Thursday, May 10, 2012

கிண்ணி(யா) லீக்ஸ் படும்பாடு!








பொல்லைத் தந்து
வாங்கிய  அடிகள்....!




டந்த வாரம்  www.kinniya.net ல் நண்பர் சபருள்ளாவின் " அன்றாடக் காய்ச்சிகள்" எனும் தலைப்பில் சிறுகதையொன்றைப் படித்தேன்.  தனது சொந்த மண்ணின் நடைமுறைப் பிரச்சினையொன்றைக் கருவாகக் கொண்டு அதனைப் படைத்திருந்தார் அவர்.  அந்தச் சிறுகதையைப் பல தடவைகள் படித்துப் பார்த்து வியந்ததோடு பின்பு அதைப் பற்றி சிறுவிமர்சனம் - கருத்துரை கூற விரும்பினேன்.

 அதன்படிஅந்தக் கதை பற்றிய எனது பார்வையை கிண்ணியா நெற்றில் அந்தக் கதையின் கீழே வழமையாகத் தென்படும்  Comment box னுள் இட்டேன்.


Jesslya Jessly · Peradeniya University

நண்பர் சபறுள்ளா,
உங்கள் மண்சார்ந்த பிரச்சினை ஒன்றை வெளிப்படுத்தும் விதமாக உணர்வுபூர்வமாக படைத்திருக்கிறீர்கள். உங்கள் நோக்கத்திற்காகப் பாராட்டுகின்றேன். அதேவேளை இவ்வளவு உணர்வுபூர்வமான கதையை ஏன் அத்தனை சொதப்பலாக ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

உங்களுக்குள் உங்கள் மண்ணையும் மனிதர்களையும் யதார்த்தமாக வெளிக்கொண்டு வரக்கூடிய அருமையான படைப்பாளி உறைந்து கிடக்கின்றான். மூதூர் மண்ணின் மூத்த படைப்பாளி மறைந்த வ.அ. இராசரத்தினம் போல உங்களாலும் நமது மண்சார்ந்த மனிதர்களின் உணர்வுகளையும் முரண்பாடுகளையும் அருமையாக படம்பிடித்து எழுதமுடியும் என்று தோன்றுகின்றது.

ஆனால் நீங்கள் வித்தியாசமாக எழுதகின்றேன் என நினைத்துக்கொண்டு உங்களுக்கு ஒத்து வராத அல்லது பொருந்தாத ஒரு பாணியில் கதைகளை ஆரம்பிப்பதை மட்டும் சற்று மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

ஜேசுதாஸின் பாணியில் பாலாவோ பாலாவின் பாணியில் ஜேசுதாஸோ பாடினால் எப்படியிருக்கும்? உங்களது கதைசொல்லும் பாணியும் கதையை வளர்த்துச் செல்லும் போக்கும் தனித்துவமாக இருக்கும்போது ஆரம்பத்தை மட்டும் ஏன் றிஸ்க் எடுத்துக் கொள்கின்றீர்கள்? சிந்தியுங்கள்.

அருமையான கதை- குரங்குபாஞ்சான் என்ற சொல்லை வைத்துச் சுற்றிய சுற்றலை மட்டும் தவிர்த்திருந்தால் வடிவமைப்பும் கூட ஓகேதான்!


இதுதான் நான் எழுதிய விமர்சனம்.

இதை நண்பர் சபருள்ளா பார்த்தால் நிச்சயம் எனது விமர்சனம் பற்றிய தனது கருத்தைச் சொல்லக்கூடும் என்பதும் ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல கதை மற்றும் விமர்சனம் இரண்டையும் படிப்பது கிண்ணியாவின் அறிவுக்கூர்மைமிக்க வாசகர்களுக்கும் கிண்ணியா நெற்றின் இலக்கியவட்டத்தினருக்கும் ஒரு விருப்பத்திற்குரிய விடயமாக இருக்கும் என்பதும் எனது எதிர்பாரப்பாக இருந்தது.

நான் எதிர்பாரத்தபடியே எனது விமர்சனம் பற்றிய 'அறிவுபூர்வமான' பார்வை ஒன்று (எழுத்துப் பிழைகளோடு) வந்தது. ஆனால் நண்பர் சபருள்ளாவிடமிருந்து அல்ல. மாறாக கிண்ணி(யா)லீக்ஸ் என்று தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்ளும் ஒருவர் அல்லது ஒரு குழுவிடமிருந்து. அந்த விமர்சனத்தைக் கீழே அப்படியே தருகின்றேன் பாருங்கள் நண்பர்களே...


Kinni Leaks · T/kinniya central college
சிறுகதைக்குக் கொமன்ட் அடிக்கச் சொன்னால் ரெண்டு பெண்கள் கீழே
இன்னொரு சிறுகதை எழுதியிருக்காங்க. முதல்ல இந்த போடோக்களப் போட்டு பேஸ்புக்கில் கலஸ் காட்டறத்த விட்டுட்டு அல்லாஹ்வை எண்ணி, பயந்து அடக்கமாய் வாழப் பழகுங்க. உங்களுக்கான கொமன்ட் கள் மேலுலகத்தில் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதிங்க.....


கவிமேதை அண்ணல் அவர்கள் முதல்கொண்டு இன்றைய இலக்கிய நண்பர்கள் எம் ஏ எம் அலி, சபருள்ளா,  தோழி பாயிஸா அலி வரை எத்தனையோ சிறந்த படைப்பாளிகளை ஈன்ற கிண்ணியா மண்ணில் இப்படியும் விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.


சரி இவர்களது பிரச்சினை சிறுகதையோ அல்லது படைப்புகள் பற்றிய அக்கறையோ அல்ல; மாறாக, 'சிறுகதைக்கெல்லாம் விமர்சனங்களை எழுதுமளவுக்கு பெண்கள் வ (ளர்) ந்து விட்டார்களே' என்ற பிரச்சினைதான் போலிருக்கிறது என்று பேசாமல் விட்டு விடத்தான் முதலிலே நினைத்தேன்.



ஆனால் கிண்ணியா நெற் என்பது தினமும் பல நூற்றுக்கணக்கான வாசகர்களால் பார்க்கப்படும் ஒரு இணையத்தளம் என்பதால் பொதுவெளிக்கு வந்து விட்ட இந்தப் பிற்போக்கான கருத்தை  இப்படியே தொங்க விட்டுவிடுவது இன்றைய இளைய தலைமுறையினரையும் பிழையாக வழிநடாத்தும் என்பதால் அன்பர் கிண்ணி(யா) லீக்ஸ் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் அந்த தைரியசாலிக்கு  பொருத்தமான பதில் கொடுக்கத் தீர்மானித்தேன்.


அதேவேளை,  பதிலளிக்கப் போனால், 'அட நம்மையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து பதிலெல்லாம் போடுகிறார்களே!' என்ற புளகாங்கிதம் கிண்ணி(யா) லீக்ஸுக்கு கிடைக்குமே என்ற கவலையும் இருக்கத்தான் செய்தது. ஆனால்  அதையெல்லாம் மீறி,  நாம் பதில் எழுதியதற்கு உள்ளுர காரணமிருந்தது. அதைப் பிறகு சொல்கிறேன் . இப்போது எனது பதிலைப்படியுங்கள்...!

Jesslya Jessly · Peradeniya University
நண்பர் கிண்ணி லீக்ஸ்!

உங்கள் "அறிவுபூர்வமான" கருத்துக்கு நன்றி. பெண்கள் என்றால் அடக்க ஒடுக்கமாக சமையலறைக்குள்ளேயே கிடந்து, இன்னும் அடுப்பு பற்றவைத்துக்கொண்டு, ஊர்வம்பு பேசிக்கொண்டு வெட்டிப்பொழுது போக்கிவிட்டு வருகின்ற கட்டாக்காலி ஆண்களுக்கு பணிவிடை செய்து கொண்டு இருக்கவேண்டுமென்று நினைக்கிறீர்களோ?

முதலில் சொந்தப் பெயரை தைரியமாக வெளியிடும் தைரியமில்லாத நீங்களெல்லாம் ஓர் ஆண்பிள்ளையா? கரப்பானுக்குக் கூடத்தான் மீசையிருக்கின்றது. பெண்களை சக மனிதர்களாகப் பார்க்கும் நல்ல இயல்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரிகளிடமிருந்து ஆரம்பித்தால் நல்லது.

பெண்களின் வளர்ந்துவரும் திறமைகளை ஏற்றுக்கொள்ளாத தாழ்வுச்சிக்கலுக்கு எல்லாம் மருந்து கிடையாது. உள்ளுக்குள் வெம்பிச் சாக வேண்டியதுதான். முடிந்தால் சபறுள்ளா போன்ற நல்ல படைப்பாளியின் சிறுகதையொன்றுக்கு விமர்சனம் ஒன்றை எழுதுங்கள் பார்ப்போம். பெண்களை மதிக்கும் எத்தனையோ மனிதர்கள் உள்ள மண்ணிலிருந்து உங்களைப்போல ஒரு கோழையா? Shame...Shame!

இறைவனின் பார்வையில் ஆண் -பெண் என்ற பேதம் எல்லாம் கிடையாது. அப்படி பேதம் இருக்கின்றது என்றால் எங்கோ பெரிய தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தம். பெண்களுக்கு அட்வைஸ் செய்வதெல்லாம் இருக்கட்டும். முதலில் உங்கள் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள் அன்பரே!



நான் கொடுத்த இந்த பதில் வெறும் பதில் அல்ல; அது நன்கு திட்டமிடப்பட்டஒரு பொறியும்கூட!

ஆம்..! எனது கோப வார்த்தைகள் எனும் புழுவுக்குள் இருந்த தூண்டிலை கிண்ணி(யா) லீக்ஸ்  எனும் ஏமாளி மீன் கடிப்பதற்காக  காத்திருந்தேன். எனது எதிர்பார்ப்பு தவறவில்லை.

பாருங்கள் இவரது அடுத்தடுத்து வந்த இரண்டு பதில்களை ...!அவற்றிலே எனது சவாலுக்கான பதில் ஏதாவது உள்ளதா என்றும் பாருங்கள்!


Kinni Leaks · T/kinniya central college
அட....! ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமையாமே..... எங்கு இஸ்லாம் படித்தீர்கள்.....? நீங்கள் ஒரு தரஜா குறைக்கப்பட்டவர்கள்! குர்ஆனோடு சம்பந்தமே இல்லாத உங்களோடு எதற்கு வெட்டிப்பேச்சு.....? அதிகம்
பேசாதீர்கள்.....! கிண்ணிலீக்ஸ் இன் நோக்கம் புரியாமல் விளையாடாதீர்கள்!

Kinni Leaks · T/kinniya central college
அப்ப நீங்க குர்ஆனை நிராகரிக்கிறீர்களா......? அல்லாஹ்.....! இந்த சகோதரிக்கு நல்லருள் புரிவாயாக.....!
May 7 at 10:12pm)



இருந்தாலும் கடைசியாக  அவர் குறிப்பிட்ட விடயத்தை வைத்து மீண்டும் பதில் ஒன்றை இட்டேன்.

Jesslya Jessly · Peradeniya University
Hi Kinni Leaks,

அப்படியென்றால் இஸ்லாம் பெண்களைச் சமமாக நடத்தவில்லை என்றா சொல்கிறீர்கள்?

இஸ்லாம் பெண்களைச் சமமாக நடத்துவதாக நிறுவுவதற்கு இஸ்லாமிய அறிஞர்களெல்லாம் வரிந்து கட்டி எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கையிலே நீங்கள் என்ன இப்படி சேம் ஸைட் கோல் போடுறீங்க? அப்படியென்றால் உண்மையிலேயே பாரபட்சம்தானா நண்பரே?

சரி, ஒரு பேச்சுக்கு நாங்கள் ஒரு தரஜா குறைக்கப்பட்டவர்கள் என்றே வைத்துக்கொள்வோமே. நீங்கள் ஒரு தரஜா உயர்ந்தவர்தானே?

எங்கே இந்த தரஜா குறைந்தவள் எழுதியது போல சொந்தமாக ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதுங்களேன் பார்ப்போம்.

சரி அதையெல்லாம் விடுங்கள் என் சவாலுக்கு உங்கள் பதிலென்ன மிஸ்டர் கரப்பான் பூச்சி?

என் சவாலுக்குப் பதில் கூறாமல் நீங்கள் தரஜாவெல்லாம் பேசியிருப்பதைப் பாரத்தால் நீங்கள் எங்களுக்கு உண்மையாகவே பயப்படுகின்றீர்கள் என்றுதானே அர்த்தம்? அதுவே எங்களுக்கு வெற்றிதான் நண்பரே.

அது என்ன?   உங்கள் கிண்ணி லீக்ஸின் நோக்
கம் புரியவில்லையா எங்களுக்கு?

நண்பரே!

இந்த வருடம் முடிய இன்னும் 7 மாதங்கள் இருக்கும்போது 2012 வருசத்துக்குரிய பெஸ்ட் ஜோக்கையெல்லாம் இப்பவே அடிக்கக்கூடாது? ஹா!...ஹா...ஹ்...ஹா! சிரித்து வயிறு நோகின்றது...! WOW! what a joke it is...?

உங்கள் கிண்ணி லீக்ஸின் காட்டுமிராண்டி நோக்கம்தான் அப்பட்டமாகத் தெரிகின்றதே!


 Kinni Leaks · T/kinniya central college



"உனது கணவன் சோம்பேரி என்டு சொல்லி இன்னொருத்தனைக் கூப்பிட்டவள் தானே நீ.... இவ்வாறான அம்பலங்களையெல்லாம் ஸ்காப் கட்டி மறைக்கப் பார்க்கிறாயா.....? அந்தரங்கங்களை அடுத்தவனிடம் பகிர்ந்த கொண்ட உனக்கெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி என்ன தெரியும்.....? சமஉரிமை சமஉரிமை என்று மேல் சட்டை இல்லாமல் திரிய ஐடியா போடுற கூட்டத்திற்கெதிராக அவசரமாக ஏதாவது சட்டமூலம் கொணரவேண்டும்.....!

உங்களைப் போன்றவர்களைத் திருப்திப்படுத்த வெளிநாடுகளிலிருந்து நீக்ரோக் காரர்களை இறக்குமதி செய்வோம்..... அதுவரைக்கும் அடக்கமாக இருங்க சகோதரியே.....! உங்கட கவலை புரியுது..... என்ன செய்ய.... நாளை வருவான் ஒரு மனிதன்.... நன்றாய்க் கிழிக்க நாளை வருவான் ஒரு மனிதன்......!"

பொதுவாக Facebook போன்ற சமூகத்தளங்களைப் பயன்படுத்தும்போது ஆண்களே கூட அவதானமாக இருக்க வேண்டும். அதிலே உண்மையான விடயங்களையெல்லாம் போட்டுத்தொலைத்தால் என்னாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலர் தங்களது தோற்றத்தைக் கூட மறைத்து நடிகர்கள் கிரிக்கட் வீரர்கள் போன்ற பிரபலமானவர்களின் படங்களை இடுவார்கள். அதற்காக எல்லா விபரங்களும் போலியானவை அல்ல.


அப்படித்தான் நானும் Facebook கை பயன்படுத்தும்போது  சில கட்டாக்காலி ஆண்களிடமிருந்து வரக்கூடிய காதல் அழைப்புத் தொல்லைகளை இல்லாமல் செய்வதற்காகவும்   ஒரு பெண்ணுக்கு வரும் இயல்பான சங்கடங்களைத் தவிர்க்கவும்  எனது prfile edit  ல் மட்டும் ஒரு போலியான தகவல் ஒன்றைக்கொடுத்திருந்தேன். 


அதாவது 'நான் திருமணமானவள்..மனிதனாக நடந்து கொள்ளாத எனது கணவனை விவாகரத்துச் செய்து விரட்டி விட்டவள் ..... '  என்று தொடங்கிச் சில விபரங்களை வேடிக்கையாகக் குறிப்பிட்டு இருந்தேன்..

அதைத்தான் நமது கிண்ணி(யா) லீக்ஸ்  உண்மையென ஏமாந்து தூண்டிலையும் சேர்த்துக் கடித்து விட்டார்.
 

அதாவது அந்த 'இஸ்லாமிய காவலர்' பெருமான் அதை வைத்துக்கொண்டு முழுமையாக அறிந்தேயிராத ஒரு இஸ்லாமியப் பெண்ணை வசைபாடியிருக்கும் அழகைப் பாரத்தீர்களா நண்பர்களே!

இஸ்லாமியப் பெண்களை மேலும் ஒழுக்கமாக ஆக்குவதற்கு வந்திறங்கியுள்ள இந்த அவதாரபுருசன் தனக்கு பிடரியில் ஒரு ஷொட்டு விழுந்ததும்  அதே இஸ்லாமியப் பெண்களுக்கு எப்படி வசையிழுக்கிறார் பார்த்தீர்களா?

கிண்ணி(யா) லீக்ஸ் ஸின்  அவலட்சணமுகம் வெளியானதும் அவரது பாணியிலேயே சிறிது இறங்கி வந்து மேலும் சில ஷொட்டுகளை இறக்கிப் பார்த்தோம்.

இப்போதுவரை  ஆள் கப்சிப்!   அந்த ஷொட்டுகளை பாருங்கள்..

Jesslya Jessly · Peradeniya University
Kinni Leaks

அப்படி வாங்க வழிக்கு நண்பரே!

நீங்கள் தனிப்பட்ட வாழ்வைத் தாக்கத் தொடங்கியதில் இருந்தும் நீ என்று ஒருமையில் அழைக்கத் தொடங்கி விட்டதிலிருந்தும் உங்களுடைய கருத்து வங்குரோத்துத்தனம் உலகம் முழுக்க வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஒத்துவராத ஓடுகாலிக் கணவனை ஓடஓட அடித்து விரட்டுவதற்கெல்லாம் ஒரு தைரியமும் தில்லும் வேண்டும். அதை முறைப்படி செய்த என்னைப் பார்த்து....

உங்களைப்போன்று....

கிண்ணியாவுக்குள் தொப்பி கழற்றாமல் பக்தியோடு வளையவந்தவிட்டு திருகோணமலை மெக்கய்சர் ஸ்டேடியத்தில் தமிழ் சிங்களப் பெட்டைகளுக்குப் பின்னால் கார்த்திகை நாய்போல ஜொள்ளுவிட்டபடி...

கழற்றிய தொப்பியில் அதைத் துடைத்துக் கொண்டு திரியும் கட்டாக்காலி 'இஸ்லாமிய காவலர்களுக்கு' டயறியா வரத்தான் செய்யும்.

முதலில் என்னுடைய சவாலுக்குப்பதில் சொல்லிவிட்டு என்மீது சேற்றை வாரியடிக்கத் தொடங்குங்கள்.
...

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் யாரோடும் பகிர்ந்து கொள்ள உரிமையுள்ளது. உங்களைப்போல....

ஜொள்ளுக்கு கட்டைக் கவுன் பெட்டைகளும் கலியாணம் செய்துகொள்ள அபாயாபோட்ட அப்பாவிப் முஸ்லீம் பெட்டைகளும் என்று ரெட்டை வாழ்க்கை வாழ்வது கிடையாது. நாங்கள்.
மீசையுள்ள ஆம்பிளையாக நீங்கள் இருந்தால் மரியாதையான வார்த்தைகளால் எங்களைப்போன்ற பெண்களோடு வாதித்துப் பாருங்கள். அதற்கே வழியில்லாத நீங்களெல்லாம் கிண்ணி லிக்ஸின் நோக்கம் பற்றி பீத்தி என்ன பிரயோசனம்?

உங்களைப்போன்ற வேஷம்போடும் பக்தி கட்டாக்காலியைவிட நாங்கள் எவ்வளவோ தரஜா உயர்ந்தவர்கள். அடங்குங்கள். இல்லையோ...

முந்தி மாதிரி ஆம்பிளையென்றால் பயந்து அடங்கி ஒடுங்கிப்போவதெல்லாம் உங்கள் உம்மம்மா காலத்தோடு மலையேறிவிட்டது.

ரொம்பத் துள்ளினால் பெண்கள் நாங்கள்.... ஒட்ட நறுக்கி விடுவோம்! Be careful!
Kinni Leaks

1 comment:

  1. //ரொம்பத் துள்ளினால் பெண்கள் நாங்கள்.... ஒட்ட நறுக்கி விடுவோம்! Be careful!
    இது எப்படியிருக்கு? //
    தாயே , ரொம்ப அருமையாக இருக்கிறது .. என் மனைவி சொல்வது மாதிரியே....
    :)

    ReplyDelete