Monday, April 1, 2013

பொதுபல சேனாவுக்கு பகிரங்க ஆதரவு

 


கடந்த March10ம் திகதி ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


 
-Jesslya Jessly


க்கள் மீதுள்ள அக்கறைத் தளத்தில் தீங்கற்ற செயற்பாடு போல் தென்பட்டாலும், சர்ச்சைக்குரிய நகர்வொன்றை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த 9ம் திகதி மேற்கொண்டிருப்பது பல்வேறு மட்டங்களில் ஊகங்களை ஏற்படுத்தி விட்டுள்ளது,

கடந்த மார்ச் 09, சனிக்கிழமை ஜனாதிபதியின் சகோதரரும், தற்போது இலங்கையில் இரண்டாவது பலம் வாய்ந்த நபராக குரிப்பிடப்படுபவருமான கோட்டபாய இனவாதப் பாசிச அமைப்பான, பௌத்த சக்திப் படை எனும் பொருள்படும் பொது பல சேனாவுடன் தொடர்புடைய அமைப்பொன்றின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அதன் கட்டடத்தை திறந்துவைத்தார்.

தென் மாகாணத்தின் தலைநகரான காலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ பயிற்சியகத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். வரலாற்றில் றுஹுண என அறியப்படுகின்ற தெற்குப் பிரதேசத்தின் வஞ்சவல பகுதியின் பிலன எனும் இடத்தில் இந்தப் பயிற்சியகத்தின் கட்டடம் கவர்ச்சிகரமான சுற்றயல் பகுதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

குறித்த பயிற்சியகம் தமது அங்கத்தவர்களான பிக்குகளினதும், பௌத்த தலைவர்களினதும், பௌத்த ஆர்வலர்களான இளைஞர்களினதும் தலைமைத்துவ தரத்தை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக பொது பல சேனா குறிப்பிடுகிறது. மேலும் ஏதிர்காலத்தில் இப்பயிற்சியகம் முழு வசதிகளும் கொண்ட பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

இந்த ஆரம்ப விழாவுக்கு வண. பள்ளத்தற சுமணஜோதி மகாநாயக தேரோ தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றியவர்களுள் “மெத் செவன” என பெயர்சூட்டப்பட்டுள்ள குறித்த பயிற்சியகத்தின் தலைவர் வண. எம்பிலிப்பிடிய விஜித தேரோ மற்றும் பொது பல சேனாவின் செயலாளர் நாயகம் வண. கலபொட அத்தே ஞானசார தேரோ ஆகியோர் முக்கியமானவர்களாகும்.

சாதாரண நிலைமைகளின் கீழ் இவ்வாறான உயர்தரமான நோக்கங்களையும் இலக்குகளையும் கொண்ட பயிற்சியகம் ஒன்றை திறந்துவைப்பது எவ்வித தவறுமற்றதாகவே நோக்கப்படக்கூடியது. எனினும் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு செய்வது மற்றும் பொது பல சேனாவுக்கு அவர் மறைமுகமாக ஆதரவு வழங்கிவருவதாக ஏற்கெனெவே சந்தேகங்களும் இதன் பின்விளைவுகள் தொடர்பான அச்சங்களும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருப்பது சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கிறது.

உரை

இந்த விடயம் திறப்பு விழா உரையின் பொது கோட்டபாயவினாலேயே வெளியிடப்பட்டது.

இந்த உரையின் போது கோட்டபாய “பலர் என்னை இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட போதும் இந்நிகழ்வின் காலம் சார்ந்த முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு நான் கலத்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும் “இந்த பௌத்த மதகுருமார் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, யாரும் பயப்படவோ சந்தேகப்படவோ கூடாத வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றும் அவர் சொன்னார்.

பாதுகாப்புச் செயலாளரின் பொது பல சேனாவினை பெருமையாக போற்றும் வண்ணமான மேற்குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும், இந்நிகழ்வில் தான் பங்குபற்றுவதில் பலருக்கும் ஆட்சேபணை இருந்ததை அவர் குறிப்பிட்டதும் இந்நிகழ்வினதும் பொது பல சேனாவின் செயற்பாடுகளின் பின்னணியிலும் மறைமுகமாக நிலவியதாக சந்தேகிக்கப்பட்ட உயர்மட்ட செல்வாக்குகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டவிதமாகவே அமைந்தன.

பொது பல சேனாவின் நடவடிக்கைகளே பலர் ஆட்சேபணை தெரிவிக்க காரணமாய் இருந்தன என்பது வெளிப்படை. ஏனெனில் முந்திய ஊடகச் செய்திகள் கோட்டபாய ராஜபக்ஷ காலியில் பொது பல சேனா தலைமையகத் திறப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாகவே தெரிவித்திருந்தன.

பொது பல சேனாவைத் தோற்றுவித்து அதன் தலைவர்களாக இயங்குவோர் பௌத்த மதகுருக்களான வண. கிரம விமலஜோதி தேரோ மற்றும் வண. கலபொட அத்தே ஞானசார தேரோ ஆகியோராகும்

நெதிமல

விமல ஜோதி தேரர் தெஹிவள நெதிமலவில் அமைந்துள்ள பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளராகவும் இருக்கிறார். காலியில் திறக்கப்பட்ட மெத் செவன கட்டிடத் தொகுதி உண்மையில் நெதிமல நிலையத்துடன் இணைக்கப்பட்ட கல்வி மற்றும் கலாசார நிலையமாகவே திட்டமிடப்பட்டிருந்தது எனினும் பின்னர் விமலஜோதி தேரர் இதை பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ பயிற்சியகமாக மாற்றியமைத்தார். இரண்டு அமைப்புகளுக்கும் பொறுப்பானவராக அவரே இருந்தது இதைச் சாத்தியமாக்கிற்று

அத்துடன் காலியில் திறக்கப்பட்ட மெத் செவன கட்டிடத் தொகுதி ஜேர்மன் நாட்டவர் ஒருவரால் நெதிமல பௌத்த கலாசார நிலையத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஜேர்மன் நாட்டவரே தற்போது பொது பல சேனா பயிற்சியகமாக மாற்றப்பட்ட வீடு மட்டும் நிலம் அடங்கிய சொத்தின் முந்தைய உரிமையாளர் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மை எனின் நெதிமல நிலையத்தின் இணைப்பு நிலையமாக அமைக்கப்பட இருந்த மேற்படி கட்டிடத்தொகுதியை பொது பல சேனா பயிற்சியகமாக மாற்ற அவர் சம்மதித்தாரா? என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. எவ்வாறெனினும் குறித்த ஜேர்மன் நாட்டவர் திறப்புவிழாவின் பொது பிரசன்னமாகி இருந்தார் எனினும் நிகழ்ச்சியின் முதல் மரியாதை அவருக்கன்றி கோட்டபாய ராஜபக்ஷவுக்கே வழங்கப்பட்டது.

இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் பொது பல சேனா எவ்வித வெளிநாட்டு நிதியையும் பெறவில்லை என பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்த விமலஜோதி தேரர் திறப்பு விழாவின் போது இந்த நிலையத்துக்கான நிதியை ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நலன்விரும்பி வழங்கியிருந்தார் எனக் கூறியதாகும்.

சிலோன் டுடேயின் ரங்க ஜயசூரியவுக்கு வழங்கிய செவ்வியின் போது விமலஜோதி தேரர் “நாங்கள் யாரிடமிருந்தும் ஒரு செப்புச் சதத்தையாவது பெறவில்லை என என்னால் புத்தர் சிலைக்கு முன்னால் வேண்டுமென்றாலும் சத்தியம் செய்ய முடியும். இந்த விடயத்ஹ்டில் நாங்கள் பொய் சொல்கிறோம் என்று யாராவது நிரூபித்தால், நாங்கள் எமது அமைப்பை (பொது பல சேனாவை) அடுத்த நாளே மூடிவிடத் தயார்” எண்று கூறியிருந்தார்.

பொது பல சேனாவின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியால்தான் அதன் முக்கிய நிகழ்வொன்றில் கோட்டபாய பங்கெடுப்பது ஒரு பிரச்சினையாக நோக்கப்பட்டது.

பாரதூரமான விளைவுகள் / நடவடிக்கைகள்

அண்மைக்காலமாக பொது பல சேனா இலங்கையின் மத வழி சிறுபான்மையினருக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நச்சுக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சார நடத்திவருவது தொடர்பில் செய்திகளில் அதிகம் இடம்பெற்று வருகிறது

பொது பல சேனா நிர்வாகிகளின் மறுப்புகளைத் தாண்டி அவ்வமைப்பு பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புதிய பாசிச அமைப்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அடையாளப்படுத்தப்பட அதன் நடவடிக்கைகள் துணைபோயுள்ளன.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவும் வேறு சில குழுக்களும் ஒருங்கிணைந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரமானது சர்வதேச ரீதியாக பல தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் நாட்டுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தி வரும் சேதங்கள் நாட்டுக்கு வெளியிலிருந்து இயங்கும் தீய சக்தி இந்நடவடிக்கைகளுக்கு பின்னல் இருக்குமோ என்ற சந்தேகத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. தெளிவான ஆதாரங்கள் இல்லை எனினும் சிலர் இஸ்ரேலின் மரிவான உதவிகள் இதற்கு பின்னணியில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

பொது பல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனிக்கத்தக்க மற்றுமோர் முக்கிய விடயம் யாதெனில், அதன் வெளிப்படையாகவும், பெரும்பான்மையினரின் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும், தெளிவான நோக்கத்தைக் கொண்டவையுமாக மேற்கொள்ளப்படும் அதன் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளை தடுப்பதில் ராஜபக்ஷ அரசு கவனமற்றிருப்பதாகும். இது வெளிப்படையாகவே புலப்படுகிறது.

பிரச்சாரம்

அடிக்கடி பௌத்த – முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிய அறிவிப்புகள் விடுக்கப்பட்டும் அதை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக தெளிவற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் வந்தன எனினும் பொது பல சேனாவைக் குறிப்பிட்டு இவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. முஸ்லிம்களுக்கு அரசு ஒருபோதும் அவர்களுக்கு தீங்கு நேர அனுமதிக்காது என்ற உறுதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிரான சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவது தொடர்பில் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

முஸ்லிம் சமூகத் தலைவர்களும் பிரதிநிதிகளும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறையிட்ட போது, பொது பல சேனா மிகச் சிறிய ஆதரவு கொண்ட குழு என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அதை பௌத்தர்களிடம் பிரபலப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக ஆகி விடும் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது.

17.02.2013 அன்று மஹரகமயில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர் விடுக்கப்பட்ட பொது பல சேனாவை தடைசெய்யும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மஹரகம எதிர்ப்பு நடவடிக்கையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டது மஹிந்தவினதும் கோட்டபாயவினதும் பொது பல சேனா அதிக ஆதரவற்ற ஒரு சிறு குழு என்ற கருத்துகளைப் பொய்ப்பித்தது. அங்கு சேர்ந்த கூட்டமும் அவர்கள் வெளிக்காட்டிய வெறுப்பான மனோநிலையும் பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை மக்கள் மத்தியில் விரைவாக பரவுவதை வெளிக்காட்டின.

உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும் பாஜபக்ஷ அரசு பொது பல சேனாவால் முன்வைக்கப்பட்ட அழுத்தமான கோரிக்கைகள் சிலதுக்கு இசைவாக நடந்து கொள்வதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் அண்மையில் அரசினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிரந்தர கருத்தடை முறைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகும்.

பொது பல சேனா மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை கடுமையாக எதிர்த்திருந்தது. இவற்றினால் சிங்கள பௌத்த சமுதாயத்தின் சனத்தொகை குறைவடைவதாகவும், முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சியடைவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது. சிங்கள பௌத்தர்களுக்கான “சிறிய குடும்பமே சிறந்தது” என்ற கருத்தடை ஊக்குவிப்பு சுலோகத்தை பொது பல சேனா குறித்து இலக்கு வைத்திருந்தது.

பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலான தீர்மானிப்பு நிலை

இங்கு தீர்மானிப்பு நிலையில் உள்ள முக்கிய விடயமாக பொது பல சேனாவின் நடவடிக்கைகள் மீது போலீசார் என்ன செய்கிறார்கள் ? என்பது அமைகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளையெல்லாம் உத்தரவிடப்பட்டபோது தகர்த்து எறிந்த பொலிசார், சிறுபான்மை இனம் ஒன்றையும் அதன் மார்க்கத்தையும் இலக்கு வைத்து ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடத்தப்படும் பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரலைக்கூட அசைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உச்ச நீதிமன்றத்துக்குள் செல்வதைத் தடுக்க முழு வலுவுடன் குவிக்கப்பட்ட சட்டத்தின் காவலர்களான காக்கி உடையினர், சமூகங்களுக்கிடையில் உறவைக் குலைக்கக்கூடிய பொது பல சேனாவின் நடவடிக்கைகளின் போது அவ்வியக்கத்தின் ஒட்டுக்குழு போன்று செயற்படுகின்றனர்.

அநேக சந்தர்ப்பங்களில் கோபமுற்ற பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்புகளிலிருந்து தங்களை பௌத்த செயற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்ளும் போது பல சேனாவுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலேயே பொலிசாரின் செயற்பாடுகள் அமைந்தன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் போது பொது பல சேனாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமான முறையில் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலேயே அமைந்திருந்தும், பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை முஸ்லிம்களை மாத்திரமின்றி, உலகளாவிய இஸ்லாமிய நம்பிக்கைக்கே கடுமையாக ஊறுவிளைவிக்கும் வகையிலான படங்கள், சுலோகங்கள் மற்றும் கொடும்பாவிகள் பாவிக்கப்பட்ட போதும் பொலிஸ் அசையவில்லை. பொது பல சேனா இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நிராகரித்து, குற்றச்சாட்டுகளை அவர்களை ஒத்த செயற்பாடுகளைச் செய்துவரும் ஏனைய அமைப்புகளின் மீது போட்டாலும், உண்மை பலருக்கு ஆதாரப்பூர்வமாக தெரிந்திருக்கிறது.

பொது பல சேனா மீது அதிருப்தியுற்ற பொலிஸ் அதிகாரிகள் நம்பிக்கைக்குரிய ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களிடம் பதிவுக்கு வராத வண்ணம் மேலிட உத்தரவு காரணமாக எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்று ஒத்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

சந்தேகம்

இவ்வாறாக நடந்துவரும் பிழைகள் ராஜபக்ஷ அரசால் கவனிப்பற்றும் நடவடிக்கைகள் அற்றும் விடப்படுவது, பொது பல சேனாவுக்கு அரசாங்கம் மறைமுகமாக ஊக்கமளிப்பது மட்டுமன்றி அனுசரணையும் வழங்குகிறதா? என்ற சந்தேகம் பரவ காரணமாக அமைகின்றன. அரசியலில் ஈடுபட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய போலன்றி, தாங்கள் அரசியில் ஈடுபடப் போவதில்லை என பொது பல சேனா கூறுகின்றது எனினும், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூரண ஆதரவை தாங்கள் வழங்குவதாக பொது பல சேனா உருதியளித்துள்ளதோடு, அவரது அரசை உண்மையான சிங்கள பௌத்த அரசு என்றும் அழைக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் ராஜபக்ஷ அரசு ஏன் இவ்வாறு ஒரு இனவாத மதவாத பாசிச அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று பல்வேறு ரகசிய அரசியல் சதிவேலை தொடர்பான கதைகள் உலாவுகின்றன.

இவற்றுள் முக்கியமானதாக பாதுகாப்புச் செயலாளரை முக்கியப்படுத்தி, முன்னாள் கஜபா படைப்பிரிவு வீரரும் பௌத்த மதத்தை ஆழமாகப் பின்பற்றுபவரும், சைவ உணவுப் பழக்கமும் உடைய இவர் பொது பல சேனாவை ஆதரிப்பது மாத்திரமன்றி பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள ரகசிய நிதியைப் பயன்படுத்தி இவ்வமைப்புக்கு நிதியுதவி அளித்து வருகிறார் என்பது அமைகின்றது.

முன்னர் குறிப்பிடப்பட்ட விமலஜோதி தேரரிடம் ரங்க ஜயசூரியவால் செய்யப்பட நேர்காணலில் இவ்விடயம் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.

பிரித்தெடுப்பு

கேள்வி: முந்தைய கேள்விக்கு மீண்டும் வருவோம். அரசாங்கம் உங்களது அமைப்புக்கு பின்னணியில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே ?

பதில்: அரசிடமிருந்து எமக்கு எவ்விதமான ஆதரவும் கிடைக்கவில்லை. சிறிதுகாலத்துக்கு முன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்புக்கு செல்ல ஜனாதிபதி அவர்கள் எமக்கு ஒரு வாகனத்தைக் கூட அனுப்பவில்லை.

கேள்வி: கோட்டபாய ராஜபக்ஷவிடமிருந்து கூடவா? அவர் ஒரு சிறந்த சிங்கள பௌத்தராயிற்றே?

பதில்: இல்லை, யாரிடமிருந்தும் நாங்கள் ஆதரவைப் பெறவில்லை என்று நான் உங்களுக்குச் சொன்னேன். பாதுகாப்புச் செயலாளரிடம் இருந்து நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. அவர் எங்களிடம் “ஹாமதுருமார்களே, தயவுசெய்து பிரச்சினையை உருவாக்க வேண்டாம்” என்று சொன்னார். நான் அவரிடம் நாங்கள் பிரச்சினையை உருவாக்குவதில்லை என்றும், அவரோ அரசில் உள்ளவர்களோ அதைப்பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் சொன்னேன்.

கேள்வி: நோர்வேயிடமிருந்து நீங்கள் நிதியுதவி பெறுவதாக சொல்லப்படுவது பற்றி…….

பதில்: சிலர் எங்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் பணம் தருவதாகவும், இன்னும் சிலர் எங்களுக்கு நோர்வே நிதியுதவி செய்வதாகவும் சொல்கின்றனர். நாங்கள் யாரிடம் இருந்தும் ஒரு செப்புச் சத்தத்தைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என என்னால் சத்தியம் செய்ய முடியும் – புத்த பெருமானின் சிலைக்கு முன்னால் கூட. இவ்விடயத்தில் நாங்கள் பொய் சொல்லுகிறோம் என யாராவது நிரூபித்தால், நாங்கள் மறுநாளே எமது அமைப்பை கலைத்துவிட தயாராக இருக்கிறோம். சம்புத்த ஜயந்தி மந்திரயவை புதுப்பிக்க பெறப்பட்ட கடன்களுக்காக நான் வங்கிகளுக்கு 240 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டியுள்ளது. எமது வேலைகளுக்காக எனது பௌத்த சன்க்ஸ்குருதிக மடையஸ்தானயவுக்கு சொந்தமான வாகனங்களே பாவிக்கப்படுகின்றன. நான் எழுதும் தம்ம புத்தகங்கள் பௌத்த பரோபகாரிகளின் நிதியுதவியுடன் அச்சிடப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் எந்த நிதியுதவியையும் பெறவில்லை என உறுதியாக கூறுகின்றீர்களா ?

பதில்: ஆம். அரசிடமிருந்தோ, எந்த வெளிநாட்டிடம் இருந்தோ, அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ நாங்கள் ஒரு செப்புச் சதத்தையேனும் பெறவில்லை. அங்கத்தவர்களைச் சேர்த்து அவர்களிடமிருந்து அங்கத்துவப் பணத்தை வசூலிக்கும் முயற்சியொன்றை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களையும் மதகுருமாரையும் உள்ளடக்கி 100,000 அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வது எமது திட்டமாகும்.

இணைப்புகள்

வலுவான மறுப்புகளையும் மீறி இலங்கை மக்களிடயே கோட்டபாய ராஜபக்ஷ – பொது பல சேனா இணைப்பை பற்றிய சந்தேகம் நிலைத்திருக்கிறது. இந்த சந்தேகம் ஊடகங்களால் எழுப்பப்பட்டிருக்கும் பொது பல சேனாவின் எழுச்சிக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பிருக்கும் எனும் உறுதியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுத்து மேலும் வலுப்பெற்றுள்ளது.

பொது பல சேனா போன்ற அமைப்புகளுடன் தொடர்பற்ற எந்த அரசும் அதை உறுதிப்படுத்த பகிரங்க அறிக்கையொன்றை விடுப்பது வழமையான செயற்பாடாகும். ஜனாதிபதியோ அரசாங்கமோ பொது பல சேனாவை அதன் முஸ்லிம் எதிர்ப்பு வேலைத்திட்டத்துக்காக பகிரங்கமாக விமர்சிப்பது சிறந்த செயற்பாடாக அமைந்திருக்கும்.

ஆனால் இவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் தற்போதைய அரசின் கீழ் அது இடம்பெறவும் போவதில்லை போன்றே தெரிகிறது.

அவ்வாறே பாதுகாப்புச் செயலாளரும் அவருக்கு உண்மையாகவே புதிய பாசிசவாத அமைப்பு எனக் கருதப்படும் பொது பல சேனாவுடன் தொடர்புகள் ஏதும் இல்லாதவிடத்து அதை உறுதிப்படுத்தி அவரது நிலையை தெளிவுபடுத்தி இருக்க முடியும்.

மாறாக அவர் பொது பல சேனாவின் தலைமைத்துவப் பயிற்சியகத்தை திறந்து வைத்ததனூடாக பகிரங்கமாக தன்னை பொது பல சேனாவுடன் இணைப்பு உள்ளவராக காட்டுவதையே தேர்வு செய்துள்ளார்.

மனோநிலை

இவ்வாறு செய்வதன் ஊடாக பொது பல சேனாவுடன் தனக்குள்ள இணைப்பை வெளிக்காட்ட தான் தயங்கவில்லை என்ற தெளிவான செய்தியை அவர் சொல்லியுள்ளார். பொது பல சேனா தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சாதகாமான கருத்துகள் அவ்வமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அவரது மனோநிலையை தெளிவாகக் காட்டுகின்றன. அவரது மேற்படி செயற்பாடுகளால், கோட்டபாய பொது பல சேனாவின் பிரச்சாரத்தை தான் ஏற்றுக்கொள்வதை வெளிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சரியாக ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் செயலாளரின் நகர்வு தொடர்பில் அவரது செயற்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்போரால் பல்வேறு நியாயப்படுத்தல்களும் காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோட்டபாய ராஜபக்ஷ தனது நடத்தைக்கு உண்மையான முறையில் பொது பல சேனா போன்ற அமைப்பு ஒன்றுடன் பகிரங்கமாக தன்னை இணைத்துக் காட்டிக் கொண்டார் எனக் கொண்டால், அவர் பொது பல சேனாவை எதிர்மறை அமைப்பாக பார்க்கவில்லை என்பதையும் தனது நம்பிக்கைகளுக்காக உறுதிபட நிற்பார் என்பதையுமே அவர் செயற்படுத்திக் காட்டியுள்ளார். சொற்களால் அன்றி செயற்பாட்டால் இதை வெளிக்காட்டியதன் ஊடாக அவர் குறித்த இனவாத மதவாத பாசிசத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த மரியாதையும் தான் அளிக்கவில்லை என்பதையும் அவர்களை தான் கருத்தில் கொள்ளவில்லை என்பதையுமே அவர் பகிரங்கமாக காட்டியுள்ளார்.

அவரது இந்த நடத்தைக்கு என்ன காரணம் இருப்பினும் அது கோட்டா – பொது பல சேனா இணைப்பு தொடர்பான சந்தேகங்களை வலுப்படுத்தியே விட்டுள்ளது. இதன் பிரதிபலிப்புகள் அவர் மீது மட்டுமல்ல அவரது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவர் தலைமை தாங்கும் அரசின் மீதும் மோசமாக ஏற்படும் என்பது உண்மையாகும்.

பொது பல சேனாவின் தலைமைத்துவப் பயிற்சியகத்தை திறந்துவைத்தது சிறியதொரு செயற்பாடாக தோன்றினாலும், இந்நடவடிக்கையின் பின்விளைவுகள் முள்ளிவாய்க்கால் வெற்றியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளைப் போலவே ஜெனீவா, வாஷிங்டன், லண்டன் மற்றும் புது டில்லியில் உணரப்படும் என்பது மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் .
-D.B.S. ஜெயராஜ் 
 Thanks :  தமிழாக்கம்: காத்தான்குடி இன்போ

Sunday, March 31, 2013

இலங்கை 2090 இல் முஸ்லிம் நாடாகும்?







* 2090 இல் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடாக மாறும்.


* தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.


 
* முஹம்மத் பின் காஸிம் இந்தியா வந்தவேளை, நாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தை தீயிட்டுக் கொழுத்தி, 5,000 பிக்குகளை கொன்றான்.

* மலேசியா, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவ பண ஆசையும் காமவெறியுமே காரணம்.

* புலிகளுக்கும் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

* எம்.எச்.முஹம்மத், ஹாபிஸ் நஸீர் அஹ்மத், பாகீர் மாகார், ஏ.ஸீ.எஸ் ஹமீட், ஹகீம், அஷ்ரப் ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதிகளாவர்.


* இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை இலங்கையிலிருந்து துரத்திய பிரேமதாச முஸ்லிம் அடிப்படைவாதிகளது சதியில் சிக்கியவராவார்.

* வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்திலும் கல்பிட்டியிலுமுள்ள சிங்களவர்களது சொத்துக்களைப் பிடித்துக் கொண்டார்கள்.

* இலங்கையிலுள்ள மத்ரஸாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிடப்பட்டவை

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சருமான சம்பிக ரணவகவின் கருத்துக்களாகும்.
 
 
அவரது  "அல்கைதா அல்ஜிஹாத்' என்ற தனது நூலில் மேலுள்ள கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
 
(அல்ஜிஹாத் அல்கைதா இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் பாட்டலி சம்பிக ரணவக) மேற்படி நூலிலிருந்து பெறப்பட்ட முக்கிய கருத்துக்களை பக்கங்களுடன் அவரது வார்த்தைகளிலேயே வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறோம். அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி எவ்வளவு மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை இதிலிருந்து புரியலாம். அவர் துவேஷம், பொறாமை, வைராக்கியம் , வெறி  என்பனவற்றை கக்குகிறார்.

 அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின்  பிரதானமான கருத்துக்கள் வருமாறு:

சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம் :

உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக், மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்)

தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அடிப்படைவாதக் குழுக்க ளுக்கு பண மற்றும் யுத்த உதவிகளைச் செய்யும் நாடாக ஈரானைக் காணலாம். அல்ஜீரியா, மொரோக்கோ, சிரியா, ஜோர்தான், லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கிறது. (பக்:78)

கடாபி இலங்கை வந்தவேளை முஸ்லிம்கள் அவருக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தனது பேரப்பிள்ளை இலங்கைக்கு வரும் போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று கூறினார். கடாபி மனதால் இஸ்லாமிய அடிப்படைவாதிதான். இலங்கையிலுள்ள சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் அமெரிக்காவை போலியாக எதிர்ப்ப வர் களுக்கும் அவர் அடிப்படையான பல உதவிகளைச் செய்வது இரகசியமல்ல. சதாம் ஹுஸைன் மேற்குலக எதிரிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத கட்சிகளுக்கும் பண ரீதியான மற்றும் ஆயுத ரீதியான பல உதவிகளைச் செய்திருக்கிறார். (பக்:111, 116)

"இஹ்வானுல் முஸ்லிமூன்' இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சவூதி அரேபியாவின் ஸலபீக்களும் அடிப்படைவாதிகளாவர். இவர்கள் தான் உஸாமா பின்லாடினை உருவாக்கினார்கள். சவுதி அரேபியாவுக்குள் அல்காயிதாவுக்கு பெருமளவு பணம் திரட்டப்படுகிறது. இதற்காக IIRO, ISCAG, IWWWM போன்ற நிறுவனங்கள் பயன்படுத் தப்படுகின்றன. உலகெங்கும் பள்ளிவாசல் களை, மத்ரஸாக்களை, பாடசாலைகளைக் கட்டுவதற்கும் சேமநலத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் சவூதி அதிக பணத்தை வழங்குகின்றது. இலங்கையிலும் இது இப்படித்தான் நடக்கின்றது. அந்தவகையில், பயங்கரவாதத்தின் ஆணி வேராக சவூதியின் ரியால்தான் இருக்கிறது. (பக்:228)

 இந்தியாவுக்கு வந்த முஹம்மத் பின் காஸிம், காஷ்மீரின் பௌத்த அரசை தாக்கினான். உலகின் மிகப் பெரிய பௌத்த பல்கலைக்கழகமாக இருந்த நாலந்தாவுக்கு தீயிட்டுக் கொழுத்தி 5000 பிக்குகளைக் கொன்று குவித்தான். பிக்குகள் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் காஸிம் நாலந்தாவுக்குள் நுழைந்தான். அந்தப் பிக்குகள் எந்த எதிர்நடவடிக்கையிலும் ஈடுபடாததினால் இந்தக் கொலையையும் தீயிடலையும் அவனால் செய்ய முடிந்தது. தெய்வத்தில், வாழ்க்கைக்கோர் குறிக்கோளில் நம்பிக்கை வைக்காத பௌத்தர்கள் பிசாசுகளைப் போன்று அவனுக்குத் தென்பட் டார்கள். பௌத்தர்கள் தமது அரசை ஆயுத பலத்தால் ஆளவில்லை. எனவே, பௌத்த சாம்ராஜ்யத்தின் வடமேல் பகுதி சரிந்து விழுந்தது. பௌத்த ராஜ்யத்தின் சிதைவுகளின் மீது கட்டி யெழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசு கி.பி 808 வரை இந்தியா வின் சிந்துப் பிரதேசத்தில் நிலைத்தது. (பக்:52)

மலேசியா மிகவேகமாக முஸ்லிம் அடிப் படைவாதத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்தோனேசியாவிலிருந்த கோத்திரங்களது தலைவர்களுக்கு அரேபிய வியாபாரிகள் பணம் (சந்தோஷம்) கொடுத்துத்தான். இஸ்லாத்தைப் பரப்பியிருக்கிறார்கள். தற்காலத்தில் அங்கு அதிதீவிரவாதிகளது கட்சியானது ஷரீஆ சட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்து தேர்தல்களில் கூட முன்னணி வகிக்கிறது. உலகி லேயே அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் அடிப்படை வாதக் கட்சி இந்தோனேசியாவிலேயே உள்ளது. (பக்:120)

மலாயா, சுமாத்தரா, ஜாவா ஆகிய தீவுக ளும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் ஏற்கனவே பௌத்த இராஜ்யங்களாக இருந்தன. அப்பகுதிகளுக்கு அரபு வர்த்தகர்கள் வந்தார்கள். அப்பிரதேசங்களி லிருந்த கோத்திரத் தலைவர்கள், பிராந்திய ஆட்சியா ளர்கள், இராஜாக்கள், இளவரசர்கள் ஆகி யோருடன் வியாபார தொடர்புகளை வைத்து வியாபாரப் பண்டங்க ளைக் கொடுத்து அவர்களை வசீகரித்தார்கள். சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துள் இணை வதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுகம்பெற பௌத்த மதம் தடையாக இருந்ததால் அவன் இஸ்லாத்திற்குச் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது. (பக்:55)

முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரிவுகளை மறந்து ஐக்கியப்பட்டு ஒரே சர்வதேச சமூகமாக மாற வேண்டும் என ஆப்கானி விரும்பினார். அவருக்கு 100 வருடங்க ளுக்குப் பிறகு அவரது கருத்தை உஸாமா பின் லாதின் நடைமுறைப்படுத்துகிறார். ஆப்கானியைப் போலவே முஹம்மத் அப்துஹவும் முக்கியமானவராக இருக் கிறார். ஸெய்யித் குத்ப், முஹம்மத் குத்ப் போன்றவர்களும் எகிப்திலே மேற்குலகுக்கெதிரான அடிப்படைவாதத்தை போதித்திருக் கிறார்கள். (பக்:65)

புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும்:

தமிழ் பிரிவினை வாதத்தை தோற்க டிக்க முஸ்லிம் அடிப்ப டைவாதிகள் சிங்களவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இது அவர்களது தந்திரமாகும். சிதைந்துபோன நாட்டில் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தானையும் சபிஸ்தானையும் (கிழக்கில் தனியான முஸ்லிம் ஆட்சியை) உருவாக்குவதே இவர்களது நோக்கமாகும். (முகவுரையில்)

அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. புலிகளுக்கு பிலிப்பைன்ஸிலுள்ள மேரோ முஸ்லிம் விடுதலை இராணுவத்துடன் தொடர்பிருக் கிறது. புலிகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அல்காயிதாவிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் முஸ்லிம் கெரில்லாக் களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள அல்உம்மா எனப்படும் குழுவினருக்கும் புலிகள் ஆயுதப் பயிற்சியளித் திருக்கிறார்கள். புலிகள் அல்கைதாவின் ஆயுதங்களை கடல் மார்க்க மாக இடத்துக்கிடம் நகர்த்துவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை தாக்க வந்த புலிகள் அல் கைதாவிடம் பயிற்சி எடுத்தவர்கள் தான். (பக்:248,249)

அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், ஒஸ்மான் ஆகியோர் உருவாக்கிய முஸ்லிம் அடிப் படைவாதத்துக் கெதிராக நான் போர் தொடுக்க முனைந்த மைக்கு அவர்கள் தீகவாபியை திட்ட மிட்டு அழித்ததுதான் காரணமாகும். (முகவுரையில்)

2003ஆம் ஆண்டு முஸ்லிம்கள் "அல் லாஹு அக்பர்' என கோஷமிட்டு ஒலுவில் பிரகடனத்தை செய்தார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நெருப்புப் பந்தமாக மாறியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் தான் அதற்குத் தலைமை வகித்தது. அதன் மூலம் முஸ்லிம் கள் இந்நாட்டின் தனியான சாதியினர் என்றும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான பூர்வீக பூமியிருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு சுயாதிபத்தியமிக்க அதிகாரம் வேண்டுமென்றும் பிரகடனம் செய்யப்பட்டது. இது எத்தனை உயிர்களது அழிவில் முடியுமோ தெரியாது. (பக்:252)

1976இல் வட்டுக்கோட்டையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கருத்தரங்கை நடாத்தி சுதந்திரமான தமிழீழத்தைப் பிரகடனம் செய்தார்கள். அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோசமெழுப்பி ஆசீர்வதித் தார்கள். இதன் பின்னர் தான் 46000 பேரின் மரணத்திற்குக் காரணமான புலிகளது பிரிவி னைவாத யுத்தம் வெடித்தது. இதுபோன்று தான் ஒலுவில் பிரகடனத்தையும் நாம் பார்க்கிறோம். (பக்:253)

வரலாறு இல்லாத முஸ்லிம்கள்:

இலங்கை அரசின் பணத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் கலாசார திணைக்களத் தினால் நடாத்தப்படும் மீலாத் விழாக்களில் வெளியிடப்படும் நூற்களில் இலங்கை முஸ்லிம்களது வரலாறு கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென நிறுவப்பார்க்கி றார்கள். இது பொய்யான கருத்தாகும். ஆனால், முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கைக்குமான தொடர்பு 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் ஓரளவு ஏற்பட்டது. அதற்கு முன்னரான முஸ்லிம் களது வரலாறு பற்றிக்கூறப்படும் கதைகள் மத அடிப்படைவாதிகளது வதந்திகளாகும். அதற்கு மார்க்கத்திலுள்ள குருட்டு நம்பிக்கை தான் காரணமாகும். இதற்கு புதைபொருளா ராய்ச்சி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கி.பி.

16ஆம் நூற்றாண்டிலிருந்து தான் இலங்கை யில் இஸ்லாம் பரவியிருக்கின்றது. அது 19ஆம் நூற்றாண்டில்தான் ஸ்திரமாகப் பரவியதென முடிவு செய்ய முடியும். (பக்:256)

முஸ்லிம்களின் சுயநலமும் துரோகமும்:

இலங்கையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 21 பேரில் 17 பேர்  இலங்கை முஸ்லிம்களாவர். (பக்:92) 

போர்த்துக்கேயரது காலத்தில் முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேய ருக்கும் இடையே 1517ல் மோதல் ஏற்பட்டது. இங்கு சமாதானம் செய்யச் சென்ற கோட்டை அரசன் தர்மபராக்கிரமபாகுவிற்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் யுத்தம் மூண்டது. முஸ்லிம்கள் கோள் சொன்னதனால் தான் சிங்கள அரசன் தம்மை எதிர்த்தான் என இதற்கு போர்த்துக்கேயர் காரணம் கூறினார்கள். (பக்:263)

போர்த்துக்கேயரால் கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு சிங்கள அரசர்கள் தான் புகலிடம் கொடுத்தார்கள். ஆனால், முஸ்லிம்களது நாட்டுப்பற்று ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது. முஸ்லிம்களை போர்த்துக்கேய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்த செனரத் அரசன் அந்த போர்த்துக்கேயர்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு முஸ்லிம்களை அழைத்தான். 4000 பேரில் 1500 பேர் மட்டுமே முன்வந்தார்கள். அந்தவகையில், முஸ்லிம்கள் தமது இருப்பைப் பற்றி மட்டுமே யோசித்தார்களே தவிர நன்றிக் கடன் தெரிவிக்கவில்லை. கண்டி இராச்சியம் பற்றிய இரகசியத் தகவல்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவர்களும் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களுடன் இணைந்து ஆங்கிலேயர் கண்டி அரசுக்கெதிராக 1802ல் யுத்தம் தொடுத்தார்கள். அந்த யுத்தத்தில் மலே, ஜாவா, முஸ்லிம் படைவீரர்களும் இருந்தார் கள். ஊவாவெல்லஸ்ஸ கிளர்ச்சியும் இதுபோன்ற காரணத்தால் ஏற்பட்டதாகும். சிங்களவருக்கெதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்கள் காரணகர்த்தாக்களாவர். 1915ம் ஆண்டு முஸ்லிம் சிங்கள மோதல் சிங்கள எழுச்சிக்கு வித்திட்டது. பெரும்பான்மை சிங்களவரை ஆத்திரமூட்டச் செய்வது முஸ்லிம்க ளுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனும் பாடத்தை முஸ்லிம்கள் படித்துக் கொண்டார்கள். (பக்: 263)

அரசியலில் முஸ்லிம் அடிப்படைவாதம்:

 இலங்கையின் நவீனகால இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எகிப்தின் அடிப் படைவாதியான ஒராபிபாஷாதான்  அடித்தளமிட்டார். அதனை தேசிய ரீதியில் சித்திலெப்பை பிரசாரம் செய்தார். 1899ல் கிண்ணியாவில் மத்ரசதுல் சைதிய்யா என்ற மத அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலை உருவாக்கப்பட்டதுடன் நவீன கால அடிப்படைவாதம் ஆரம்பமாகிறது. (பக்:270)

சிங்கள சமூகத்தில் மேட்டுக் குடிகள் அரசியல் செய்தது போல முஸ்லிம்களுக்கு மத்தியிலும் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ரீ.பி. ஜாயா போன்ற வர்களும் மேட்டுக்குடிகளாயினர். இவர்கள் அரசியலுக்கு வருவதற்காக ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தார்கள். உள்நாட்டவர்களை கஷ்டத்தில் வீழ்துவதே இவர்களது ஒரே அரசியல் தகைமையாக இருந்தது. (பக்:272)

பதியுதீன் "ஜிஹாத்' என்ற சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவியது.

இறுதியில் இந்த ஜிஹாத் அடிப்படை வாதத்துக்கு ஐ.தே.க. தான் உதவி செய்தது. 1970 தேர்தலில் நாடுபூராகவும் சமதர்மக் கட்சி வென்றபோது பொத்துவில், நிந்தவூர் தொகுதிகளில் ஐ.தே.க.வின் முஸ்லிம் அடிப்படைவாதம் வென்றது. இதிலிருந்து அடிப்படைவாதம் எவ்வளவு பலமானது என்பதைப் புரியலாம். முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பதியுதீன் மஹ்மூத் படித்த பரம்பரையை கொழும்புக்கு வெளியே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கப்படடவர்கள் தான் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்கள். (பக்:273)

ஐ.தே.க.வின் எம்.எச். மொஹமட், பாக்கிர் மார்க்கார், ஏ.ஸி.எஸ். ஹமீட், அப்துல் மஜீட் போன்ற தலைவர்கள் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்தது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், திட்டமிட்ட அடிப்படையில் தன்னார்வ நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள். 1984ல் இஸ்ரேலுடன் ஜே.ஆர். ஜயவர்தனவும் அத்துலத்முதலியும் தொடர்பினை ஏற்படுத்தியபோது புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அடிப்படைவாதிகளும் பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அதனை எதிர்த்தார்கள். (பக்:275)

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படை வாத கட்சியாகும். ஜே.ஆர். முஸ்லிம் அடிப்படை வாதத்தின் எழுச்சியை அறிந்து அதனை கவனமாக அணுகினார். முஸ்லிம் பெண்களுக்கான ஹிஜாப், ஷரீஆ சட்டம் என்ப வற்றை அனுமதித்தார். இந்தச் சலுகைகளை வழங்கினால் முஸ்லிம்களை வளைக்கலாம் என நினைத்தார், ஆனால், பதிலாக முஸ்லிம் அடிப்படைவாதம் மேலும் பலமடைந்து வளர்ச்சியடைந்தது. (பக்:276)

பிரேமதாஸ யுகம்தான் (19891993) முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வளமான காலமாகியது. அவர் முஸ்லிம் அடிப்படை வாதத்துடன் இணைந்தார். இஸ்ரவேலை வெளியேற்றினார். பயங்கரவாதத்தை அடக்கும் உபாயங்களை ஈரானிலிருந்து பெற்றார். 1989இல் ஜே.வி.பி. கிளர்ச்சியால் நாடு பலவீனமுற்ற வேளையில் அவரது உதவிக்கு இஸ்லாமிய வங்கி வந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அரசின் பணத்தையும் பொருட் சந்தையையும்

முஸ்லிம் அடிப்படைவாதம் தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இந்தியாவை பிரேம தாஸ எதிர்த்ததால் அவருடன் பாகிஸ்தான் நெருங்கி வந்தது. அதன் விளைவாக பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாத கலாசாலை களுக்கு இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் அனுப்பப்படுவதற்கு வழிசமைக்கப்பட்டது. (பக்: 277)

1994இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா. 7 ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியின் பின்னணியில் தேசிய, சர்வதேச சக்திகள் உள்ளன. நன்றாக மோப்பம் பிடிக்கும் சக்திகொண்ட அஷ்ரப் சந்திரிக்காவுடன் இணைந்தார். அன்றிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தேன்நிலவு ஆரம்பமானது. துறைமுகத்தை ஸ்தாபிக்க எந்தவகை யிலும் பொருத்தமற்ற இடமான ஒலுவிலில் துறைமுகம் ஸ்தாபிக்க ஏற்பாடாகியது. அடுத்த இலக்கு ஒரு விமான நிலையம் தான். முஸ்லிம்களுக்கு மட்டுமான பல்கலைக் கழகத்தை தென்கிழக்கில் கட்டினார்கள்.

இது பதியுதீன் ஏற்படுத்திய முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாகும். துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட கல்விக் கூடங்களுக்குள் தடைசெய்யப்பட்ட பர்தாவும் முஸ்லிம்களது தொப்பியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

பள்ளிகளைப் பராமரிக்க சவூதியிலிருந்து 6.6 பில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டது. நாடுபூராகவும் 700 அடிப்படைவாத  மத்ரஸாக்கள்  ஸ்தாபிக்கப்பட்டன. போதைவஸ் துக்களை இறக்குமதி செய்வது, கள்ளச் சாமான்களை விற்பது, பாதாள உலகக் கோஷ்டிகளது செயற்பாடுகள், கறுப்புப் பணத்தை கையாள்வது என்பவற்றை முஸ்லிம் அடிப்படைவாதமே செய்கிறது. இந்த அடிப்படைவாதிகள் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கிறார்கள். (பக்:279)

முஸ்லிம்களது பகல் கொள்ளை:

வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண் டது போல், தப்பிவந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும், கற்பிட்டியிலும் உள்ள சிங்க ளவர்களது சொத்து செல்வங்களை கைப் பற்றிக் கொண்டார்கள். (பக்:278)

அஷ்ரஃப் தனது பேரம் பேசும் பலத்தை பயன்படுத்தி இலங்கையின் மிகப்பெரிய கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமையும் இலங்கையின் உயர்ந்த கட்டடமான இஸ்லாமிய தகவல் நிலையத்தையும் கட்டியிருக் கின்றார். அஷ்ரபுக்கு சவுதி நிதியிலிருந்து கோடிக் கணக்கில்  பணம் கிடைத்ததாகவும் இதன் மூலவேலைத்திட்டத்தை சவுதியில் அடிப்படைவாதத்தைப் பயின்ற  ஹாபிஸ் நஸீர் அஹ்மத் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஷ்ரப் அகால மரணமாகாவிட்டால் அவர் உருவாக்கிய நுஆ 2012 இல் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் தனது திட்டத்தை அடைந்திருக்கும். (பக்:280)

முஹம்மத்தின் மரணத்தின் பின்னர் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்சினை வந்ததுபோல அஷ்ரபின் மரணத்தின் பின்பும் அதே பிரச்சினை வந்தது. பேரியல், ஹகீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அப்பதவிக்கு போட்டி போட்டார்கள். எதிர்காலத்தில் ஹகீம், அதாவுள்ளாவுக்கிடையிலன்றி பாராளுமன்றமுறைக்கும் ஜிஹாத் ஆயுதப் போராட்டத்துக்குமிடையில் தான் மோதல் நடக்கும். பிரபாகரனுக்கு வடக்கு, கிழக்கு தாரை வார்க்கப்பட்டதன் அபாயகரமான முடிவுகளில் ஒன்றாக உஸாமா பின் லாதினை கிழக்குக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அமையும். 

அபாயகரமான நிலை:

முஸ்லிம்களது மிக விரைவான சனத் தொகைப் பெருக்கம் புதிய கல்வி மாற்றம், தமிழ் பாசிச யுத்தத்தாலும் ஐ.தே.க.வுக்கும் ஐ.ம.சு.கூ.க்கும் இடையிலான மோதலாலும்  ஏற்பட்ட பலவீனம், எண்ணெய் பணத்தின் குமுறல் இவை அனைத்தினதும் முடிவு இலங்கையின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை, வெடிப்பதற்கு  தயார்நிலையிலுள்ள எரிமலையைப் போன்றாக்கிவிட்டது. இலங்கை உளவுப் பிரிவின் தகவலின்படி தமக்கிடையில் மோதிக் கொள்ளும் 4 முஸ்லிம் ஆயுதக் குழுக்கள்

(முஜாஹிதீன், ஒஸாமா, ஜெட், பீம்)) இலங்கையில் இருப்பதாகவும் அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அறிய முடிகிறது. ஒலுவில் பிரகடனம் என்பது அர்மில்லாததொன்றல்ல. அது இந்தோனேஸியாவையும் இலங்கையையும் சேர்த்துத் தீயிட்டுக் கொழுத்தி விடும். (பக்:281)

அடிப்படைவாதக் கலாசாலைகள்:

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதமானது மக்தப்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய முன்பள்ளிகள், முஸ்லிம் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் போதிக்கப்படுகின்றது. மத்ரஸாக்களைப் பொறுத்தவரையில் மக்கிய்யா, பாரீ, பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, கிண்ணியா சஹதிய்யா, மாதர அன்மின்னதுல் பாஸியா, மைதுல் அரபுப் பாடசாலை (தர்ஹாநகர்), காஸிமிய்யா, கபூரிய்யா என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவை வெளிநாட்டு பணத்தால் வேகமாக நவீனமயப்பட்டு வருகின்றன. அங்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆசிரியர்கள் கூட போதிக்கிறார்கள். 20032010ற்கும் இடையில் 700 மத்ரஸாக்களை நிர்மானிக்க சவுதி வாக்குறுதியளித்துள்ளது. பாடத்திட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன்  சம்பந்தப்பட்டிருக்கிறது. நளீம் ஹாஜியாரால் 1973ல் பேருவலையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அடிப்படைவாத கலாசாலை இங்கு மைல்கல்லாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த அடிப்படைவாத ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி, நவீன தொழினுட்பத்தை போதிக்கும் இடமாக அது மாறியுள்ளது. (பக்: 284,285)

1996ல் 111 அடிப்படைவாத முன்பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் 5 பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்துக்கான தனியான துறைகள்கள் உள்ளன. அஷ்ரப் 1995ல் தனியான முஸ்லிம் பல்கலைக்கழத்தை ஆரம்பித்ததுடன் இந்நிலை இன்னும் வேகமடைந்துள்ளது. நாட்டின் ஏனை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சபரகமுவ, ரஜரட, ஊவா, வடமேல் பல்கலைக்கழகங்கள் இறுதி மூச்சுவாங்கும் போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மடைதிறந்த வெள்ளமாக வெளிநாட்டு உதவிகள் வந்து சேர்வதால் அது சீக்கிரமாக நவீன பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இந்திய சுதந்திரப் போருக்கு அலிகார் பல்கலைக்கழகம் செய்த பங்களிப்பை விட கிழக்கின் சுய ராஜ்ய உருவாக்கத்திற்கு அதிகமான பங்களிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செய்யும் என்பதை 20030129 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக பூமியில் ஒலுவில் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் பேச்சாளர்கள் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது. அந்தவகையில் அது இன்று முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்பது தெளிவாகிறது. (பக்: 310)

வேகமாகப் பரவும் முஸ்லிம் சனத்தொகை:

முஸ்லிம்களது சனத்தொகை அண்மைக்காலத்தில் அதிவேமாகப் பரவி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் செல்வதாலும் அதிகமாகத் திருமணங்கள் நடைபெறுவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. சிங்களவர்களது வளர்ச்சி 1& ஆகும். அதேவேளை முஸ்லிம்களது வளர்ச்சி 2.8 & ஆக  இருக்கின்றது. 2090 ம் ஆண்டு முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பன்மையினராக மாறுவார்கள். சிங்கள சமூகத்தில் இளைஞர்களது விதிசாரம் 16 & ஆகும். அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களது விகிதாசாரம் 29 & ஆகும். எனவே, பொதுவாக புரட்சிகளுக்கு இளைஞர்களே காரணமாக அமைகின்றனர் என்ற வகையில், முஸ்லிம் சமூகத்திலும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளது புரட்சி பலமடைவதற்கு இது வழிவகுக்கும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெண்களது தொகை ஆண்களது தொகையை விடவும் 1,77,961 மேலதிகமாக இருக்கிறது. இவர்களுள் 1,35,251 பேர் சிங்களப் பெண்களாவர். ஆனால் இந்தப் பெண்களை எதிர்காலத்தில் திருமணம் செய்வது யார்?. இவர்கள் ஒன்றில்  முஸ்லிம் அல்லது வெளிநாட்டு ஆண்களையே முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் பலதார மணத்தின் மூலமே இஸ்லாம் இலங்கையில் பரவியது. (பக்:317)

பௌதர்களிடம் சிங்களத்தன்மை பற்றிய உணர்வில்லாமலுமிருப்பதனால் தான் அவர்கள் திட்டமிட்டுச் செயற்பாடாமல் இருக்கிறார்கள். இதனால் தான் சிறுபான்மை தீவிரவாதம் வளர்கிறது. சிங்களத்தன்மையைக் கொலை செய்கிறவர்கள் தான்  இந்த சிறுபான்மைத் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு வழி சமைப்பவர்கள்  என்பதை மறக்கலாகாது. அடுத்த தசாப்தங்களில் சிங்களவர்கள் தமது சிங்களத் தன்மையிலிருந்து எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் தலைவிதி தீர்மானிக்கப்படும். மகாத்மா காந்தி இலங்கையனின் மரணம் எம்மால் தாங்க முடியுமான கவலை. மாறாக இலங்கையின் மரணம் எம்மால் தாங்க முடியாத கவலை. என்று குறிப்பிட்டார். (பக்: 312) 

இவரது நெகனஹிர சிங்கள உருமய (கிழக்கின் சிங்கள பூர்வீகம்) 2002 எனும் நூலிலும் இது போன்ற கருத்துக்கள் உள்ளன.

இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் பயங்கரமாக அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. என்ற  நூலில் எந்த அடிப்படைகளுமற்ற, திரிபுபடுத்தப்பட்ட, வரலாற்று ஆதாரங்களற்ற, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மாத்திரமே இருக்கின்றன. எனவே, இந்த நூல் சிங்கள சமூகத்திலுள்ள படித்தர்வர்கள், பல்கலைக்கழக மட்டதத்திலுள்ளவர்களாலும் படிக்கப்பட்டு வருவதால் முஸ்லிம்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் அவர்களது மனங்களிலிருந்து முற்றாக எடுபட்டு விட்டது. அத்துடன் அது வரலாற்று ஆவணமாகவும் மாறி எதிர்கால சிங்கள மக்களது உள்ளத்தில் நச்சு விதைகள் விதைக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

எனவே, இதுபோன்ற நூல்களுக்கு மறுப்பு எழுதப்பட வேண்டும். மற்றும் ஜாதிக ஹெல உருமய அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் விழிப்பார்களா? இந்தத் தகவல்களை  முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பும்படி  எதிர்பார்க்கிறோம்..
 
Thanks : Jaffnamuslim.com

அரை உண்மைகளின் அபாயம்



images (3)
 
 
 
யோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு.
 
 
 
இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.
 
 
 
இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.
 
 
 
மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
 
 
 
இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
 
 
 
இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).
 
 
 
கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.
 
 
 
கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.
 
 
 
ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
 
 
மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.
 
 
 
இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.
இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
 
 
முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
 
 
 
இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும்.
 
 
 
தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.
கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.
 
 
 
இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
 
 
 
இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
 
 
 
இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
 
 
 
மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.
 
 
 
இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.
 
 
 
பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.
 
 
 
பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.
 
 
 
 

இலங்கையும் வெறுப்பு அரசியலும்

 
 
Courtesy : The Hindu, Sept 6, 2012
 
 
லங்கையில் இருந்து சில பறவைகள் பறந்து வருகின்றன. தமிழகத்தின் வான்பரப்பில் நுழையும்போது கீழிருந்து கற்கள் பறந்து வருகின்றன. ஒரு பறவை சொல்கிறது. 'இதற்குத்தான் தமிழ்நாட்டின்மீது பறக்கவேண்டாம் என்று சொன்னேன்!'  The Hindu வெளியிட்டுள்ள  கார்ட்டூன் இது. இலங்கையில் இருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழக முதல்வர் திருப்பியனுப்பியதையும் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய இலங்கை ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலையும் கண்டிக்கும் விதத்தில் இந்தக் கார்ட்டூன் அமைந்துள்ளது.

கார்டூனின் மையக்கருத்தோடு முரண்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். 'இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!' என்னும் The Hindu  எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.

இந்த இரு சம்பவங்களில் முதலாவது தமிழக அரசின் செயல்பாட்டால் நிகழ்ந்தது. மற்றொன்று தமிழகக் கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது. இரண்டுக்கும் உள்ளிருப்பது வெறுப்பு அரசியல்.  'இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன' என்கிறார் கலைஞர்அரசியல் ரீதியான கோரிக்கைகளைக்கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு.' என்கிறது வினவு, 'சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மிக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள்.'

உண்மையில், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் வெறுப்பு அரசியலுக்கு இருக்கிறது. ஹிட்லர் வளர்த்தெடுத்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தது. வெறுப்பு அரசியலுக்குப் பலியான அதே யூதர்கள் இன்னொரு வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவின் தவறுகளுக்காக அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11, 2001 அன்று தண்டிக்கப்பட்டார்கள். ஆதிக்க இந்து சாதியினராலும் தலைமையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர வெறுப்பு அரசியலின் விளைவே குஜராத் 2002 கலவரம். அசாம் கலவரமும்கூட இந்த வகையில்தான் அடங்கும்.

பலரும் நினைப்பது போல் இந்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் அரசியல் தலைமையால் மட்டுமே தனியோரிடத்தில் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுவதில்லை. நம்மில் பலரும்கூட இதற்கு இரையாகிறோம். பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் வட மாநிலத்தவரைச் சந்திக்கும்போது, நம்மையறியாமல் முகம் சுளிக்கும்போது வெறுப்பு அரசியல் நம்மைப் பற்றிக்கொள்கிறது. என் இடத்தில் நீ என்ன செய்கிறாய்? பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய்? எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ? பால் தாக்கரே, ராஜ் தாக்கரே குழு மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட விரோத உணர்வுகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியப் பாடகர்களோடு இணைந்து ஆஷா போஸ்லே பாடக்கூடாது என்று சமீபத்தில் 
ராஜ் தாக்கரே உத்தரவு போட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் சிங்களர்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்த வெறுப்பு அரசியல் உணர்வுதான் முள்ளிவாய்க்காலைத் தோற்றுவித்தது. ஓர் அரசு இரு வகைகளில் இதனை செய்கிறது. 1) ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பரவியிருக்கும் அதிருப்தியை பிரயத்தனப்பட்டு ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுவதன் மூலம், ஒரு குழுவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி மோதவிடுகிறது. 2) இயல்பிலேயே மக்களிடையே ஒரு சாராருக்கு எதிராக மூண்டெழும் வெறுப்புணர்வை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன்மூலம், வன்முறையை வளர்த்தெடுக்கிறது. ஆட்சியில் உள்ள அரசுக்கும் சரி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளுக்கும்சரி, இந்த இரண்டுமே லாபமளிக்கக்கூடியதுதான். காலப்போக்கில், எது இயல்பான வெறுப்புணர்வு, எது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு என்று பிரித்து பார்க்கமுடியாதபடி சிக்கல்கள் பெரிதாகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, ஜெர்மானியர்களிடையே யூத எதிர்ப்புணர்வு வளர்ந்திருந்தது உண்மை. ஹிட்லர் அந்த உணர்வை வளர்த்தெடுத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்தெடுத்ததும் உண்மை. இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டபோது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.

வெறுப்பு அரசியலை வளர்ப்பதும் ஆதரிப்பதும் மிகவும் எளிது.  உறுதியான, உடனடியான பலன்கள் சர்வநிச்சயம். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் இப்பணியைத் தொடர்நது செய்துவருகின்றன. பகுத்தாய்ந்து சிந்திக்கத் தெரியாத மக்கள் தொடர்ந்து இதற்குப் பலியாகின்றனர்.

மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களின் பின்னணியில் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசாலும் தமிழகக் கட்சிகளாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டினால் அரசியல் பிழைப்பு பாதிக்கப்படும். ஒரே மாற்று, வெறுப்பு அரசியலும் குளிர் காய்தலும் மட்டுமே.

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது வாக்களித்திருந்தாலும், அது சாத்தியமில்லை என்பது முதல்வருக்குத் தெரியும். எனவேதான், சாத்தியமானதும் எளிதானதுமான ஒரு காரியத்தை அவர் செய்தார். ஈழத்தை முன்வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் பிற கட்சிகளும் குழுவினரும்கூட கோஷம் எழுப்பியும் கல் வீசியும் தங்களால் இயன்ற அளவுக்கு வெறுப்பை விதைத்து முடிந்தவரை ஆதாயம் அடைந்துகொண்டார்கள். இப்போதைக்கு அதிகபட்சம் இதுதான் சாத்தியம்.

முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பான நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.

தி இந்து கார்ட்டூனுக்கு வருவோம். தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?
 
 
இந்தக் கட்டுரை சிலருக்குக் கோபத்தையும் வேறு சிலருக்குக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
 
இன்றுகூட ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
 
//இலங்கைக் கால்பந்தாட்டக்காரர்களைத் தமிழக அரசு சட்டப்படி வெளியேற்றியது, புத்த பிட்சுக்களின் மீது சில தனிமனிதர்கள் தாக்குதல் நடத்தினர், இரண்டையும் இணைத்து மோசடி செய்கிறது இந்து தலையங்கம், ஓர் இனப்படுகொலை செய்த நாட்டின் விளையாட்டாளர்களை வெளியேற்றுவது என்பது எப்படி இனவாதமாகும்? இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன்? //
 
 
 
விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது ஓர் அரசின் செயல்பாடு. புத்த பிட்சுக்களின்மீது தாக்குதல் நடத்திய சில தனிமனிதர்களின் செயல்பாடு. ஒரு நாட்டு அரசின் செயல்பாடும் அந்நாட்டு மக்கள் சிலரின் செயல்பாடும் ஒன்றா என்பதுதான் கேள்வி. நிச்சயம் வெவ்வேறுதான். அதே சமயம் இரண்டுமே ஆபத்தானவை என்பதால் இரண்டும் சேர்த்தேதான் எதிர்க்கப்படவேண்டும்.
சிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான்.
 
 
ஆனால், நம்மில் பலரால் சிங்களர்களின் செயல்பாடுகளையும் தமிழகத்தின்
செயல்பாடுகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கமுடியவில்லை. அதற்கு மனம் ஒப்பவில்லை. பல கேள்விகள் அலைமோதுகின்றன. பல்லாயிரம் பேரைக் கொன்றவர்களும் கல்லெறிபவர்களும் ஒன்றா? இருவருக்கும் ஒரே நீதியா? இருவருடைய குற்றங்களையும் ஒன்றுபோல் பாவித்து தீர்ப்பு எழுதுவது சாத்தியமா? படுகொலை செய்பவர்கள்மீது ஆத்திரப்பட்டு சிறு கல் வீசினால் அது கொடுஞ்செயல் ஆகிவிடுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டுமானல், இவற்றோடு சேர்த்து இன்னும் இரு  கேள்விகளை நாம் எழுப்பவேண்டும்.
 
  • ஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டுமா?
 
  • ஒரு நாட்டின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களும் பொறுப்பேற்கவேண்டுமா?


எனில், அமெரிக்க அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒருவர், அமெரிக்கர்கள் அனைவரையும் எதிர்த்தாகவேண்டுமா? சோவியத் ரஷ்யாவை அல்லது செஞ்சீனத்தை ஏற்கும் ஒருவர் ஒவ்வொரு ரஷ்யரையும் ஒவ்வொரு சீனரையும் அரவணைக்கவேண்டுமா?
 
 
ஒருவருடைய அடையாளம் என்பது என்ன என்னும் ஆதாரமான கேள்வி இங்கே எழுகிறது. The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் இதுபற்றி விவாதிக்கிறார். ஒருவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார். அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.
 
 
அவருக்கு கால்பந்து பிடிக்கும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வை இருக்கிறது. அவர் மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கிறார். அவர் ஒரு கணவர். தன் மகனுக்குத் தகப்பன். அவர் கற்றறிந்தவர். அவர் ஒரு இந்தியர். அவர் ஒரு முஸ்லிம். இதில் எது அவருடைய அடையாளம்? எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது? எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார்? அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது? இது மிகவும் முக்கியமானதொரு கேள்வி. காரணம், இந்தப் பிம்பத்தை வைத்துதான் நாம் அவரை எதிர்கொள்கிறோம்.
 
 
இலங்கை அதிபரை ஒரு  ஃபாசிஸ்டாக அன்றி வேறெப்படியும் நம்மால் கற்பனை செய்யமுடியாததற்குக் காரணம் அவருடைய பிற குணாதிசயங்களைக் காட்டிலும் அவருடைய ஃபாசிச குணம் மேலெழும்பியிருப்பதுதான். அந்தக் குணமே அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்கிறது.
ஒரு ஃபாசிஸ்ட் என்னும் அடிப்படையில் இலங்கை அதிபர் எதிர்க்கப்படவேண்டியவர். ஒரு போர்க்குற்றவாளி, கிரிமினல் என்னும் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டியவர். அவருடைய  அரசியல் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. முறியடிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட. மஹிந்த ராஜபக்ஷேவின் அடையாளம் இதுவே. அவர் ஒரு சிங்களராகவும் இருக்கிறார். அவ்வளவுதான்.
 
 
இதே ரீதியில், இலங்கை அதிபர் அரசை ஒரு ஃபாசிஸ்ட் அரசு என்னும் முறையில் எதிர்க்கவேண்டும். இலங்கை அதிபர்க்குத் துணை நிற்கும் அவருடைய அரசையும் ராணுவத்தையும் எதிர்க்கவேண்டும். அதே வரிசையில், சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்படவேண்டியது. ஆனால் சிங்களர்கள் அனைவரும் எதிர்க்கப்படவேண்டியவர்களா?
அமெரிக்க எதிர்ப்பு என்பது அனைத்து அமெரிக்கர்களையும் எதிர்ப்பது என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால், நோம் சாம்ஸ்கி, ஹோவர்ட் ஜின், பாப் உட்வர்ட்உள்ளிட்ட அமெரிக்க விமரிசகர்களையும் சேர்த்தேதான் நாம் எதிர்க்கவேண்டியிருக்கும்.
 
 
சிங்கள அரசைக் கடுமையாகச் சாடி பலியான லசிந்த விக்கிரமதுங்கவை ஒரு சிங்களர் என்பதற்காக நாம் எதிர்க்கவேண்டுமா என்ன?
எதிர்க்கவேண்டியது சிங்கள இனவாத அரசைத்தான்; சிங்களர்களை அல்ல. இந்த உண்மை தெரிந்தேதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கங்களும் வெறுப்பு அரசியலை மக்களிடையே பரப்பிவிடுகின்றன. அவற்றுக்கு நாம் இரையாகக்கூடாது.
 
 
sl_1401580f
 
 
ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் அதன் சிறுபான்மை இன மக்களை எப்படி நடத்துகிறது என்பதைத் தொடர்ச்சியாக கவனித்து, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டியது அந்நாட்டு மக்களின் தார்மிகக் கடமையாகும். இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் இலங்கைப் பிரச்னையை நாம் கவனிக்கவேண்டும். அங்கே ஒருவேளை சிங்களர்கள் சிறுபான்மையினராக இருந்து, பெரும்பான்மை தமிழர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டால், அப்போது நாம் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கவேண்டும். நம் இனம், நம் மொழி, தொப்புள்கொடி உறவு போன்ற பதங்களை அப்போது பயன்படுத்தமுடியாது என்றபோதிலும்.
‘சிங்களர்கள்’ என்னும் அடையாளத்தை இப்போது மூன்றாகப் பிரிக்கலாம்.
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள் / அவற்றால் பலனடைபவர்கள்.
 
 
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளை ஏற்காதவர்கள் / அவற்றை எதிர்ப்பவர்கள்.
 
  • அரசியல் பார்வை ஏதுமற்றவர்கள்.


சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான நம்  போராட்டத்தில் இரண்டாவது பிரிவினரை நாம் ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது பிரிவினரை வென்றெடுக்கவேண்டும்.
முதல் பிரிவினர் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.
எப்படிப் பார்த்தாலும், சிங்களர்களோடு உரையாடாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல், அவர்களோடு முரண்படாமல் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.


சிங்கள அரசின்மீதான கோபத்தை சிங்களர்கள்மீது செலுத்துவதும் அதற்குத் துணை போவதும் சிங்கள அரசுக்கு சாதகமான செயல்பாடாகத்தான் இருக்கும். அரசியல் பார்வை ஏதுமற்ற சிங்களர்களும்கூட தங்கள் அரசோடு வேறுவழியின்றி ஒன்றிப்போகும் அபாயமும் ஏற்படும்.
ஆட்சியாளர்களைப் போலன்றி, பாட்டாளி வர்க்கம் சர்வதேசத்தன்மை கொண்டிருக்கவேண்டியது அவசியம். மாணவர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி. பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து அவர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன்மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியும்.

-Maruthan
 
Thanks : Tamilpapaer.com

Saturday, March 30, 2013

காவிகளும் கசடுகளும்






 

நாட்டின் பிரச்சினைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும்   மக்களை விட தோர்கள்தான் அதிகம் காராணம்  இதற்காக நாங்கள் அனைத்து தேரர்களையும் குறைகூறவில்லை எனினும்  இஸ்லாமிய ஆடைகளை விமர்சிக்கும் பொது பல சேனா தலைவர் தேசிய பாதுகாப்புக்கு இஸ்லாமிய ஆண்கள்,பெண்கள் அணியும் ஆடை பிரச்சினையாக அமையும் என்றார் இதன் போது நாங்கள்  அவரது ஆடையினை சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது. 

ஒரு சில தேரர்கள் அணியும் காவி ஆடைக்குள் திருடப்பட்ட பொருட்களையும், போதைப்பொருட்களையும்,  பாதுகாப்பாக கடத்துகின்றார்கள் இதற்காக புத்த துறவிகள் அனைவரும் காவியுடையை அகற்ற நீங்கள் போராடுவீர்களா? இலங்கையில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் நாட்டின் சட்டத்தினை மீறி குற்றம் செய்யவில்லை ஆனால் தேரர்கன் சட்டத்தினை மீறி இருக்கின்றார்கள் என்பதனை பின்வரும் தரவுகள் எடுத்துக்காட்டாகும்.  

2011.10.13 ஆம் திகதி தம்புள்ள , நிகரவெட்டன , பல்லியகதி என்ற பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை விகாரைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய தேரர் கைது செய்யப்பட்டார். 

2011.08.20 ஆம் திகதி மிஹிந்தனை ரஜமகா விகாரையின் சங்கைக்குரிய நமலவெல ரட்னசார தேரர் 13 வயது சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றத்திற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தார்.

2011.10.04 ஆம் திகதி விஹாரைக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரரை அங்குரஸ்ஸ பொலிஸார் மாத்தறை நீதவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 2011.10.12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது.

2012.09.13 ஆம் திகதி ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்து பிக்கு ஒருவர்  பலவந்தமாக முத்தமிட்டார் .இதனையடுத்து சம்மந்தப்பட்ட பிக்குவைக் கண்டி பொலிஸார் கைது  செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அதனை அடுத்து பிக்குவை 2012.09.24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி வீதிமன்றம் உத்தரவிட்டது.

2012.03.07 ஆம் திகதி பேலியகொட பகுதியைசேர்ந்த பிக்கு ஒருவர் ஆபாச வீடியோ காட்சிகளை தேரர்க்கு செந்தமான கணினியில் வைத்திருந்த குற்றத்திகாக தங்கியிருந்த பௌத்த விகாரையில் வைத்து பிக்குவை காவல் துறையினர் கைது செய்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.17 ஆம் திகதி ருவன்வல்ல சோபித தேரர் என்ற பௌத்த பிக்கு தொழில் வாய்ப்பு ஒன்றினை பெற்றுதருவதாக் தெரிவித்து விதவைப் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு கேகாலை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார். 

2012.08.31 ஆம் திகதி ராஜாங்களை யாய 18ம் பிரதேச விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். 

2012.06.04 ஆம் திகதி வலஸ்முல்ல கொலுவார பிரசேத்தில் வீடு வீடாக யாசிக்கும் பிக்கு 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் இப் பிக்குவை 2012.06.11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளர். 

2012.12.26 ஆம் திகதி அநுராதபுரம் மஹகெலகம சுதர்சனாரமா விகாரையைச் சேர்ந்த பிக்கு 15 வயது பள்ளிச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தினார் இப் பிக்குவை பொலிஸார் கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது. 

2012.05.12 ஆம் திகதி  பண்டிருப்பு காலவன்ன விகாரையில் இருந்த 57 வயதான பௌத்த 7,10, 11 வயதுள்ள மூன்று சிறார்களை பலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக புத்தள மாவட்ட வென்னப்புவ  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.16 ஆம் திகதி ஆசிரியர் வங்கி அட்டையை திருடி 90000 ரூபாயை மோசடி செய்த பிக்குவை காவல்துறையினார் கைது செய்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2012.11.29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

2012.06.03 ம் திகதி இலங்கையை சேர்த 65 வயதான  பௌத்த லண்டன் குறோய்டனில் உள்ள தமெஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதி பகலகம சோமரத்ன தோர் வயது குறைந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினார் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்னை விதித்தார். 

2012.02.17 ஆம் திகதி போதைப் பொருள்களை கடத்திய குற்றச்சாட்டிற்கு மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வைத்து தேரர் கைது செய்யப்பட்டார் .

2012.08.03 ஆம் திகதி இளைஞர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு காவல்துறையினரை அச்சுறுத்திய தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இத் தேரருக்கு களுத்துறை நீதிமன்றம் பிடியாணைப் பறிப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.

2012.6.08 ஆம் திகதி பெந்தொட்ட அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற 23 லட்சம் ரூபா தங்க நகை கொள்ளை மற்றும் அளுத்னமையில் இடம்பெற்ற 4கோடி ரூபா மாணிக்கக்கல் கொள்ளை என்பவற்றுடன் தொடர்டைய இதுரவ பண்டாரிகொட பிரதேச விகாரை ஒன்றின் தேரர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

2012.08.06 ஆம் திகதி அம்லிபிட்டிய , கல்அமுணதொல வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரம வெட்டிய  தேரர் கைது செய்யப்பட்டார்.

2012.02.09 ஆம் திகதி கற்பிட்டி ,கண்டக்குளி , சமுர்தர்சன விஹாரையின் பிரதம தேரர் பென்டிவௌ தியசேன மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று பொலன்னறுவை தீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய கட்டுநாக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

2013.03.08 ம் திகதி  பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகம பிரசேத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வந்த பிக்கு ஒருவரை பேலியாகொடை பொலிஸ் இரவு 1.30 மணியாளவில் விகாரையை சுற்றிவளைத்து பிக்குவை பேலியகொடை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

2013.02.03  ஆம் திகதி களனி விஹாரையொன்றின் பீடாதிபதி திருமணமாண 43 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்  பாதிக்கப்பட்ட  பெண் ராகம வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார் இப் பெண் முறைபாடு எதனையும் செய்ய வேண்டாம் என பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக் குழு காவல் துறைக்கு அறிவித்துள்ளது

2013.02.15 ஆம் திகதி பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட நாரம்மலை பிரதேச பிக்குவை வெலிவேரிய பொலிசார் கைது செய்து கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தியபோது 2012.02.27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமான்றம் உத்தரவிட்டது.

2013.01.16 ஆம் திகதி திருகோணமலை மொரவெவ எட்டாபெந்தியேவ பகுதியில்  ஆறு வயது சிறுவரை பலியல் குற்றம் புரிந்த பிக்குவை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸ் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிக்குவை 2013.01.29 ம் திகதி வரை விளக்கதறியலில் வைக்க நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

2013.02.02. பல்வேபெத்த ,ஹெலஉடகந்த பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதி குடிபோதையுடன் பொலிசார் கைது செய்தார்.

2013.02.11 ஆம் திகதி  வெல்லாவ ஹரிபிட்யே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே  திருமணம் செய்தார் இதன்போது வேறு பெயர் ஒன்றில் பதிவு திருமணம் செய்து கொண்டமையும், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமையும் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தமை ஆகிய குற்றசாட்டுக்களுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டார். 

2013.02.24 ஆம் திகதி புத்தளம் கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

எவராக இருந்தாலும் தவறுகள் சுட்டிக்கட்டப்படவேண்டியவை. இல்லை என்றால் எதிர்கால சந்ததிகள் சுட்டிக் காட்டும். மேற்குறிப்பிடப்பட்ட குற்றங்களை செய்த  தேரர்களை கைது செய்த காவல் துறையினர் நாட்டின் அடிப்டை சட்டத்தினை மீறுகின்ற பொது பல சேனா தேரர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? அரசாங்கத்தின் தளத்திற்கு ஆடும் கூட்டம் ஒன்று நாட்டின் உருவாகி விட்டது. தடுப்பது யார் ? பொருத்துப் பார்ப்போம் அல்லாஹ் நம் பக்கம் .
 
- Yakkoob Faizal
 
 Thanks : Jaffna Muslim