Thursday, March 29, 2012

கவிதை





வாழ்க்கை 





ழகுதான் வாழ்க்கை என்றால்
பூக்கள் மட்டும் போதும் இங்கு



அன்புதான்
வாழ்க்கை என்றால்
தாய்மட்டும்
தாராளமாய்ப் போதும்



கல்விதான்
வாழ்க்கை என்றால்
நல்ல புத்தகங்களில்
நனைந்தாலே போதும்



காசுதான்
வாழ்க்கை என்றால்
வரவுமிக்க
வழிமுறை ஒன்றைத்
தெரிந்தாலே போதும்



நட்புதான்
வாழ்க்கை என்றால்
நம்மைப்புரிந்த
நல்ல நண்பர்கள் நம்மோடு
இருந்தாலே போதும்



இன்னும்
அரசியல்தான்
வாழ்க்கை என்றால்
வாக்குப்போடும்
வல்லமை மிக்க
கூட்டம் ஒன்று
இருந்தால் போதும்



ஆனால்...
வாழ்க்கை என்பது
ஏக்கத்துடன் நின்று
நாட்களை எண்ணி
தூரம் அறிந்து
துயரம் அறிந்து
வாங்கிக்கொடுத்து
முரண்பட்டு
பின் உடன்பட்டு
தர்க்கித்து
தகவல் அறிந்து
நொந்து நூலாகி
பின் அமிழ்ந்து போகிறோமே!


-எஸ். முபீனா,  திருகோணமலை

(நன்றி:மல்லிகை மார்ச் 2012)

No comments:

Post a Comment