Thursday, March 24, 2016

சிறுகதை: உபச்சாரம்











தொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு
“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான்.

“ஓ........ஜா.....!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.
கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி....? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”
இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன.......
தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம்
என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.
ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.
கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.
குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது.
உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது.
அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது.
ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.
“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.
அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்:
“ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ”
ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?
அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:
“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ”
“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ”
அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை.
பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.
திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்.........
அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.
“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.
ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்.........
“குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?”
(வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)
“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:
“சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ”
திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:
“எ...எ..எ.என்னவாம்..........? ”
“எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.

உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள்.
நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ”


ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்..........

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-)
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ”

“ விஷேசமெண்டு......?- ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:
“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்.......
பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ”
என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.

சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.

அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான்.
அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை

“என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?”
என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ”


“பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை... அதுதான் அழுகிறாள்.... ”


"சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”


அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....”

“ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி
வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது.

கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்
மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.
சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?”

“எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........”

“என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ”

“அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கிறதின்ற படிமம் அது..! ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.
குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸுக்குப் போவமே.....? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ!

நாங்கள் மெல்ல மாறுவோமே.. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும்.

-திரு. பொ. கருணாகர மூர்த்தி

Thanks :En Puthu Veedu

Wednesday, February 24, 2016

ஷிர்க்கும் வஹாபிசமும்










வஹாபிசம் பற்றி தி இந்துவில் சமஸ் எழுதியிருந்த கட்டுரை இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்தக் கட்டுரையை இன்றுதான் படிக்க முடிந்தது. நான் ஏற்கெனெவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி எழுதியிருந்த ஒரு சிறு பதிவு என் முகநூல் வரலாற்றிலேயே அதிகபட்ச பகிர்வுகளைக் கொண்டிருந்ததாலும் எனக்கு அடிப்படியிலேயே இருக்கும் இஸ்லாமிய வரலாறு பற்றிய அக்கறை காரணமாகவும் இன்னொரு பதிவு எழுதலாம் என்று யோசித்தேன்.


வஹாபிசம் அடிப்படைவாதம் அல்ல என்று சொல்லும் வாதத்தை முதலில் பார்க்கலாம்.


மத அடிப்படைவாதம், அதாவது Religious Fundamentalism என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி பின் வரும் அர்த்தத்தை கொடுக்கிறது:


Fundamentalism: The strict maintenance of the ancient or fundamental doctrines of any religion or ideology.
-Concise Oxford Dictionary - Tenth Edition


அதாவது ஒரு மதத்தின் மறை நூலை, அது எழுதப் பட்ட காலத்தை கருத்தில் கொள்ளாமல் எந்தக் காலத்துக்கும் அதில் குறிப்பிட்ட மாதிரியே பின் பற்ற நினைப்பதற்கு ‘மத அடிப்படைவாதம்’ என்று பெயர். இது முதன் முதலில் கிறித்துவ ப்ராடஸ்டன்ட் மதத்தின் மூலம் ஆரம்பித்தது. இன்றைய சமூக மாறுதல்களை கருத்தில் கொள்ளாமல், இரண்டாயிரம் வருடத்திய பைபிளில் என்ன சொல்லி இருக்கிறதோ அதன் படியே இன்றும் வாழ முயற்சிக்க வேண்டும் என்று கிறித்துவர்களில் ஒரு பிரிவினர் கருத ஆரம்பிக்க அதற்கு அடிப்படைவாதம் என்று பெயரிடப் பட்டது.


அதே மாதிரி மற்ற மதத்திலும் கருதும் குழுவினர் அடிப்படைவாதிகள், அதாவது religious fundamentalists என்று அழைக்கப் பட்டார்கள். இந்த விளக்கத்தின் படி  இந்துத்வா அபிமானிகள் ஹிந்து அடிப்படைவாதிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.


இதே தியரிப்படிதான் வஹாபிசத்தையும் விளக்க வேண்டும். இஸ்லாத்தில் இடைப்பட்ட காலத்தில் எழுந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் துறந்து ‘தூய இஸ்லாம்’ நோக்கிப் போக வேண்டும் என்று முன்னெடுப்பதும் அடிப்படைவாதம்தான். வஹாபிசம் தூய இஸ்லாத்தைத்தான் முன்வைப்பதால் அவர்களையும் அடிப்படைவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.


மேலும் ‘நாங்கள் எங்கள் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளைத்தான் ஒழிக்கப் போராடுகிறோம்,’ என்று பேசுவது நியாயமான விவாதமாக பார்க்கப் படுகிறது. அதைப் பார்க்கலாம்.


முதலில் இந்த சர்ச்சையே தவ்ஹீத் இயக்கம் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்தியதில்தான் ஆரம்பித்தது. ஷிர்க் என்பதற்கு செவ்வியல் அரபி மொழியில் ‘சம நிலை’ அல்லது ‘தொடர்பு’ என்று அர்த்தம். அதாவது வேறு ஒரு கடவுளை அல்லாவுடன் சம நிலையில் வைத்துப் பேசுவது என்று பொருள் கொள்கிறார்கள். ஆதியில், அதாவது இஸ்லாத்தின் துவக்கத்தில் அல்-மனத், அல்-லத், உஸ்ஸா என்கிற மூன்று பண்டைய அரபிக் கடவுளர்களுடன் அல்-லாஹ்-வையும் சேர்த்து ‘சம நிலையில்’ வைத்துப் பார்த்தனர். இதனை முஹம்மது கண்டித்தார். (அவர் ஆரம்பத்தில் இதனை ஏற்றுக் கொண்டார் என்று ஒரு தனி தியரி இருக்கிறது; ஆனால் நவீன இஸ்லாமிய ஆய்வாளர்கள் இதனை மறுதலிக்கிறார்கள். அது இங்கே தேவையில்லாத சர்ச்சை. எனவே அதில் புக வேண்டாம்.)  


ஷிர்க் என்பதன் ஆதார சிந்தனை இதுதான். இதனையே கொஞ்சம் பண்டைய அரேபியா விட்டு விஸ்தரித்துப் பார்த்தால் படைப்பு, காத்தல், அழிப்பு என்று எந்த வேலையை செய்வதாக நம்பப் படும் கடவுளர்கள் எல்லாமே ஷிர்க்-கின் கீழ் வருவார்கள். அதாவது விஷ்ணு காக்கும் கடவுள் என்று யார் நம்பினாலும் அது ஷிர்க்-தான். ஏனெனில் அல்லா மட்டுமே காப்பவர் என்கிற சிந்தனையை அது மறுதலிக்கிறது. சிலைகளை என்று மட்டும் அல்ல பொதுவாக எந்த சக்தியையுமே கடவுளாக வழிபடுவதையே ‘ஷிர்க்’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அதைத்தான் பண்டைய அரேபியாவில் செய்தார்கள். எனவே இது வெறும் இஸ்லாத்தில் உள்ள ‘மூட நம்பிக்கைகளுக்கு’ எதிரானது என்று மட்டுமே பொருள் கொள்வது அப்படி சொல்பவர்களுக்கே ஷிர்க்-கின் வரலாறு தெரியவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது வேண்டுமென்றே விவாதத்தை திசை திருப்புகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.


சரி, பிரச்சனை மூட நம்பிக்கைகள்தான் என்றே எடுத்துக் கொண்டாலும், எது மூட நம்பிக்கை என்ற கேள்வி வருகிறது. அதன் ஆங்கில வார்த்தை superstition-க்கு ஆக்ஸ்போர்ட் அகராதியை கேட்டால் பின்வரும் விளக்கம் தருகிறது:


'A widely held but irrational belief in supernatural influences.'


இதில் முக்கியமான வார்த்தை ‘irrational’ அதாவது அர்த்தமற்ற நம்பிக்கைகள் அல்லது ஆதாரமற்ற நம்பிக்கைகள். இப்படிப் பார்த்தால் எந்த ஒரு மத நம்பிக்கையையும் ஆதாரமற்றது, அதாவது மூட நம்பிக்கை என்று சொல்லி விடலாம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், ராமர் அயோத்தியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் பிறந்தார், பிள்ளையாரின் சொந்தத் தலை வெட்டப் பட்டதும் பார்வதி ஒரு யானைத் தலையை பொருத்தி அவரை காப்பாற்றினார், குரான் இறைவனால் ஜிப்ரில் தேவதை மூலம் நேரடியாக இறைத் தூதருக்கு வழங்கப் பட்டது போன்ற எதுவுமே நிரூபிக்க முடியாத, ஆதாரமற்ற நம்பிக்கைகள்தாம். இந்த மாதிரி எந்த மத நம்பிக்கைகளையுமே நாம் கேள்வி கேட்டு அவற்றை மூட நம்பிக்கைகள் என்று புறந்தள்ளி விட முடியும்.


அப்படி எல்லாம் இல்லை, ஒரு மதம் உருப் பெரும் போது கிடைத்த விஷயங்கள் எல்லாமே நன்னம்பிக்கைகள், அதற்குப் பிறகு நடந்த மாற்றங்கள் எல்லாமே மூடத்தனம், என்கிற ஒரு விளக்கத்தை நாம் முன் வைத்தால் அதுவும் கேள்விக்கு உள்ளாகும்.


உதாரணத்துக்கு தலித்துகள் தீண்டத் தகாதவர்கள்; அவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஒரிஜினல் ஹிந்து மத நம்பிக்கை. இவை பண்டைய ஹிந்து மதப் புத்தகங்களில் காணப்படும் விஷயங்கள். ஆனால் தீண்டாமையை ஒழித்தது, தலித்துகளை கோயிலுக்குள் அனுமதித்தது எல்லாமே நவீன மாறுதல்கள். ஒருவேளை யாராவது ஒரு தீவிர பிராமணர் கிளம்பிவந்து, ‘தலித்துகளுக்கு உரிமை கொடுத்தது எல்லாமே மூட நம்பிக்கைகள், ஹிந்து மதத்துக்கு எதிரானவை, ஆகவே இவற்றைக் களைந்து தூய ஹிந்து மதத்தை கொண்டு வர வேண்டும்,’ என்று இன்று போராடத் துவங்கினால் அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோமா?


அதே போலதான் இந்த வஹாபிச ‘மூட நம்பிக்கை’ வாதங்களும். இவர்கள் வாதத்தைப் பொறுத்த வரையில் ஷியா பிரிவு கூட மூட நம்பிக்கைதான். ஆனால் அந்தப் பிரிவுக்கான ஆதார சிந்தனைகள் நபிகள் இறப்புக்கு உடனேயே துவங்கி விட்டவை. ஷியா - சுன்னி என்பதே நபிகள் இறப்புக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டி நடந்த அரசியலின் தொடர்ச்சிதான். இதில் சுன்னிதான் நன்னம்பிக்கை, ஷியா மூட நம்பிக்கை என்பதே தவறான வாதம். ஏனெனில் அதே வாதத்தை ஷியாக்கள் கூட இவர்களுக்கு எதிராக முன் வைக்க முடியும்.


சூஃபி சிந்தனைகளும் கூட ஏறக்குறைய நபிகள் காலத்துக்கு உடனேயே துவங்கி விட்டன. அலி இபின் அபி தாலிப், நபிகளின் மருமகன்தான் சூபி சிந்தனைகளின் ஊற்று என்று நம்பப் படுகிறது. அதே போல அப்த்-அல்லா இபின் முஹம்மத் இபின் அல்-ஹனஃப்பியா என்பவர்தான் முதல் சூஃபி துறவி என்று கருதப் படுகிறார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. அதாவது இந்த சிந்தனைகளும் ஏறக்குறைய இஸ்லாத்துடன் சேர்ந்தே வளர்ந்தன. சொல்லப் போனால் நடுவில் முளைத்த விஷயம் என்பது வஹாபிசம்தான். சூஃபி, ஷியா இவர்கள் எல்லோரும் சேர்ந்து வஹாபிசம்தான் மூட நம்பிக்கை சொன்னால் அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.


ஒவ்வொரு மதமும் காலத்துக்கு ஏற்பவும், அந்தந்த மதம் பரவுகின்ற இடங்களுக்கு ஏற்பவும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டு வருகிறது. ஐரோப்பாவில் பரவிய கிறித்துவம் ஈஸ்டர் என்கிற பண்டைய ஐரோப்பியப் பண்டிகையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. (ஒரு கொசுறுத் தகவல்: ஈஸ்டர் என்பது யூஷ்டர் என்கிற அதிகாலைக்கு சொந்தமான ஜெர்மானியக் கடவுளில் இருந்து மருவியது. யூஷ்ருக்கும் பண்டைய வேதக் கடவுளான உஷஸ்-க்கும் சம்பந்தம் இருக்கிறது. உஷஸ், உஷா என்பதெல்லாம் அதிகாலையைக் குறிக்கும் சொற்கள். காலையில் விழித்து எழுதலை ஏற்படுத்தும் கடவுள் சம்பந்தப் பட்டதாக இருப்பதால் இயேசு விழித்து எழுந்ததை இதனோடு இணைத்து கொண்டாடத் துவங்கி விட்டார்கள்.)


இதே போலத்தான் இந்தியாவிலும் பல்வேறு மதங்கள் காலப் போக்கில் ஒன்றிடம் இருந்து இன்னொன்று உள்வாங்கி சில சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பின் பற்றுகின்றன. இந்த மாதிரி கலப்படங்கள் எல்லாமே அநியாயம் என்று கருதுபவர்கள் உலகம் எங்குமே பொதுவாக கலாச்சாரங்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் இந்த மாதிரிதான் தூய ஆரியம் போதித்தார். ஹெட்கேவர் ஆர்எஸ்எஸ் துவக்கி தூய ஹிந்துத்துவம் போதித்தார். இலங்கையில் புத்த பிக்குகள் தூய பௌத்தத்தை போதித்தனர். அரேபியாவில் வஹாப் தூய இஸ்லாம் போதித்தார். இந்த ‘தூய்மை’யின் விளைவுகள் எல்லாமே கடைசியில் கடும் ரத்தக் களரியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. இதில் வஹாபிசம் கொஞ்சம் தேவலாம், தூய ஆரியம் ரொம்ப மோசம் என்கிற ரேங்கிங்-குக்கே இடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஐரோப்பாவில் ஹிட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரேபியாவில் இபின் சவுத்-க்கு கிடைத்தது. எண்பதுகள் வரை ஹெட்கேவர் ஆட்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 1992ல் கிடைத்தது; 2002ல் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்தபோது என்ன செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதேதான் வஹாபிசத்துக்கும் நடக்கும். சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தானின் பக்தூன்க்வா மாநிலம் போன்ற பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளில் எல்லாம் வஹாபிகளுக்கு பங்கு இருக்கிறது. கடந்த  இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பகுதிகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டது, தர்காக்கள் தகர்க்கப் பட்டது போன்றவற்றின் பின்னணியில் வஹாபிச சிந்தனை இருந்திருக்கிறது.  வஹாபிகள் மூட நம்பிக்கையை எதிர்க்கவில்லை. இவர்கள்தான் மூட நம்பிக்கையின் மொத்தக் கொள்முதல்காரர்கள். இவர்கள் தூய்மையை போதிக்கவில்லை. இவர்களே இஸ்லாத்தின் மொத்த அழுக்கிற்கும் சொந்தக் காரர்கள். அமைதியை, நல்லிணக்கத்தை, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் கடுமையாக எதிர்க்க வேண்டியவர்கள் வஹாபிகள். இவர்களுக்கு வேர் கொடுப்பது பெரும் கேட்டில் கொண்டு போய் முடியும். ஆனால் இன்னமும் அது இங்கே வேர் பிடிக்கவில்லை என்பது ஒரு நல்ல விஷயம். காரணம் அந்த அளவுக்கு ஆழமாக பண்பாட்டுக் கலப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. பன்மைக் கலாசாரத்துக்கு இந்தியாவுக்கே முன் உதாரணமாக நம் மாநிலம் இருந்திருக்கிறது.  பாபர் மசூதி இடிப்பு நடந்த போதே அமைதி காத்தவர்கள் நம் தமிழக இஸ்லாமியர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த வஹாபிச அழுக்கையும் இங்கிருந்து துடைத்து எறிவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Thanks :Tharkasasthiran

Saturday, February 6, 2016

ஜெஸ்லியா பேட்டி தொடர்ச்சி...







0 பல மாதங்களுக்குப் பிறகு உங்கள் பேட்டியைத் தொடருகின்றேன். இத்தனை கால இடைவெளி எதற்கு என்று கூறுங்கள்.

பல்கலைக்கழகத்தில் நான் பயிலும் கற்கை நெறிக்குரிய பரீட்சைகளுக்காக ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தேன்.

0 முன்புபோல ஜாஃப்னா முஸ்லீம், கிண்ணியா நெற் போன்ற இணையத்தளங்களிலே இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் ஆக்கங்களுக்கு விமர்சனங்கள் இடுகின்றீர்களா? உங்கள் விமர்சனங்களுக்கு இப்போதும் எதிர்வினைகள் வருகின்றனவா?

கிண்ணியா நெற் என்ன காரணமோ தெரியவில்லை தற்போது மிகவும் மெதுவாக செயற்படுகின்றது. செய்திகளைப் புதுப்பிப்பதற்கு கூட வாரக்கணக்கில் எடுத்துக்கொள்கின்றார்கள்.

 ஜாஃப்னாமுஸ்லீம் தளத்தில் என்னுடைய பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆயினும், தங்களுக்குச் சிக்கலாக கருதும் தர்க்கரீதியான பின்னூட்டங்களை இடம்பெற்றுவிடாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்கள். அதன் மூலமாக எனது கருத்துகளுடன் கருத்துக்களால் மோதமுடியாதவர்களையும் அல்லது அவ்வாறு மோதினாலும் மூக்குடைபடக்கூடியவர்களையும் காப்பதற்கு நினைக்கின்றார்கள் போலும்.

தங்களை தைரியமானவர்களாக காண்பித்துக்கொள்ளும் ஆண்கள், நேர்மையானதும் நடுநிலையானதும் மிகுந்த நாகரீகமான வார்த்தையுடனும் புரியப்படும் ஒரு பெண்ணின் விமர்சனத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?

பெண்பிள்ளைகளென்றால் இளக்காரமாகப் பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியுடையவர்கள்தான் நேர்மையான விமர்சனங்களை இருட்டடிப்புச் செய்ய முனைவார்கள்.

0 தற்போதைய அரசியல் சூழ்நிலைபற்றி உங்கள் பார்வை எவ்வாறுள்ளது?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் சிந்திக்கத்தெரிந்த ஒரு சாதாரண குடிமகளின் யோக்கியமான பார்வைதான் என்னுடையதும்.

கடந்த காலங்களில் அநீதி இழைத்தவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படுவதோடு பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதமாக சிறுபான்மை மக்கள் கௌரவமாக வாழத்தக்கதான அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும்.

0 இறைச்சிக்காக மாடு அறுக்கப்படுவது பற்றிய கண்ணேட்டம்..?

இந்த விடயத்திலும் ஏற்கனவே பலர் குறிப்பிட்ட கருத்துகளையே நான் வழிமொழிய வேண்டியுள்ளது. உணவுக்காக உயிர்களை அல்லது விலங்குகளைக் கொல்லக்கூடாது என்ற ரீதியில்தான் மாடுகளை அறுப்பது விமர்சிக்கப்படுகின்றது என்றால் நாம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் நியாயம்.

தாவரங்கள் கூட உயிருள்ளவைதானே. விலங்குகளில் மீன்கள் முதல்கொண்டு எதையுமே உண்ண முடியாது. ஆயினும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் இவ்விடயம் பெரிதாக்கப்படுகின்றது என்றால் சிறிது காலத்திற்கு நாமும் அதற்கு ஒத்துழைப்பதுதான் விவேகமானது. கட்டாக்காலி மாடுகள் பெருகியதும் அவர்களே அழைத்து வந்து இறைச்சிக்கடை அமைத்துத் தருவார்கள்.

0 அண்மைக்காலமாக சுன்னி மற்றும் ஷியாக்கள் விடயம் பெரிதாகப் பேசப்படுகின்றதே..?

'மதநம்பிக்கை'  என்ற சொல்லை ஒருதடவை உச்சரித்துப் பாருங்கள்!

மதங்கள் அனைத்துமே நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானவையே. மொழிகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தனவோ அவ்வாறுதான் மதங்களும் காலத்துக்கு காலம் அவற்றைப் பின்பற்றுபவர்களாலும் அவற்றோடு முரண்படுபவர்களாலும் மாற்றங்களுக்குட்பட்டே வந்திருக்கின்றன.

ஒரு மதச்சடங்கை எடுத்துக்கொண்டால் கூட இதுதான் சரி என்று அடித்துக் கூறுபவர்களும் இல்லை என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு உயர்வானதாகத் தோன்றுவது இயல்பே. ஒருகூட்டத்தினருக்கு உத்தமமாகத் தென்படும் விடயம் பிறிதொரு கூட்டத்திற்கு அவ்வாறு தோன்றாதிருக்கவும் கூடும்.
இவை முற்றிலும் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள். அவரவர் நம்பிக்கைகளை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் இருக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பதே நல்லது என்று தோன்றுகின்றது.

0 அப்படி அனுமதிப்போமானால் மக்கள் ஆளுக்கொரு மதப்பிரிவுகளோடு புறப்பட்டு வந்துவிடுவார்களே?

இறைவன் தன்னுடைய உண்மையான மதத்தை பாதுகாப்பதற்கு வலுவுள்ளவன். எத்தனை பிரிவுகள் கிளம்பினாலும் அவற்றுள் உண்மையான மார்க்கத்தைத்தானே இறைவன் போஷிப்பான்..? ஏனையவற்றுக்கு அதாவது மாற்றுப் பிரிவுகளுக்கு இறைவனுடைய ஆதரவு இருக்காதல்லவா..?

பிரபலமான அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வருபவர்கள், தமது ஆதாயத்துக்காக ஏறத்தாழ அதேபெயருடன் கூடிய மாற்றுக்கட்சிகளை உருவாக்குவதுபோல மதப்பிரிவுகளையும் உருவாக்கி விடுவார்களோ என்று அச்சமடைய வேண்டியளவுக்குத்தான் இன்றுள்ள ஆன்மீக நிலைமை இருக்கின்றது பார்த்தீர்களா..?

(தொடரும்)

Saturday, November 14, 2015

தன் வலியால் பிறர் வலி உணர்தல்:




ரு காலத்தில் நாம் சின்னஞ்சிறார்களாக ஓடிவிளையாடிய காலத்து ஒளிப்படம் ஒன்றை பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராதவிதமாய் அதை நாம் தொலைத்துவிட நேர்ந்தால்.....?

பின்னாட்களில் சிறுகதை எழுத்துக்களில் ஆர்வம்கொண்டு தீவிரமாக எழுதவாரம்பித்த நாட்களில்..  எழுதிய கதை ஒன்றின் ஒரேயொரு பிரதியையும் தொலைத்தபோதுதான் அந்த வலியை முழுமையாக நான் உணர்ந்தேன். 

என்னுடைய மண்ணின் பெருமைக்குரிய மூத்த எழுத்தாளரான திரு. வ . அ இராசரத்தினம் அவர்களது எழுத்துகளைப் படிக்க நேர்ந்தபோது, ஓரிடத்தில்  கலவரகாலத்தில் காடையர்களினால் தனது அச்சகத்துடன் கூடிய வீடு எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். அதிலே எத்தனையோ இலட்சக்கணக்கான அச்சக உபகரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களையெல்லாம் புறக்கணித்து, அக்கினியுடன் சங்கமமான தனது கையெழுத்துப் பிரதிகளின் அழிவுக்காக அவர் அழுதிருந்தார்.

அதுதான் கலைஞனின் மனம்.

நமது சொந்த இழப்புகளின் வலிதான் பிறரின் வலிகளையும் நம்மை ஆத்மார்த்தமாகப் புரிந்து அனுதாபம் கொள்ளச் செய்யும்.இங்கே ஒரு திரைப்படக் கலைஞன் தனது வலியைப் பதிவு செய்திருக்கின்றான். பழையதுதான் ஆயினும் உணர்வுகள் எத்தனை தடவை படித்தாலும் ஈரம் மாறாதன. படித்துப்பாருங்கள்.

-'Mutur' Mohammed Rafi


தமிழ்த் திரைப்படக் காப்பகம் 




கில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” படம் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் காண்பிக்கப்படுவதாக இருந்தது.

அந்தத் திரைப்படவிழாவுக்கென்று எனது படத்தின் புதிய பிரதியொன்றை எடுத்துக் கொடுக்க எண்ணிய நான், அந்தத் படத்தின் நெகட்டீவை வெளியே எடுத்தபோதுதான் தெரிந்தது - “வீடு” படத்தின் நெகட்டீவ் முழுவதுமாக கெட்டுப்போய்,மேற்கொண்டு ஒரு பிரதிகூட எடுக்க முடியாத நிலையில் அழிந்துபோய் இருக்கிறதென்று!
அதைப் பார்த்து நிலைகுலைந்துபோன நான் உடனடியாக எனது “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய படங்களின் நெகட்டீவ்களை எடுத்துப் பார்த்தேன். “வீடு” படத்தின் நெகட்டீவுக்கு ஏற்பட்ட அதே கதிதான்  “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏற்பட்டிருந்தது.ஒரு பிரதி கூட எடுக்க முடியாத அளவுக்கு இந்த இரண்டு படங்களின் நெகட்டீவ்களும் கெட்டுப்போயிருந்தன.

எனது மூன்று பிள்ளைகள் என் கண் முன்னேயே இறந்து விட்டது போல ஒரு சோகம் என்னை கவ்விக்கொண்டது.
எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்களை நினைத்து நினைத்து நான் கண்ணீர் விட்ட இரவுகள் ஏராளம். அந்த இழப்பு தந்த துக்கத்திலிருந்து இன்று வரை என்னால் வெளியே வர முடியவில்லை.

“வீடு” “சந்தியாராகம்” “மறுபடியும்” ஆகிய எனது படங்களின் அழிவை நினைத்து கொண்டால்... இப்பொழுதும் நெஞ்சு வலிக்கிறது.
நான் இயக்கிய முதற்படமான “கோகிலா” , எனது முதல் தமிழ் படமான “அழியாத கோலங்கள்” , அதன்பின் வந்த “மூடுபனி”, எனக்கும் கமலுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த - பார்த்த் அனைவர் மனதிலும் இன்று வரை பசுமையாக நியாபகமிருக்கும் எனது “மூன்றாம் பிறை” ஆகிய படங்களின் நெகட்டீவ்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை பார்த்துத் தெரிந்து கொள்வதற்கான தைரியம் எனக்கில்லை. அந்த படங்களின் நெகட்டீவ்களுக்கு எதாவது ஆயிருந்தால், அந்த துக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று பட்டதால் பார்க்கவில்லை. பத்திரமாக இருக்கின்றன என்ற குருட்டு நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்கள் என்று படித்தவர்களாலும்,விமர்சகர்களாலும் ,பாமர ரசிகர்களாலும் ஒரே மனதாக ஒத்துக் கொள்ளப்பட்ட “வீடு” , “சந்தியாராகம்” , “மறுபடியும்” படங்களின் நெகட்டீவ்கள் பாதுகாக்கப்பட்டிருக்க  வேண்டிய முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அவை அழிந்து போயிருக்காது.

”அழியாத கோலங்கள்”  77-லும், “வீடு” 87-லும் , “மறுபடியும்” 93-லும் வெளியான படங்கள். இந்த படங்களே இனி பிரதியெடுக்க முடியாதபடி அழிந்துபோய் விட்டன என்றால் இவற்றிற்கு முன் வெளிவந்த நமது தமிழ் படங்களின் கதி என்ன? பராசக்தி,ரத்தக்கண்ணீர்,மனிதன்,பாசமலர் போன்ற நமது படங்களின் நெகட்டீவ்கள் எப்படி இருக்கின்றன?



ஏவிஎம் போன்ற பணவசதி படைத்த தனியார் நிறுவனங்கள் சில அவரவர் படங்களை பாதுகாக்க வேண்டிய முறையில் பாதுகாத்து வருவதால், அவர்களது படங்கள் பிழைத்திருக்கின்றன.
சினிமாவில் ஊறித்திளைக்கும் இனம் நம் தமிழினம். நமது மக்களுக்கு அவர்கள் வரவுக்குள் கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான், நமது மீடியாக்களுக்கு இருக்கும் நிரந்தர பிழைப்புக்கூட சினிமாதான்.

தமிழர்களது அன்றாட வாழ்க்கையிலும் அவர்தம் அரசியலிலும் சினிமா ஏற்படுத்திய - ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கம் அசுரத்தனமானது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் எவருக்கும் இருக்க முடியாது.

ஒரு சராசரித் தமிழனுக்கு,தமிழச்சிக்கு, இசையென்றால் அது சினிமாப் பாடல்கள்தான். இயல் என்றால் அது நமது சினிமாக்களுக்கு எழுதப்படும் நாடகத்தனம் கொண்ட நமத்துப்போன உரையாடல்கள்தான். கவிதையென்றால் அது நமது சினிமாப்பாடல்களுக்கென்று எழுதப்படும் (இப்பொழுதெல்லாம் அது தமிழ் தானா அல்லது வேறேதேனும் மொழியா என்று தெரியாத) அந்த வரிகள்தான். நடனம் என்றால் அது திரையில் ஆடப்படும் அந்த ஆட்டம் தான்.போடப்படும் அந்த குத்துதான். ஓவியம் என்றால் நமது சினிமாக்களுக்காக வைக்கப்படும் விளம்பர பேனர்கள்தான்.உடையென்றால் அது வெள்ளித்திரையில் நமது நடிக நடிகையர் உடுத்திக்கொள்ளும் அல்லது உடுத்திக்கொள்ளாமல் விடும் அந்த ரக உடைதான்.அன்றாட பேச்சு வழக்கென்றால்,அது நமது படங்களுக்கான கதாபாத்திரங்கள் திரையில் எப்படிப் பேசுகிறார்களோ, அந்தப் பேச்சு வழக்குதான்... (சும்மா அதிருதில்ல...! நண்பேண்டா..!)

அரசியல் என்றால், “வேலைக்காரி” படத்தின் கதை-வசனகர்த்தா அண்ணா அவர்கள் முதல், ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இன்றைய அம்மா அவர்கள் வரை, தமிழகத்தின் அத்தனை முதல்வர்களும் சினிமாக்காரர்கள்தான்.(இடையில் வந்து போன பன்னீர்செல்வம் அவர்களை ஒரு விபத்து என்று விட்டு விடலாம்) தமிழனது முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகால அரசியலை சினிமாதான் - சினிமாக்காரர்கள்தான் கட்டிக் காத்து (?) வருகிறார்கள்.


இது போதாதென்று, இனி வரும் காலங்களில் கூட அப்படித்தான் என்று திரைத்துறை சார்ந்த சிலர் இங்கு பயமுறுத்திக் 
கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது சினிமா செலுத்திக்கொண்டிருக்கும் ஆணித்தரமான ஆதிக்கத்தை எடுத்துச் சொல்ல இவைகளை விட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்..?
இப்பேர்பட்ட நமது தமிழ் சினிமாவை,அதன் வரலாற்றை,உலகிற்கும், இனி வரும் நமது தமிழ் தலைமுறைகளுக்குமெனப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ அதற்கான செயல்பாடுகளோ தமிழ் சினிமா மூலம் கோடி கோடியாக லாபம் பார்ப்பதில் மட்டுமே குறியாய் இருக்கும் அதன் பெரியவர்களுக்கோ அல்லது அதன் இதமான இளம் சூட்டில் அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியலாளருக்கோ கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகள் கூட திரையரங்கங்களின் இனி பார்க்க முடியாதபடி அழிந்து போய் விட்டன - போய்க்கொண்டிருக்கின்றன.
காலத்திற்கு காலம் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட - ஏற்பட்டுக்கொண்டிருக்கும் - இனியும் ஏற்பட இருக்கும் உள்ளடக்க ரீதியான - உருவ ரீதியான விரும்பத்தக்கது - தகாததுமான மாற்றங்களை ஆராய்ந்து படிக்க எண்ணும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அழிந்து போன - அழிந்து போகவிடப்பட்ட அந்த படைப்புகள் இனிக் கிடைக்க வாய்ப்பில்லை.

தமிழ் சினிமாவின் அந்த சரித்திர ஆவணங்களில் ஒன்றிரண்டையாவது பார்க்க வேண்டும் என்றால் மஹாராஷ்டிராவில் உள்ள பூனேயில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய திரைப்பட காப்பகத்திற்குத்தான் போக வேண்டும். அல்லது அவற்றின் திருட்டு விசிடிக்கள் தப்பித்தவறி எங்காவது கிடைக்குமா என்று தேட வேண்டும். அல்லது எப்பொழுதாவது காண்பிக்கப்பட்டால், பல விளம்பர இடைவேளைகளோடு அவற்றை நமது தொலைக்காட்சிகளில் தான் பார்க்க முடியும்.

மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய திரைப்படக் காப்பகத்திற்கு தமிழ் சினிமா மீது தனிப்பட்ட அக்கறை எதுவும் கிடையாது என்பதை அறுபதுகளின் நடுப்பகுதியில், நான் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அறிவேன்.
நமது படங்கள் நமது காலத்திலேயே அழிந்து போய்விட்டன - அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன என்ற துக்கம் காரணம், தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம்,தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம் கொதித்துப்போன நிலையில், உணர்ச்சிவசப்பட்ட ஒரு பலவீனமான தருணத்தில் எழுதப்பட்ட இந்த கட்டுரையின் சில பகுதிகள் சற்று காட்டமாக அமைந்துவிட்டன.அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நமது தமிழ் படங்கள் நமது காலத்திலேயே அழிந்துபோவதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம். நமது அரசு என்ன செய்யலாம் என்று சிறிது அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

அந்த வகையில் நமது முதல் தேவை ஒரு தமிழ்த் திரைப்படக் காப்பகம்!

“ஆமா இந்த குப்பைகளைப் பாதுகாத்துவேறு வைக்கவேண்டுமாக்கும்” என்று சிலர் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது. இந்த அதிருப்தியாளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நமது தமிழ் படங்களின் பெரும்பாலானவை குப்பைகள்தான்,ஒத்துக்கொள்கிறேன். அந்த குப்பைகளுக்கிடையில் அவ்வப்போது சில மாணிக்கங்களும் வருகின்றனவே ! அந்த மாணிக்கங்களை நாம் மறந்துவிடக்கூடாது.
அப்புறம், இன்னொரு விஷயம் - குப்பைகள் அதிகமாக இருப்பது நமது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எல்லா மொழி சினிமாக்களிலும் குப்பைகளே அதிகம்.



தமிழ் சினிமாவுக்கான காப்பகம், அமெரிக்கா, ஃப்ரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளின் திரைப்பட காப்பகங்களுக்கு நிகராக அமைக்கப்பட வேண்டும். நமது காப்பகங்களுக்கான பிரதம காப்பாளர் (chief curator) சினிமாவை , குறிப்பாக தமிழ் சினிமாவை ஆழமாக நேசிப்பவராக இருக்க வேண்டும் (A young IAS officer who loves cinema - particularly tamil cinema) அவரையும் அவருக்கு கீழ் பணிபுரிய இருக்கும் இரண்டு,மூன்று இளைஞர்களையாவது , அமெரிக்காவிலோ, ஃப்ரான்ஸிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு அதி நவீன திரைப்படக் காப்பகமொன்றுக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது திரைப்படப் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழ் திரைப்படக் காப்பகம் அமைவதற்கான ஒரு இடமும் அதற்கான ஒரு கட்டிடமும் வேண்டும். அது சென்னையில்தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஊட்டி,கொடைக்காணல்,ஏர்காடு போன்ற இடங்களில் கூட இருக்கலாம்.

இதையடுத்து, திரைப்பட காப்பகத்திற்குத் தேவையான , ஒரு நவீன திரையரங்கம் உட்பட, அனைத்து உபகரணங்களும் (equipments) வாங்கப்படவேண்டும்.

தமிழில் தயாராகும் ஒவ்வொரு திரைப்படத்தின் நெகட்டீவ் பிரதியொன்றும் (duplicate negative copy), அதன் மின்பதிப்பொன்றும் (digital version of it) தமிழ்த் திரைப்படக் காப்பகத்தில் வைக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைக் கேட்டுக்கொள்ளலாம். அல்லது சட்டம் மூலம் கட்டாயப் படுத்தலாம்.
பழைய தமிழ் படங்களின் நெகட்டீவ்களையோ அல்லது பிரதிகளையோ தேடியெடுத்து அவற்றை புதுப்பிக்கும் நவீன முறைகளை கையாண்டு புதுப்பித்து வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் திரைப்பட காப்பகத்திற்கான ஆரம்ப செலவுகள் அனைத்தையும் தமிழ் திரைப்படத்துறையினர் (தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர்,இசையமைப்பாளர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்) பாதி, அரசு பாதி என்று ஏற்றுக்கொண்டு செயல்படலாம்.

நமது தமிழ் திரைப்படங்கள் நமக்குப் பின் வரும் சந்ததியினருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், தமிழ் திரைப்பட துறையை சார்ந்த நலமும், நமது அரசும் சேர்ந்து உடனடியாக தமிழ் திரைப்படக் காப்பகத்திற்கான வேலையில் இறங்கினால்தான் உண்டு.இல்லையெனில், நமது காலத்திலேயே நமது தமிழ்ப் படங்கள் அழிந்து போய்விடும். தமிழன் என்ற வகையில் ,தமிழ் சினிமாவை நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில், தமிழ்த் திரைத் துறையினரே, தமிழக அரசே உங்கள் கால்களில் என் தலை வைத்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நமக்கான தமிழ்த் திரைப்பட காப்பகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்- உடனடியாக அந்தப் பணியில் இறங்குங்கள்!

-பாலுமகேந்திரா

Friday, October 16, 2015

டேவிட் ஐயா!







டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன்.

இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை.
பல வருடங்களின் முன்னரே அவர் வன்னிப்பிரதேசத்தில் பண்ணைகளை வாங்கி இயக்கி வந்ததாக அறிந்தேன். 77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி நோக்கிப்புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது காந்தியம் அமைப்பே. அவ்விதம் வரும் அகதிகளைக்குடியேற்றி, அவர்களுக்கு விவசாயம் செய்வதை விளங்கப்படுத்திச் சொந்தக்கால்களில் நிற்க வைப்பதுதான் காந்தியம் அமைப்பின் பிரதான நோக்கம். அதற்காக அவ்விதம் அமைக்கப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு அறிவு போதிக்கும், உதவி புரியும் மாதிரிப்பண்ணைகளாக விளங்கிய பண்ணைகளிலொன்றே நாவலர் பண்ணையும். இங்கு நியாய விலையில் குழந்தைகளுக்கான திரிபோஷா மா போன்ற பொருள்கள் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளைப்பராமரிக்கு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டன. அப்பண்ணைகளில் விவசாயம் செய்வதில் அக்குடியேற்றவாசிகளைப்பங்கு பற்ற வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாய அறிவினைப்போதிப்பதுதான் அம்மாதிரிப்பண்ணைகளின் நோக்கமாகவிருந்தது.

இப்பண்ணைகள் பற்றிய அறிவு எனக்கு டேவிட் ஐயா மீதான மதிப்பினை அதிகரிக்கவே வைத்தது. திருமணமாகாத அவர் தன் வாழ்க்கையினை ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அவரது கட்டடக்கலை அறிவுக்கும், அனுபவத்துக்கும் வெளிநாடுகளில் ஏன் இலங்கையிலேயே சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ தான் உழைத்ததையெல்லாம் காந்திய அமைப்புக்கே செலவிட்டார்.

இவரைச் சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஆனால் கதைத்ததில்லை. நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் இவர் தனது கட்டட வரைப்படங்களுடன் , அனுமதி வேண்டி வந்திருப்பதைக்கண்டிருக்கின்றேன். அப்பொழுதுதெல்லாம் வெள்ளை நிற 'சேர்ட்டு'டன் கால்களில் வெறும் செருப்புடன் தான் வருவார். இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது. இன்னுமொரு தடவை டேவிட் ஐயாவின் மீது பெரு மதிப்புக்கொண்ட கட்டடக்கலைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரூடாக ஒரு சில தொழில்ரீதியான உதவிகளை நானும், நண்பரொருவரும் செய்திருக்கின்றோம். ஆனால் அப்பொழுதும் நேரில் அவரைச்சந்திக்கவில்லை.

அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்பானது தமீழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கை அரச படைகளின் கவனம் அவ்வமைப்பின் மீதும் விழுந்தது. அதன் விளைவாகவே மருத்துவர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா, அண்மையில் கனடாவில் மறைந்த சண்முகலிங்கன் போன்றவர்களெல்லாரும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திலேற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது வாழ்க்கை நீண்ட காலம் தமிழகத்தில் கழிந்தது. தமிழர் உரிமைகள் விடயத்தில் இறுதி வரையில் அவர் தன் கருத்துகளில் தெளிவாக இருந்தததை அவ்வப்போது பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் செய்திகள் மூலம் அறிய முடிந்தது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. முக்கியமாக அகதிகள் புனர்வாழ்வுக்காக அவ்வமைப்பு வட, கிழக்கில் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டியதொன்று. மலையகத்தமிழர்களையும் வட, கிழக்கில் குடியேற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க முற்பட்ட செயலானது தீர்க்கதரிசனம் மிக்கவொன்றாக அச்சமயம் தோன்றியது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பை எவ்விதம் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாதோ அவ்விதமே டேவிட் ஐயாவின் பங்களிப்பினையும் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு , நினைவு கூரும். 

-வ.ந. கிரிதரன்
Thanks : Geo Tamil

Thursday, October 15, 2015

சிறுகதை : சித்திமா






ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல், கொள்ளை அழகில் குதூகலிக்கும் இரவைத் தழுவும் தாபம்.
கண்கள் சுட்டெரிந்தன. வாப்பாவின் கை பிடித்து ஆமையரப்பாட்ட ஆட்டுக் குட்டி வாங்கப் போன அன்றிலிருந்து இந்த ஆற்றங்கரையை இத்தனை காலமாக அவரும் பார்க்கிறார். எத்தனை அழகு, எத்தனை கோணம், எத்தனை சிலிர்ப்பு.
அவர் ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருக்க வீதியில் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அவர் ஊருக்குப் புதினம். ஊர் அவருக்குப் புதினம். தீராத புதினம்.
அண்ணாவி சாச்சாவின் களி கம்பு...
நூகு சாச்சாவின் சிலம்பாட்டம்...
அலிக்குட்டி ஓடாவியாரின் தொட்டில் ஊஞ்சல். . .
ஓடக்கரை பூலாமீர்சா சாச்சாவின் கோடு கச்சேரி...
வெடிக்கார இபுறான்குட்டி மாமாவின் புலி வேட்டை...
அலியார் போடியாரின் குதிரை வண்டி...
உலக்க பாவாவின் வெட்டுக்குத்து...
நெடிய மையப்பாவின் களகம்பும் விரால் மீன் கூடையும்...
அபுசாலி மச்சானின் கரப்பந்தாட்டம்...
பட்டறையர் மாமாவின் கந்தூரியில் பசு நெய்யில் குழைந்துகிடக்கும் ஆட்டுக்கறித் துண்டங்கள்...
சித்திமாவின் பொங்கிப் பூரித்துக் கிடக்கும் பேரழகுத் துண்டங்கள்...
குண்டுமணி போலும் ஊருக்குள் எத்தனை புதினங்கள்.
ஹாஜியார் மக்காவுக்குப் போய்வந்த பதினைந்து நாட்கள் பதினைந்து மணித் துளிகள்போல் உம்மா இரண்டு நாட்கள் கண் கலங்க, உடல் குலுங்க, ஹாஜியாரை முத்தமிட்டுச் சென்றார்.
இன்று வியாழன் மாலை - உம்மாவைக் காணும் நாள். உம்மாவின் கையால் இஞ்சி பிளேன்டீ குடித்து விட்டு ‘மஃரிப்’ தொழப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நெஞ்சில் நிய்யத் உறுதியாகியது.
ஆற்றங்கரை வீதியில் மிதந்து சென்ற ஹாஜியாரின் புராதன காலத்து சைக்கிள் வண்டி திடீரென்று குறுக்கு வீதியால் அவரை அழைத்துச் சென்றது. முன்னால் வரும் சந்தியால் திரும்பினால் மூணு வீடு தள்ளி உம்மாவின் மண் குடிசை. வாசலில் பனி அவரைப் பந்தல். குருத்து மணலைக் கொட்டி நிறைத்திருந்த வாசல்.
எதிரே வரும் சந்தியைக் கண்டு சைக்கிளின் வேகம் மட்டாகியது. திடீரென்று கேற்றின் உள்ளிருந்து ஒரு ‘கை’ அவரின் சைக்கிளின் ஹெண்டலை அலாக்காகப் பிடித்து நிறுத்தியது.
இந்த நேரம் பார்த்து, இந்த வீதியால் நான் வருவேனென்று சித்திமாக்கு யார் சொன்னது? எத்தனை தருணங்களின் காத்திருப்பு... அவரின் எண்ணம் மடிந்து விழுந்த மறுகணம்,
“என்ன ஹாஜியார்! மக்காவுக்குப் போய் அன்று பிறந்த பாலகனா, சந்தனக் கட்டை ஆயிட்டீங்களாமே. எங்களக் கொத்திப் பிளந்த ‘கொறக் கொள்ளிக் கட்டைய’ நாங்க மறக்கல்ல. என்னையும் தொட்டுட்டுப் போயிருந்தா, என்ட பாவமும் அழிஞ்சிருக்குமே. நீங்க ஆம்பிளைக, லேசா மறந்திருப்பீங்க” சித்திமாவின் குரலில் ஏதோ ஒன்று இழையோடிக் கசிந்தது.
சித்திமா, தனக்கு முன்னால் வளைந்துகிடந்த வீதியை மேலும் கீழும் பார்த்தாள். மறு கணம், ஹாஜியாரின் தோள் பட்டையைப் பிடித்து, தலையைக் கவிழ்த்து, தொழுகையில் பூத்துக் கிடந்த நெற்றியிலும் அத்தர் மணக்கும் மோவாய்த் தாடியிலும் மூச்சுமுட்ட முத்தமிட்டாள். ஹாஜியாரின் சைக்கிள் ஆடிப் போனது.
அவரின் பாதங்கள் நிலத்தை அழுத்திப் பிடித்தன. ஹாஜியார் முன்னும் பின்னும் பார்த்தார். இடது பக்கப் புற வளவில் மாமரங்களும் தென்னைகளும் பூத்துக் குலுங்கும் முருங்கை மரங்களும் மஹ்ஷர் பெருவெளியில் கண் கண்ட சாட்சியங்களோ.
மரங்களெல்லாம் கொண்டல் காற்றில் அவருக்குப் பயங்காட்டிச் சிரிப்பதுபோல் கெக்கலித்தன. குளிர் தழுவிய மஃரிப் வேளையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பள்ளிவாசலிலிருந்து “அல்லாஹு அக்பர்”. அவரின் சைக்கிள் அவரிடமிருந்து விடை பெற்றது.
“மெய்தான்! நம்மடெ ரசீதாவுக்கு... உங்கட ரசீதாவுக்கு கவிதைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது” அந்த வார்த்தையில் சந்தனத்தின் மணம் குழைந்து காற்றில் கலந்து அவரின் நாசித் துவாரங்களை நிறைத்தது.
“யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னித்து விடு.”
உம்மாவின் குடிலை மறந்து அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

-எஸ். எல். எம். ஹனீபா

Thanks - Kalachchuvadu

Tuesday, October 13, 2015

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தைக் கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருதுகள்




நயன்தாரா சகல்
நயன்தாரா சகல்





ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கு நீதி மறுப்பு,  தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத விடம், எழுத்தாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளின் போது சாகித்திய அகாடமி கடைபிடிக்கும் புதிர் மவுனம் ஆகியவற்றை கேள்வி கேட்டிருக்கிறார், சகல். ‘சீரழிக்கப்படும் இந்தியா’ என்று தலைப்பிட்டு எழுதிய திறந்த மடலில் தனது நடவடிக்கை,  “இந்துத்துவத்துடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.



அசோக் வாஜ்பாயி
     இந்திகவிஞர் அசோக் வாஜ்பாயி


                  


‘Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக செகல் 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை பெற்றார். அவருடைய வயது இப்போது 88. நயன்தாரா சகலை தொடர்ந்து இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். நயன்தாரா சகலின் கருத்துக்களை அப்படியே வழிமொழிந்துள்ளார். லலித் கலா அகாடமியின் தலைமை பொறுப்பை அசோக் வாஜ்பாயி முன்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை’ என்று கேட்கிறார். சாகித்திய அகாடமியின் மவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார், அசோக் வாஜ்பாயி.


உதய் பிரகாஷ்
 இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்

கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார். ”ஒரு விருதை தந்து விட்டு எழுத்தாளர்களை மறந்து விடுகிறது, சாகித்தியஅகாடமி. ஒரு கொலை நடக்கும் போது ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்க முன்வராத சாகித்திய அகாடமியின் விருது எதற்கு” என்று கேட்டார், உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.


கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே

இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் – கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே



கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. படைப்பு அவஸ்தையை மீறிய ஒரு வலியை அவர்கள் பகிர்கிறார்கள். நயன்தாரா சகலின் எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுபவை. எனினும் அவரால் தாத்ரியின் அடித்தட்டு முஸ்லிம் ஒருவர் சந்தித்த பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற முடிகிறது. ஆனால், இதற்கு மாறான நிலை தமிழக எழுத்து சூழலில் நிலவுகிறது.



வைரமுத்து 
 


அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், 
சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ டி க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் என்று ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது வாங்கியோரின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாகித்திய அகாடமி விருது வாங்காத எழுத்தாளர்கள் சிலர், கண்டனங்களையாவது பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ? தாத்ரியின் ஓலம் தமிழகத்தில் உள்வாங்க நாதியற்று அலைகிறது. அது ஒவ்வொரு கணமும் இவர்கள் கல்நெஞ்சில் மோதி செல்ல வேண்டும்.


தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் அரசியல் கண்ணோட்டத்தை வகை பிரிப்பது எளிது. அவர்கள் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவர்கள் — முதல் வகையினர் இந்துத்துவவாதிகள். இரண்டாம் வகையினர் பிழைப்புவாதிகள். வைரமுத்து, ஜோ டி க்ரூஸ் ஆகியோர்களின் தேய்மானம் பிழைப்புவாதம் இந்துத்துவத்துடன் கலக்கும் புள்ளியை சுட்டுகிறது.


எழுத்தாளர்களின் அரசியல் ஆதரவை எதிர்பார்த்து தனது முதிய வயதில் காத்திருக்கிறார் நயன்தாரா செகல். தமிழ் எழுத்தாளர்களோ தங்கள் விருதுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறியர்களோ அடுத்த குறியை தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள்.

– சம்புகன்

Thanks : Vinavu

Wednesday, October 7, 2015

சிறுகதை : யுக சந்தி?







ஸ் ஓரளவு காலியாத்தான் இருந்துது. ஆனாலும் கடசி வரிசையிலே ஜன்னலோரமா போய் உட்கார்ந்தேன். தனியா இருக்கணும்போல தோணிச்சுது. எதுக்கா? அழறதுக்குத்தான். ஆம்பளை அழலாமா? அதுவும் பட்டப்பகல்ல, நாலுபேர் ஏறி இறங்குற பஸ்ஸுல! குழப்பமாத்தான் இருக்கு. இப்போல்லாம் பொம்பளைங்களே லேசுல அழறது இல்லையே. சினிமாவுல கூட சிவாஜி, சிவகுமார் காலத்துக்கப்புறம் யாரும் பெருசா அழுதமாதிரி தெரியல. கமல் அழுவார்தான். இப்போ அவரும் குறைச்சுக்கிட்டார்தானே. குடும்பப்படம் பாபநாசத்திலே கூட நாயகன் மாதிரி மயில் அகவலாகவோ குணா மாதிரி குமுறி குமுறியோவோ அழலைதானே!

மத்தவங்க கதை எதுக்கு? நானே, ’அழுவேன்.. ஆனால் அழமாட்டேன்’ ரகம். குழப்புகிறேனா? உண்மை அதுதான். சினிமாவிலே நிழலான கதாபாத்திரங்களுக்காக சட்டென அழுதுடுற நான், நிஜத்திலே கல்லாட்டமா நிப்பேன். மரணமா இருந்தாலும்தான்! நாகர்கோவில் லக்ஷ்மி தியேட்டர்லயும் பயோனியர் தியேட்டர்லயும் சிவாஜி கூடவும் சவுகார் கூடவும் சேர்ந்து புழிஞ்சு புழிஞ்சு அழுத நான், என் பத்தொன்பது வயசிலே அப்பா செத்தப்போ சொட்டு கண்ணீர் விடலை! இத்தனைக்கும் அப்பா தலைமாட்டிலேதான் நின்னுட்டிருந்தேன். துக்கம் விசாரிக்க வந்தவங்க சின்னதா கேவிக்கிட்டு சட்டுனு உடம்பை குலுக்கினப்போ தொண்டையை அடைக்கத்தான் செஞ்சுது. ஆனா என் கண்ணுல மட்டும் ஊஹும் தண்ணி வரவே இல்லை. அப்பாவுக்கும் எனக்கும் சுமுகமான உறவு இல்லாமத்தான் நான் அழலைன்னு பலரும் பேசிக்கிட்டதுலேயும் உண்மை இல்லாம இல்லை.

அப்பா என்னை புள்ளையா வளர்த்ததைவிட பந்தயக்குதிரையா நினைச்சதுதான் அதிகம்.. பார்க்கிறப்போல்லாம் விரட்டிக்கிட்டேதான் இருந்தார். அதெல்லாம் ’அக்கறை’ன்னு இப்ப இந்த அம்பது வயசுல நானும் ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அப்பாவானப்பறம் சொன்னாலும் அன்னைக்கு அதை அடக்குமுறையாத்தான் நினைச்சு வெறுத்தேன். அந்த வெறுப்பினாலே எப்பவுமே அவரோடு ஏட்டிக்கு போட்டி வெறைப்புத்தான். கடைசியிலே களைச்சுப்போய் தனியா கூப்பிட்டுப் பேசுவார்.

“எனக்கு மட்டும் உன்னை எப்பவுமே கண்டிக்கணும்னு ஆசையா என்ன? எல்லாம் ஒரு பயம்தான். நீ நல்லாத்தான் படிக்கிறே. ஆனா இதெல்லாம் பத்தாது. படிப்பைத் தவிர என்னால உனக்கு காசு பணம் சொத்துன்னு வேற எதுவும் தரமுடியாது. அதனாலத்தான் சொல்றேன். நீ எவ்வளவு வேணும்னாலும் படி. இன்னும் அதிகமா உழைக்கணும். இப்போ பண்ற மாதிரி எழு மணி வரை தூங்குறது.. எப்பப் பார்த்தாலும் ரேடியோவில பாட்டு கேக்கறது.. மாசம் தவறாம சினிமா பார்க்க அடம் பிடிக்கிறது எல்லாம் ரொம்ப தப்புப்பா.“

அப்போதும் நான் இளகாமல் இறுக்கமாகத்தான் இருப்பேன். கடைசியில் அந்த அஸ்திரத்தை எடுப்பார்.

“உனக்கு என் உடம்பு பிரச்சனை தெரியாது. நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கும் தெரியாது. என்மேலே இரக்கப்பட்டாவது கொஞ்சம் கூடுதலா ஒழுங்கையும் உழைப்பையும் கடைபிடி”

அந்த தழுதழுப்பான குரல் என்னை கலங்கடித்துவிடவே மவுனமாக
தலையாட்டி நகர்ந்து போய் புத்தகத்தை தூக்குவேன். எல்லாம் அந்த ஒரு ராத்திரி வரைதான். விடிஞ்சா பழைய குருடியாக என் தலையில் அவர் தண்ணீர் ஊற்றுவதும் நிமிராத வாலாக அவரை முறைச்சபடியே நான் எழுந்திருப்பதுமா பழைய வாழ்க்கைக்கே போயிருப்போம்.

ஆனால் அவர் உண்மையை மட்டும்தான் எப்போதும் சொல்லியிருக்கிறார்னு அவரது நாப்பத்தெட்டு வயசு அகால மரணம் உறுதி பண்ணிடுச்சி. அப்பாவை எடுக்கிற நேரத்திலே குனிந்து அவரது நெத்தியிலே முத்தமிட்டே அவரை வழியனுப்பினேன். அவ்வளவுதான். ’அவ்வளவேதான் எனக்கும் அப்பாவுக்குமான பந்தம்’ என ஊரும் உறவும் மட்டுமல்ல அம்மா, தங்கச்சிகளும் கூட நம்பியிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை.
அன்னையிலேர்ந்துதான் நான் அப்பாவாகவே உருமாறினேன்.. ஆனால் அப்பாவுக்கு நேர் எதிராக! என்ன மறுபடியும் குழப்புறேனா? அப்பா வாழ்க்கையை ஓர் அனுபவமா வாழாம ஒரு தவமாவே வாழ்ந்து போய்சேர்ந்தவர். முழுக்க தியாகமான வாழ்வு. ஓரளவு கைநிறைய சம்பாதிச்சாலும் மூணு செட்டுக்கு மேலே தனக்குன்னு நல்ல உடுப்பு வச்சுக்கிட்டது இல்லை.. ஒரு ஓட்டலுக்கு போய் டிபன் காபி சாப்பிட்டது இல்லை… ரேடியோ சினிமான்னு எந்த கேளிக்கையையும் சுகிச்சது இல்லை. அவரது அதிகபட்ச பொழுதுபோக்கே ’ஹிண்டு’ பேப்பர் மட்டும்தான். தனக்குன்னு எதையுமே ஆசைப்படாம தன்னோட குடும்பத்து நன்மைக்காக அவர் காட்டின அதே அக்கறையை நான் உள்வாங்கிக் கிட்டாலும்.. அதைச் செயல்படுத்தறதுல அப்படியே அவருக்கு நேர்மாறா நடக்கவே முடிவெடுத்தேன்.

குடும்பத்து மீதான அக்கறையை கோபம், கண்டிப்பு, தண்டனை மூலம்தான் வெளிப்படுத்தணும்னு சட்டம் ஒண்ணுமில்லையே! தானும் சிரிக்காம மத்தவங்களையும் சிரிக்க விடாம அப்படி ஒரு இறுக்கமான அன்பு பாசம் அக்கறை என்னத்துக்கு? காசு செலவில்லாமல் இயற்கையே கொடுத்த சின்ன சின்ன சுகங்களைக் கூட அவர் அனுபவிக்கலையே! ஸ்பரிச சுகம் எத்தனை பெரிய இன்பம்! பள்ளிக்கூடம் மாறின ஒன்பதாம் வகுப்பைத்தவிர மற்ற எல்லா வகுப்புகள்லயும் மாதாமாதம் முதல் ராங்க் எடுத்த ஒரு மகனின் தோள் தொடுற, கட்டி அணைக்கிற, முத்தமிடுகிற சுகங்கள் ஒண்ணையுமே அவர் அனுபவிக்கவில்லையே! அப்பா பிணத்தை தூக்குறப்போ நான் முத்தமிட்டதோட நோக்கம்கூட அப்பா வாசம் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கத்தானோ என்னவோ? அப்போதான் அந்த சபதம் எடுத்தேன், ‘எனக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறந்தால் எங்க முதல் ஸ்பரிசம் நிச்சயம் பிணத்தை முத்தமிடுகிற சோகமா இருக்கவே கூடாது’ன்னு! அதன்பிறகு நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

சொல், செயல், நடவடிக்கை எல்லாத்துலேயுமே அவருக்கு நேர் எதிரான அணுகுமுறைகளோட வாழ்ந்தேன் ; வாழறேன். கோவமா யார் கிட்டேயும் ஒரு வார்த்தை பேசத்தெரியாது. ’இது பிடிக்குது இது பிடிக்கலைன்னு’ தீர்த்து சொல்லத் தெரியாது. ரெண்டு தஙகச்சிங்களுக்கு அண்ணனா வளர்ந்தப்ப ஒருதடவைகூட கை நீட்டினதில்லை. சென்னையில வேலை கிடைச்சு குடும்பத்தை கூட்டிவந்ததும் , ஒரு வாரம் ஹோட்டல், ஒருவாரம் சினிமா, ஒருவாரம் நண்பர்கள் வீடு, ஒரு வாரம் மெரினா என்று வாரம் தவறாம அம்மாவை அழைச்சிட்டுப் போய்.. அப்பா கொடுக்காத சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் வாரி வாரி வழங்கினேன். அந்த சுதந்திரத்தையே தனக்கான அதிகாரமா மாத்தி என்னை அடக்கி ஆளத்தொடங்கினதோட, தங்கச்சிங்க கல்யாணத்துக்கான டவுரி பண்டமாற்று வியாபாரமா, எனக்கு கல்யாணம் பேசினபோது அந்தப் பொண்ணு முகத்தைக்கூட பார்க்காமத்தான் தாலி கட்டுனேன். இருவது வயசு வரைக்கும் பசங்களை அடிச்சுத்தான் வளர்க்கணும்னு சொல்லி சொல்லியே அடிச்ச அப்பாவின் பிள்ளையான நான் என் மகனை (இந்த பதினேழு வருடத்தில்) ஒரு தடவை கூட அடிச்சதும் இல்லை குட்டுனதும் இல்லை.

நீங்களே அதிசயப்படுற அளவு இப்படியெல்லாம் அநியாயத்துக்கு நல்லவனா இருந்தும் கடைசியிலே என் நிலைமையைப் பார்த்தீங்களா? திருச்சி – சென்னை பஸ்ஸின் கடைசி மூலையிலே உட்கார்ந்து அழவேண்டிய கதிகேடு!
ஒரு அப்பா செத்துப்போன குடும்பத்து மூத்த மகன் என்ன என்ன செய்யணுமோ அத்தனையையும் தப்பாமத்தான் செய்தேன். ஆனாலும் அதெல்லாம் பத்தாது அதுக்கும் மேலே பெருசா ஏதாவது எதிர்பார்த்தாங்களோ என்னவோ இன்னைக்குவரை அம்மா, தங்கச்சிங்களுக்கு அந்த நன்றியுணர்வு இல்லவே இல்லை. ஒருகட்டத்துல ’உங்க நன்றியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. நிம்மதியா வாழவிட்டா போதும்’னு நான் நொந்துக்கிறாப்பிலே கல்யாணமாகி தனிக்குடித்தனம் போன ரெண்டு தங்கச்சிங்களோ இல்லை ஒரு தங்கச்சியும் அம்மாவுமோ இல்லே மூணுபேருமாவோ அடிக்கடி முட்டிப்பாங்க. நாள்கணக்கு மாசக்கணக்கு தாண்டி வருசக்கணக்கா ஒருத்தொருக்கொருத்தர் பேச்சுவார்த்தைகூட இருக்காது. பலசமயம் பஞ்சாயத்து பண்ணப்போய் நான் பொல்லாதவனா பேரெடுத்து திரும்பியிருக்கேன்.

என்னை ரொக்கத்துக்கு விக்கிறாப்பிலே அம்மாவா தேடிக் கொண்டு வந்த என் மனைவியை அம்மாவுக்குத்தான் மொதல்ல புடிக்காமப் போச்சு. அண்ணி கொண்டு வந்த பணம் நகையை ஆதாரமா வச்சு ஆளுக்கொரு வீடு கட்டி முடிச்சப்பறம் தங்கச்சிகளுக்கும் அண்ணியைப் புடிக்காம போச்சு. ஆனாலும் ‘யார் எது சொன்னாலும் நீ வாயை திறக்காதே’ன்னு நான் சொன்னதை என் சம்சாரம் விதியே என்று கடைபிடிச்சது பெரிய ஆறுதல்தான்.
ஆனால் அம்மா? வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்கிற மூர்க்கத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக விசுவரூபம் எடுக்க ஆரம்பிச்சார். தையல் கற்றுக்கொள்கையில் நியூஸ்பேப்பரை வெட்டிப்பழகும் அதே சுவாரஸ்யத்தோடு உறவுகளையும் உணர்வுகளையும் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளினார். இருபது வருசங்களாக அப்பா போட்ட கோட்டுக்குள்ளே வாழ்ந்துபழகிய அம்மாவுக்கு, ’நல்லது செய்வதா நினைச்சு நான் கோடுங்களை அழிச்சது பெரும் வினையாவே போச்சுது. அப்படித்தான் சித்தி மகள் கல்யாணத்துக்காக நான் நாகர்கோவில் பொறப்பட்டப்போ.. “எங்கே பொறப்பட்டுட்டே? சித்தி வீட்டுக்கா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..” – என தடுத்தார்..

“திடீர்னு சித்தியோட பகைங்கறதால சித்தப்பா செஞ்ச உதவிகளை மறக்கலாமா? அப்பா செத்தப்போ ஆஸ்பத்திரிலேர்ந்து மயானம் மட்டும் அவர்தானேம்மா உதவி செஞ்சாரு. அந்த நன்றியை நினைக்க வேணாமா? “
“சொள்ளமாடன் இல்லேன்னா சுடலை மாடன்கிறாப்பிலே அவர் இல்லேன்னா இன்னொருத்தர் உதவி இருப்பாங்க. பெருசா சொல்ல வந்துட்டான். நீ ஆபிசுக்கு போற வழியைப் பார். என்னை மீறி ஊருக்குப்போனா நீ திரும்ப வர்றப்போ நான் வீட்டுல இருக்க மாட்டேன்”

அம்மாவின் அந்த ஒரே துருப்புச்சீட்டில் என் ஆட்டம் முற்றாக முடிந்துவிடும். ஆனாலும் ஒரு டிபிகல் இந்தியனாக தமிழனாக அம்மாவுக்கு தலையாட்டியேதான் வந்தேன். மனைவி பிள்ளைகளைப் பின் தள்ளிவிட்டு அம்மாவுக்கே முன்னுரிமை தந்தேன். அம்மா சொன்னார் என்று கடனுக்கு மேல் கடனாக வாங்கி சென்னைக்கும், என் தகுதிக்கும் பொருத்தமில்லாத பெரியவீடாகவே கட்டிமுடித்தேன்.

தவணை முறையில் காரும் வாங்கி நிறுத்தினேன். டிவி பார்க்கையில் பேரப்பிள்ளைகளை இடைஞ்சலாக கருதினாள் என்று இன்னொரு டிவியை அம்மா அறையிலேயே பொருத்தினேன். ஹாலில் இருந்த ஃபோனும் அறைக்குள் இடம்பெயர்ந்தது. ஆசைப்பட்டாள் என்று ஜன்னலை உடைத்து ஏசியும் மாட்டினேன். ஆனாலும் திருப்திப்பட்டாள் எனத் தோன்றவில்லை. வயது ஆக ஆக இறுக்கமான முகபாவத்துடன் தான் உண்டு தன் டிவி உண்டு என அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். சாப்பாடு கூட சீரியல் நடிகர்களோடுதான் என்றாகிப்போனது. சீரியல் நேரத்தில் யார் உள்ளே போனாலும் முகம் சுளித்தாள். சமயங்களில் கதவை அறைந்து சாத்தினாள்.
குறையில்லாத வாழ்வு சிலருக்கு வரம் சிலருக்கு சாபம்தானோ? அம்மாவின் எரிச்சல் குணம் கண்டு நானும் உறவாடலை குறைத்துக் கொண்டேன். அதனால்தானோ என்னவோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பிணங்கி இருந்த ரெண்டாவது மகளுடன் திடீரென் உறவை புதுப்பித்துக் கொண்டாள்.. போன்மூலமேதான்!

“உன் தங்கச்சிக்கும் எனக்குமான சண்டை தீர்ந்துடுச்சு.. அதனால மறுபடி அவளை வந்து போகச் சொல்லலாம்னு இருக்கேன்”

“தாராளமா வரட்டும் போகட்டும். ஆனா மறுபடி ரெண்டுபேரும் சண்டை போட மாட்டீங்கன்னு கியாரண்டி குடுக்க முடியுமா? “

“என்னைப் பார்க்க என் மவ வர்றதுக்கு உன் பர்மிஷன் வேணுமோ?”
சண்டைக்கு தயாரில்லாமல் நான் அலுவலகம் போய்ட்டேன். மாலையில் வீடு வந்தால் அதிர்ச்சி அம்மா வீட்டை விட்டு போய் விட்டாள். என்னால் நம்பவே முடியலை. அரக்கபரக்க தங்கச்சிகளுக்கு போன் போட்டால் அம்மா ஊருக்கே போய்விட்ட தகவல் கிடைச்சுது. ‘என்னதான் கோபம்னாலும் எதுக்கு ஊருக்கு போகணும்? உங்க கிட்டேயாவது வந்திருக்க வேண்டியதுதானே?’ங்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க முடியாது. ’எங்களாலயெல்லாம் அம்மாவை வச்சு பார்க்க முடியாது’ன்னு ஏற்கனவே பலதடவை சொல்லியிருந்தவங்க அவர்கள். மறுநாள் நாகர்கோவிலுக்கு போன் போட்டபோதுதான் அம்மா சித்தி வீட்டில் இருப்பது தெரியவந்துது. நான் உடனே வர்றேன்னு சொன்னதுக்கு
“வேணாம் வேணாம் அம்மா உன் மேலே ரொம்ப கோவமா இருக்காங்க.. ஒரு வாரம் கழிச்சு வந்தா போறும்’னு சித்தி சொன்னது நியாயமாகப் பட்டது.
அதான் நேத்தைக்கு பொறப்பட்டு இன்னைக்கு காலையிலே ஊருக்குப் போயிட்டேன். எப்பவுமே சிரிப்பும் குதூகலமுமாக நான் நுழையும் சித்தி வீடு முதன்முதலாக அன்னியமாகப் பட்டுது. அம்மா நடந்துகொண்டது அதை விட அதிர்ச்சியாக இருந்தது. கூடத்தில் டிவி பார்த்து கொண்டிருந்தவள் என்னை கண்டதுமே முகம் சுருக்கி உள்ளறைக்கு சென்று விட்டாள். பின்னாலேயே ”அம்மா அம்மா” என்று அழைத்தவாறே இயல்பாக நகர்ந்த என்னை சித்தப்பா வழிமறித்தார்.

வலுக்கட்டாயமாக இழுத்து பிரம்பு நாற்காலியில் இருத்தினார்.

“உன்னை யார் இப்ப வரச்சொன்னது? மைனிக்கு இன்னும் கோவம் தீரலைடா.."

“அந்த அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? திடீர் திடீர்னு சண்டைபோடறதும் திடீர் திடீர்னு ஒண்ணு சேர்றதும் தப்புன்னு சொன்னது உலகமகா குத்தமா? “

“குத்தமான்னு கேட்டா குத்தம்தான். ஏன்னா அம்மா வயசு அப்படி”

“ஏன் சித்தப்பா உங்களுக்கு என்னை தெரியாதா? என் தங்கச்சிங்க மாதிரி நான் எப்பவாவது அம்மா கிட்டே அவமரியாதையா நடந்திருப்பேனா?”

“நீ நல்லவன்தான்.. அதுக்காக அம்மாக்க போனை கட் பண்ணுனது நியாயமா?”
அதிர்ந்துபோய் விட்டேன். ”என்ன நான் போனை கட் பண்ணினேனா? என்ன சொல்றீங்க?”

“உங்கம்மா தங்கச்சி கூட பேசக்கூடாதுன்னுதானே போனை கட் பண்ணி வச்சே”

“யார் சொன்னாங்க?. நேத்தைக்கு நான் பொறப்படறப்போகூட போன் வந்துதே. அப்போ வேலை செய்யுதுன்னுதானே அர்த்தம்”

“அவன் என்ன முட்டாளாக்கப் பார்க்குறானா? போன் வரும் ஆனா கால் போகாது.. அப்படி கட் பண்ணி வச்சிருந்தான்” – அறையினுள்ளிருந்தே அம்மா குரல் வந்தபோதுதான் சட்டென புத்திக்கு எட்டியது, ’இந்தமாதம் இன்னும் பில் கட்டாதது’. அதன் விளைவாகத்தான் அவுட் கோயிங் மட்டும் துண்டிக்கப்பட்டிருக்கிறது போலும். விஷயத்தை விளக்கிச் சொல்லியும் சித்தப்பாவே நம்பத் தயாரில்லைங்கறப்போ அம்மா பத்தி சொல்லணுமா?
அம்மா இருந்த அறையை நெருங்கி தட்டிப்பார்த்து ஏமாந்தேன். மறுபடி தட்டுனதும் உள்ளிருந்து குரல் வந்த்து.

“என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா? நீ எனக்கு புள்ளையும் இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை”

விக்கித்துப்போனேன். அதுக்குமேல் அங்கே நிக்க திராணியில்லாம தேகம் நடுங்கிச்சுது. இறுக்கமான என் அப்பாவை பார்க்கறப்போல்லாம் சட்டுனு உடல்மொழியை மாத்தி மரியாதையும் பாசமும் காட்டின என் பாட்டி நினைவிலே வந்து போனாள். போன தலைமுறை இறுக்கத்தை தளர்த்தணும்னு புறப்பட்ட நான் தோத்துப்போன மகனா வெளியே வந்தேன். பஸ் நிலையம் நோக்கி நடந்தேன்.

சென்னைக்கு டிக்கட்டும் எடுத்த பிறகுதான் அந்த புதிய எண்ணம் வந்துது.

திருச்சியில் இறங்கி கல்லூரியில படிக்கும் மகனைப் பார்த்தா என்ன? பழைய தலைமுறை உண்டாக்கிய காயத்திற்கு புதிய தலைமுறை மருந்து பூசினா இதமா இருக்கும்தானே! கூடவே மகனைப் பார்த்தாகவேண்டிய நிர்பந்தமும் இருந்துது. நானும் எங்கப்பாவும் எலியும் பூனையும்னா, என் மகனும் நானும் நகமும் சதையும் மாதிரி! இப்போ மொதல் மொதலா நகச்சுத்தி வந்திருக்கு. அதிலும் சொந்த காசுல சூன்யம் வச்சுக்கிட்ட நிலைமை!

போனவருஷம் அவனது பதினெட்டாவது பிறந்தநாளை கொஞ்சம் அமர்க்களமாவே கொண்டாடினேன். ‘டொட்டடாய்ங்’ என பரிசை நீட்ட, பிரிச்சவன் அசந்தே போனான். பதினையாயிரம் ரூபாய் ஸ்மார்ட் ஃபோன்! ’பச்சக்’கென முத்தமிட்டான் போனை அல்ல என்னைத்தான்!
“தேங்க் யூ.. தேங்க்யூப்பா. இவ்வளவு காஸ்ட்லி போனா? நினைச்சே பார்க்கலை. பலதடவை கேட்க நினைச்சும் கார் கடனோட தவணை முடியலியேன்னு மனசை அடக்கிக்குவேன்”

அதுதாங்க என் புள்ளையோட ஸ்பெஷாலிட்டி! மத்த பிள்ளைகளைப் போல அதுவேணும் இது வேணும்னு கேக்கறதே இல்லை.

“இப்பவே பதினைய்யாயிரம் ரூபா போன்னா அண்ணனோட அடுத்த பிறந்த நாளைக்கு என்னப்பா குடுப்பீங்க?”- மகள் ஆர்வமா கேட்டா.

“அதை இப்பவே சொல்லலாமா? சரி சொல்றேன்.. அதை நினைச்சாவது இன்னும் நல்லா படிக்கட்டும். அடுத்த வருஷம் ஆப்பிள் லேப்டாப்”

“ஹைய்யா அப்போ அண்ணனோட டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் எனக்கு.. “

“நிஜமாவே மேக் வாங்கி தருவீங்களா? ஐம்பது அறுபதாயிரம் ஆகும்பா”

“அதுக்குன்னு ஒரு சீட்டு போட்டா போச்சு”

மறுபடியும் ஒரு பச்சக் தந்தான். அன்னைக்கு ராத்திரி திருச்சிக்கு கிளம்பறதுக்கு முன்னால அவன் என்னை இறுக்கி கட்டி அணைச்சப்போ மனசு நிறைஞ்சு போச்சு. ஆனா அப்போ உத்தரத்துல விதி சிரிச்சதை நான் பார்க்கவே இல்லை. இது நடந்து பத்து மாசம் ஆகுது.

முந்தா நாள் அம்மா பஞ்சாயத்துக்காக நாகர்கோவில் பஸ் பிடிக்க காத்திருந்த சமயம் பையன் போன் வந்துது.

“சீக்கிரம் சொல்லுப்பா அவசரமா ஊருக்கு பொறப்பட்டுட்டு இருக்கேன்”

“அப்பா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.. இன்னும் ரெண்டு மாசத்திலே என் பொறந்தநாள் வருதுல்லே..”

“ம்..”

“இந்த தடவை மேக் லேப்டாப் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்கள்ல”

“ம் சொல்லு”

“ரமேஷ் வினீத் எல்லாரும் புது பைக் வாங்கிட்டாங்கப்பா”

“அப்ப உனக்கு ரொம்ப வசதியா போச்சு. அவங்க கூடவே சுத்தலாம்.”

“இல்லப்பா நீங்கதான் சொன்னீங்கள்ல செகண்ட் இயர்ல தினமும் லைப்ரரிக்குப் போற பழக்கம் வேணும்னு.. ஹாஸ்டல்ல இருந்து லைப்ரரி ரொம்ப தூரம்னுதான் இன்னும் தொடங்காம இருக்கேன். அதனால லேப்டாப்புக்குப் பதில் பைக் வாங்கித் தந்திருங்கப்பா..”

“நீ பைக் கேட்டது லைப்ரரிக்கா? இல்லை உன் நண்பர்கள் வாங்கிட்டாங்கங்கிறதுக்காகவா? “

“ரெண்டும்தான்”

“ஆனா என் பதில் ஒண்ணுதான். இப்ப உனக்கு பைக் கிடையாது. உனக்கு எப்போ என்ன வாங்கித்தரணும் இந்த அப்பாவுக்கு தெரியும்”

“…”

“என்ன புரிஞ்சுதா? “

“……. “

அந்த மவுனத்தின் பின்னாலிருந்த மகனோட ஏக்கம் எனக்கு பிடிபட்டாலும் அப்போ சமாதானப்படுத்த நேரமில்லாம ஊருக்கு ஓடிப்போனேன். திரும்பறப்போ அம்மா தந்த காயத்துக்கு மருந்தா மகனது நினைவு மேலோங்கி வந்ததும் போன் போட்டேன். எடுக்கலை. பிறகுதான் வகுப்பு நேரத்தில் சைலண்ட் மோடில் அவன் போனை வைக்கறது ஞாபகம் வந்துது.

’சாயந்திரம் ஐந்து ஐந்தரை மணி அளவில் திருச்சி வருவேன் பஸ் ஸ்டாண்டில் சந்திக்கவும்’னு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். நேரில பார்த்த உடனே ’உன் இருபதாவது பிறந்தநாளைக்கு பைக் வாங்கித்தர்றேன்’னு வாக்குறுதி குடுக்க நினைச்சேன். அப்பவும் சமாதானமாகாம சிணுக்கமாக முகத்தை வைச்சா வேறவழியில்லாம ’சரி’ சொல்லணும்னு முடிவு பண்ணுனேன். என் அம்மா மாதிரி என்னாலதான் இறுக்கமா நடந்துக்க முடியாதே. பிள்ளை முகம் பார்த்தாலே உருகிடுவேனே! அவனும் அப்படிப்பட்டவன்தானே..

எனது மனசின் வேகம் புரிஞ்சுதானோ என்னவோ நாலரைக்கே திருச்சி போய்ச் சேர்ந்துட்டேன். . இறங்கிய கையோடு போனைப் போட்டேன். மணி அடிச்சுது.. ஆனால் எடுக்கலை. நாலு தடவை முயற்சி பண்ணிட்டு கடைசியில அறை நண்பன் அரவிந்துக்கு போன் போட்டேன். உடனே எடுத்தான்.

“அப்பா எப்படி இருக்கீங்க? “

“நான் நல்லா இருக்கேன். உன் ஃப்ரண்டு எங்கே? “

“இதோ இங்கேதானே இருக்கான்..”

“அப்புறம் ஏன் நான் போன் பண்ணி எடுக்கலை?”

“அப்படியா? இதோ நானே போனை குடுக்கிறேன்.”

போனின் மவுனத்தினூடே சில இழுபறி பேச்சு கசிந்தது.

“ஏதோ கோபம் போல. பேசமாட்டேங்கிறான்”

என் மகன்… என் ம..க..னா இப்படி பகிரங்கமாக கோபம் காட்டுகிறான்?. நம்பவே முடியலை.

அதீத ஹீனத்துடன் “நிஜமாவா? “ எனக்கேட்ட்தும் சட்டென உரத்த சத்தம் காதில அறைஞ்சுது.

”நான் தான் உங்க போனை எடுக்கலைலே அப்புறம் எதுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் போன் பண்ணி என்னை அசிங்கப்படுத்தணும்? யூ ஆர் நாட் எ குட் ஃபாதர். ஐ ஹேட் யூ டாட்”

என்னால நம்பவே முடியலைங்க. என் பையனிடமிருந்து அப்படி ஒரு எதிர்மறையை நான் எதிர்பார்க்கவே இல்லை. மேற்கொண்டு என்ன செய்வதுன்னு தெரியாம திணறி நிக்கிறபோதான் காலியாக கிளம்பின இந்த பஸ்ஸோட கண்டக்டர் டிரைவருக்கு விசில் கொடுத்தவாறே என் தோள் தொட்டு ‘சென்னையா?’ன்னு கேட்க மவுனமாக ஏறி உட்கார்ந்துட்டேன்.

இன்னமும் நம்பமுடியலை.. காலையிலே என்னைப் பெத்தவ அறைக்குள்ளே போய் கதவை அடைச்சு என்னை அவமானப்படுத்தினா.. சாயந்திரம் நான் பெத்தது அறையிலே ஒளிஞ்சுகிட்டு என்னை அசிங்கப்படுத்திடுச்சு. அதான் இந்த அழுகை! இப்படி ஜன்னல் ஓர சீட் பிடிச்சு அழுதா மட்டும் தீர்ந்துரக்கூடிய வேதனையா என் சோகம்? எங்கப்பா மாதிரி வீட்டை மிலிட்டரி கேம்ப் ஆக்க வேணாம்னு அதிக சுதந்திரம் கொடுத்ததுக்கான தண்டனையை அம்மா தந்துட்டாங்க. ஸ்கூல் ஹெட்மாஸ்டரா எங்கப்பா என்கிட்டே பழகின மாதிரி இல்லாம தோள்ல கைபோட்டு ஏ ஜோக் சொல்லுற ஃப்ரண்டுபோல அதிக சுவாதீனம் கொடுத்து பழகினதுக்கான பரிசை என் மகனும் கொடுத்திட்டான். ரெண்டு தலைமுறைகளை இணைக்கிற பாலமா என்னை நான் கற்பனை பண்ணிக்கிட்டதுக்கு இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து என்னையே புல்டோசர் வச்சு சாய்ச்சுட்டாங்களே! ஒரே நாள்ல என்னைப் பெத்த தாயாலயும் நான் பெத்த மகனாலுமா உதாசீனத்துக்காளாகி இப்படி நடுத்தெருவு.. இல்லை இல்லை நடுரோட்டிலே பஸ்லே அழுதுட்டே போக வச்சிட்டாங்களே! இருட்டு அருகில் ஆளுங்களும் இல்லைங்கறதால கண்ணீர் பொங்கி பொங்கி வழியற சமயம்.. சட்டுனு விளக்குங்க எரிஞ்சதும் வெளிச்சத்தில் அதிர்ந்துபோய் கையால முகத்தை துடைச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்காக வண்டி நிறுத்தப்படப்போற முஸ்தீபு. வேகம் குறைச்சு இருட்டுல ஓடுற வண்டியின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். ’நான் எந்த இடத்தில் இருக்கிறேன்’னு என்னால அனுமானிக்க முடியவிலை. சாலையிலே மட்டுமில்லே வாழ்க்கையிலும்தான்!


 -முகம்மது ஐஷ்வர்யன்