Tuesday, May 29, 2012

சச்சின் டெண்டுல்கர் & சாலமன் பாப்பையா ...!








 Just for a Change!






சச்சின் டெண்டுல்கர் பட்டிமன்ற நடுவராகித் தீர்ப்புக் கூற சாலமன் பாப்பையா  bat  பிடித்து கிரிக்கட் ஆடினால் எப்படியிருக்கும்? நினைக்கவே வேடிக்கையாக இருக்கின்றதல்லவா...?

பார்த்துப் பழகிய கண்களுக்கு சிறு மாறுதல்கள் கூடப் பெரிதாகத்தானே தோன்றும்.


ஒரு குறிப்பிட்ட துறையிலே மிகுபுகழோடும் வெகுபரபரப்பாகவும் இருப்பவர்கள் அதனுடன் சிறிதும் சம்பந்தமில்லாத இன்னொரு துறையிலே ஆர்வமும் ஞானமும் இருந்தால் என்ன செய்வார்கள்...?

வேறு என்ன செய்வார்கள்? கவிதை எழுதுவார்கள்!
Ok..ok!  புகழின் உச்சியிலிருக்கும் ஒருவர் எழுதிய கவிதை இது.


வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்....





-'Mutur' Mohd. Rafi


Here you are...










"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து

வெட்கத்தில் புன்னகைத்து..

கடற்கரையில் காற்றுவாங்கி..

கைபிடித்துப் பரவசமாய் நடந்து..

கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு..

கைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி...

கண்களால் பேசிச்சிரித்து...

கால்கடுக்கக் காத்திருந்து...

காதுபிடித்து மெல்லத்திருகி...

கண்ணீரோடு கட்டியணைத்து..

கண்பொத்தி விளையாடி..

இடிக்குப்பயந்து தோளில் சாய்ந்து..

செல்லமாய் நெஞ்சில் சாய்ந்து...

பேசாமல் இருந்து தவிக்கவிட்டு...

கோயில்சுற்றி குளம்சுற்றி...

மழைரசித்து நனைகையில்...

துப்பட்டாவில் குடைவிரித்து...

புத்தகத்தில் கடிதம் மறைத்து...

மணிக்கணக்கில் தொலைபேசி..

அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி..

'அவர் ரொம்ப நல்லவர்மா' என

அழுதுபுலம்பி அம்மாவிடம் சொல்லி...

ஒருவழியாய் வெற்றிகொள்கின்ற

காதல் திருமணங்கள்போல

இனிப்பதில்லை-

இன்டர்நெட்டில் தேடியலைந்து

பத்துக்குப்பத்து பொருத்தம் பார்த்து

பண்ணுகின்ற திருமணங்கள்!


-கமல்ஹாஸன்

No comments:

Post a Comment