Sunday, September 2, 2012

துயில் நிலவு

 





நிலவு நித்திரைக்குச் சென்றுவிட்ட
ஒரு நிசப்தமான ஒர் இரவுப்பொழுதிலே
தனது கடமையைச்செய்திருக்கும்
காற்றைப்போலவே...
நானும் கண்விழித்திருக்கின்றேனடி!



உனது விழிவாசல்களிலே
உறக்கதேவதைகளின் உல்லாச ஊர்வலம்
நினைவு வீதியெங்கும் கனவுப்பூக்களை
இறைத்துச்செல்ல..
என் இனியவளே நிச்சயம் நீ
உறங்கியிருப்பாய்!



இரவின் இடைவிடாத நிசப்தத்தில்
உன்நினைவுகளின் நெருக்கத்தில்
மூச்சுத்திணறும்
எனது மௌனங்கள்
மீண்டும் மீண்டும் மரணித்திருக்கும்...!



உன் பெயரை 
ஓயாது உச்சரித்திருக்கும்
எனது உதடுகளை
இரகசியமாய் ஒட்டுக்கேட்கும்
இதயம் இடையிடையே துடிப்பை நிறுத்தும்..
ஓ! இந்த இரவுகள்தான்
எத்தனை இரக்கமற்றவை!

- மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment