Monday, December 12, 2011

பரீட்சை!





ன்று (2011.12.12)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் -G.C.E.(O/L)- பரீட்சைக்குத் தோற்றும்  சகல பாடசாலை மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தப் பரீட்சையை முதற்தடவையாகத் தோற்றும் மாணவர்களுக்கு ஒரு வார்த்தை உங்கள் பாடசாலை வாழ்விலே ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பிறகு நீங்கள் சந்திக்கும் முதலாவது அரசாங்கப் பரீட்சை இது.

  உங்கள்  சொந்த இடங்களிலும் பழகிய பாடசாலையிலுமே நடைபெறுவதால் எதுவித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் எழுதுங்கள். இதுவரை காலமும் பாடசாலைகளில் நீங்கள் சந்தித்த பரீட்சைகளில் போலன்றி சில வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள்.

1. அடையாள அட்டை பரிசீலிப்பு
2. அனுமதி அட்டைகளில் கையெழுத்திடுதல்


ஆகிய விடயங்களை முன்கூட்டியே ஆசிரியர்கள் அல்லது பரீட்சை அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. 


முதல்நாள் பரீட்சையின் போது தவிர பின்பு இவையெல்லாம் பழகிவிடும். இம்முறை பரீட்சைத் திணைக்களம் மிகச்சரியாக முதல்நாளில் கடினமான பாடங்கள் இல்லாமல் நன்கு பரிச்சயமான சமயப்பாடங்களை வைத்திருப்பது  ஒரு சிறந்த முடிவு.


இந்தப் பரீட்சை தொடர்பாக ஆசிரியர்கள் வழிகாட்டியிருப்பார்கள். அவற்றோடு இவற்றையும் தெரிந்த கொள்ளுங்கள்- தேவையெனில்.


• வீட்டிலிருந்து அல்லது தங்குமிடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே அடையாள அட்டை அனுமதி அட்டை உங்கள் வசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


• குறைந்தது தேர்வு ஆரம்பிக்கும் நேரத்திற்கு அரைமணி முன்கூட்டியே பரீட்சை மண்டபத்துக்குச் சென்று விடுங்கள்.


• பரீட்சைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் நீங்களே உங்கள் வசம் வைத்திருங்கள்.


• வினாத்தாள்களை நன்கு வாசித்து அறிவுறுத்தல்களை தெளிவாக விளங்கிக் கொண்ட பின்னரே விடைகளை எழுதத் தயாராகுங்கள்.


• பொருத்தமில்லாத மேசைகள் நாற்காலிகள் குறைவான ஒளிச்செறிவு மழை காரணமாக வரும் தூவானச் சாரல் ஆகிய இடையூறுகள் இருந்தால் உங்கள் மேற்பார்வையாளர்களிடம் தயக்கமின்றித் தெரிவித்து மாற்று ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதிலும் கணிதம் போன்ற பாடங்களுக்கு நேரம் மிகவும் முதன்மையானது என்பதால் இவ்விடயத்தில் அவதானமாக இருங்கள்.


இனியென்ன இளம் கன்றுகளே பயமறியாமல் ஜமாயுங்கள்!

-Jesslya Jessly

No comments:

Post a Comment