Sunday, September 9, 2012

இது எப்படியிருக்கு?






வார்த்தைகள் கவனம்!






 

திட்டமிட்டுச் செய்யப்படாத சில விடயங்கள் எதேச்சையாக சுவாரசியமானதாக அமைந்து விடுவதுண்டு. அவற்றில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் விடயங்களுமுண்டு மாறாக தர்ம - அடி வாங்கித் தரும் விடயங்களுமுண்டு.


எடுத்துக் காட்டாக அமிர்தலிங்கம் என்பவர் தனது மகனுக்கு எதேச்சையாக யோக்கியன் என்றும் குகதாசன் எனும் ஒருவர் தனது மகனுக்கு ரங்கன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகன்களின் பெயர்கள் தமிழில் இனிஷயலுடன் எழுதப்பட்டால் எப்படி அமையும் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.


அதுபோல ஒரு நகரின் மத்தியில் மரணச் சடங்குகள் சேவை புரியும் மலர்ச்சாலை ஒன்றுள்ளது. அதன் முகப்பிலே 'அமில மலர்ச்சாலை' என்றுள்ளது. அமில என்பது அதன் உரிமையாளரது பெயர்தான். பாருங்கள், எப்படியான அர்த்தம் தருகின்றது என்பதை.
'சதுரங்க விளையாட்டு மைதானம்' என்பது செஸ் விளையாடும் இடமல்ல என்பதுதான் வேடிக்கை. சதுரங்க எனும் ஊர்ப் பெரியவரின் நினைவாக அமைக்கப்பட்ட மைதானம்தான்.
 
 
-'Mutur' Mohd. Rafi

No comments:

Post a Comment