Friday, July 26, 2013

கொடிது... கொடிது... டெங்கு கொடிது!





ஆனால், அதனிலும் கொடிது : அது பற்றிய உண்மைகள்!
 
 
 
ன்புள்ள நண்பர்களே!


நமது நாட்டில் அடுக்களை  முதல் அமைச்சரவை வரை டெங்கு பற்றி இப்போதெல்லாம் பரவலாக பேசப்படுவது அனைவரும் அறிந்ததே. அது தொடர்பாக பல இணையத் தளங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட ஒர் பதிவு இது.

இது நமக்கும் மிக நன்றாகவே பொருந்தும் என்பதால் வெகு சில அவசியமான மாற்றங்களுடன் தருகின்றேன். படித்துப் பாருங்கள்...

- Jesslya Jessly





டெங்கு காய்ச்சல் (தமிழகத்தை) மீண்டும் வளைத்திருக்கிறது.


குழந்தைகள் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். தினமும் டெங்கு மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் மே ஜூன் மாதங்களில் கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து தாக்கி வந்திருக்கும் இந்தவகைக் காய்ச்சலினால் இதுவரை 70 பேர் வரை கொல்லப்பட்டிருந்தும் அரசு அதை தடுப்பதற்கு திடமான எந்த முயற்சியையும் எடுக்காமல் மேம்போக்கு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வந்தது. அதாவது சாக்கடைகளின் ஓரங்களில் வெள்ளைப் பொடியை தூவுவது, கொசு மருந்து அடிப்பது, தண்ணீரை தேங்க விடாதீர்கள் என அறிவிப்புச் செய்வது போன்றவைகள் தான் அதிகபட்சம் டெங்குவுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். இதனால் கடையநல்லூர் பகுதிகளை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த டெங்கு கடந்த ஜூன் மாதத்தில் (தமிழகம்) முழுவதும் பரவியது. இப்போது மீண்டும் பலரை பலி கொண்டிருக்கிறது. ஆனால் அரசோ அவைகள் டெங்குவினால் ஏற்படும் மரணங்கள் அல்ல என டெங்கு காய்ச்சல் முன்வைத்து செய்யப்பட்ட கொலைகளின் கணக்கை குறைத்துக் காட்டுவதிலேயே குறியாயிருக்கிறது.
 

இந்த நோயின் தன்மைகளைக் கொண்டு ‘குருதிப் போக்குக் காய்ச்சல்’ என்று மருத்துவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால்,  அரசோ மர்மக் காய்ச்சல் என்று புதுப் பெயர் சூட்டி ஊடகங்கள் மூலம் உலவ விட்டிருக்கிறது. நாளிதல்களில் முழுப்பக்க விளம்பரமாய் சிரட்டைகளில் கூட தண்ணீர் தேக்கக் கூடாது என்று  படத்துடன் விரிந்திருக்கிறது. காட்சி ஊடகங்களில் வட்டமாய்  நடிகர்கள் தோன்றி எல்லாக் காய்ச்சலும் டெங்குவல்ல என்றும், அரசு மருத்துவமனைகளில் நிறைய இரத்தமும் போதிய வசதிகளும் இருக்கிறது என்றும் பயமுறுத்துகிறார். ஏதோ மக்களின் சுகாதாரக் குறைபாட்டினால் தான் டெங்கு பரவுகிறது என்பதைப் போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மட்டுமல்லாது, ஏடிஸ் வகைக் கொடுக்கள் கடிப்பதாலேயே இந்நோய் உண்டாவதைப் போன்ற அதாவது ஏடிஸ் வகையின் எந்தக் கொசு கடித்தாலும் நோய் தொற்றிவிடும் என்பதைப் போன்ற ஊகத் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
 

டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஏடிஸ் கொசுக்களில் இருந்து மனிதர்களுக்கு பரவு பரவுகிறது என்கிறார்கள். ஆனால் இது முழுமையான உண்மையல்ல. டெங்கு வைரஸ் மனிதர்களின் உடலிலும், ஏடிஸ் கொசுக்களிலும், சில வகை குரங்குகளிலும் தங்கியிருக்கும் திறனுள்ளவை. இவை கொசுக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் கொசு வேறொருவரைக் கடிக்கும் போது அவரையும் டெங்கு வைரஸ் தொற்றிக் கொள்கிறது. வேறொரு மூலத்திலிருந்து பெறாமல் சுயமாக எல்லா ஏடிஸ் கொசுக்களும் டெங்குவை பரப்புவதாக ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. டெங்குவை உண்டாக்கும் வைரஸ்களை ஏடிஸ் கொசுக்கள் (நுளம்புகள்)  உற்பத்தி செய்வதில்லை, மாறாக பரப்புகின்றன. ஆனால், அந்த வைரஸ் எதனால் நீடித்திருக்கிறது?
 
மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் பல நாட்களாக வடியாமல் தேங்கி நின்று பள்ளிக்கூடத்துக்கு செல்வது  உள்ளிட்ட அனைத்துக்கும் சிரமப்படும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு சொல்கிறது, சிரட்டைகளில் கூட நீரை தேங்க விடாதீர்கள் டெங்கு வந்துவிடும் என்று. கொசுக்கள் உற்பத்தியாக நீங்களே வழி ஏற்படுத்திக் கொடுக்கதீர்கள் என்கிறது அரசு. ஆனால், நாடெங்கும் சாக்கடைகளையும் கழிவுகளை மூடாமல் திறந்த வெளியாக விட்டு கொசு உற்பத்திக் கூடம் நடத்திக் கொண்டிருப்பதே அரசு தான். போதாதென்று ஆறுகளையும் சாக்கடைகளாக மாற்றியிருக்கிறது. ஓரிடத்தின் திடக்கழிவுகளை அகற்றி இன்னொரு இடத்தில் கொட்டி விட்டு சுத்தம் செய்துவிட்டதாக கூறுகின்றன உள்ளாட்சி அமைப்புகள். ஆனால் அப்படி கொட்டப்படும் இடங்களிலெல்லாம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொசுக்களும் (நுளம்புகள்)  நாற்றமும் தாங்க முடியவில்லை என்று சாலை மறியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கொசு(நுளம்பு)  வளர்ப்பு திட்டத்தை இவ்வளவு செம்மையாக நடத்திவிட்டு நீரைத் தேக்காதீர்கள், சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறுவதற்கு இந்த அரசுக்கு கொஞ்சமாவது அறுகதை இருக்கிறதா?
 

இரவு நேரங்களில் தொடர்வண்டி நிலையங்களிலோ, பேருந்து நிலையங்களிலோ, பொது இடங்களிலோ சிறிது நேரம் நின்றால் தெரியும், ஒரு படையெடுப்பை நடத்தும் நேர்த்தியுடன் கொசுக்கள் (நுளம்புகள்) எப்படி நம்மைத் தாக்குகின்றன என்று. கொசுத்தடுப்பு மருந்துகளோ, திரியோ இல்லாமல் ஓர் இரவு கூட தூங்க முடியாது எனும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி கடவுளைப்போல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன கொசுக்கள் (நுளம்புகள்).


குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் மாதாந்திரம் கொசு மருந்துகளுக்கென்றே எல்லா குடும்பங்களும் நிதி ஒதுக்குகின்றன.

இந்த நிலை எப்படி ஏற்பட்டது?


இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கொசு இப்படி ஒரு பூதாகரமான பிரச்சனையாக இருந்திருக்கவில்லை. தெருக்களில் சேரும் குப்பைகளை சிறுவர்கள் இரவில் தீ வைத்து எரிப்பார்கள், அதுவே ஒரு வாரத்துக்கு கொசுக்கள் அண்டாமல் விரட்டியடிக்க போதுமானதாக இருக்கும். கொசுவலையை பயன்படுத்துவது கூட ஆடம்பரத்தின் செல்வச் செழிப்பின் அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று .. .. ? நீங்கள் தூங்க வேண்டுமென்றால் தனியாக நிதி ஒதுக்கி கொசு மருந்து நிறுவனங்களுக்கு கப்பம் கட்டியே தீர வேண்டும்.





கொசு (நுளம்புகள்) மருந்து நிறுவனங்களின் ஆண்டு லாபம் ஆயிரம் கோடிகளை தாண்டி இருக்கிறது. இந்த நிறுவனங்கள் காந்தியின் அகிம்சை நிறுவனங்கள். இவை தயாரிக்கும் கொசு மருந்துகள் மறந்தும் கூட கொசுக்(நுளம்பு)களை கொல்வதில்லை. அந்த இடங்களிலிருந்து விரட்டிவிட மட்டுமே செய்கின்றன. கொசுச் சுருளைப் பற்றவைத்தால் அந்தச் சுருளில் உட்கார்ந்து இளைப்பாறும் அளவிற்கு கொசுக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி தகவமைத்துக் கொள்வதற்கும், படுவேகத்தில் இனப்பெருக்கம் செய்வதற்கும் கொசுமருந்துகளில் ஊக்கிகள் இருக்கின்றனவா என ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் கிடைக்கலாம்.


கடந்த பத்தாண்டுகளில் கொசு (நுளம்பு)க்களை முன்னிட்டு மக்கள் பணம்
சுரண்டப்படுவதும், அந்த மருந்துகளே கொசுக்களின் இனப்பெருக்கத்தை துரிதப்படுத்துவதும் குறித்து இந்த அரசுக்கு ஏதாவது அக்கரை இருக்கிறதா?
 

டெங்குவை சாதாரண இரத்தப்பரிசோதனை மூலம் அறிய முடியாது, எலிசா பரிசோதனையின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்று மக்களிடம் கூறும் இந்த அரசு அந்த சோதனை செய்யும் வசதியை எத்தனை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தியிருக்கிறது? போதுமான அளவுக்கு இரத்தம் சேமிப்பில் இருப்பதாக புளுகும் இந்த அரசு, டெங்குவுக்கு இரத்தம் ஏற்றுவதை விட இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளைப் பிரித்தெடுத்து அதை ஏற்றுவதே சரியானது என மருத்துவர்கள் கூறுவதை எப்படி எதிர் கொண்டிருக்கிறது. இரத்தத் தட்டுகளை ஏற்றுவதற்கு அரசு மருத்துவமனைகளில் வசதி இருக்கிறதா?


இவைகளைப் பயன்படுத்திக் கொண்டு தான் தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதுவரை டெங்குவுக்கு பலியானவர்களில் அதிகமானோர் தனியார் மருத்துவமனைகளுக்கு கொட்டியழ முடியாத அடித்தட்டு மக்கள் தாம்.
 

தொகுத்துப் பார்த்தால், சாதாரண விசயமாக இருந்த கொசுவை விரட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இறங்கிய பிறகு தான் கொசுக்கள் பல்கிப் பெருகி மிகப்பெரும் பிரச்சனையாக ஆனது. தொடர்ந்து கொசுக்களால் நோய்கள் பரவ அதைக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. மறுபக்கம் அரசு கொசுக்களை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் கொசு வளர்ப்புத் திட்டங்கள் மூலம் அந்த தனியார் நிறுவனங்களுக்கு உதவுகிறது. டெங்குவினால் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்கான நச்சுச் சுழல் இது தான். இந்தச் சுழலைச் சுழற்றும் அச்சாணியாக தனியார்மயமே இருக்கிறது. எனவே டெங்குக் காய்ச்சல் தனியொரு மனிதனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்றோ, தனியார் மருத்துவமனைகளுக்கு கப்பம் கட்ட முடியாத அவலம் என்றோ புரிந்து கொள்வது டெங்குவை ஒழிப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.


சுகாதாரத் துறையில் தனியார்மயத்தை கொசுவை அடிப்பது போல் அடித்து ஒதுக்கினால் மட்டுமே டெங்குவையும் இன்னபிற நோய்களையும் சமூகத்திலிருந்தே விரட்டியடிக்க முடியும்.

Thanks: senkodi

Thursday, July 25, 2013

செங்கொடி –நல்லூர் முபாரக் விவாதம்







ன்புள்ள உலகளாவிய சிறகுகள் நண்பர்களே! 
 
 இருவேறு கருத்துக்களைக் கொண்டவர்கள், பொதுவாக மனித நாகரீக விழுமியங்களை அனுசரித்துச் செல்லும் விதமான கருத்துப் பரிமாற்றத்தினுடாக அல்லது இதயசுத்தியான ஒரு பொதுவிவாதத்தினுடாக பொதுமுடிவுக்கு வருவதற்கு முயற்சிப்பதுண்டு.
 
அத்தகைய விவாதத்திலே நேரடியாக பங்குபற்றுபவர்கள் தவிர ஊடகங்களிலே அதனைக் காண்பவர்களும் அதை நுகர்வது  வழமை. இவ்வாறான நிலையில் அது பொதுமனித விழுமியங்களை மேலும் அனுசரித்துச் செல்வதற்கான ஆரோக்கியமான வாய்ப்பும் அதிகரிக்கும்.
ஆனால் இங்கே பாருங்கள் கீழே இடம்பெறும்,


எது மக்களை சரியாக வழிநடத்துகிறது, இஸ்லாத்தின் சட்டம் குறித்த பார்வையா? கம்யூனிசத்தின் சட்டம் குறித்த பார்வையா?

என்ற விவாதத்தில் செங்கொடி எனும் மனிதரை விவாதம் புரிய வெகுவாக வருந்தியழைத்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதை கவனியுங்கள்! (ஒரு வாக்கியம் கூட தவறாமல் தரப்பட்டுள்ளது)

-Omar Mukthar


செங்கொடியின் முன்விளக்கம்:


நண்பர்களே! தோழர்களே,

மீண்டும் ஒரு விவாதம்.

வழக்கம் போல இஸ்லாமிய மதவாதிகளுடனான இந்த விவாதம் இந்த முறை சட்டம் எனும் சட்டகத்திற்குள் நடத்தப்படவிருக்கிறது. நண்பர் முபாரக்குடன் இப்படி ஒரு விவாதம் நடத்துவதில் தொடக்கத்தில் எனக்கு ஆர்வம் இருந்திருக்கவில்லை. ஆனால் முபாரக்கோ விடாப்பிடியுடன் விவாதம் நடத்தியே தீரவேண்டும் என்று தொடர்ந்து பின்னூட்டங்கள் எழுதி வந்தார்.


விளைவு:


எது மக்களை சரியாக வழிநடத்துகிறது, இஸ்லாத்தின் சட்டம் குறித்த பார்வையா? கம்யூனிசத்தின் சட்டம் குறித்த பார்வையா?
எனும் தலைப்பில் நண்பர் முபாரக்குடன் இந்த விவாதத்தை தொடங்குகிறேன்.


வழக்கம் போல தகுந்த உள்ளீட்டுடனும், நேர்மையாகவும், விமர்சனப்
பார்வையுடனும், நட்புணர்வுடனும் என்னுடைய வாதங்களை வைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.


நண்பர் முபாரக் இங்கு தன்னுடைய வாதங்களை எந்தவித தயக்கமோ, அசூயையோ இன்றி எடுத்து வைக்கலாம். அவை எந்தவித மட்டுறுத்தலுக்கோ, திருத்தலுக்கோ உள்ளாக்கப்படாது. விவாதத்தில் பங்களிக்க விரும்புபவர்கள் வாதங்கள் குறித்த தங்களின் கருத்துகளை தாராளமாக பதிவு செய்யலாம். ஆனால் அந்தக் கருத்துகள் விவாதத்தில் குறுக்கீடு செய்யும் விதமாகவோ, விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாகவோ இருக்கக்கூடாது. அதாவது, ஒரு பார்வையாளனாக கலந்துகொண்டு விவாதம் குறித்து, அது செல்லும் திசை குறித்து தங்கள் கருத்துகளை கூறலாமேயன்றி தாங்களே விவாதத்தை நடத்திச் செல்லக் கூடாது.

(இது இடையிலே  புகுந்து கருத்துக் கூறுபவர்களுக்காக. எனினும் தொந்தரவு கருதி அவை மட்டும் சேர்க்கப்படவில்லை. தேவையானால் பின்பு பார்க்கலாம் - Omar Muktar)



முந்திய விவாதங்களைப் போலல்லாது, இந்த விவாதம் சீராக நடந்து சரியான முடிவை எட்ட வேண்டும் என்றே எண்ணுகிறேன்.


அதனால் தான் விவாத முறையில் கூட – ஒரு கேள்வி அதில் ஒரு முடிவை எட்டிய பின் அடுத்த கேள்வி என – மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறேன். இந்த விவாதம் சீரிய முறையில் நடந்து, அது இன்னும் பலரை அவர்கள் கொண்டிருக்கும் அறிவியல்பூர்வமற்ற நம்பிக்கைகளை பரிசீலனைக்கு உள்ளாக்கும் நிலைக்கு தூண்ட வேண்டும். இது போன்ற விவாதங்களின் சாராம்சமான நோக்கமும் அது தான்.

இனி விவாதக் களத்தில்....

 
செங்கொடி –நல்லூர் முபாரக் விவாதம்
 
 
( Index: 0 = நல்லூர் முபாரக்  @ = செங்கொடி )


0 ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும், உங்களைச் சார்ந்த கம்மூனிச கொள்கை கொண்டவர்கள் மீதும் இன்னும் அனைத்து விதண்டாவாதிகள் மீதும் உண்டாக வேண்டுகிறேன். செங்கொடி முதலில் சுருக்கமாக துவங்குகிறேன்.


எங்களைப் பொருத்தவரையின் அல்லாஹ் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவன். அவன் காரியங்களில் குறைநிறை சொல்லும் அளவுக்கு எந்த மனிதனுக்கும் யாதொரு அறிவும் தகுதியும் சக்தியும் இல்லை. ஆகையினால் இந்த விவாதம் அந்த ஏகனைப் பற்றி தெரிந்து கொண்டதில் உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசங்களை முன்னிட்டே இந்த விவாதம் நடக்கிறது என்பதை மெயினாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கேள்வியாக விவாதம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். மனிதன் பிறப்பது முதல் மரணிப்பது வரை எல்லா சந்தர்ப்பங்களிலும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனித குலம் முழுவதுக்குமான நல்வழிகாட்டுதல்களை ஏக அதிபதியாகிய அல்லாஹ் (ஜல்) 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலம் சங்கை மிக்க குரானில் தெளிவாக அறிவித்துத் தந்திருக்கிறான். அந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.


முதல் பாயிண்டாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால். மனிதன் தவறு செய்யக்கூடியவனாக பலஹீனமானவனாக படைக்கப்பட்டிருக்கிறான். எனவேதான் இந்த உலகம் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் தோன்றிய காலம் தொட்டு அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் சட்டங்கள் போட்டுக் கொண்டே இருக்கிறான். இந்த உலகம் நன்றாக மாறவே இல்லை. இதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் சொன்னாலும் ஒன்று தெளிவாக விளங்கும். அது இந்த உலகத்திற்கு மனிதச் சட்டங்களை விட இறைச் சட்டங்களே அவசியம் தேவை என்பதை உறுதிப்படுத்துகிறது. கம்மூனிச சட்டங்கள் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று நீங்கள் கூறினாலும் அது பலஹீனமான படைப்பான மனிதன் உருவாக்கிய சட்டங்கள் தான் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? நேர்மையாக உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்த உலகில் மனிதச் சட்டங்கள் செய்த குழறுபடிகள் போதாதா? கம்மூனிஸ்டுகள் அனைத்து மனிதர்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு மனிதச் சட்டம் தேவையா? இது தான் என்னுடைய முதல் கேள்வி. நீங்கள் நேர்மையாக பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் பதில்கண்டு பிறகு நான் விரிவாக எழுதுகிறேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும். 


@ நண்பர் முபாரக்,
 
இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வதில் இருக்கும் வேறுபாடுகள் தாமா நம்மிடையே இருப்பது?

அல்ல, நீங்கள் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நான் அதை மறுக்கிறேன். இந்தப்புள்ளிதான் விவாதத்தின் தொடக்கம். உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விவாதிக்கலாம் தவறில்லை.  ஆனால் உங்கள் நம்பிக்கையை பொது உண்மையாகக் கொண்டு விவாதிக்க முடியாது. தெளிவாகச் சொன்னால் உங்கள் நம்பிக்கையை உரசிப்பார்ப்பதற்கான தளம் தான் இந்த விவாதக் களம்.
 
இந்த விவாதத்தின் முதல் கேள்வியாக மனிதனுக்குத் தேவை இறைச்சட்டமா? மனிதச் சட்டமா? என்பதை முன்வைத்திருக்கிறீர்கள்.


நீங்கள் பழைய விவாதங்களைப் படித்ததாக கூறியிருந்தீர்கள். அவற்றில் இதற்கான பதில் இல்லையா? போகட்டும். உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் கூறுவதற்கு முன்பாக சட்டம் என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன? அதன் நோக்கம் என்ன? எப்படி எப்போது தொடங்கியது? போன்றவற்றை வரலாற்றின் ஒளியில் பார்ப்பது இன்றியமையாதது. சட்டங்கள் குறித்த கம்யூனிசப் பார்வையும் அது தான்.
 

மனிதகுல வரலாற்றில் சட்டங்கள் அதாவது மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு என்பது போன்ற அமைப்போ, அதற்கு இசைவான சட்டங்களோ தொடக்கம் முதலே இருந்ததில்லை.


குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தான் சட்டங்களின் தேவை ஏற்பட்டது.


தெளிவாகச் சொன்னால், மக்கள் தங்களுக்குள் பேதமின்றி, இணக்கமாக அனைவரும் உழைத்து அதன் பயனை அனைவரும் பகிர்ந்து கொண்டிருக்கும் வரையில் சட்டங்களின் தேவை எழவில்லை. அந்த மக்கள் பிரிவினரிடையே இணக்கம் காண முடியாத அளவுக்கு பகை முற்றிய போது ஒரு பிரிவினர் ஏனைய பிரிவினரை தங்களின் நோக்கங்களுக்கு ஏற்ப அடக்க முற்பட்டதன் விளைவு தான் அரசும் சட்டங்களும். இது தான் வரலாறு. இது தான் சட்டங்கள் குறித்த கம்யூனிசப் பார்வை.


எந்த வடிவங்களிலான அரசின் சட்டம் என்றாலும் குடியரசு, முடியரசு, ஜனநாயகம் என எந்த வடிவமாக இருந்தாலும் அதன் பொருள் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக ஏனைய வர்க்கங்களை அடக்க உதவும் கருவி என்பது தான்.


இந்த சட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்யும் அதாவது, மக்களை நேர்வழிப்படுத்தும் என்பது ஆளும் வர்க்கங்கள் பரப்பி வைத்திருக்கும் நம்பிக்கை. சட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது எனும் நம்பிக்கையை விதைத்து வைத்திருப்பதன் மூலம் தான் ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தை மறைத்து மக்களைச் சுரண்டிக் கொழுக்க முடிகிறது. இதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. இது தான் சட்டம் என்பதின் பொருள்.
 
இன்றைய மனிதன் தோன்றி ஏறக்குறைய மூன்று லட்சம் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலங்களின் பெரும்பகுதி தோராயமாக பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சட்டம் என்பது அதன் வடிவத்தில் மக்களிடம் இல்லை. அதாவது தோராயமாக பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்வரை மக்கள் அனைவரும் வர்க்க பேதமின்றி சமமாக இருந்தார்கள். இதை கம்யூனிசம் புராதன பொதுவுடமைச் சமுதாயம் எனும் பெயரால் குறிப்பிடுகிறது.


இந்தக் காலகட்டத்திற்கு பிறகு தான் மக்களிடையே இன்றைய பிரிவும் பேதங்களும்; சண்டையும் சச்சரவுகளும் தோன்றின. தெளிவாகச் சொன்னால் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே சட்டங்கள் (அரசு) இல்லை. ஆனால் சம வாய்ப்பும், சம வசதியும் இருந்தன. சமூகத்திற்கு இயல்பாகவே பெண் தலைமைப் பாத்திரம் ஏற்றிருந்தாள், சில சமூக ஒழுங்குகள் இருந்தன. ஆட்சியோ சட்டங்களோ இல்லை.  ஆக மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் சட்டங்களின் காலம் வெகு சொற்பமானது. மனித சமூக உறவுகள் மிகச் சிக்கலாகவும், கடினமாகவும், பகைமையாகவும் ஆனது சட்டங்களின் காலத்தில் தான்.
 

அடிமைக் காலத்தில் ஆண்டான்களுக்கு விரோதமாக சட்டம் இருந்திருக்க முடியுமா? அடிமைகள் தான் சட்டத்திற்கு எதிராக பேசியிருக்க முடியுமா? நிலப்பிரபுத்துவக் காலத்தில் மன்னர்கள் கடவுளைப் போல் மதிக்கப்பட்டனர், மன்னனின் சட்டத்தை குடிமக்கள் திருத்த முடியுமா? இப்படித்தான் சட்டங்களின் பாதை இருந்திருக்கிறது.


இதில் எங்கிருந்து மனிதச் சட்டம் இறைச் சட்டம் எனும் வித்தியாசம் வருகிறது? உலகில் இருந்தவை இருப்பவை எல்லாம் மனிதச் சட்டங்களே.  அச்சட்டங்களை உருவாக்கியவர்கள் சில போதில் தங்களைத் தாங்களே கடவுளாகக் கருதிக் கொண்டனர். சிலர் கடவுளின் அவதாரமாய் கருதிக் கொண்டனர், வேறு சிலரோ கடவுளின் தூதனாய் கருதிக் கொண்டனர். அவர்கள் அவ்வாறு கருதிக் கொள்வதாலேயே கடவுளாகவோ, அவதாரங்களாகவோ, தூதர்களாகவோ ஆகிவிடுவதில்லை.  அவை கருதல்கள், நம்பிக்கைகள். எனவே இருப்பவை, இருந்தவை அனைத்தும் மனிதச் சட்டங்களே, இறைச் சட்டம் என்று ஒன்றுமில்லை.
 

ஆனால் உங்களின் கேள்வியோ மனிதச் சட்டமா? இறைச் சட்டமா? என்று இருக்கிறது. சாராம்சத்தில் அப்படி இருக்க முடியாது என்பதைத்தான் மேலே விளக்கியிருக்கிறேன். ஆக நம் முன் இருப்பது எந்த அடிப்படையிலான சட்டம் சிறந்ததாக இருக்க முடியும் எனும் கேள்வி தான். இஸ்லாம் அதன் நெறிகள் இந்த அடிப்படையிலான சட்டமா? கம்யூனிசம் அதன் நெறிகள் இந்த அடிப்படையிலான சட்டமா? எதன் அடிப்படையிலான சட்டம் ஆகப் பெரும்பான்மையான மக்களைக் காக்கும் என்பதை இந்த விவாதத்தின் தொடர்ச்சியில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது எல்லாம் மனிதச்சட்டம் தான் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா? மெய்யாகவே இறைச் சட்டம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்கள்.  நாம் தொடர்ந்து களமாடலாம்.



0 மிஸ்டர் செங்கொடி

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பார்களே அதுமாதிரி இருக்கிறது உங்கள் பதில். இறைச் சட்டம் இல்லை எல்லாம் மனிதச் சட்டம் என்கிறீர்கள். இதற்கு நிறைய விளக்கமெல்லாம் தேவையில்லை. சிம்பிளாக ஒரு கேள்வி.. உலகம் எப்படி தோன்றியது என்பதை விஞ்ஞானிகள் இன்று தான் கண்டுபிடித்து பிக்பாங்க் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். இது எப்படி அவர்களால் முடிந்தது?.


அல் குர் ஆன் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியது தான். ஆனால் சொல்ல வைத்தவன் அல்லாஹ். அதனால் தான் உலகத்தில் என்னென்ன நாடுகள் இருக்கும் என்று கூட தெரியாத முகம்மது நபி (ஸல்) அவர்கள் பிக்பாங்க் தியரி பற்றி பேசினார்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? சொன்னது மனிதரல்ல இறைவன். உங்கள் மீது கல்லெறிந்தால் கல்லைப் பார்ப்பீர்களா எரிந்தவனைப் பார்ப்பீர்களா. மனம்போன போக்கில் பேசாதீர்கள் மனிதச் சட்டத்திற்கும் இறைச் சட்டத்திற்கும் இடையே தெளிவான கோடு இருக்கிறது. எல்லாம் மனிதச் சட்டம் தான் என்று பொத்தம் பொதுவாக கூற முடியாது. நீங்கள் மதம் என்றால் எல்லாம் ஒன்றுதான் என்று நுனிப்புல் மேய்கிறீர்கள். அதுதான் தங்களை கடவுளாக சொல்லிக் கொண்டவர்களையும், அவதாரம் என்று சொல்லியர்களையும் தூய இஸ்லாத்தோடு இணைத்து முடிச்சு போடப் பார்க்கிறீகள். அவர்கள் புரட்டல்காரர்கள் என்று நாங்களே சொல்கிறோமே ஆனால் இஸ்லாம் உண்மையின் ஒளி. அதை உங்களைப் போன்றவர்களால் ஊதி அணைத்துவிட முடியாது. நீங்கள் எப்படி எல்லாம் மனிதச் சட்டம் என்பதை விளக்காமல் புதாரண பொது உடமை காலம் என்று ஏதேதோ கூறியிருக்கிறீர்கள். சட்டம் இல்லாமல் மனிதன் எப்படி இருக்க முடியும்? சட்டம் இல்லையென்றால் சின்ன பிரச்சனைக்குக் கூட வெட்டிக் கொண்டு சாக வேண்டும். ஒருவன் இடத்தில் இன்னொருவன் வீடு கட்டினால் இடம் யாருக்குச் சொந்தம் என்று எப்படி கண்டுபிடிப்பார்கள்? எப்படி தீர்த்து வைப்பார்கள். கோர்ட், போலீஸ் எல்லாம் இருந்தால் தான் சட்டமா? ஒரு நாட்டாமை தீர்ப்புச் சொன்னாலும் அது சட்டம் தானே. அரசு மட்டும் சட்டம் என்று வராது. அரசு அல்லாத விஷங்களும் சட்டம்தான். உதாரணமாக ஒரு ஸ்கூலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு அரசாட்சியா நடக்கிறது? அல்லது ஜனநாயகமா? அல்லது கம்யூனிசமா? அல்லது வேறு ஏதுவும் நடக்கிறதா? ஸ்கூலின் சகல விஷயங்களையும் கவனிக்கும் தலைமைப் பொறுப்பு ஒருவரைச் சார்ந்ததது. அதற்குகு் கீழ் பல பிரிவுகள் வரை இருந்து ஸ்கூல் நிர்வாகம் உட்டபட மாணவர்களது அனைத்து நடவடிக்கைகளும் கவனிக்கப்படும். அங்கும் மாணவர்களுக்கென்று ஒரு சட்டமும் ஆசிரியர்களுக்கென்று ஒரு சட்டமும் இருக்கும். ஒருவர் ஓர் இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று கட்டளை வகுப்பதும் சட்டம் என்பதை நீங்கள் அறியவில்லையா? சட்டம் இல்லாத காலம் இருந்தது அதுவும் லட்சக் கணக்கான வருஷங்கள் என்று சொல்கிறீர்கள் இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? நீங்களாக உங்கள் இஷ்டத்துக்கு கூறுவதெல்லாம் வரலாறு ஆகிவிடுமா? நீங்கள் இது தான் வரலாறு என்று சொன்னால் அது வரலாறு ஆகிவிடுமா? அல்லது செங்கொடி வரலாறு என்று சொல்லி விட்டால் அது வரலாறாகிவிடும் என்று யாரும் சட்டம் போட்டிருக்கிறார்களா? அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை வளைப்பதைப் பற்றி எழுதியிருக்கிறீகள். இதெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். அரபு நாட்டில் மன்னனுக்கும் சாதாரண மனிதனுக்கும் ஒரே சட்டம் தான். சமீபத்தில் ஒரு கொலைக் கேசில் இளவரசருக்கே தண்டனை கொடுத்தார்கள். இதெல்லாம் மனிதர்கள் சட்டத்தை அமல்படுத்தும் விதம். அமல்படுத்துவதில் சிலர் கூட்டிக் குறைத்து செய்யலாம் அதெல்லாம் இறைச் சட்டமில்லை என்பதற்கு ஆதாரமாகிவிடுமா? இதெல்லாம் மனிதனின் தவறுகள். நாம் இங்கு சட்டத்தைப் பற்றி தான் விவாதம் செய்கிறோமே தவிர அதை செயல்படுத்துவதை பற்றி அல்ல. மனிதர்கள் இயற்றும் சட்டம் இது போன்ற ஓர வஞ்சனைகளுடன் தான் இருக்கும். இவை எதுவுமே அல்லாத முழுக்க முழுக்க நியாமான சட்டங்கள் கட்டாயம் மனிதன் சொல்லியிருக்க முடியாது! கடவுள்தான் சொல்லியிருக்க முடியும்.


சமீபத்தில் டெல்லி பஸ்ஸில் நடந்த கற்பழிப்பு கேசில் இந்தியாவின் எல்லா வாயும் கற்பழிப்புக்கு இஸ்லாமியச் சட்டம் வேண்டும் என முழங்கினார்கள். அவர்களெல்லாம் முஸ்லீம்களா? அவர்களுக்கு தெரிந்திருக்கிறது இஸ்லாமிய சட்டம் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று அதனால் தான் இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்று கேட்டார்கள். இது தான் மனித சட்டத்துக்கும் இறைச் சட்டத்துக்கும் உள்ள வித்தியாசம். இதுமட்டுமா? அந்தக் காலத்தில் சட்டம் இல்லை சட்டம் இருந்தது என்று இரண்டு விதமாகக் கூறி சினிமா காமடியை நினைவு படுத்துகிறீர்கள். ஒரு இடத்தில் இந்தக் காலங்களின் பெரும்பகுதி தோராயமாக பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சட்டம் என்பது அதன் வடிவத்தில் மக்களிடம் இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு இடத்தில் சமூகத்திற்கு இயல்பாகவே பெண் தலைமைப் பாத்திரம் ஏற்றிருந்தாள், சில சமூக ஒழுங்குகள் இருந்தன என்று எழுதியிருக்கிறீர்கள். பெண் எதற்கு தலைமைப் பொருப்பு ஏற்க வேண்டும்? சமூக ஒழுங்குகள் இருந்ததாம் அது என்ன சமூக ஒழுங்கு அதை தானே சட்டம் என்கிறோம். இறைச் சட்டம் இல்லை என்று ஷோ காட்டுவதற்காக முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக கூறுகிறீர்கள். எனவே இல்லாத ஊருக்கு போகக்கூடாத வழியில் போகாமல் இஸ்லாத்தை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் ஆசை. இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இறைவன் இருக்கிறான் என்பதை பொது உண்மையாகக் கொண்டு விவாதிக்கக் கூடாது என்று என்னிடம் கூறிவிட்டு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? கம்யூனிசத்தில் சொன்னதெல்லாம் பொது உண்மை என்பது போல் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்தில் 90 சதவீத மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்பி தங்கள் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதை பொது உண்மை இல்லை என்று எழுதும் நீங்கள், பத்து சதவீதம் கூட இல்லாமல் செத்து ஒழிந்து போய்விட்ட கம்மூனிசத்தை பொது உண்மை போல் விவாதிக்கிறீர்கள். ஏதோ கடவுள் இல்லை என்பது 21ஆம் நூற்றாண்டின் அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை போன்றும், நாங்கள் நிரூபிக்காத நம்பிக்கையில் உழல்வது போன்றும் படம் காட்டியிருக்கிறீர்களே. கடவுள் இருக்கிறார் என்பது எங்களின் நம்பிக்கை என்கிறால் அதே அளவுக்கு கடவுள் இல்லை என்பது உங்களின் நம்பிக்கை! எங்கள் நம்பிக்கையை பொது உண்மையாக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கும் நீங்கள் உங்கள் நம்பிக்கையை மட்டும் பொதுவிதி போன்று எழுதலாமா? இது தான் நீங்கள் நேர்மையாக விவாதிக்கும் அழகா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்.


@நண்பர் முபாரக்,
 
உங்கள் பதிவை படிக்கும் போது பரிதாபமாய் உணர்ந்தேன். உங்களுக்கு இஸ்லாம் குறித்து அதிகம் தெரியாது என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். கம்யூனிசம் குறித்து உங்களுக்கு எதுவரை தெரியும் என்று கேட்டால் நீங்கள் வாத்தியாரா என்று கோபப்படுகிறீர்கள். ஆனால் உங்கள் பதிவோ உச்ச அலட்டலாய் இருக்கிறது. இந்த நிலையில் கண்டிப்பாய் நாம் விவாதிக்கத்தான் வேண்டுமா? பரிசீலனை செய்யுங்கள்.
 
என்மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்கள். நான் கம்யூனிசத்தை பொது உண்மையாய் வைத்து விவாதித்திருந்தேனா? சுட்டிக்காட்டுங்கள். நீங்கள் இறைவனை அறிவதில் இருக்கும் வித்தியாசம் தான் நம்மிடையே இருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதை மறுத்துத்தான் நான் இறைவன் இருக்கிறான் என்பது பொது உண்மையல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய வாதம் எனும் அளவுக்குத்தான் நான் கம்யூனிசத்தைப் பயன்படுத்தியிருந்தேன். ஏனென்றால், என்னுடைய வாதத்தின் அடிப்படை கம்யூனிசமே. ஆனால் கம்யூனிசம் என்பது பொது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது என்பது உங்களின் கவனத்திற்கு. இதில் இன்னொரு அம்சம் பொது உண்மை என்றால் என்ன? என்பது. நூற்றில் தொன்னூற்றொன்பதுவர் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாலும் அது பொது உண்மை ஆகிவிடுவதில்லை. ஒற்றை ஒருவர் தவிர ஏனைய அனைவரும் பூமி தட்டை என்றாலும் பூமி உருண்டை என்பதே பொது உண்மை. எனவே அறிவியலின் மேடையில் உரசிப்பார்த்து சமூகம் ஏற்றுக் கொண்டிருப்பது தான் பொது உண்மையாய் கருதப்படுமேயன்றி அது எண்ணிக்கை கணக்கில் வருவதில்லை.
 
இஸ்லாமியச் சட்டங்கள் இறைச்சட்டங்களா? நீங்கள் பெருவெடிப்புக் கொள்கை குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னமே குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று புளகமடைகிறீர்கள். இதுபோன்ற புளகாங்கிதங்கள் தான் உங்கள் ஆதாரங்களா? நான் ஏற்கனவே இஸ்லாம் குறித்த தொடரில் இது குறித்து எழுதியுள்ளேன். குறிப்பிட்ட அந்த வசனங்களில் பெருவெடிப்புக் கொள்கை குறித்து எதுவும் இல்லை. தவிரவும் இவ்வாறான நிருவல்கள் இறைவன் உண்டா இல்லையா எனும் வாதத்திற்குத்தான் இட்டுச் செல்லும். அது இங்கு தேவையில்லை. நான் எல்லாம் மனிதச் சட்டங்களே என்பதை வரலாற்று, அறிவியல் பார்வையினூடாக எடுத்து வைத்ததைப் போல் நீங்களும் யதார்த்தத்தினூடாக உங்கள் வாதங்களை எடுத்து வைக்கவும், கற்பனைகளிலிருந்து அல்ல.
 
புராதன பொதுவுடமை சமுதாயம் குறித்து நான் கூறியிருப்பவை என்னுடைய சொந்தக் கற்பனையோ, கம்யூனிசத்தின் நிலைப்பாடு மட்டுமோ அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களின் ஆய்வுகள் குறித்த எந்த நூலை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவற்றில் அரசோ சட்டமோ இல்லாத, சமவாய்ப்பும் சமவசதிகளும் கொண்ட சில லட்சம் ஆண்டுகள் நீண்ட இனக்குழுக்களின் வாழ்க்கச் சித்திரத்தை நீங்கள் காண முடியும். இதற்கு நீங்கள் கம்யூனிச ஆய்வாளர்களின் நூல்கள் மட்டுமல்ல முதலாளித்துவ ஆய்வாளர்களின் நூல்களைக் கூட எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் வாதம் புரிவதற்கு முன் சற்று அறிதலுடன் இருத்தல் நலம்.
 
சட்டம் என்பதும் சமூக ஒழுங்கு என்பதும் ஒன்றா? ஆட்சியமைப்பு என்பதும் பெண் தலைமைப் பொறுப்பு ஏற்றதும் ஒன்றா? இவைகளுக்கிடையேயான வேறுபாடுகளையும் அதன் பின்னணிகளையும் அறிய வேண்டியது அவசியம். சட்டத்திற்கும் சமூக ஒழுங்கு என்பதற்கும் இரண்டு வேறுபாடுகளை முதன்மையானதாக குறிப்பிடலாம்.


 1) சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு, சமூக ஒழுங்கை மீறினால் தண்டனை இல்லை.


2) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சட்டத்தை பின்பற்றவேண்டியது அனைவரின் கடமை, விரும்பி, ஏற்று செய்வது சமூக ஒழுங்கு.


திருடக்கூடாது என்பது சட்டம் அதை மீறினால் தண்டனை. காலையில் எழுந்ததும் அனைவரும் பல்துலக்க வேண்டும் என்பது சமூக ஒழுங்கு இதை மீறியதாகக் கூறி எவரையும் தண்டிக்க முடியாது. எனவே சட்டங்கள் என்பதும் சமூக ஒழுங்கு என்பதும் ஒன்றல்ல. இதுபோல ஆட்சி என்பதையும் பெண் தலைமைப் பொறுப்பு ஏற்றதையும் ஒன்றெனக் கருத முடியாது. இதற்கும் இரண்டு வேறுபாடுகளை முதன்மையானதாக கூறலாம்.


1) ஆட்சி என்பது அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது, பெண் தலைமைப் பொறுப்பு ஏற்றது அதிகாரமற்றது. அதாவது ஆட்சியாளர்களைப் போல எந்த அதிகாரமும் தலைமைப் பொறுப்பேற்ற பெண்ணுக்கு கிடையாது. ஒரு இனக் குழுவை அதிக சேதமின்றி உணவைப் பெறுவதற்காக இயல்பாக, வழிகாட்டும் தேவையிலிருந்து ஏற்பட்ட ஒரு தலைமை.


2) ஆட்சி என்பது தனிப்பட்ட நிர்வகப் பொறுப்பு, பெண் தலைமை என்பது அவ்வாறன்றி இனக்குழு உறுப்பினர்கள் அனைவரும் என்னென்ன வேலைகள் செய்வார்களோ அதற்கு ஈடாக தலைமைப் பெண்ணும் செய்ய வேண்டும் கூடுதலாக இனக்குழுவுக்கும் வழிகாட்டுவார். எனவே ஆட்சி என்பதும் தலைமைப் பொறுப்பேற்றதும் ஒன்றல்ல. இங்கு சட்டம் குறித்து மட்டுமே விவாதிக்கிறோம் ஆட்சி குறித்தல்ல என்று கூறமுடியாது. ஏனென்றால் ஆட்சி என்பதும் சட்டம் என்பதும் பிரிக்க முடியாதபடி ஒன்றானவை. சட்டமில்லாத ஆட்சியை கற்பனை செய்து பாருங்கள். அல்லது அதிகாரம் இல்லாத சட்டம் குறித்து சிந்தித்துப் பாருங்கள். எனவே சட்டம் என்பது வேறு சமூக ஒழுங்கு என்பது வேறு. அதுவும் சட்டம் தான் என பொதுமைப்படுத்த முடியாது.
 
இதில் நீங்கள் பள்ளிக்கூடத்தை எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்கள். அதுவும் அரசைப் போலத்தான், அதிலும் அதிகாரமும் சட்டங்களும் உண்டு. நாட்டாமை தீர்ப்பு கூறுவது, பள்ளிக்கூட விதிமுறைகள், இதுபோன்ற வேறு சில ஆகியவைகள் அரசைப் போல அதிகரத்தின் நீர்த்த வடிவங்கள். எனவே அரசு செய்யவில்லை என்பதனால் மட்டுமே அது சட்டங்களில்லை என்று ஆகிவிடாது. அரசைப் போன்ற அதிகாரத்திலிருந்து அரசு சட்டமியற்றும் நோக்கத்தை ஒத்திருக்கும் அனைத்தும் சட்டங்கள் தாம். இவைகளையும் சமூக ஒழுங்கையும் கூட ஒரு தட்டில் வைக்க முடியாது. எனவே மனிதன் வர்க்கங்களாய்ப் பிரிந்து அவர்களிடையே இணக்கம் காணமுடியாதபடி பகை ஏற்பட்டதன் விளைவாக அரசு தோன்றிய பின்னரே சட்டங்கள் வருகின்றன. ஆனால் சட்டங்கள் தோன்றுவதற்கு முன்னதான சில லட்சம் ஆண்டுகளில் மனிதனை வழிகாட்டவேண்டிய தேவை அதிகமதிகம் இருந்தது. அந்த தேவையின் வலியில், வழியிலேயே மனிதன் முட்டிமோதி ஒவ்வொன்றையும் அறிந்து கொண்டான். மாறாக சட்டங்களோ ஒரு வர்க்க மக்களுக்கு சாதகமாக பிற வர்க்க மக்களை ஒடுக்கும் கருவியாக இருந்தது. இந்த அடிப்படையிலும் கூட சட்டங்கள் என்பது இறைச் சட்டமாக இருந்திருக்க முடியாது என்று கூறலாம்.
 
அடுத்து இந்திய ஆட்சியாளர்கள் சட்டங்களை தவறாக கையாள்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். இதை நான் என்னுடைய வாதத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டிருந்ததெல்லாம் சட்டம் ஆளும் வர்க்கத்தின் கருவியாய் இருந்து பிற வர்க்கங்களை ஒடுக்குகிறது என்பதைத்தான். வாதத்தை சரியாக புரிந்து கொண்டு அதில் ஐயங்களை, கேள்விகளை எழுப்பினால் தகுந்த பதிலளிக்கப்படும்.
 
தொகுப்பாக: சட்டங்கள் இல்லாத காலம் இருந்தது. சமூக ஒழுங்குகளும் சட்டங்களும் ஒன்றல்ல. எனவே, எல்லாம் மனிதச் சட்டங்களேயன்றி இறைச் சட்டங்கள் என்று ஒன்றுமில்லை. இன்னும் இறைச்சட்டங்கள்  இருப்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் அதற்கான சான்றுகளை எடுத்து வைக்கவும்.

(பின்குறிப்பு: வேலைப்பழு அதிகம் இருந்ததால் விரிவாக எழுத முடியவில்லை. தேவைப்படின் அடுத்த பதிவை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுகிறேன்.)



0 மிஸ்டர் செங்கொடி,


ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் இப்படித் தான் பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கேட்டதற்கும் நீங்க எழுதியிருப்பதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? நீங்கள் எழுதியிருப்பது தான் ஒரே அலட்டலாக இருக்கிறது. தன்னைத்தவிர மற்ற எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிறையப் பேர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். இஸ்லாம் தெரியாது, கம்மூனிசம் தெரியாது என்று நான் கூறினேனாம். சரி உங்களுக்கு எல்லாம் தெரியுமோ. உங்களுக்கு என்ன தெரியும் என்பது நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே. உங்களுக்கு என்னுடன் வாதம் செய்ய முடியவில்லை என்றால் தாராளமாய் நின்று விடலாம். எனக்கே பதில் சொல்ல முடியாமல் தள்ளாடும் நீங்கள் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பில்டப் கொடுக்கிறத முதல்ல நிறுத்துங்கள். கம்மூனிசம் என்றாலே பொது உண்மைதான் என்று சொல்லும் உங்களுக்கு எங்க மார்க்கத்தைப் பற்றி என்ன தெரியும்? நாலு வெப்சைட்ட படிச்சுட்டு பத்து கட்டுரை எழுதிட்டா உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சதா ஆயுடுமா? இந்த உலகம் எப்படி தோன்றியது என்று விஞ்ஞானிகளே வியக்கும் படி விளக்கும் திருக் குர் ஆனின் வசனங்கள் உங்களுக்கு கற்பனையாகத் தெரிகிறதா? எல்லாம் தானாகவே வந்தது என்று சொல்லும் அரைவேக்காட்டுத் தனமான உளறல் உங்களுக்கு பொது உண்மையா? புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். எது சட்டம் எது சமூக ஒழுங்கு எனக்கு டியூசன் நடத்திய செங்கொடியே பல் துலக்கவில்லை என்றால் அதற்கு தண்டனை கிடையாதா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் மகன் காலையில் பல்துலக்காமல் டீ குடித்தால் ஆஹா நல்ல காரியம் செய்தாய் என்று பாராட்டுவீர்களா? அடித்து பல்துலக்கச் செய்ய மாட்டீர்களா? இப்படி ஈஸியான விஷயம் கூட தெரியவில்லை என்று நினைக்கும்போது உங்களைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது. இப்படி கஷ்டப்பட்டு தேடிப்பிடிச்சு பாயிண்ட் பாயிண்டா எழுதுவதற்குப் பதிலாக உண்மையை ஒப்புக் கொள்ளலாம். ஒரு விசயத்தில் எதுவெல்லாம் கட்டுப்படுகளை விதிக்கிறதோ அதுவெல்லாம் சட்டம் தான். இதன்படி பார்த்தால் சட்டமில்லாத காலம் என்று ஒன்று இல்லவே இல்லை. மனிதச் சட்டங்களெல்லாம் ஒரு வருஷத்துக்குக் கூட தாக்குப் பிடிக்காமல் மாற்றிக் கொண்டிருக்கும் போது 1400 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு சின்ன மாற்றம் கூட தேவைப்படாமல் இருக்கும் ஒரே வேதம் திருக் குர் ஆன் ஒன்றுதான். இது ஒன்றே புரியவைகவில்லையா ஷரியத் சட்டங்கள் இறைச் சட்டங்கள் என்று. இதை தெளிவாக மறுத்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் பார்க்கலாம். அது முடியாததால் தானே புரியாமல் கம்மூனிச புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே காப்பிபேஸ்ட் செய்கிறீர்கள். இதற்கும் காப்பிபேஸ்ட் வித்தையை காட்டாமல் சிம்பிளாக பதில் கூறுங்கள். எனக்கும் வேலை அதிகமாக இருப்பதால் இத்துடன் முடிக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்தமுறை விரிவாக பதிலளிக்கிறேன்.




@ நண்பர் முபாரக்,
 
நீங்கள் என்னுடைய பதிலை படித்து உள்வாங்காமல், அகக்கிளர்ச்சி அகலாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு கோபம் கொப்பளிக்கிறது உங்கல் பதிவில். நிதானமாக யோசித்துப் பாருங்கள். உலகில் இறைச் சட்டங்கள் உண்டா? நீங்கல் எழுதிய விஞ்ஞானிகளே வியக்கும் படி விளக்கும் 1400 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு சின்ன மாற்றம் கூட தேவைப்படாமல் இருக்கும் என்பன போன்ற புளகமடைதல்கள் எல்லா மதங்களிலும் உண்டு. இதைத்தான் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? என்றால் நம்முடைய விவாதம் வேறு தலைப்புகளில் திரும்பும் இதை விரும்புகிறீர்களா?
வரலாற்று பூர்வமாகவே மனிதன் தனக்கு தேவையான கட்டுப்பாடுகளை தானே சொந்த அனுபவங்களின் மூலம் முட்டிமோதி கற்றுக் கொண்டு அதை சமூகத்திற்கும் தந்து சென்றிருக்கிறான். மனிதனல்லாத ஏதோ ஒரு ஆற்றல் மனித அனுபவங்களுக்கு அப்பாற்பாட்டு கட்டுப்பாடுகளைத் தந்து சென்றதாக எந்த நிகழ்வும் வரலாறுகளில் இல்லை. ஆனால் இதை புரிந்து கொள்ளவோ பரிசீலனை செய்யவோ போதிய உள்ளீட்டுடன் நீங்கள் இல்லை. எனவே மதவாத கற்பனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களிடம் உங்கள் மதம் தொடர்பான மூலகங்களிலிருந்து கேள்வி எழுப்பினால் தான் புரியவைக்க முடியும் எனக் கருதுகிறேன்.
இறைச் சட்டமா? என்பதை எடுத்துக் கொள்வோம். கொலைக்கு கொலை என்பது உங்கள் வேதம் சொல்லும் நிலை. செய்த திருட்டை மறைப்பதற்காக ஒருவன் இன்னொருவனைக் கொண்று விடுகிறான். தன் மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்ற தந்தையை தாயே கொன்றுவிடுகிறாள். இந்த இரண்டு நிகழ்வுகளில் உங்கள் மத விகாரங்களின் படி இரண்டும் கொலை என்றாகிறது. ஆனால் மனித விழுமியங்களின்படி இரண்டையும் கொலை என்ற ஒரே தராசில் வைத்து மதிப்பிட முடியாது. அப்படி மதிப்பிட்டால் அது பெரும் பிழையாகும். ஆனால் அந்த பெரும்பிழையை உங்கள் மத வேதங்கள் செய்திருக்கிறது. இதை மறுத்து உங்களால் விளக்கமளிக்க முடியுமா? இறைவன் எல்லா தவறுகளையும் விட்டு நீங்கியவன் என்று உங்களால் கூறப்படுவது உண்மையானால் இப்படி ஒரு சட்டத்தை இறைவன் தந்திருக்க முடியாதே. எனவே அவை இறைவன் பெயரால் கூறப்படும் மனிதச் சட்டங்களே.
 

சமூகக் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் ஒன்றா? என்பதை எடுத்துக் கொள்வோம். வட்டி வாங்கக் கூடாது என்பது உங்கள் வேத நூல்களின்படி சட்டம். வாங்கினால் தண்டனை உண்டு, வட்டி வாங்குவதற்கு நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்பதும் உங்கள் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் ஒன்று தான். ஆனால் இதைச் செய்யா விட்டால் அதற்கு தண்டனை கிடையாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்கு கீழ்ப்படிந்தே ஆக வேண்டும் என்று கண்டிப்பு கிடையாது. (பக்கத்து வீட்டில் ஒரு ஆலிம்ஷா தன் மகன் தாடி வளர்க்காததை கண்டித்து தண்டித்து வளர்க்கச் சொன்னதை நான் பார்த்திருக்கிறேன் என்று எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்) இரண்டுமே உங்கள் வேதங்களில் கூறப்படுவது தான். இரண்டுமே மனிதனின் வாழ்க்க நெறிகள் எனும் அடிப்படையில் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பவை தாம். ஆனால் ஒன்று ஷரீயத் ஆகவும் மற்றொன்று சுன்னா ஆகவும் கருதப்படுகிறதே ஏன்? எனவே கட்டுப்பாடுகளை விதிப்பவை எல்லாம் சட்டங்கள் தம் என பொதுமைப்படுத்த முடியாது.
 
இவைகளுக்கு தகுந்த மறுப்பை நீங்கள் கூற வேண்டும். அல்லாத பட்சத்தில் இறைச் சட்டங்கள் என எதுவுமில்லை என்றும், கட்டுப்பாடுகளும் சட்டங்களும் ஒன்றல்ல எனும் அடிப்படையில் நீண்ட நெடிய காலம் மக்கள் சட்டங்களின்றியே சரியான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொண்டதாக கருதப்படும்.
 
போதும் எனக் கருதுகிறேன். தேவைப்படின் மீண்டும் மேலதிக விளக்கங்களுடன் வருகிறேன்.



0 மிஸ்டர் செங்கொடி,


நீங்கள் பயந்து போய் இருக்கிறீர்கள் என்பது அருமையாக தெரிகிறது. செங்கொடி இஸ்லாத்தை குறைகூறி பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால் கம்மூனிசத்தைப் பற்றிக் கேட்டால் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவார் என்று இந்த விவாதம் தொடங்கும் போது சகோதரர்கள் என்னிடம் கூறினார்கள். அது உண்மை என்று இப்போது புரூஃப் ஆகி விட்டது. புதாரண பொது உடமை என்றீர்கள், சமூகக் கட்டுப்பாடு என்றீர்கள் திடீரென அதெல்லாம் மிஸ் ஆகி விட்டதே ஏன்? கம்மூனிசத்தில் இதற்கு மேல் சரக்கு இல்லையா? அல்லது இதற்கு மேல் கம்மூனிச பருப்பு வேகாது என நினைத்தீர்களா? இப்போது சைலண்டாக திருக் குர் ஆன் வசனங்களுக்கு வந்து விட்டீர்கள். இது தான் நீங்கள் எந்த அளவுக்கு பயந்து போய் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக் கொடுக்கிறது. உங்கள் கற்பனைகளைக் கூறி இது தான் வரலாறு என்றீர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சட்டமே இருந்ததில்லை என்றீர்கள். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டேன். பதிலே இல்லை. பல்துலக்குவதற்கு தண்டனை இல்லை என்றீர்கள். உங்கள் மகனோ மகளோ (மேரேஜ் ஆயிடுச்சு தானே) பல்துலக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கிடுக்கிப் பிடி போட்டேன். மூச்சே விடவில்லை. பதில் சொல்ல முடியவில்லை என்றதும் இப்போது நைசாக குர் ஆன் க்கு தாவி விட்டீர்கள். அதையாவது உருப்படியாய் செய்தீர்களா என்றால் அதுவும் இல்லை. நீங்கள் சொல்லியிருப்பதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யார் எதற்காக கொலை செய்தாலும் அதற்கெல்லாம் ஒரே தண்டனை என்று திருக் குர் ஆனில் எந்த இடத்தில் இருக்கிறது? உங்களுக்கு தைரியமிருந்தால் எடுத்துக் காட்டுங்கள். அதே மாதிரி தான் தாடியும் எந்த இடத்தில் எல்லோரும் கண்டிப்பாக தாடி வைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது காட்ட முடியுமா? கிருக்குத்தனமாக நீங்கள் கற்பனை செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடுமா? காழ்ப்புணர்ச்சியுடன் நீங்கள் உளறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதலில் நீங்கள் சொல்லியதற்கு ஆதாரம் தாருங்கள் அல்லது இஸ்லாத்தின் மீது கண்ட கண்ட கற்பனைகளைச் செய்ததற்காக மன்னிப்ப்பு கேளுங்கள். நீங்கள் நேர்மையாக ஆதாரபூர்வமாக எழுதும்போது அதற்கான மறுப்பு இன்ஷா அல்லாஹ் சவுக்கடி போல் வரும்.


@ நண்பர் முபாரக்,
 
எந்த வடிவில் பதில் கூறினால் உங்களுக்கு புரியும் என யோசித்தேன், எப்படி எழுதினால் உங்களால் உள்வாங்க முடியும் என சிந்தித்தேன், என்ன வகையில் சொன்னால் உங்களுக்கு எளிமையாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் உங்களுக்கு எதையும் பரிசீலிக்கும், மீளாய்வு செய்யும் விருப்பமிருக்கிறதா என ஐயம் கொள்ளும் இடத்திற்கு என்னை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மதங்களை, கடவுளர்களை நம்புவது என்பது வேறு, அது குறித்து கொஞ்சமும் பரிசீலித்துப் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பது வேறு. முந்தியதில் நீங்கள் அப்பட்டமான மதவாதியாக இருக்கிறீர்கள். பிந்தியதில் நீங்கள் மனிதனுக்கான இலக்கணங்களைத் தொடவே இல்லை. உங்கள் பதிவுகளைக் கொண்டே இதைக் கூறுகிறேன். இப்படியான நிலையில் உங்களுடன் விவாதத்தை தொடர்வது எவ்வளவு கடினமானது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். எனக்கான நேரத்தை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் தொடர்கிறேன்.
 
புராதன பொதுவுடமை சமுதாயம் குறித்த செய்திகளுக்கும், பல்லாயிரம் ஆண்டுகள் சட்டமின்றி இருந்தது மனித வரலாறு என்பதற்கும் ஆதாரம் காட்டாமல் இருந்தேனா?

/// நீங்கள் இது தான் வரலாறு என்று சொன்னால் அது வரலாறு ஆகிவிடுமா? அல்லது செங்கொடி வரலாறு என்று சொல்லி விட்டால் அது வரலாறாகிவிடும் என்று யாரும் சட்டம் போட்டிருக்கிறார்களா?//// என்று நீங்கள் கேட்டது ஜூன் 15ம் தேதி. இதற்கு நான்

////வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களின் ஆய்வுகள் குறித்த எந்த நூலை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவற்றில் அரசோ சட்டமோ இல்லாத, சமவாய்ப்பும் சமவசதிகளும் கொண்ட சில லட்சம் ஆண்டுகள் நீண்ட இனக்குழுக்களின் வாழ்க்கச் சித்திரத்தை நீங்கள் காண முடியும். இதற்கு நீங்கள் கம்யூனிச ஆய்வாளர்களின் நூல்கள் மட்டுமல்ல முதலாளித்துவ ஆய்வாளர்களின் நூல்களைக் கூட எடுத்துக் கொள்ளலாம்/// 

என்று பதில் கூறியது ஜூன் 24ம் தேதி. இதற்குப் பிறகு இது குறித்து நீங்கள் ஏதாவது கூறியிருக்கிறீர்களா? ஒன்றுமில்லையே. இப்போது திடீரென மீண்டும் நான் ஆதாரமில்லால் கூறியிருப்பதாக  பொய் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?
 
பல் துலக்கும் விசயத்தில் நீங்கள் எனக்கு கிடுக்கிப்பிடி போட்டீர்களா? கிடுக்கிப்பிடி, சவுக்கடி, செருப்படி, நெத்தியடி இதுபோன்ற சொற்களெல்லாம் முகம்மதியவாதிகளுக்கு மட்டும் காப்பீடு செய்யப்பட்ட சொற்களா என்ன? உங்களைப் போன்றவர்களை இவ்வாறான சொற்பாவனை செய்யும் போது குபீர் சிரிப்பு கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை. இந்த விசயத்தில் உங்களின் கேள்வி எள்ளவளவு பாமரத்தனமானது என்பதை ஓர் எள்ளல் மூலம் காட்டியிருந்தேனே கவனிக்கவில்லையா நீங்கள்? ஜூலை 8ம் தேதி நான் எழுதிய அந்த எள்ளல் இதோ ///(பக்கத்து வீட்டில் ஒரு ஆலிம்ஷா தன் மகன் தாடி வளர்க்காததை கண்டித்து தண்டித்து வளர்க்கச் சொன்னதை நான் பார்த்திருக்கிறேன் என்று எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்.
 
உங்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தான் நான் குரான் வசனங்களுக்கு தாவி விட்டேனா? உங்களின் எந்தக் கேள்விக்கு நான் பதில் கூறாமல் விட்டு விட்டேன் என்று கூற முடியுமா? மட்டுமல்லாமல் நான் ஏன் குரான் வசனங்களுக்கு தாவுகிறேன் என்பதை தெளிவாக அறிவித்து விட்டுத்தான் செய்திருக்கிறேன். இதோ அந்தக் காரணம்


////ஆனால் இதை புரிந்து கொள்ளவோ பரிசீலனை செய்யவோ போதிய உள்ளீட்டுடன் நீங்கள் இல்லை. எனவே மதவாத கற்பனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களிடம் உங்கள் மதம் தொடர்பான மூலகங்களிலிருந்து கேள்வி எழுப்பினால் தான் புரியவைக்க முடியும் எனக் கருதுகிறேன்.///


 பதில் கூறுமுன் என்ன எழுதப்பட்டிருக்கிறது? எதற்கு பதில் கூறுகிறோம் என்பதை அலசிப் பார்த்துவிட்டு பின் எழுதுவது நலம்.
 

இஸ்லாம் குறித்து நான் கூறியிருப்பவை ஆதாரமற்ற காழ்புணர்சியிலானாலான கற்பனைகளா? முதலில், எதற்கு ஆதாரம் வழங்க வேண்டும். வெளிப்படையான ஒன்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. இஸ்லாம் குறித்து நான் எழுப்பியிருக்கும் எதுவும் மறைமுகமானவை அல்ல. இஸ்லாமிய மூலகங்களில் இல்லாததும் அல்ல. இது நீங்கள் உட்பட இதனை படிக்கும் அனைவருக்கும் தெரியும். கொலைக்கு இன்ன தண்டனை தான், வட்டி வாங்குவது ஹராம், தாடி வைப்பது சுன்னத் இது போன்ற செய்திகளுக்கெல்லாம் ஆதாரம் கேட்டீர்கள் என்றால் குரானை நீங்கள் படிக்கவில்லை என்பது பொருளாகிறது. முதலில் அதைச் செய்யுமாறு பணிக்கிறேன். கொலைக்கு என்ன தண்டனை என்று குரான் அத்தியாயம் 2 அல்பகராவில் வசனம் 178ல் கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருளுக்கு மாற்றமாக, அதாவது கொலைக்கான காரணங்களால் அதற்கான தண்டனை மாறுபடும் எனும் பொருளில் குரான் வசனமோ ஹதீஸ்களோ இல்லை. இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்களா? இங்கு நான் எழுப்பியிருக்கும் கேள்வி என்னவென்றால் இருவேறு விதமான நோக்கங்களுக்காக செய்யப்படும் கொலைகளில் காரணங்களை முன்வைத்து அக்கொலைக்கான தண்டனை மாறுபடுமா? என்பது தான்.


குரானிலோ ஹதீஸ்களிலோ காரணங்களை நோக்கங்களை முன்வைத்து தண்டனை மாறுபடும் என்று ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? ஆம் இருக்கிறது என்றால் சுட்டிக் காட்டுங்கள். பரிசீலித்து என்னுடைய கேள்வியை நான் விலக்கிக் கொள்கிறேன். சுட்டிக் காட்ட முடியுமா உங்களால்? இஸ்லாமிய மூலகங்களின்படி கொலை என்பது ஒருவனுடைய குற்றம், அதற்கான தண்டனை அல்லது அதற்கான பரிகாரம் (இரத்தப்பணம்) எனும் கோணத்தில் தான் அணுகுகிறதேயன்றி; அந்தக் கொலைக்கான காரணம் என்ன? அந்தக் காரணத்தில் நேர்மையோ நீதியோ இருக்கிறதா என்பதெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் இல்லை. இப்படி இஸ்லாத்தின் பார்வை விசாலமில்லாதிருப்பது ஏன்? இப்படியான குறுகிய பார்வை கொண்ட ஒரு சட்டம் இறைச்சட்டமாக இருக்க முடியுமா? மனிதச் சட்டமே என்பது தான் என் வாதம் மறுக்க முடியுமா உங்களால்?
 
தாடி வளர்ப்பது குறித்து நான் என்ன எழுதியிருக்கிறேன்? கண்டிப்பாக அனைவரும் தாடி வைக்க வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தேனா எங்காவது? சுட்டிக் காட்டுங்கள். வட்டி வாங்குவது ஹராம், கூடாதது, மீறினால் தண்டனை என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம் தாடிக்கு அப்படியான தண்டனைகளோ, ஹராம் என்ற அறிவிப்போ இல்லை. இரண்டுமே எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒழுங்குமுறைகள் தாம். ஆனால் ஒன்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது மற்றொன்று அவ்வாறன்றி ஒழுங்கு முறையாக மட்டுமே விடப்பட்டுள்ளது. இது ஏன்? என்பது தான் என்னுடைய கேள்வி. அதாவது நீங்கள் கூறினீர்களே ஒரு விசயத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அனைத்துமே சட்டம் தான் என்று; அதை மறுத்துத்தான் நான் மேற்கண்ட செய்தியை கூறியிருக்கிறேன்.


நீங்கள் கூறியபடி கட்டுப்பாடுகள் விதிக்கும் எதுவும் சட்டம் தான் என்றால் தாடி வளர்ப்பது ஏன் சட்டமாக்கப்படவில்லை? வட்டி வாங்கக் கூடாது, வட்டி வாங்கினால் தண்டனை என்பதைப் போல தாடி வைக்காவிட்டால் குற்றம் என்று ஏன் தெளிவிக்கப்படவில்லை? ஏனென்றால் கட்டுப்பாடுகள் விதிக்கும் அனைத்தையுமே சட்டம் என்று கொள்ள முடியாது. இந்த அடிப்படையில் தான் மனித குலத்தின் தொடக்க காலங்களில் சட்டம் என எதுவுமின்றி சில சமூகக் கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டு வாழ்ந்திருந்தார்கள் என்று கூறுவது. இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
 
'
நண்பர் முபாரக், எதையும் உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல், அறிவுவயப்பட்டு அணுகுங்கள். அது தான் உங்களை சரியானவைகளுக்கான தேடலில் என்றும் இருத்தி வைக்கும்.



Thanks: Senkoddi

Wednesday, July 24, 2013

நெல்சன் மண்டேலா ஒத்துழைக்க மறுக்கிறார்.








நெல்சன் மண்டேலாவுக்கு RIP போட்டு பலரும் தங்கள் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார்கள். (சமீபத்தில் படித்தது, இர்ஃபான் ஹபீப்பின் ட்வீட்). மண்டேலாவை எப்போது கவர்ஸ்டோரி ஆக்குவது என்று உலகின் முன்னணி பத்திரிகைகள் நகம் கடித்தபடி காத்துக்கொண்டிருக்கின்றன. ‘ஆப்பிரிக்காவின் மகாத்மா, உண்மையான பாரத் ரத்னா, உலகளாவிய ஹீரோ The Last Icon’ என்கிறது  மண்டேலாவின் முகம் தாங்கி வந்திருக்கும் இன்றைய அவுட்லுக் இதழ்.


‘சர்வதேச மீடியா எல்லை தாண்டி இவ்வாறு செய்கிறது. இதுவும் ஒருவகை நிறவெறிதான்’ என்று சீறுகிறார் மண்டோலாவின் மகள், மகாஸிவே (Makaziwe).


‘சிங்கம் தின்றது போக மிச்சமுள்ள எருமை மாட்டின் சிதிலங்களைக் கொத்திப் போக காத்திருக்கும் வல்லூறுகள்.’


ஆனால் இதற்கெல்லாம் முன்பே மண்டேலாவின் குடும்பத்திலேயே பலரும் அவருடைய மரணம் குறித்து விவாதிக்கவும் சண்டையிடவும் தொடங்கிவிட்டார்கள். எங்கே புதைப்பது? யார் முதலில் அவர் உடலுக்கு மலர் தூவுவது? எந்தக் குடும்பத்தை முதலில் அழைக்கவேண்டும்? யாருக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்?


இன்னும் ஒரு படி மேலே போய், மண்டேலாவின் இறுதி ஊர்வலம் தொடர்பான வீடியோ காட்சிகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பதிலும் ‘மடிபா’வின் (மண்டேலாவின் பழங்குடி இனப்பெயர்)  பெயரை யார் கமர்ஷியல் லோகோவாகப் பயன்படுத்தவேண்டும்
என்பதிலும் குடும்பத்தாரிடையே பலத்த போட்டிகள் நிலவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பே தி வீக்கில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டது.
மண்டேலா பிறந்து, வளர்ந்த குனுவில்தான் அவர் உடல் புதைக்கப்படவேண்டும் என்கிறது குடும்பத்தின் ஒரு தரப்பு. அல்ல, Mvezo-வில் புதைக்கப்படவேண்டும் என்கிறார் மண்டேலாவின் கொள்ளு பேரன், மண்ட்லா.


தனக்கு மிக அருகே நிலவிவந்த இத்தகைய குழப்பங்களை ஓரளவுக்கு உடல் நிலை சரியாக இருந்த சமயத்தில்கூட மண்டேலாவால் தீர்க்கமுடியவில்லை என்பதுதான் நிஜம். அவர் நாட்டைப் போலவே அவர் குடும்பமும் அவரைமீறி வளர்ந்துவிட்டது ஒரு காரணம். அதட்டிக் கேட்கக்கூடிய நிலையில் அவர் இல்லை. அடங்கிப்போகும் நிலையில் மற்றவர்கள் இல்லை. நெல்சன் மண்டேலா எப்போதோ ஒரு பண்டமாக மாற்றப்பட்டுவிட்டார். அதில் மீடியாவுக்கு மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினருக்கும்கூட ஒரு பெரும் பங்கு உண்டு.


மண்டேலாவுக்கு என்னை யாரென்றே தெரியவில்லை என்று வருத்தத்துடன் குறைபட்டுக்கொள்கிறார்கள் பல ஆண்டுகள் அவருடன் பழகி வந்த நண்பர்கள்.  எப்படியாவது  மண்டேலாவின்  பக்கத்தில் நின்று ஒரு படம் எடுத்துக்கொண்டுவிட முடியாதா என்னும் ஏக்கத்துடன் பல பிரபலங்கள் இந்த நிமிடம் வரை காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது ஆசிர்வாதத்துடன் ஏதாவது ஒரு புராடக்டை சந்தையில் இறக்கிவிடமுடியாதா என்று அவரது குடும்பத்திலேயே சிலர் ஏக்கத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.


மீடியாவும் நண்பர்களும் குடும்பத்தினரும்கூட தங்களால் முடிந்ததைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நெல்சன் மண்டேலாதான் ஒத்துழைக்க மறுக்கிறார்.


-மருதன்
Thanks: tamilpaper.com


Tuesday, July 23, 2013

கணித பாடமும் கடவுள்கள் படும் பாடும்...!









ணிதபாடம் என்பது பொதுவாக பள்ளி மாணவர்களிலே அதிகமானோருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பாடம் என்பதை பள்ளித்தேர்வுகளிலே பார்த்தாலே தெரியும்.


ஆனால் கல்வி அதிகாரிகளுக்கும் அவை பல சமயங்களிலே பிரச்சினையாகிப்போய் விடுவதையும் பார்த்திருக்கிறோம். அண்மைக்கால பல்கலைக்கழக தெரிவுகளிலே இஸட் ஸ்கோர் போன்ற குளறுபடிகளெல்லாம் நமக்குப் பரிச்சயமானதுதானே.

சரி, இதெல்லாம் மனிதனின் தவறுகள் என்று நாம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.


ஆனால் அகிலங்களையே ஆளும் கடவுளர்களுக்கும் கூட கணிதப்பபாடம் சிரமதசை என்று தெரியவந்தபோதுதான் எனக்கு மூர்ச்சையாகிவிடும் போலிருக்கின்றது நண்பர்களே. அதுவும் அவர்களே கண்டுபிடித்த கணக்கு வழக்குகளிலே போய்...

சரி சரி உண்மையை நிலைநாட்டுவதற்காக அடுத்தவரின் குளியலறை மற்றும் படுக்கையறைகளைக்கூட விட்டு வைக்காத நமது அபூஜீஸாக்களே சற்றுப் பொறுமையாக இருங்கள்.


விடயத்திற்கு வருகின்றேன்...


சொத்துரிமைச் சட்டங்கள் தொடர்பாக இஸ்லாமிய விடயங்களில் அடிக்கடி கருத்துமோதல்கள் ஏற்படுவதை சிறகுகளிலும் ஏனைய தளங்களிலும் வாசகர்கள் அவதானித்திருப்பீர்கள்.

உண்மையில் பாகப்பிரிவினை பற்றிய இஸ்லாமிய சட்டம் குர்ஆனின் பல வாசகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அல்-பகரா (2), அல்-மைதா (5), அல்-அன்ஃபால் (8) போன்ற சூராக்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சூரா நிசா(4) வில் தான் இந்த சட்டங்கள் அதிகமாக விளக்கப்பட்டு இருக்கின்றன.


'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும்' என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தாலோ அவள் பங்கு பாதியாகி விடும்.

இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்; இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான். இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;...' (குர்ஆன் 4:11)


'இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்;


உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்..' (குர்ஆன் 4: 12)


'ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக அவள் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றான்.' (குர்ஆன் 4:176)


'அல்லாஹ் இவ்விதிகளை தெளிவாக்கி இருக்கிறான்' என்று சொல்லிக்கொள்ளப் பட்டதற்கு மாறாக, இவைகள் சிறிதும் தெளிவானவை அல்ல என்பதுதான் சிறிது அதிர்ச்சியாக இருக்கின்றது.


குர்ஆன் வாசகம் 4:11 ஆனது ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது. ஆனால் இதே வாசகம் ஒரு மகனின் பங்கு மகளின் பங்கை விட இருமடங்கு என்று சொல்வதால், அவளின் சகோதரனுக்கு முழு பங்கும் கிடைக்க வேண்டுமே. இது குழப்பமாக இல்லையா? இந்த சட்டத்தில் நிச்சயமாக பிழை இருக்கிறது.

பெற்றோர்கள் மனைவிகள் போன்ற மற்ற வாரிசுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த சட்டம் மேலும் சிக்கலாகிறது.
சமயங்களில் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் பங்குகளின் கூட்டு மதிப்பு மொத்த சொத்து மதிப்பைத் தாண்டுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
மேற்கண்ட வாசகங்களின் படி, ஒரு மனைவி, மூன்று மகள்கள், இரு பெற்றோர்களை உயிருடன் கொண்ட ஒரு ஆண் இறந்து போனால் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுடைய சொத்தில் மனைவியின் பங்கு 1/8. (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்)

அவரின் மகள்கள் 2/3 பங்கை பெறுவார்கள் (பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும்)
அவரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் 1/6 பங்கைப் பெறுவார்கள். (இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு)
இந்த பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்து மதிப்பை விட அதிகம்.
பிள்ளையுள்ள மனைவி 1/8 = 3/24
மகள்கள் 2/3 = 16/24
தந்தை 1/6 = 4/24
தாய் 1/6 = 4/24
எல்லோருக்கும் விதிக்கப்பட்ட பங்கை கொடுப்பதற்கு போதுமான பங்குகள் இல்லை.


பற்றாக்குறை 1/8

மனைவிக்கு பிள்ளைகள் இல்லை என்றால் மகள்கள்.  'தலாக்' செய்யப்பட
பழைய மனைவியின் பிள்ளைகளாக இருந்தால் என்ன நடக்கும்?
பிள்ளையில்லா மனைவி 1/4 = 6/24
மகள்கள் 2/3 = 16/24
தந்தை 1/6 = 4/24
தாய் 1ஃ6 = 4/24
மொத்தம் = 30/24
இந்த முறை பற்றாக்குறை ¼
இந்த சட்டத்தின் அநீதி மிகவும் தெளிவு.


ஒரு பெண் ஒரு மனிதனுக்கு 25 வருடங்களாக மனைவியாக இருந்து அவனுடன் பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று கொள்வோம். அவள் 1= 8 பங்கை பெறுகிறாள்.

ஆனால் அதே மனிதன் அவன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு புதிய பெண்ணை மணக்கிறான் என்று கொண்டால் அவள் பழைய மனைவியைவிட இரு மடங்கு பங்கைப் பெறுவாள்.


பொதுவாக குருடாக இருக்கும் முஸ்லிம் கூட இந்த சட்டத்தின் முட்டாள்தனத்தை பார்க்கமுடியும் என்று நான் நம்புகிறேன். மனிதர்கள் நியாய, அநியாய உணர்வுடன் தான் பிறக்கிறார்கள். எந்தளவுக்கு தவறான கொள்கைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருந்தாலும், நம்மில் கொஞ்சமேனும் இந்த நியாய அநியாய உணர்வு மீதி இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சில முஸ்லிம்களாவது இந்த சட்டத்தின் கணக்குப் பிழையைக் கூட இல்லை, அதன் அநீதியை உணர்ந்து இஸ்லாம் எங்கோ யாராலோ திட்டமிட்டபடி அல்லது குளறுபடியாகவோ கபடத்தனமாக மாற்றப்பட்டுள்ளது என்று முடிவெடுப்பது உறுதி.


மற்றொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.



ஒரு ஆண் தனது பிள்ளையில்லா மனைவியையும், தாயையும், சகோதரிகளையும் விட்டுவிட்டு இறக்கிறான் என்று கொள்வோம்.
மனைவியின் பங்கு 1/4 (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்)
தாய் 1/3 (ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்)
சகோதரிகள் 2/3 பங்கை பெறுவார்கள். (இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள் (அவர்களுக்கு இடையில்))


மறுபடியும் பங்குகளின் கூட்டுத்தொகை மொத்தத்தை விட அதிகம், இம்முறை பற்றாக்குறை 3/12 அல்லது 25%. இது அலட்சியப்படுத்த முடியாத அளவிற்கு பெரிய பற்றாக்குறை.

மனைவி 1/4 = 3/12
தாய் 1/3 = 4/12
சகோதரிகள் 2/3 = 8/12
மொத்தம் = 15/12



மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், வாரிசுகளுக்கு பிரிக்கப்பட்ட பங்குகள் மொத்த சொத்தை விட அதிகம். இந்த இரண்டு உதாரணங்களிலும், சொத்தின் மொத்த மதிப்பு, மனைவியின் பங்கை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் வரும் பங்குகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளது.
ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் பிள்ளையுடனும், மற்றவர் பிள்ளையில்லாமலும், இருந்தால் என்ன செய்வது?


ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தால் என்ன செய்வது?


எல்லா மனைவிகளும் ¼ பங்கை பெறுவார்களா? அது முடியாது. ஏனென்றால் அவரின் சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒன்றுமிருக்காது.

அப்படியென்றால் மனைவிகள் ¼ பங்கை தங்களுக்குள் பங்கிட்டு ஆளுக்கு 1/16 பங்கை பெறுவார்களா?


இந்த சட்டம் கணிதத்தில் மட்டும் பிழையானது அல்ல, குழப்பமானதும் அநீதியானதும் கூட.


ஒரு ஆண் பெற்றோர்களையும், இரு சகோதரிகளையும், நான்கு மனைவிகளையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம். கணக்குப் பிழைகள் இருந்துவிட்டுப் போகட்டும்.

இரு சகோதரிகள் ஆளுக்கு 1/3 பங்கையும் மனைவிகள் ஆளுக்கு 1/16 பங்கையும் பெறுவார்கள். இது ஒரு நியாயமான பாகப்பிரிவினையாக தோன்றுகிறதா?


இறந்தது பெண்ணாக இருந்தால்?


கணவனுக்கு பாதி (உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு)


சகோதரனுக்கு எல்லாமே (ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்)


சகோதரன் எல்லாவற்றையும் பெற்றுவிட்டால் கணவன் எப்படி பாதியைப் பெறுவான்?


கணவன், (1/2) = 1ஃ2
சகோதரன் (எல்லாமே) = 2/2

மொத்தம் ஸ்ரீ= 3/2


மறுபடியும் இந்த பாகப்பிரிவினை கணக்களவில் பிழையானது மட்டுமல்ல அநீதியானதும் கூட.


அவளின் பெற்றோர்கள் சகோதரிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு ஒன்றும் இல்லையா?


இந்த வாசகம் மற்ற வாரிசுகள் இல்லாதபோதுதான் சகோதரன் முழு பங்கையும் பெறுகிறான் என்று கூறவில்லை. பிள்ளைகள் இல்லையென்றால் அவனுக்கு எல்லாமே என்று மட்டுமே சொல்கிறது. இதே வாசகம் ஒரு ஆண் சகோதரியை விட்டுவிட்டு இறந்தால், அவளுக்கு பாதி கிடைக்கும் என்கிறது.

மீதி பாதி என்ன ஆகும்?


மற்றொரு முட்டாள்தனமான பாகப்பிரிவினையைப் பார்ப்போம்.


ஒரு பெண் ஒரு கணவனையும், ஒரு சகோதரியையும், தாயையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம்.


கணவன், (1/2) = 3/6
சகோதரி, (1/2) = 3/6
தாய் (1/3) = 2/6
மொத்தம் = 8/6
1/3 பங்கு பத்தவில்லை!


பாகப்பிரிவினை விசயத்தில் இந்த தவறுகள் நாலாவது வகுப்பு மாணவனிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் உலகிற்கோர் அதிசயமாக விபரிக்கப்படும் குர்ஆன் இருக்கிறது என்பதை நம்பச் சொன்னால் நாம் மூர்ச்சையாகிவிடுவதைத் தவிர வேறு என்ன செய்வது?


பாத்ரூம் + பெட்ரூம் ஸ்பெஷலிஸ்ட் அபூஜீஸா போன்றவர்களே,  இதையெல்லாம் நமது எல்லாம் வல்ல இறைவனின் தவறாக கொள்வதா அல்லது உங்களைப்போன்று இடையில் வந்து இடைச்சொருகலாக் கியவர்களின் தவறாகக்கொள்வதா?




இறைவனுக்கே இந்த சாதாரண பின்னங்களை கூட்டுதல் எப்படி என்று தெரியவில்லை என்பதை நம்புவது மிகவும் கடினம். இந்த தவறுகள் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அநியாயம் நினைத்து செயற்பட்ட ஆரம்பக்கல்வி கூட இல்லாத மொண்ணை மனிதர்களுடையது.

இடைச்சொருகலுக்குள்ளான குர்ஆனால் உருவான சிக்கல் மனிதனின் புத்தி கூர்மையால் தீர்க்கப்படுகிறது. ஆனால் குர்ஆனை மீறாமல் இது முடியவில்லை. ஒவ்வொரு வாரிசும் தனது பங்கில் சிறிதளவு விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. மனிதனின் தலையீடு இல்லாமல் இடைச்சொருகலுக்குள்ளான அல்லாஹ்வின் வார்த்தைகளை அமல் படுத்தமுடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


குர்ஆனின் சட்டங்களை அமல் படுத்த இஸ்லாமிய 'சட்ட வல்லுனர்கள்' தலையை சுற்றி மூக்கை நோண்டவேண்டியிருக்கிறது.


(Note: இனிவேண்டுமானால் பாத்ரூம் + பெட்ரூம் ஸ்பெஷலிஸ்ட்கள்  உங்கள் கைவரிசையைக் காட்டிப்  பாருங்கள் )

-Omar Mukthar

Sunday, July 21, 2013

அபூ ஜீஸாக்களும் தள்ளிச் செல்லும் கடவுளின் எல்லைகளும்!









யார் இந்த அபூ ஜீஸா..?


ன்பான சிறகுகள் வாசகர்களே அண்மைக்காலமாக அபூ ஜீஸா எனும் பெயரிலே ஒரு நபர் அடிக்கடி நமது தளத்திலும் ஏனைய சில முஸ்லீம் தளங்களிலும் தனது 'அறிவார்ந்த' கருத்துக்களால் அடிபட்டு  மூக்குடைபட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதை தாங்களும் அறிவீர்கள்.

அபூஜீஸா போன்று காலத்துக்கு காலம் மாறும் பல  புனை பெயர்களோடு அவர்கள் அவ்வப்போது வந்து தந்துவிட்டு திரும்பியே பாராமல் ஓடிச்சென்று விடும் விபரங்களோ சிறகுகளுக்கு ஒன்றும் புதிய விடயங்களல்ல.
என்பதை இத்தனை கால வரலாற்றிலே வாசகர்களாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள். அபூ ஜீஸா எமக்கு முக்கியமில்லை.


அவரது பெயரை ஒரு குறியீடாக வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான்!


இனி விடயத்திற்கு வருகின்றேன். அண்மையிலே  11.07.2013 நமது நேத்திரா டீவியிலே அறிவியல் விடயத்திற்கு முற்றிலும் ஒவ்வாத ஓரு புவியியியல் உண்மை பற்றிய வியடம் பற்றி காண்பிக்கப்பட்டிருந்தது.


அதாவது பூமியின் மேலோட்டிலே அமைந்திருக்கின்ற மலைகள் பூமியை அசையாமல் தாங்கிப்பிடித்திருக்கும் முளைகளுக்கு ஒப்பானதாகும் என்று குர்ஆன் ஆயத்துக்களை மேற்கோள் காண்பித்து படங்களுடன் காண்பிக்கப்பட்டது.



இது உண்மையிலேயே ஒரு தவறான முன்னெடுப்பாகும். உண்மையில் குர்ஆன் மலைகளை புவியை அதன் அசைவுகளிலிருந்து தாங்கிப்பிடிக்கும் முளைகள் என்ற பொருள்பட எங்குமே கூறியிருக்கவில்லை. அப்படிக் கூறியதாக இந்த நிகழ்ச்சியை தயாரித்தவர்கள் நிறுவினாலும் அவை உண்மைக்குப் புறம்பானவையாகவே இருக்கும் என்பதை பல புவியியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். விளக்கப்படங்கள் ஏற்கனவே உள்ளன.


இது அவ்வாறிருக்க அபூஜீஸா போன்ற சிலர் 'இல்லை இது உண்மையயேதான்'என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு அறிவியல் கற்கும் மாணவர் சமூகத்தை குழப்பத்திலும் தவறான வழியிலும் ஆழ்த்துகின்றார்கள்.
நான் அபூஜீஸா போன்றோரிடம் கேட்க நினைப்பது ஒன்றுதான். நீங்கள் அறிவியல் உண்மைகளை நம்புகின்றீர்களா அல்லது ஆன்மீகத்தை நம்புகின்றீர்களா?


இரண்டில் ஒன்றைக் கூறுங்கள்


குதிரையா கழுதையா உங்களுடைய வாகனம்?


இரண்டுக்கும் பிறந்த மலட்டுக் கோவேறு கழுதையிலே பயணம் செய்யாதீர்கள்?


இப்படித்தான் ஒருதடவை விண்வெளியை முதன்முதலிலே கடந்த மனிதன் யார் என்ற வினாவுக்கு ஒரு முஸ்லீம் மாணவன், யூரிகாக்ரின் என்று பதிலளித்தான்.


யூரி காக்ரின்
உடனே மாற்று இனத்தவனாகிய சக நண்பன் அதை மறுதலித்தான்.

"இல்லையே நண்பா, 1400 வருடங்களுக்கு முன்பே உங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றதாக என்னிடம் ஒருமுறை கூறினாயே... இப்போது மட்டும் ஏன் கி.பி. 1957ம் ஆண்டில் கடந்து சென்ற யூரிகாக்ரினை கூறுகின்றாய் ?"என்று கேட்டான்.



அதற்கு முஸ்லீம் நண்பன் கூறினான், "எனது ஆன்மீகப் பதிலை நான் இங்கு கூறினால் எனக்கு புள்ளிகள் கிடைக்காதே' அதனால்தான் சூழ்நிலைக்கேற்றபடி பதில்  சொன்னேன்" என்றான்.

உத்தேச ப்ராக் வாகனம்



இப்படித்தான் நண்பர்களே நமது நிலைமையுமுள்ளது.


இதுவரை இருந்து வந்த எத்தனையோ ஆன்மீக மதங்களெல்லாம் ஒருகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியுடன் போட்டியிடுவதை தாமாகவே உணர்ந்தோ வேறுவழியின்றோ நிறுத்திக் கொண்டு விட்டன. அல்லது அவை பற்றி அலட்டிக்கொள்ளாமல் அவரவர் பாதையிலே தனித்தனியே  தேமே என்று சென்று கொண்டிருக்கின்றன.



பூமியையன்றி, சூரியனைச் சுற்றியே அனைத்து கிரகங்களுமே நீள்வட்டப்பாதையிலே சுற்றி வருகின்றன எனும் அறிவியல் உண்மையைக் கூறியதற்காக விஞ்ஞானிகளை உயிரோடு எரித்த கத்தோலிக்கத் திருச்சபை கூட காலப்போக்கிலே அறிவியலின் அசுரவளர்ச்சியைத் தாளாமல் பின்வாங்கிவிட்டது.


வேறு எந்த மதங்களும் அறிவியல் உண்மைகளுடன் கொம்பு சீவிக்கொண்டு போட்டியிலிறங்குவதுமில்லை. மூக்குடையபடுவதுமில்லை. ஆனால் நாம் மட்டுமே இன்னும் கூட இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையெல்லாம் பற்றி  விரும்பியோ விரும்பாமலோ கருத்துக்கூறிக்கொண்டே வருகின்றோம்.














விஞ்ஞானமும் ஆன்மீகமும் அடிப்படையிலே இருதுருவங்கள் போன்றது. ஆன்மீகத்தில் எற்கனவே கூறப்பட்டவற்றுக்குள்ளிருந்து மட்டுமே தீர்வுகள் காணப்பட முயும். ஆனால் விஞ்ஞானமோ தொடர்ச்சியான மாற்றங்களை வரவேற்றபடி அசுரபலத்தோடு ரயில்வண்டிக்கு ஈடாக விரைந்து கொண்டிருப்பது. ஆன்மீகமோ மாட்டுவண்டிமேய்ப்பது.


விரைந்து பாயும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அத்தனையையும் 'இது 1400 வருடங்களுக்கு முன்பே...' என்ற சொற்றொடருக்குள் இலகுவிலே அடக்கிவிட முடியாது என்பது அதன் மற்றொரு சோகம்.

ஒரு அறிவியல் முயற்சி தற்காலிகமாக தோல்வியடையும்போது, 'ஆகா இதைத்தான் நாங்கள் அன்றே சொன்னோம்...' என்று குதூகலிக்கும் ஆன்மீக வாதிகளின் மகிழ்சி நீண்ட காலம் நிலைப்பதில்லை என்பதுதான் அதிலுள்ள மிக பலவீனம்.

உதாரணத்திற்கு உங்களால் முடிந்தால் ' புதிதாக ஒர் உயிரைக் கண்டுபிடியங்கள் பார்க்கலாம்' என்பார்கள். அவ்வாறு கண்டுபிடித்துவிட்டால் ஏற்கனவே இருக்கும் உயிரிலிருந்து அல்லாமல் புதிததாக செயற்கையான இழையங்களைப் பயனபடுத்தி கண்டுபிடியுங்கள் என்பார்கள். இப்படிக் கடவுளின் எல்லைகளை தள்ளிக்கொண்டே செல்லும் வரைதான் இவர்களுடைய பிழைப்பு எல்லாமே!




 -Omar Mukthar