Monday, August 22, 2011

ஒப்பிட்டுப் பாருங்கள்:



பட்டினிச் சிறுமியும் பார்த்திருக்கும் கழுகும்





மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்! நன்றாக உற்றுப் பாருங்கள். இதைப் பார்த்தால் என்ன தோன்றுகின்றது? இது நாம் வாழும் இன்றைய ஏற்றத்தாழ்வு மிகுந்த உலகின் பரிதாப நிலையின் அப்பட்டமான உண்மைகளில் ஒன்று. ஆபிரிக்க நாடொன்றில் தலைவிரித்தாடும் பஞ்சத்தினால் ஏற்பட்ட அவலக் காட்சி இது.

பசி பட்டினியினால் மெலிந்து வலுவிழந்து கைவிடப்பட்ட ஒரு சிறுமி நடக்கவும் வழியின்றி தன் உடலைத் தானே இழுத்தவாறு  ஏறத்தாழ ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கப்பால் ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் அமைக்கப்பட்டுள்ள உணவு முகாமை நோக்கி ஊர்ந்து செல்வதையும்  அவள் எப்போது சாவாள் எப்போது கொத்தி அவளை தின்னலாம் என்ற நோக்கத்தோடு பின்  நடந்தவாறே பின் தொடரும் ஒரு பிணந்தின்னிக் கழுகையும்தான் இந்த அற்புதமான புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.

இந்தச் சிறுமியின் அவல வாழ்க்கையை ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். பின்பு, வேளாவேளைக்கு உணவு மற்றும் நொறுக்குத் தீனி. ஆடைகள் ஆடம்பர வசதிகள் பொழுதுபோக்குகள் இவையெல்லாம் இருந்தும் கூட போதவில்லையே என்று கவலை கொள்வதும்...

சீரியல் நாடகங்கள், கிரிக்கட் போட்டிகள் போன்ற அற்ப விடயங்களைத்  தவற விட்டு விட்டாலே ஏதோ குடியே முழுகிப்போய் விட்டது போல அலட்டிக் கொள்வதும்.....

பிறந்த நாள் விழாக்கள், நண்பர்களின் விருந்துகள், இப்தார் விருந்து கேளிக்கைகள் என்று பசியே அறியாத மனிதர்களுக்கொல்லாம்  உணவை வழங்கி அவற்றைக் கூட முழுமையாகச் சாப்பிடாமல் வீணடித்து அவ்வாறு வீணடிப்பதையே பெருமையாகப் பீற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதுமான நம்மில் பலரின் வழ்க்கையையும் சிறிது நினைத்துப் பாருங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகும் ஒரு சொட்டுக் கண்ணீர்  உங்கள் விழிகளிலிருந்து உதிரவில்லையென்றால்... இதற்குப் பிறகும்  உணவை வீண் விரயமாக்குவதற்கு உங்களுக்கு மனம் வருமென்றால் நீங்களெல்லாம் மனிதர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.  




-Jesslya Jessly

"எவராவது தாம் தவறே செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தம் வாழ்நாளில் எதையுமே புதிதாய் முயன்று பார்த்ததில்லை என்றுதான் அர்த்தம்"
- ஐன்ஸ்டைன்

No comments:

Post a Comment