Saturday, March 30, 2013

காவிகளும் கசடுகளும்






 

நாட்டின் பிரச்சினைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும்   மக்களை விட தோர்கள்தான் அதிகம் காராணம்  இதற்காக நாங்கள் அனைத்து தேரர்களையும் குறைகூறவில்லை எனினும்  இஸ்லாமிய ஆடைகளை விமர்சிக்கும் பொது பல சேனா தலைவர் தேசிய பாதுகாப்புக்கு இஸ்லாமிய ஆண்கள்,பெண்கள் அணியும் ஆடை பிரச்சினையாக அமையும் என்றார் இதன் போது நாங்கள்  அவரது ஆடையினை சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது. 

ஒரு சில தேரர்கள் அணியும் காவி ஆடைக்குள் திருடப்பட்ட பொருட்களையும், போதைப்பொருட்களையும்,  பாதுகாப்பாக கடத்துகின்றார்கள் இதற்காக புத்த துறவிகள் அனைவரும் காவியுடையை அகற்ற நீங்கள் போராடுவீர்களா? இலங்கையில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் நாட்டின் சட்டத்தினை மீறி குற்றம் செய்யவில்லை ஆனால் தேரர்கன் சட்டத்தினை மீறி இருக்கின்றார்கள் என்பதனை பின்வரும் தரவுகள் எடுத்துக்காட்டாகும்.  

2011.10.13 ஆம் திகதி தம்புள்ள , நிகரவெட்டன , பல்லியகதி என்ற பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை விகாரைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய தேரர் கைது செய்யப்பட்டார். 

2011.08.20 ஆம் திகதி மிஹிந்தனை ரஜமகா விகாரையின் சங்கைக்குரிய நமலவெல ரட்னசார தேரர் 13 வயது சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றத்திற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தார்.

2011.10.04 ஆம் திகதி விஹாரைக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரரை அங்குரஸ்ஸ பொலிஸார் மாத்தறை நீதவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 2011.10.12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது.

2012.09.13 ஆம் திகதி ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்து பிக்கு ஒருவர்  பலவந்தமாக முத்தமிட்டார் .இதனையடுத்து சம்மந்தப்பட்ட பிக்குவைக் கண்டி பொலிஸார் கைது  செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அதனை அடுத்து பிக்குவை 2012.09.24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி வீதிமன்றம் உத்தரவிட்டது.

2012.03.07 ஆம் திகதி பேலியகொட பகுதியைசேர்ந்த பிக்கு ஒருவர் ஆபாச வீடியோ காட்சிகளை தேரர்க்கு செந்தமான கணினியில் வைத்திருந்த குற்றத்திகாக தங்கியிருந்த பௌத்த விகாரையில் வைத்து பிக்குவை காவல் துறையினர் கைது செய்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.17 ஆம் திகதி ருவன்வல்ல சோபித தேரர் என்ற பௌத்த பிக்கு தொழில் வாய்ப்பு ஒன்றினை பெற்றுதருவதாக் தெரிவித்து விதவைப் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு கேகாலை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார். 

2012.08.31 ஆம் திகதி ராஜாங்களை யாய 18ம் பிரதேச விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். 

2012.06.04 ஆம் திகதி வலஸ்முல்ல கொலுவார பிரசேத்தில் வீடு வீடாக யாசிக்கும் பிக்கு 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் இப் பிக்குவை 2012.06.11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளர். 

2012.12.26 ஆம் திகதி அநுராதபுரம் மஹகெலகம சுதர்சனாரமா விகாரையைச் சேர்ந்த பிக்கு 15 வயது பள்ளிச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தினார் இப் பிக்குவை பொலிஸார் கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது. 

2012.05.12 ஆம் திகதி  பண்டிருப்பு காலவன்ன விகாரையில் இருந்த 57 வயதான பௌத்த 7,10, 11 வயதுள்ள மூன்று சிறார்களை பலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக புத்தள மாவட்ட வென்னப்புவ  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.16 ஆம் திகதி ஆசிரியர் வங்கி அட்டையை திருடி 90000 ரூபாயை மோசடி செய்த பிக்குவை காவல்துறையினார் கைது செய்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2012.11.29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

2012.06.03 ம் திகதி இலங்கையை சேர்த 65 வயதான  பௌத்த லண்டன் குறோய்டனில் உள்ள தமெஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதி பகலகம சோமரத்ன தோர் வயது குறைந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினார் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்னை விதித்தார். 

2012.02.17 ஆம் திகதி போதைப் பொருள்களை கடத்திய குற்றச்சாட்டிற்கு மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வைத்து தேரர் கைது செய்யப்பட்டார் .

2012.08.03 ஆம் திகதி இளைஞர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு காவல்துறையினரை அச்சுறுத்திய தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இத் தேரருக்கு களுத்துறை நீதிமன்றம் பிடியாணைப் பறிப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.

2012.6.08 ஆம் திகதி பெந்தொட்ட அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற 23 லட்சம் ரூபா தங்க நகை கொள்ளை மற்றும் அளுத்னமையில் இடம்பெற்ற 4கோடி ரூபா மாணிக்கக்கல் கொள்ளை என்பவற்றுடன் தொடர்டைய இதுரவ பண்டாரிகொட பிரதேச விகாரை ஒன்றின் தேரர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

2012.08.06 ஆம் திகதி அம்லிபிட்டிய , கல்அமுணதொல வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரம வெட்டிய  தேரர் கைது செய்யப்பட்டார்.

2012.02.09 ஆம் திகதி கற்பிட்டி ,கண்டக்குளி , சமுர்தர்சன விஹாரையின் பிரதம தேரர் பென்டிவௌ தியசேன மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று பொலன்னறுவை தீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய கட்டுநாக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

2013.03.08 ம் திகதி  பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகம பிரசேத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வந்த பிக்கு ஒருவரை பேலியாகொடை பொலிஸ் இரவு 1.30 மணியாளவில் விகாரையை சுற்றிவளைத்து பிக்குவை பேலியகொடை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

2013.02.03  ஆம் திகதி களனி விஹாரையொன்றின் பீடாதிபதி திருமணமாண 43 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்  பாதிக்கப்பட்ட  பெண் ராகம வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார் இப் பெண் முறைபாடு எதனையும் செய்ய வேண்டாம் என பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக் குழு காவல் துறைக்கு அறிவித்துள்ளது

2013.02.15 ஆம் திகதி பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட நாரம்மலை பிரதேச பிக்குவை வெலிவேரிய பொலிசார் கைது செய்து கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தியபோது 2012.02.27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமான்றம் உத்தரவிட்டது.

2013.01.16 ஆம் திகதி திருகோணமலை மொரவெவ எட்டாபெந்தியேவ பகுதியில்  ஆறு வயது சிறுவரை பலியல் குற்றம் புரிந்த பிக்குவை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸ் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிக்குவை 2013.01.29 ம் திகதி வரை விளக்கதறியலில் வைக்க நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

2013.02.02. பல்வேபெத்த ,ஹெலஉடகந்த பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதி குடிபோதையுடன் பொலிசார் கைது செய்தார்.

2013.02.11 ஆம் திகதி  வெல்லாவ ஹரிபிட்யே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே  திருமணம் செய்தார் இதன்போது வேறு பெயர் ஒன்றில் பதிவு திருமணம் செய்து கொண்டமையும், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமையும் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தமை ஆகிய குற்றசாட்டுக்களுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டார். 

2013.02.24 ஆம் திகதி புத்தளம் கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

எவராக இருந்தாலும் தவறுகள் சுட்டிக்கட்டப்படவேண்டியவை. இல்லை என்றால் எதிர்கால சந்ததிகள் சுட்டிக் காட்டும். மேற்குறிப்பிடப்பட்ட குற்றங்களை செய்த  தேரர்களை கைது செய்த காவல் துறையினர் நாட்டின் அடிப்டை சட்டத்தினை மீறுகின்ற பொது பல சேனா தேரர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? அரசாங்கத்தின் தளத்திற்கு ஆடும் கூட்டம் ஒன்று நாட்டின் உருவாகி விட்டது. தடுப்பது யார் ? பொருத்துப் பார்ப்போம் அல்லாஹ் நம் பக்கம் .
 
- Yakkoob Faizal
 
 Thanks : Jaffna Muslim