளவுஸ் வாங்கின கதைகளையும் இரவு பார்த்த மெகா சீரியல் மாமி-மருமகள் சண்டைக் கதைகளையும்  யாருக்காவது மணிக்கணக்கா சொல்லிட்டிருப்பாங்க...'

'அப்படியா  அப்ப இவங்க வேலையே செய்யிறதில்லையா மச்சான்?'

'ஏன் செய்யாம..? இதெல்லாம் செய்தது போக எப்பவாவது போரடிச்சா ஒரு மாறுதலுக்காக வேலை செய்வாங்க. இப்படி அரசாங்க வேலைகளைப் "பொறுப்பாக"    செய்யிறதாலதான் இன்னமும் எந்த ஸ்கூல்ல யார் இருக்கிறாங்க.... என்னென்ன நடக்குது.... என்ற சரியான எந்த விபரமும் தெரியாமy, என்ட கடிதங்களை உனக்கும் உன்ட கடிதங்களை என்ட ஸ்கூலுக்கும் அனுப்பிட்டிருக்கிறாங்க..ஹா.. ..ஹா..ஹ..ஹா!.'

'அது சரி, 1.30க்கு இவங்க லஞ்சுக்குப் போறது எதுக்கு என்று இன்னும் நீ சொல்லவே இல்லையே...?'

'மடையா! நம்ம ஸ்கூலெல்லாம் 1.30 க்குத்தானே விடுது. அப்படி ஸ்கூல் விட்டதும் வீட்டுக்குப் போகிற வழியிலேயே தேவைகளை முடிச்சிட்டுப் போகலாமென்று டீச்சர்மாரெல்லாம் ஒபிசுக்கு வருவாங்கள் என்று இவங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும். அந்த நேரத்தில இங்கே குந்திட்டிருந்தா வேலைகளுக்கள்ள மாட்டுப்படுவம் என்றுதான் வீட்டுக்கு ஓடுறவங்க..  அதுவும் புதன் கிழமையள்ள தப்பித்தவறியும் இருக்க மாட்டாங்க.. இல்லையென்றால் கூட அன்றைக்குப் பார்த்து ஏதாவது மீட்டிங் அது இது என்று போட்டு இழுத்தடிப்பாங்க!'

'ஓ! இதுவா சேதி..? நான் ஒவ்வொரு தடவையும் இங்க வந்து மணிக்கணக்கா காத்துக் கிடக்கிறதுக்கு இதுதானா காரணம்?'

'அப்பா...பசிக்குதப்பா ... வீட்ட போவோம்!' என்று என்னைப் பிடித்துக் கொண்டு சிணுங்கிய நிரோசனை அப்போதுதான் கண்டான், முனாஸ்.

'அடேய் கார்த்தி!  நீ இவ்வளவு நேரமும் இந்தச் சின்னப் பொடியனை பசிக்க வைத்துக் கொண்டாடா இந்தக் கிளார்க்குகளை காத்துக் கொண்டிருக்கிறாய்?'

'வேற என்னடா செய்யிறது..? திரும்பத் திரும்ப வந்து மெனக்கெட்டுக் கொண்டிரக்கேலாது. அப்பிடி வந்து போக பெற்றோல் செலவு வேற, இவள் மூத்தவளையும் போய் ஏத்திட்ட வரவேணும். கொஞ்ச நேரம் பார்ப்.....'

' மச்சான் இதுகள் இப்போதைக்கு வர மாட்டாதுகள்றா! நீ இந்தப் பச்சை மண்ணை சும்மா வீணாப் பசியில காய வைக்கப் போகிறா...! போய் உன்ட பிள்ளைகளை வீட்டில இறக்கிச்  சாப்பிட்டுட்டு  பின்னேரம் ஆறுதலா வாடா! இப்ப மரியாதையா போ!போ!' என்று துரத்தாத குறையாக என்னையும் நிரோசனையும் உரிமையுடன் வாசல்புறமாக நெம்பித் தள்ளிக் கொண்டு சென்றான் முனாஸ்.

'இல்லடா...முனாஸ், இன்னும் ஒரு கொஞ்ச நேரம் பார்த்திட்டு...' என்று  நான் தயங்கி இழுத்ததும், சட்டென தன் பிடியை விட்டு விட்டு அப்படியே என்னைச் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் விருட்டென திரும்பி நகர்ந்து விட்டான். வேகமான நடையில் அவனது கோபம் தெளிவாகத் தெரிந்தது.

'டேய்! முனாஸ்...!முனாஸ்! நில்றா, கொஞ்சம்!' என்று நான் கூப்பிட்டும் அவன் திரும்பாமல் பைக்கை உதைத்துக் கிளப்பிக் கொண்டு செல்லும் போது, 'அனுபவி ராஜா!' என்று லேசாய் அவன் முணுமுணுத்தது  மட்டும் காதில் விழுந்தது.

சிறிது கழிந்த பின்பு வேறு வழியின்றி மீண்டும் முனாஸின் 'ஒல்லிப்பிச்சா'னிடமே சென்றேன். அவர் இப்போதும் அரைத்தூக்கத்தில்தானிருந்தார். ஆனால்,  அருகில் சென்றதும் சட்டென விழித்துக்கொண்டு, 'அ... ..நீங்கதானே கொஞ்சம் முதல் வந்தனீங்க?' என்றார், வெகுஞாபகமாக, 'போங்க உள்ள! அவங்கள் வந்திருக்கிறாங்க...அந்தப் பச்சை சுடிதார் போட்டிருக்கிறவதான் நீங்க தேடிவந்த க்ளார்க்..போங்க' என்றார்.

எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

'நிரோஸ்! இரு அப்பிடியே! செக்கை வாங்கிட்டு வாறேன்' என்றதும் பசிக்களைப்பையும் மீறி சந்தோசமாய்ப் புன்னகைத்தான், அவன். பாவம் அவன் முரளி சொன்னது சரிதான் .இனி இவனை இந்த ஒபிஸ் அலுவல்களுக்கெல்லாம் கூட்டித்திரியக் கூடாது என்று நினைத்துக்கொண்டே பச்சை சுடிதார் அணிந்த க்ளார்க் இருந்த அறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே நுழையவும் அந்த பெண் வெளியே வரவும் சரியாக இருந்தது. இருவரும் மோதிக் கொள்ளாத குறையாக சந்தித்துக் கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

' எக்ஸ்க்யூஸ்மி, உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் மிஸ்' என்று கடிதத்தை நீட்டினேன். நாய்  கொண்டு வந்துபோட்ட தேங்காய்ச் சிரட்டையைப் பார்ப்பது போல கடிதத்தையும் என்னையும் வெகு அலட்சியமாக பார்த்தாள் அந்தப் பெண். அவளுக்கு இருபத்தியைந்து வயதுக்கு மேலிருக்காது.

'இந்தக் கடிதம் எப்ப கிடைச்சது உமக்கு?'

'இன்றைக்குக் காலைலதான்! ஏன்?'

'அப்ப இவ்வளவு நாளும் என்ன செய்து கொண்டிருந்த நீங்கள? இதை உங்களுக்கு அனுப்பி ஒன்றரை மாதமாகுதே..எந்த ஸ்கூல் நீங்க?'
சொன்னேன்.

' அட!  இந்த ஒபிஸிலிருந்த முக்கியமான கடிதம் அனுப்பினா இப்படித்தான் ஒருமாதம் லேட் பண்ணி வருவீங்களா?' என்றாள்,  ஏதொ ஒரு பெரிய தவறைக் கண்டுபிடித்தவிட்ட உற்சாகத்தோடு.

' உங்க கடிதத்தை, நான் ஒரு வருசத்துக்கு முதல் வேலை செய்த பழைய  ஸ்கூலுக்கு அல்லவா அனுப்பியிருக்கிறீங்க.? இன்றைக்குத்தான் அங்கிருந்து இப்ப நானிருக்கும் ஸ்கூலுக்கு கொடுத்தனுப்பினாங்க!' என்றதும் சட்டென வாடிச் சுருங்கியது அவளின் முகம்.

'ஓ! அப்பிடியா? கொஞசம் இருங்க வருகிறேன்' என்று விட்டு வெளியேறிச் சென்றாள் அந்த க்ளார்க் பெண்.

'ஐயோ! எங்கே போகிறாள் செக்கை எடுத்துத் தராமல்' என்று சலிப்புடன் காத்திருக்கலானேன். 'ஒருவேளை என்னுடைய செக்கைத்தான் எடுத்து வரத்தான் போகிறாளோ...'

சரியாகப் பதினைந்து நிமிடம் கடந்ததும் மிகவும் சாவகாசமாக உள்ளே வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள் அந்தப் பச்சைசுடிதார் பெண். தனது மேசையில் இறைந்து கிடந்த காகிதங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

'என்ன விசயம் சொல்லுங்கோ!' என்றாள்.

'...........'

'ஆ! ஏதோ அரியர்ஸ் செக்கென்றுதானே சொன்னனீங்க?' என்றபடி எழுந்த அருகிலிருந்த உருக்கிலான அலுமாரியைத் திறந்து நீளமான சில  புத்தகங்களை மேசையில் போட்டாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து அந்த புத்தகங்களைத் திறக்கும்போது செல்போன் மணி ஒலித்தது. உடனே சட்டைன மூடிவிட்டு,

' ஆ! ஹலோ சொல்லுங்க!' என்றாள்.

'..........' என்றது எதிர்முனை.

'இல்ல..இப்பத்தானப்பா சாப்பிடனான்'

'...................'

'ம் அதெங்க! எப்படியும் ஒரு கழுத்தறுப்பு வந்து சேர்ந்திடுமப்பா...?' என்றபோது  சரியாக என்மீது விழுந்தது அவளது பார்வை. சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு,  'இல்ல இஞ்ச ஒருவர் செக் எடுக்க வந்திருக்கிறார்..அவர்ர வேலைய முடிச்சிட்டு பிறகு எடுக்கிறனே...'

'...........'
' அ.!. அந்த ப்ளவ்ஸா..? அது மெச்சில்லடாப்பா...! மத்த பிங்க் கலர் இருக்குத்தானே?'

'...........'

'மிஸ், நான் கொஞ்சம்...' என்று நான் பொறுக்கமுடியாமல் ஆரம்பிக்க,

'சரியப்பா...பிறகு எடுக்கிறன்..பை!'  சொல்லி போனை வைத்து விட்டு,

'இருங்க பார்ப்போம்...உங்க பேர் என்ன சொன்னீங்க? ப்ரதீபனா?'

'இல்ல ...காரத்திகேயன்'

'ஆ! இந்தா இருக்கு! இதில சைன் பண்ணுங்க செக்கைத் தாறன்' என்று  புத்தகத்திலே சில இடங்களைக் காட்டினாள். நான் கையெழுத்திட்டதும் செக்கைக் கிழித்து நீட்டியவள் சட்டென நெருப்பை மிதித்தவள் போலப் பதற்றமாகி, 'ஐயோ இந் செக்கின்ட வெலிட் டேட் (valid date) முடிஞ்சு போயிட்டுதே!' என்று மீண்டும்  கையிலிருந்து பறித்து விட்டாள்.

'சரி, வேறு புதிதாக எழுதித் தரலாம்தானே?' என்றேன், ஏமாற்றத்துடன்.

'புதுசா எழுதத் தேவையில்ல..திகதி மாற்றி எழுதினாப் போதும் ஆனா வெட்டிச் சைன் பண்றதுக்கு எக்கவுண்டனும் சீப் க்ளார்க்  ரதியக்காவும் வேணுமே...' என்றாள், வரவழைத்துக் கொண்ட கவலையுடன்.

அதற்குள் அருகிலிருந்த க்ளார்க் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'எக்கவுண்டன் மேல மாடியிலதான் நிக்கிறார். இனித்தான் லஞ்சுக்குப் போவார்..இப்ப உடனே போனால் சைன் எடுக்கலாம்' என்று தகவல் சொன்னார்.

'இல்ல மணியண்ண, எக்கவுண்டன் சைன் பண்ணினால் மட்டும் போதாது... சீப் க்ளார்க் ரதியக்காவுமல்லவா செகண்ட் சைன் பண்ணவேணும்...அவ லஞ்சுக்குப் போனவ இன்னும் வர இல்லயே... அது சரி இண்டைக்கு வருவாவா?' என்று அவரிடம் கேட்டாள்.

'ஏன் பிள்ள, ரதியக்கா டிப்பாச்சர் பண்ணாமத்தானே போயிருக்கிறா? ஏன் உங்களிட்ட ஏதும் சொன்னவவா?' -இது மணியண்ணன்.

'ஓமண்ணன். இன்டைக்குச் சூரன்போர்தானே...? அதுதான் கோயிலுக்கு ஒருக்காப் போனாலும் போவேன் என்று சொன்னவ அதாலதான்...கேட்டனான்..!'

'அப்ப  அவ இண்டைக்கு வாற சந்தேகம்தான். எதற்கும் எக்கவுண்டனிட்டயாவது சைன் வாங்கி வையும். பிறகு ரதியக்கா வர, அவர் போயிட்டாரெண்டால்...?' என்றார் மணியண்ணன், என்னைப் பார்த்தவாறு.


'ம்ம்..எனக்கென்ன.. அவ வந்தா யார் மாட்டி விட்டதென்டு தெரியட்டும்...' என்று தனக்குள் லேசாய் எதையோ முணுமுணுத்தவாறு மாடியேறிப்போனாள் அந்தப் பெண்.


மீண்டும் காத்திருப்பு! பத்து நிமிடங்கள் கழிந்தது.


பசி வேறு உயிரை வாட்டியது. அப்போதுதான் பசி பசியென்று வீட்டுக்குப் போக அழுதபடியிருந்த மகன் நிரோசனின் ஞாபகம் வந்தது. வெகுநேரமாக அவனது குரலைக் காணவில்லையே என்ற யோசனையும் வர, சென்று பார்க்கலாம் என்று எழுந்தபோது எக்கவுண்டனைப் பார்க்க மாடிக்குச் சென்ற அந்தக் க்ளார்க் பெண் மீண்டும் வந்துவிட்டாள்.


வந்ததும் என்னை நேரே பாரக்காமல், ' இன்றைக்கு உங்களுக்குச் செக் தர இயலாதாம். நாளைக்கு இதே நேரம் வரட்டாம்!' என்று விட்டு சட்டென வெளியேறிச் சென்றாள்.


சட்டெனக் கோபம் தலைக்கேற அவளோடு சேர்ந்து நானும் வெளியேறி வந்தபோது வராந்தாவில் இருந்த ப்ளாஸ்டிக் கதிரையைச் சுற்றி சிறு கூட்டம் கூடியிருந்தது தெரிந்தது.

'கொஞ்சம் ..தண்ணீர் தெளிங்க முகத்துல! பாவம்!'

'சே! சின்னப் பொடியண்டாப்பா!'

'பசி மயக்கம் போல..! யார்ராப்பா இதுகள இஞ்ச கூட்டிவந்து அலைக்கழிக்கிறது?'

என்ற குரல்கள் கேட்டு..சில வினாடிகள் திகைத்து நின்றவன் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து  அலறியடித்து ஓடிச்செல்வதற்குள் எனது மகன் நிரோசனை யாரோ சிலர் ஒரு நீளமான மேசையில் கிடத்தி உடைகளைத் தளர்த்தி செய்திப் பத்திரிகைகளால் காற்று வீசிக் கொண்டிருந்தார்கள்.

*
-மூதூர் மொகமட் ராபி
(2011.11.16)

Thursday, September 6, 2012

'சோனி' என்றால் செல்லம் !

 
 
 
ஒரு

வலயக்கல்விப் பணிப்பாளரின்
 
கண்டுபிடிப்பு !
 
 





அன்புள்ள நண்பர்களே!


பிரதான விடயத்திற்கு நான் வருவதற்கு முன்பு பின்வரும் உரையாடலின் பகுதியை சிறிது படித்துப் பாருங்கள்.. 


..................................................................................................................
......................................................................................
............................................................................................
.................................................... .. ..


"சரி, இப்ப இந்த இடத்தில உங்கட பிரச்சினை என்ன?"

-கேட்டவர் ஒரு அரச திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரி.

" அதைத்தானே ஸேர் நான் உங்களுக்கு நான் எத்தனையோ தடவை உத்தியோக பூர்வமா எழுத்து மூலம் புகார் செய்திருக்கின்றேன். ஆனால்  அதற்கு நீங்க இன்னும் கூட  எந்தவிதமான நடவடிக்கையுமே எடுக்காமலிருக்கிறீங்க..."

-பதில் கூறியவர் ஓர் இளம் அரச ஊழியர்.

"சரி இப்ப இந்த இடத்தில எல்லாருடைய முன்னிலையிலும் சொல்லுங்க உங்கட பிரச்சினையை"

" என்னுடன் இங்கே கடமையாற்றுகின்ற  சக சிரேஷ்ட பெண்  ஒருவர்  நான் சார்ந்திருக்கும் இனத்தை இழிவு படுத்தும் விதமாக என்னைச்  'சோனி' என்று  துவேசத்துடன்  பேசுகின்றா"

"அப்பிடியா.. யார் அது..? இங்க இருக்கிறவங்களுக்குள்ள அவ இருக்கிறாவா?"

அப்போதுதான் இதை புதிதாகக் கேட்பவர் போல தனது புருவங்களை நெரித்து வினவுகின்றார் அதிகாரி.

"ஓம்.. இங்கதான் இருக்கிறா.. என்னால அவவை உங்களுக்குக்  காட்ட முடியும்!"

"யார் அது சொல்லுங்க"

அந்த அரச ஊழியர் எழுந்து நின்று அங்கு அமர்ந்திருந்த ஊழியர்களுள் நெற்றிக்குத் திருநீறு இட்டு பக்திப்பழமாகக் காட்சியளித்த வயதான பெண்மணி ஒருவரைக் காண்பிக்கின்றார். 

அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் குழுமியிருந்த அந்த இடமே ஒருவித தர்மசங்கடமான மௌனத்தில் ஆழ்கின்றது.
அதுவரையிலே ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்த அந்த அதிகாரிகள் குழுவினது தலைமை அதிகாரியின் குரல் இப்போது சற்றுப் பம்மத் தொடங்குகின்றது...

"ஒருவேளை... அவ 'சோனி' என்று உங்களைச் செல்லமாக கூப்பிட்டிருப்பாவோ..?  முஸ்லீம்களைச் சோனகர் என்றும் சொல்றது வழமைதானே.. அது  சும்மா செல்லமா கூப்பிடுற பெயரோ என்னமோ..."



.............................................................................................
....................................................................................
...............................................................................



இது எப்படியிருக்கு...? 


என்ன படித்தீர்களா நண்பர்களே..?

இந்த உரையாடல் உங்களுக்கு என்ன விதமான உணர்வை ஏற்படுத்துகின்றது...?

யாராவது எழுதிய புனைகதையிலோ அல்லது தொலைக்காட்சி நாடகங்களிலோ வரும் காட்சி அல்ல இது. 

நமது இயற்கைத் துறைமுக நகர கல்வி வலயத்திலே பிரதான நகருக்கும்  ரயில் பாதைக்கும்  அண்மையிலுள்ள ஓர் முஸ்லீம் பாடசாலைக்கு ஏறத்தாழ நான்கு தினங்களுக்கு முன்பு  திடீர் வருகை தந்திருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தமது ஆய்வின் பின்பு ஒழுங்கு செய்த ஆசிரியர் சந்திப்பு நிகழ்வின்போது இடம்பெற்ற உரையாடலின் பகுதிதான் இது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஹார்ட் அட்டாக் வந்து விடாமல் இதயத்தைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!

 
ஆனால் அதுதான் உண்மை!


-Jessly Jessly
 

Tuesday, September 4, 2012

‘‘நான் கற்பிழந்த நாள்.’’ :



 
 
 
கமல்ஹாசன் கதை:


அணையா நெருப்பு!


 




வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’ நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.

‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’
‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.
துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள்
சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.

விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!
ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…
‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.
காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.
என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.


‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.
என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.
என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.
அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

-கமல்ஹாசன்

 

'மகாகவி' : என் கணவர்

 



 
 
'மகாகவி'  சுப்பிரமணிய பாரதி
 
( 1882 - 1921).
 
 
 
 
 
 
bharathi1a
 
னது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.
 
 
என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.
 
 
ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
 
 
இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.
 
 
 
 
images (1)
 
"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."
 
 

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...
 
 

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
 
 

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?



கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
 
 
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும்
 
 
அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
 
 
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
 
 
சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
 
 
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
 
 
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.
பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
 
 
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
 
 
 
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)
 
 
Thanks: Azhitachchudar

Sunday, September 2, 2012

சிறுகதை: சுஜாதா

 
 


ஒருலட்சம் புத்தகங்கள்
 
 

 
 
 
 
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
-மகாகவி-

Welcome to delegates of Bharathi International

 
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."

"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"

"பேரறிஞர் அண்ணாங்களா?"

"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"

"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."

"எதுக்கு?" என்றார் டாக்டர்.

"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."

"உண்மையிலேயே தெரியாதுங்க"

"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."

"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."

"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"

"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"

"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"

"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..

"வள்ளுவர் சொல்லிக்காரு-

`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.

இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."

ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். "செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. "தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.

கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே

ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி...

"டாக்டர் வணக்கம்"

"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"

"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."

"உத்கல் எங்க இருக்குது?"

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"

"ஆ. ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"

"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"

"எஸ். காண்ட் ஸ்பீக்."

"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"

"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."

"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"

"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"

"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."

"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.

மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.

மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.

டாக்டர் லேசாக,

`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,

கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,

பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`

என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.

"வணக்கம் ஐயா"

"வணக்கம். நீங்க"

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"

"இஞ்சாலையா?"

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

"நீங்கதானா செல்வரத்னம்?"

"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.

"எங்க வந்தீங்க?"

"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் "வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.

அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.

"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"

"ஆமாம்."

"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...

"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"

"ஊர்ல யாரும் இல்லிங்க"

"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"

"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

"என்ன சொல்றீங்க?"

"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"

"அடப்பாவமே. எப்ப? எப்படி?"

"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"

"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"

"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

"ஏதாவது சாப்பிடறீங்களா?"

"கோப்பி" என்றான்.

"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."

"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"

"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"

"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"

"அப்படியா?"

"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க."

"அடடா"

"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."

"எங்க சொல்ல விரும்பறீங்க?"

"இன்றைய கூட்டத்திலதான்"

"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"

"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"

"கட்டாயம். கட்டாயம்"

"அதைத்தாங்க சொல்லப் போறேன்."

"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."

"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."

டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.

"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."

"புரியலீங்க"

"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"

"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."

"வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க"

"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."

"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க.."

"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."

"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

"ரொம்ப பரிதாபங்க"

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. " சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"

டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க..."

"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?

சொந்த சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ – கிளியே

செம்மை மறந்தாரடீ

-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"

"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."

"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்."

"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.

"இந்த மாநாட்டு மலரை"

"எதுக்குங்க அதெல்லாம்...?"

"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை"

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

"மணி.. நான்தான்"

"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"

"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."

"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."

"மணி. ஒரு சின்ன சிக்கல்..."

"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"

"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."

"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"

"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."

"என்ன செய்யப் போறான்?"

"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."

"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"

"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"

"என்ன. கேக்குதா?"

"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."

"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

"என்ன செய்யச் சொல்றீங்க?"

"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."

"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"

"எப்படியாவது.."

"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."

"சரி மணிமேகலை"

"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."

டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

மாநிலம் காக்கும் மதியே சக்தி

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி

சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் "தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.." என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.

"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.

"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.

டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.." என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.
 
 
-சுஜாதா
 
Thanks: Azhiyachchudar

துயில் நிலவு

 





நிலவு நித்திரைக்குச் சென்றுவிட்ட
ஒரு நிசப்தமான ஒர் இரவுப்பொழுதிலே
தனது கடமையைச்செய்திருக்கும்
காற்றைப்போலவே...
நானும் கண்விழித்திருக்கின்றேனடி!



உனது விழிவாசல்களிலே
உறக்கதேவதைகளின் உல்லாச ஊர்வலம்
நினைவு வீதியெங்கும் கனவுப்பூக்களை
இறைத்துச்செல்ல..
என் இனியவளே நிச்சயம் நீ
உறங்கியிருப்பாய்!



இரவின் இடைவிடாத நிசப்தத்தில்
உன்நினைவுகளின் நெருக்கத்தில்
மூச்சுத்திணறும்
எனது மௌனங்கள்
மீண்டும் மீண்டும் மரணித்திருக்கும்...!



உன் பெயரை 
ஓயாது உச்சரித்திருக்கும்
எனது உதடுகளை
இரகசியமாய் ஒட்டுக்கேட்கும்
இதயம் இடையிடையே துடிப்பை நிறுத்தும்..
ஓ! இந்த இரவுகள்தான்
எத்தனை இரக்கமற்றவை!

- மூதூர் மொகமட் ராபி

சிறுகதை: பிரமிள்

 
 
 
 
 
 
நீலம்
 
 
 
 
 
 
 
 
வர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக் கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்க்காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச் சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங்களும் பறக்கும்.

 
மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளைpremale-01 அசை போட்டுப் போட்டு அவருக்குத் தலை கவிழ்ந்துவிட்டது. அப்படிப் பாரம் ! அவர் பஸ் ஏறப் பிடிக்கும் குறுக்கு வழிகளின் மனித எச்சமும் நடுவே மானங்காணியாக மலரும் காட்டுச் செடிகளும் அவரது கண்களுக்குப்படுவதில்லை

 
ஆபீஸிலிருந்து லேட்டாகத் திரும்பிய ஒரு நாள் மாலை பஸ்ஸில் ஏறிய அவர், தமது பஸ் ஸ்டாப்பிலிரிந்து இரண்டு ஸ்டேஜுகள் கடந்து போய் இறங்கி விட்டார். இதற்குப் புற உலகக் காரணமாக, பஸ்ஸில் ஏறியவன் இறங்க முடியாத நெரிசல். அக உலகக் காரணமும் ஒன்று உண்டு. சமீபத்தில் டிவியில் அவர் பார்த்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் ஒன்றைப் பக்கத்துக்கு சீட்காரர் வைத்திருந்ததிலிருந்து பிடித்த சர்ச்சை.

 
கதை, கவிதை போன்ற எந்த மனித சிருஷ்டியையும் கூட கம்ப்யூட்டர்கள் மனிதனை விடச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற இடத்தில் சூடு பிடித்த சர்ச்சை அது. "அந்நிலையில் மனிதன் என்கிற நீ என்ன?" என்பது கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி. நமது ஆர்டிஸ்ட்டோ, என்ன இருந்தாலும் கம்ப்யூட்டரினால் பெயிண்டிங் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை எனச் சுற்றி சுற்றி அழுத்தினார்.

 
"பெயிண்டிங் சிற்பம், இசை எல்லாமே கம்ப்யூட்டரால் முடியும். ஜப்பானில் கம்ப்யூட்டர் கார்களை மெனுபாக்செர் பண்ணுகிறது" என்று உறுமினார் பக்கத்துக்கு சீட்காரர். முக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் அவரது கண்கள், போகப் போகப் பெரிதாகிக் கொண்டிருந்தன. அவரது உறுமலுடன் கண்ணாடியில் ஏதோ ஒரு வட்டமான சிறு ஒளி, பஸ் கூட்டத்தின் இடுக்குகளூடே ஊடுருவிப் பிரதிபலித்தது.

 
"ஆனால் அதோ அந்த நிலவின் அழகை மௌனமாகத் தனக்குள் உணர மனிதனால் முடியும். கம்ப்யூட்டரால் முடியாது" என்றார் திருவாளர் பக்கத்துக்கு சீட்காரர்

 
"டெர்மினஸ்" என்று சேர்த்துக் கொண்டார்.

 
பஸ்சிலிருந்து பொலபொலவென்று கூட்டம் உதிர்ந்தது. ஆர்டிஸ்டும் உதிர்ந்தார். பக்கத்துக்கு சீட்காரரைக் காணோம்.

 
எங்கோ இன்னொரு கிரகத்தில் நிற்கும் உணர்வு தீடீரென நமது ஆர்ட்டிஸ்டுக்குத் தோன்றிற்று. எங்கோ, என்றோ, எவனோ, தான் என்ற ஒரு இடைவெட்டு மனதில் ஒரு மௌனக் கீறாக ஓடிற்று.

 
கலைந்து கொண்டிருந்த மனிதர்களது முகங்கள் மீது,மின்சார கம்பம் ஒன்றின் ஒளிச்சீற்றம். இருண்டு கருத்த முகங்களில் கண்ணாடிச் சில்லுகள் கட்டமிட்டு மின்னின.

 
குடில்களாகவும், சீரற்ற சிமிந்திப் பொந்துகளாகவும் தெரு பின் வாங்க, நடக்க ஆரம்பித்தார். திடீரென எதிரே உலகு வெளித்தது.வானின் பிரம்மாண்டமான முகில்கள் தமக்குள் புதையுண்ட பெரிய மர்மம் ஒன்றினை, வெள்ளியும் பாதரசமுமாக உலகுக்குத் தெரிவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன. எட்டோணாத தொலை தூரத்தில் ஒரு கிராமீயக் குரல், இயற்கையின் மொழியற்ற மழலை போன்று வெற்றோலியாய்க் கேட்டு மறைந்தது.

 
திடீரென, அந்தக் குரலுக்குப் பதிலாக, அவருக்குப் பின்புறம் முதுகு சில்லிட, "கூ" என்றது இன்னொரு குரல். அதன் அமானுஷ்யத்தில் ஒரு கணம் அர்த்தமற்ற மரண பயம்.அவர் திடுக்கிட்டுத் திரும்பினார். நிலவு வெளிச்சத்தில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். சுமார் பதினைந்து பதினாறு மதிக்கத்தக்க கிராமத்துப் பையன்.

 
அவரை அவன் பேசவிடவில்லை. " இந்நேரம், இந்நேரம் ... இன்னும் கொஞ்சம் தூரம்..." என்றான், அவரை முந்தித் தன்னைப் பின் தொடர அழைத்தபடி நடந்த அவன். அவரது மனதில் ஏதேதோ எல்லாம் எழுமுன், 'தோ" என்று ஒரு இருண்ட பெரிய பள்ளத்தைக் காட்டினான். திட்டுத் திட்டாக மின்னிய நிலவொளியில் இருள் மாறி, பாசி படர்ந்த குளமாயிற்று. குளத்தைக் காட்டிய சிறுவன் சரசரவென்று அதற்குள் இறங்கினான். இறங்கியவன் குளத்தினுள்ளேயே மூழ்கி மறைந்தான்.

 
நமது ஆர்டிஸ்டுக்கு, அந்த ஒரு கணம், தன் முன் தோன்றி மறைந்தது அமானுஷ்யமான ஏதோ ஒரு உயிர் வடிவம் என்றே சிறுவனின் தோற்றமும் மறைவும் எண்ண வைத்தன.

 
அதற்குள் பையன் குளத்திலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கிளம்பிக் கரையேறி, கையில் எதையோ கொண்டு வந்தான்.

 
அது ஒரு நீல வண்ண ஜாலம். அப்போது தான் விரிந்து கொண்டு இருந்தது.
அந்த நீலோத்பலம். பத்திரமாக நீட்டிய கையிலிருந்து பெற்று கொண்டார் அதை.

 
"நீலோத்பலம், அதுவும் ராவானதும், நீருக்கடியில்தான் பூக்கும்.அதன் அழகை யார் கண்டது?" யாரோ, எங்கோ,என்றோ அவரது ஞாபகங்களின் விளிம்பில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். குளத்தின் எதிர்க்கரையில், பையனை ஆர்டிஸ்ட் மீது ஏவி விட்டு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு சீட்காரரா?

 
ஆர்டிஸ்டின் கண்கள் பையனின் முகத்துக்குத் திரும்பின. ஈரம் பட்ட சிறுவனின் முகத்தில் உக்ரமாக விழுந்த சந்திர தீபத்தின் வெளிச்சம், அவனது பெரிய கண்களுக்கும், நெற்றியிலிரிந்து பள்ளமற்று ஓடிய நாசிக்கும், ஆயிரமாயிரம் வருஷங்களாக இயற்கையினால் அதி கவனத்துடன் செதுக்கப்பட்ட இன்னொரு முகத்தின் சாயலைத் தந்து கொண்டிருந்தன.

 
தம்மை மீறிய மரியாதையுடன், " யார் நீ?" என்றார் ஆர்டிஸ்ட்.

 
அவன் பதில் சொல்லவில்லை. தூரத்தே மொழியற்று ஒலித்த குரல், ஒலியலைகளாக உருப்பெற்று, 'கிஸ்ணா"என்று கேட்டது.

 
பையன் பதிலுக்குக் 'கூ' என்றபடி, நிலவின் பரந்த வெளியினடே தன்னை அழைத்த குரலை நோக்கி ஓடினான். கையில் நீலோத்பலம் அதற்குள் ஆகாயமாகத் தனது நீலச்சுடர்களை மலர்த்தி விட்டது.
 
The end
 
 
 
 -பிரமிள்
 
 
Thanks: 'Azhiyachchudarkal'