Friday, June 22, 2012

யார்...? & யார்...?





யூகித்துப் பாருங்கள்!











நண்பர்களே!

கீழே தரப்பட்டிருப்பதை சற்றுப்படித்துப் பாருங்கள். இது, இந்திய தமிழ் சினிமாவிலே தத்தம் துறையிலே மங்காப்புகழுடன் இன்னும் இருந்துவரும் இரு பெரிய நட்சத்திரக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

ஒரு கலைஞரைப் பற்றி மற்றொரு கலைஞர் கூறியிருக்கும் ஒரு குறிப்பு இது. நீங்கள் இலகுவிலே கண்டுபிடித்துவிடாதிருப்பதற்காக மட்டும் ஓரிரு சொற்களை மட்டும் மாற்றியிருக்கின்றேன்.

இவர்கள் இருவரும் யார், யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம். முடியாது போனால் அல்லது விடையைச் சரிபார்க்க நினைத்தால் அடியிலே தருகின்றேன் பின்பு சாவகாசமாய் பார்த்துக்கொள்ளலாம்.



அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தெரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் அவராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் அவர் நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
..............................???






இவர்களில் யார்?











 இவர்களில் யார்?

இவர்களில் யார்?



 இவர்களில் யார்?



















இவர்களில் யார்?







சரி, உங்கள் பொறுமையைச் சோதித்து போதும். இதோ விடை:


"அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் இளையராஜாவாக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் இளையராஜா நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
கமல்ஹாசன்"




- 'Mutur'  Mohammed Rafi

No comments:

Post a Comment