Thursday, September 6, 2012

'சோனி' என்றால் செல்லம் !

 
 
 
ஒரு

வலயக்கல்விப் பணிப்பாளரின்
 
கண்டுபிடிப்பு !
 
 





அன்புள்ள நண்பர்களே!


பிரதான விடயத்திற்கு நான் வருவதற்கு முன்பு பின்வரும் உரையாடலின் பகுதியை சிறிது படித்துப் பாருங்கள்.. 


..................................................................................................................
......................................................................................
............................................................................................
.................................................... .. ..


"சரி, இப்ப இந்த இடத்தில உங்கட பிரச்சினை என்ன?"

-கேட்டவர் ஒரு அரச திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரி.

" அதைத்தானே ஸேர் நான் உங்களுக்கு நான் எத்தனையோ தடவை உத்தியோக பூர்வமா எழுத்து மூலம் புகார் செய்திருக்கின்றேன். ஆனால்  அதற்கு நீங்க இன்னும் கூட  எந்தவிதமான நடவடிக்கையுமே எடுக்காமலிருக்கிறீங்க..."

-பதில் கூறியவர் ஓர் இளம் அரச ஊழியர்.

"சரி இப்ப இந்த இடத்தில எல்லாருடைய முன்னிலையிலும் சொல்லுங்க உங்கட பிரச்சினையை"

" என்னுடன் இங்கே கடமையாற்றுகின்ற  சக சிரேஷ்ட பெண்  ஒருவர்  நான் சார்ந்திருக்கும் இனத்தை இழிவு படுத்தும் விதமாக என்னைச்  'சோனி' என்று  துவேசத்துடன்  பேசுகின்றா"

"அப்பிடியா.. யார் அது..? இங்க இருக்கிறவங்களுக்குள்ள அவ இருக்கிறாவா?"

அப்போதுதான் இதை புதிதாகக் கேட்பவர் போல தனது புருவங்களை நெரித்து வினவுகின்றார் அதிகாரி.

"ஓம்.. இங்கதான் இருக்கிறா.. என்னால அவவை உங்களுக்குக்  காட்ட முடியும்!"

"யார் அது சொல்லுங்க"

அந்த அரச ஊழியர் எழுந்து நின்று அங்கு அமர்ந்திருந்த ஊழியர்களுள் நெற்றிக்குத் திருநீறு இட்டு பக்திப்பழமாகக் காட்சியளித்த வயதான பெண்மணி ஒருவரைக் காண்பிக்கின்றார். 

அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் குழுமியிருந்த அந்த இடமே ஒருவித தர்மசங்கடமான மௌனத்தில் ஆழ்கின்றது.
அதுவரையிலே ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்த அந்த அதிகாரிகள் குழுவினது தலைமை அதிகாரியின் குரல் இப்போது சற்றுப் பம்மத் தொடங்குகின்றது...

"ஒருவேளை... அவ 'சோனி' என்று உங்களைச் செல்லமாக கூப்பிட்டிருப்பாவோ..?  முஸ்லீம்களைச் சோனகர் என்றும் சொல்றது வழமைதானே.. அது  சும்மா செல்லமா கூப்பிடுற பெயரோ என்னமோ..."



.............................................................................................
....................................................................................
...............................................................................



இது எப்படியிருக்கு...? 


என்ன படித்தீர்களா நண்பர்களே..?

இந்த உரையாடல் உங்களுக்கு என்ன விதமான உணர்வை ஏற்படுத்துகின்றது...?

யாராவது எழுதிய புனைகதையிலோ அல்லது தொலைக்காட்சி நாடகங்களிலோ வரும் காட்சி அல்ல இது. 

நமது இயற்கைத் துறைமுக நகர கல்வி வலயத்திலே பிரதான நகருக்கும்  ரயில் பாதைக்கும்  அண்மையிலுள்ள ஓர் முஸ்லீம் பாடசாலைக்கு ஏறத்தாழ நான்கு தினங்களுக்கு முன்பு  திடீர் வருகை தந்திருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தமது ஆய்வின் பின்பு ஒழுங்கு செய்த ஆசிரியர் சந்திப்பு நிகழ்வின்போது இடம்பெற்ற உரையாடலின் பகுதிதான் இது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஹார்ட் அட்டாக் வந்து விடாமல் இதயத்தைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!

 
ஆனால் அதுதான் உண்மை!


-Jessly Jessly
 

No comments:

Post a Comment