Tuesday, December 13, 2011

சுதந்திரம் 27 & டைட்டானிக் 1




வயது வித்தியாசம் 100 ஆண்டுகள்!


2011












1911










மேலேயுள்ள இரு புகைப்படங்களையும் பாருங்கள்.


இவை இரண்டிற்குமிடையில் ஒரு ஒற்றுமையும் 100 வித்தியாசமும் (வித்தியாசங்களல்ல!) உண்டு. ஒற்றுமை என்ன தெரியுமா? இவை இரண்டும் எடுக்கப்பட்டது ஒரே இடத்தில்தான்.


ஆம்!  திருகோணமலை நகரின்  நகரசபை (Urban Council), வாடிவீடு (Rest Hose), புனித மரியாள் கல்லூரி (St. Mary's College) ஆகிய இருக்கும் முச்சந்தியில் வைத்து வாடிவீடு புனித மரியாள் கல்லூரி ஆகியவை தெரியும் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் ஆகும்.  இவை இரண்டிற்கும் இடையேயான காலவித்தியாசம் ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே.


வெறும் 100 வருடங்கள்தான்!


இடது புறமாக இருக்கும் படம் 1911ம் ஆண்டில் அதாவது நமது இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் வழங்கப்படுவதற்குச் சரியாக 27 வருடங்களுக்கு முன்பு இன்னும் சொல்லப்போனால் பிரபல டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் திருகோணமலையில் மிகவும் செல்வாக்குடன் இருந்தவராகக் கூறப்படும் அப்துல் ரசூல் எனும் பிரமுகரால் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் புகைப்படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள்.

வலது புறமிருக்கும் புகைப்படம் இந்த வருடம் அதாவது 2011ம் ஆண்டு,  1911 புகைப்படம் எந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதோ கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்தது இன்னும் சரிவரப் பிரபலமாகாதவரும் ஒருவேளை தப்பித்தவறிப் பிரபலமாகி விட்டால் அதனால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுமே என்று கவலைப்படும் ஒருவருமாகும்.


அவர் வேறு யாருமல்ல அடியேன்தான்!

 -மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment