Wednesday, August 20, 2014

செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம் :




நாஸா கவலை





செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவின் இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றின் பெயர் மார்ஸ் ரிகன்னைசன்ஸ் ஆர்பிட்டர். மற்றொன்றின் பெயர் மார்ஸ் ஒடிசி. அவற்றுக்கும் வால் நட்சத்திரத்தால் நேரடியாக ஆபத்து ஏற்படப் போவதில்லை. இந்த இரண்டும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி செவ்வாயின் செயற்கைக்கோள்கள் போல அக்கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

வால் நட்சத்திரத்தின் வால் காரணமாக இந்த இரு விண்கலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்பது தான் நாஸாவின் கவலை. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் என்பது எண்ணற்ற மிக நுண்ணிய துணுக்குகளால் ஆனது. இவை வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுபவை. காற்றில் பறக்கும் ஒரு பெண்ணின் கூந்தல் போல வால் நட்சத்திரத்தின்   வாலானது தலையில் தொடங்கி அகன்று விரிந்து அமைந்திருக்கும்..மிக அகன்ற வாலின் ஒரு பகுதி செவ்வாயின் காற்று மண்டலத்தைத் தொடலாம் என்று கருதப்படுகிறது.

ஆகவே வாலில் அடங்கிய துணுக்குகள் நாஸாவின் செயற்கைக்கோளைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய துணுக்குகள் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்று நீங்கள் நினைக்கலாம். வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். வாலின் துணுக்குகளும் அதே வேகத்தில் செல்லும். அவ்வித வேகத்தில் வரும் அரை மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட துணுக்கு கூட செயற்கைக்கோளில் அடங்கிய கருவிகளுக்கு சேதத்தை உண்டாக்கலாம்.

அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் வான் ஆராய்ச்சிக்கூடம் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர். 2013 ஆம்  ஆண்டு ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வால் நட்சத்திரம் சூரிய மண்டல வெளி எல்லையிலிருந்து சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

அது சூரியனை சுற்றி முடித்த பின்னர் வந்த வழியே திரும்பிச் சென்று விடும். சூரியனை நோக்கி வருகின்ற அது செவ்வாயைக் கடந்து வர இருக்கிறது. பொதுவில் வால் நட்சத்திரங்கள் இந்த அளவுக்கு அருகாமையில் கடந்து செல்வது கிடையாது. கி.பி 1770 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் பூமியை மிக அருகாமையில் கடந்து சென்றது.






சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி செவ்வாயை நெருக்கமாகக் கடந்து செல்ல இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் துணுக்குகளால் செயற்கைக்கோள்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து வாய்ப்பு சுமார் இருபது நிமிஷமே நீடிக்கும். ஆகவே அந்த நேரத்தில் மட்டும் தனது இரு செயற்கைக்கோளையும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது.

பூமியைச் சுற்றுகிற அல்லது செவ்வாயைச் சுற்றுகிற ஒரு செயற்கைக்கோளை பறக்காமல் ஓரிடத்தில் நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்றது. செயற்கைக்கோள்கள் பறந்து கொண்டே இருந்தால் தான் வானில் இருக்கும். இல்லாவிடில் கீழே விழுந்து விடும்.
எனவே ஆபத்து வாய்ப்புள்ள நேரத்தில் இரு செயற்கைக்கோள்களும் தமது பாதையில் செவ்வாயின் மறுபுறத்தில் அமைந்திருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது. அதாவது அவை தொடர்ந்து பறந்து கொண்டு தான் இருக்கும். 






ஆனால் அந்த இருபது நிமிஷ நேரத்தில் அவை செவ்வாயின் மறுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும். இதற்கான வகையில் அவற்றின் பாதையில் திருத்தங்கள் செய்யப்படும்.

நாஸா 2013 ஆம் ஆண்டில் செவ்வாயை நோக்கி செலுத்திய மாவென் என்னும் செயற்கைக்கோள் வருகிற செப்டம்பரில் போய்ச் சேர்ந்து அதுவும் செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். அதன் சுற்றுப்பாதையையும் இவ்விதம் தக்கபடி மாற்றியாக வேண்டும்.

 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2003 ஆம் ஆண்டில் செலுத்திய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் செவ்வாயை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் வால் நட்சத்திர ஆபத்தை மனதில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா 2013 நவம்பரில் செவ்வாயை நோக்கிச் செலுத்திய மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி போய்ச் சேர்ந்து செவ்வாயை சுற்ற இருக்கிறது. ஆகவே தனது செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க இந்தியாவின் இஸ்ரோவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
. வால் நட்சத்திரம் மூலம் தோன்றும் துகள்கள் கீழே இறங்கி செவ்வாயின் தரையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கியூரியாசிடி என்னும் நடமாடும் ஆராய்ச்சிக்கூடத்தைப் பாதிக்காதா என்று கேட்கலாம். இத்துகள்கள் செவ்வாயின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கும் போது மிகுந்த சூடேறித் தீப்பிடித்து எரிந்து விடும்.
கியூரியாசிடி சேகரிக்கும் தகவல்கள் நாஸாவுக்குக் கிடைக்கச் செய்வதில் அமெரிக்காவின் இரு செயற்கைக்கோள்களும் முக்கிய பங்காற்றுகின்றன. செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே தனது அச்சில் சுழல்கிறது. 

ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் மறுபக்கத்துக்குச் சென்று விடுகிற நேரத்தில் அது அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை.
இப்பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில் செவ்வாய்க்கு மேலே பறக்கின்ற இரு அமெரிக்க செயற்கைக்கோள்களும் கீழிருந்து கியூரியாசிடி அனுப்பும் தகவல்களைச் சேகரித்து நாஸாவுக்கு அனுப்புகின்றன. 

இந்த இரண்டும் செவ்வாயை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுவதால் எப்போதும் பூமியைப் பார்த்த வண்ணம் இருக்கும். இதன் பலனாக நாஸாவுக்குத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

 நாஸாவுக்கு உலகில் ஆங்காங்கு தகவல் சேகரிப்பு கேந்திரங்கள் உள்ளன.  எனவே பூமி சுழன்று கொண்டிருந்தாலும் இந்த தகவல் சேகரிப்புக் கேந்திரங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயைப் பார்த்தபடி அமைந்து அங்கிருந்து வருகிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்.

Thanks: Ariviyalpuram

Friday, August 15, 2014

ரத்தமும் பொய்யும் வழியும் யுத்த பூமி!





தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?


ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன்.
எதை விற்க வேண்டுமென்றாலும் குழந்தைகளை உபயோகப்படுத்தலாம் என்பது நவீன விளம்பர யுக்தி. குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், உடனே இரங்குவது மனித இயல்புதானே? அதனை வைத்து கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு பணம் வசூலிப்பதிலிருந்து, ஹமாஸுக்கு ஆதரவு திரட்டுவது வரை எல்லாமே நடக்கும்.
ஆகவே கட்டுரையும் இப்படி ஆரம்பிக்கிறது.

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”
- என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.
பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.
ஆனால், இந்த கட்டுரை ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுதியது என்று சொல்வது தான் ஒரேயடியாக இடிக்கிறது. ஏனெனில், அடிப்படை ஜர்னலிஸ்ட் ஒழுக்கம் எதுவுமின்றி, தான் தோன்றித்தனமாக, பிரச்சார கட்டுரை போல, ஒரு பக்க சார்புடனும், suppresso veri suugesto falsi என்ற அடிப்படை கருதுகோளுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு தி இந்து இந்த வேலையில் உச்சகட்டத்தில் இருந்தாலும், இவரும் அந்த உச்சகட்ட பிரச்சாரத்துக்கு முயற்சிக்கிறார்.
முதலாவது வரியிலிருந்து பக்கச்சார்புடன் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை, ஆய்வுக்கட்டுரை என்று அவரே சொல்லமாட்டார். ஆனால், இது போலத்தான் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளின் தலையங்கங்களே இருக்கும்போது, இந்த வகை பிரச்சார கட்டுரைகள் தலையங்கங்களுக்கு ஈடாகவும், ஆய்வுக்கட்டுரை என்றும் தமிழ்நாட்டு அளவில் கூறிவிடலாம்.

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
மூன்று பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உடனே கொல்லப்படவில்லை. கடத்தப்பட்டார்கள். ஜூன் 12, 2014 அன்று இவர்கள் கடத்தப்பட்டார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத்தை மேற்குக்கரை பகுதியில் அரசாங்கத்துக்குள் கொண்டுவருவதால் வரும் பிரச்னை என்று இஸ்ரேல் கூறியது. ஜூன் 14 அன்று இஸ்ரேலிய அதிகாரிகள், தங்கள் தேடுதலில், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 20 பேரை கைது செய்தார்கள். ஜூன் 15ஆம் தேதி, சுமார் 86 அரபுகளை கைது செய்தது. காஸாவுக்குள் செல்லும் வியாபார வண்டிகளும், மக்களும் நிறுத்தப்பட்டனர். இதனால், ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக எந்த இடத்திலிருந்து ராக்கெட்டுக்கள் வருகின்றனவோ அந்த இடங்களை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. அதாவது இஸ்ரேல் பதிலடியாக காஸாவுக்குள் கண்ட இடத்தில் குண்டு வீசுவதில்லை. எந்த இடத்திலிருந்து ராக்கெட் வருகிறதோ அதனை குறி வைத்து, அந்த இடத்தை மட்டுமே அழிக்க முனைகிறது. அதற்கு முன்னால், அந்த இடத்தில் குண்டு வீசி ராக்கெட் தளத்தை அழிக்கப்போகிறோம் என்று எச்சரிக்கையும் விடுகிறது. (இதனை என் டி டி வி வெளியிட்ட வீடியோவிலும் காணலாம். ஸ்ரீனிவாசன் ஜெயின் என்னும் என் டி டி வி நிருபர் காஸாவிலிருந்து வெளியேறிய பிறகு, அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டார். அதில், அந்த இடத்தில் குண்டு வீசப்போவதாக இஸ்ரேல் அறிவித்தது என்பதையும் குறிப்பிடுகிறார். கவனிக்கவும்)
ஆகவே இஸ்ரேல் மேற்குக்கரை பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களுக்காக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தொடங்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் காணாமல் போன இஸ்ரேலியர்களை தேடி மீட்பதை மட்டுமே செய்தார்கள். காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஹமாஸ் அனுப்ப ஆரம்பித்த பின்னாலே, அந்த இடங்களை இஸ்ரேல் அழிக்க முயன்றிருக்கிறது. இதனை இந்த மூத்த பத்திரிக்கையாளர் வசதியாக மறைத்துவிடுகிறார். suppressio veri!

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.
அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.
எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?
இதனை suggestio falsi என்ற வகையில் சேர்க்கலாம். இந்த வரிகளை படித்தால், இஸ்ரேல் அங்கே உருவானதால் கொல்லப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள் மட்டுமே என்பது போலவும், அகதிகளாக்கப்பட்டது பாலஸ்தீன அரபுகள் மட்டுமே என்பது போலவும் உங்களுக்கு தோன்றினால், மூத்த பத்திரிக்கையாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்று நிச்சயம் சொல்லலாம்.
உண்மை என்ன? அங்கு நடந்த போர்களில் இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள். அரபு நாடுகளில் இருந்த யூதர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக இஸ்ரேல் வந்தார்கள்.
முதலாவது 1948- அரபு இஸ்ரேலிய போரில் சுமார் ராணுவ வீரர்களாக 6000 இஸ்ரேலியர்களும், 3700 அரபுகளும் இறந்தார்கள். பொது மக்களாக இருந்த 15000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த போரில்தான் மிக அதிகமாக யூத மக்கள் உயிரிழந்தார்கள்.

அன்றிலிருந்து கணக்கிட்டால், சுமார் 25000 யூதர்கள் இந்த போர்களில் இறந்திருக்கிறார்கள். சுமார் 92000 அரபுகள் இந்த போரில் இறந்திருக்கிறார்கள். இந்த போரினால் சுமார் 10 லட்சம் யூதர்கள் அகதிகளாக அரபு பெரும்பான்மை நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த யூதர்கள் அகதி முகாம்களில் வாழவில்லை. இஸ்ரேலின் அங்கமாக எடுத்துகொள்ளப்பட்டுவிட்டார்கள்.

ஆனால், அரபு நாடுகள் இந்த பாலஸ்தீனர்களை அகதிமுகாம்களில் இழி நிலையிலேயே வைத்திருக்கின்றன.பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறிய அரபுகளுக்கு அடிப்படை உரிமைகளை கூட லெபனான், ஜோர்டன், சவுதி அரேபியா, கட்டார், குவாய்த் எகிப்து போன்ற நாடுகள் தர மறுக்கின்றன. ஜோர்டனில் பெரும்பான்மையாக இருக்கும் பாலஸ்தீன அரபுகள், தேர்தலில் நிற்க உரிமை கிடையாது. அகதி முகாம்களில் அடைக்கபப்ட்டிருக்கும் இவர்கள் அந்த அகதி முகாம்களிலிருந்து வெளியேறக்கூடாது, வெளியிடங்களில் அவர்களுக்கு வீடு விற்கக்கூடாது, வாங்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை இந்த அரபு அகதிகள் மீது மற்ற அரபு நாடுகள் விதிக்கின்றன. இந்த செய்திகளை ஏன் இந்த மூத்த பத்திரிக்கையாளர் தமிழக மக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறார்?

இதுதான் அரபுகள் அரேபியாவிலிருந்து வெளியேறி ஆக்கிரமித்துள்ள நிலங்கள். இதில் இந்த அரபு மக்களுக்கு இடமில்லையா?


map_tinyisrael


இந்த படத்தில் ஈரான், சோமாலியா அரபு நிலங்களாக குறிக்கப்பட்டுள்ளது தவறு. மற்ற நிலங்கள் பெரும்பான்மை அரபு நிலங்களே.


“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.
ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.
எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.
எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”
- என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.
இது போன்ற பிதற்றல் மூத்த பத்திரிக்கையாளர்களிலிருந்துதான் வருமோ என்னவோ? ஆனால், சுமார் 3000 வருட புராணக்கதையையும், 2000 வருட வரலாற்றையும் கலந்துகட்டி நான்கே வரிகளில் பொய்யும் புளுகுமாக சொல்லுவதும் ஒரு திறமைதான்.

ஜியோனிஸம் 1897இல் துவங்கப்பட்டது மத நம்பிக்கையுள்ள யூதர்களால் அல்ல. கடவுள் மறுப்பு யூதர்களால் அது துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் மத நம்பிக்கையுள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு போவதை எதிர்த்தார்கள். ஜூலை 1845இல் பிராங்க்பர்ட்டில் நடந்த ரப்பைகள் மாநாடு இஸ்ரேலுக்கு திரும்ப போவதை ஒருமனதாக எதிர்த்தது. ஏனெனில், மெஸியா வராமல், திரும்ப இஸ்ரேலுக்கு செல்வதே மத நம்பிக்கைப்படி தவறானதாகும். இன்றும்கூட தீவிர மத நம்பிக்கையுள்ள யூதர்கள் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பெருந்திரளாக, முக்கியமாக நியூயார்க்கில், போராட்டத்தில் கலந்துகொள்வதை பார்க்கலாம்.
மத நம்பிக்கையற்ற யூதர்களால் துவங்கப்பட்டதாக இருந்தாலும், அந்த தலைவர்கள், பெரும்பான்மை யூதர்கள் மத நம்பிக்கையுடையவர்கள் என்ற உணர்வும், இஸ்ரேலும் யூதர்களும் கலாச்சார ரீதியில் பிணைக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்தே இருந்தார்கள். இதனால்தான் அவர்கள் பிரிட்டன் உகாண்டாவில் அவர்களுக்கு ஒரு வாழ்நிலம் தருவதாக சொன்னபோதும் அதனை நிராகரித்தார்கள்.

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.
“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.
தவறு.

பிலிஸ்தினியர்களும் பாலஸ்தீனர்களும் ஒன்றல்ல. பிலிஸ்தினியர்களை பாலஸ்தீனத்தின் பழங்குடிகள் என்று ஒரு போதும் பாலஸ்தீன அரபுகள் தங்களை கூறிக்கொண்டதில்லை. பிலிஸ்தீனியர்கள் பின்னால், யூதர்களாகி விட்டார்கள். ஆகவே அவர்களை பாலஸ்தீனர்கள் என்று சொல்வது தவறானது. 2000 வருடங்களுக்கு முன்னால், ரோம அரபு போர் நடக்கும்போது, அரபு இனத்தை சேர்ந்தவர்கள் ஒரு போதும் இஸ்ரேல் நிலத்தில் இருந்ததில்லை. சிரியா அரபு நாடுதான் என்று தனது அறிவையும் பறை சாற்றுகிறார். சிரியா நாட்டில் பின்னால் வந்த அரபுகளின் ஆக்கிரமிப்பால் அது இன்றைக்கு அரபு தேசமாக கூறப்படுகிறது. அது முன்பு அஸ்ஸிரிய தேசம். ஜோஸபஸின் வரலாற்றில் சிரியர்களும் அரபியர்களும் தனித்தனியாகவே குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் இஸ்ரேலுக்கு கீழே இருப்பது அரபு தேசமல்ல. அது எடாம் தேசம். எடாமைட்டுகள் இன்று அரபு மொழி பேசுவதால் அரபியர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம். அல்லது எடாமைட்டுகள் கொல்லப்பட்டு அந்த இடத்தை அரபுகள் ஆக்கிரமித்திருக்கலாம். அதே போல இன்றைய ஈராகும் அரபு நாடு அல்ல. அது முன்பு நபாட்டு தேசம். நபாட்டியர்கள் கொல்லப்பட்டு அங்கு அரபியர்கள் ஆக்கிரமித்திருக்கலாம். இன்றைய ஜோர்டானும் அரபு தேசமாக குறிப்பிடப்பட்டதே இல்லை. அது மோயப் தேசம். அவர்கள் மோயபைட்டுகள் என்றே குறிப்பிடப்பட்டார்கள். இன்று அந்த இடங்களில் இருப்பவர்கள், அரபு மொழி பேசுவதாலேயே அரபிய நிலமாகிவிடுமா?

போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.
அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.
இன்னொரு பேத்தல்.

பெல்பார் அறிவிப்புக்கும், பிரான்ஸ் சிரியாவை எடுத்துகொண்ட பின்னாலும், அரபுகள் யூதர்களுக்கு எதிராக கலவரத்தில் இறங்கிய காரணத்தால், யூதர்கள் இஸ்ரேலுக்குள் வருவதை கட்டுப்படுத்தியது. இத்தனை யூதர்கள் மட்டுமே வரலாம் என்று வரையறுத்தது. 1000 பவுண்டுகள் பணம் கொடுத்துவிட்டு வரலாம் என்று அதிலும் காசு பண்ணியது. இதனால் யூதர்கள் உலகம் முழுவதும் உள்ள யூதர்களிடம் பணத்தை வசூல் செய்து அதனை இவ்வாறு வரும் யூதர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியது. இவ்வாறு சுமார் 82000 யூதர்கள் பாலஸ்தீனம் வந்தார்கள். எவ்வளவு பணத்தை பிரிட்டன் பார்த்திருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு இருக்க, பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியேற்ற பிரிட்டன் தீவிரமாக இறங்கியது என்று திரிக்கிறார் இந்த மூத்த பத்திரிக்கையாளர்.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………
மேலும் ஒரு “மூத்த பத்திரிக்கையாளத்தனமான” வரிகள். இதற்கான பதில்கள் இந்த பதிவிலேயே இருக்கின்றன.

மற்றொன்று,



பாலஸ்தீனத்தை கைவிடலாமா என்ற தி இந்து தமிழ் கட்டுரை

இது அதிகாரப்பூர்வமான தி இந்து தலையங்கம். முன்னரே சொன்னது போல ஆங்கில தலையங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.
காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கான நிலப்பரப்பு மிகவும் குறுகியது. திட்டமிட்டு இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திவரும் ஆக்கிரமிப்பு களால் தங்களுடைய பகுதி நிலத்தை இழந்துவரும் பாலஸ்தீனர்கள் வேறு வழியில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வசிக்கிறார்கள். அவர்களுக்காக ஆயுதமேந்திப் போராடும் ஹமாஸ் இயக்கமும் இடநெருக்கடி காரணமாகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தபடி இஸ்ரேலியப் பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குகிறது. இதுதான் உண்மை என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும், இதையெல்லாம் சாக்காக வைத்துக்கொண்டு, தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல்.
தி இந்து சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் அப்பாவிகள் தமிழ்நாட்டில் நிறையபேர் இருக்கிறார்கள். இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
இதுதான் கூகுள் மேப்பில் பார்க்கக்கூடிய காஸாவின் விண்கோள் காட்சி.


gazamap



இதில் மஞ்சளாக இருக்கும் இடங்களில் யாரும் வசிக்கவில்லை. நரைத்தது போல, இருக்கும் சற்று க்ரேயாக இருக்கும் இடங்கள் மக்கள் வசிக்கும் கட்டிடங்கள். முடிந்தால் நீங்களே gaza , israel என்று போட்டு கூகுள் மேப்பில் பார்க்கலாம். நீங்கள் பார்ப்பது போல, மஞ்சள் இடங்களே அதிகம். க்ரேயாக இருக்கும் இடங்கள் நடுவே திட்டு திட்டாக இருக்கின்றன. மஞ்சள் இடங்கள் ஏறத்தாழ பாலைவனம். அங்கிருந்து ராக்கெட் வீசினால், பதிலுக்கு வரும் இஸ்ரேலிய ராக்கெட்டுகள் அந்த ராக்கெட் தளங்களைத்தான் தாக்கும். ஹமாஸ் வேண்டுமென்றே மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து ராக்கெட்டை அனுப்பி, பதில் ராக்கெட்டுகள் மூலம் இறக்கும் மக்களை காட்டி அனுதாபம் தேட முயல்கிறது. தி இந்து போன்ற இடதுசாரி, இஸ்லாமிய பயங்கரவாத பாசக்கார அண்ணன்கள், உண்மையை மூடி மறைத்து புளுகித்தள்ளுகின்றார்கள்.
கூடவே
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட.

என்று தர்மத்தை பற்றி பாடம் எடுக்கிறது தி இந்து. களமிறங்குவது என்றால், அது இஸ்ரேலுக்கு எதிராக, அரபுகளுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இறங்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராகவும், ஈராக்கில் கொல்லப்படும் சிறுபான்மை யாஜிதி மக்களுக்காகவும், கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்க வேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை அப்பாவி என்றுதான் உலகம் சொல்லும். பாகிஸ்தானில் கொல்லப்படும் இந்துக்களுக்காகவும் கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்கவேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை பார்த்து உலகமே நகைக்கும்.


பொருளாதாரரீதியாக இந்தியாவுக்கு முக்கியமான ஒரு பிராந்தியம் மேற்காசியா. அங்கே தொடர்ந்து அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீனப் பிரச்சினைதான். எனவே, அதை நீடிக்க விடாமல் சுமுகமாகத் தீர்த்துவைப்பதில் முக்கியப் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு!


அப்படி போடு! இந்த மாதிரி இந்திய அரசுக்கு ஒரு இந்திய பத்திரிக்கை அறிவுரை செய்யுமென்றால், அதனை என்ன சொல்லலாம்? அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீன பிரச்னையா? அல்லது யூதர்களை அழிக்கத்துடிக்கும் அரபு இனவெறியா? என்றாவது இந்த பத்திரிக்கைகள் அரபுகளின் பிடிவாத குணத்தையும், யூதர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் மத/இன வெறியையும் கண்டித்திருக்கிறார்களா?


வாளாவிருந்தால் எப்படி? என்ற தினமணி தலையங்கம்

ஹிட்லரின் நாசிப் படைகளால் வேட்டையாடப்பட்டு, தங்களுக்கு என்று நாடு எதுவும் இல்லாமல் இருந்த யூதர்களுக்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரேல் என்கிற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உருவாக்க முற்பட்டதே ஒரு சரித்திர மோசடி.


இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உருவாக்க முற்படவில்லை. இந்த வரியே தவறு. இஸ்ரேலியர்கள்தான் தங்கள் நாட்டை மறுபடியும் உருவாக்கிக்கொண்டார்களே தவிர மற்ற நாடுகள் அதற்கு முடிந்தவரை தடைக்கற்களைத்தான் ஏற்படுத்திகொண்டிருந்தார்கள். 2000 வருடங்களுக்கு முன்னால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டாலும், அவர்கள் அந்த இடத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடமும், அடுத்த வருடம் இஸ்ரேலில் சந்திப்போம் என்றுதான் உறுதிமொழி எடுத்துகொண்டிருந்தார்கள். யூதர்கள் எங்கே தங்கியிருந்தாலும், தங்களை இஸ்ரேலின் மக்கள் என்றுதான் அழைத்துகொண்டார்கள். பணம் இருந்தவர்களும், பலம் இருந்தவர்களும், விரும்பியவர்களும், சமூக, அரசியல் சூழ்நிலை மாறியபோதெல்லாம் இஸ்ரேலுக்கு சென்றுகொண்டே இருந்தார்கள். இரண்டாயிரம் வருடமாக அவர்கள் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறார்கள். 1492இல் கத்தோலிக்க வாடிகனும், ஸ்பெயின் அரச குடும்பமும் இணைந்து யூதர்களை ஸ்பெயினிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றியபோதும், அவர்கள் இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே இஸ்ரேல் உருவாக்கப்படும்போது அங்கு யூதர்களே இல்லை என்பது போன்ற suggestio falsi விளையாட்டுகள் யாரை குஷிப்படுத்த எழுதப்படுகின்றன? இரண்டாம் உலகப்போர் முடியும்போது, இஸ்ரேலில் 33 சதவீத மக்கள் யூதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் பலவேறு இடங்களிலிருந்து துரத்தப்பட்டு அங்கு சென்றிருந்தார்கள்.
முதலாம் உலகப்போரின் முடிவில் அது பிரிட்டனின் மண்டேட் (mandate) கீழ் வந்தது. 1920இலிருந்து 1948 வரைக்கும் இஸ்ரேல் பிரிட்டனின் கீழ் இருந்தது. அந்த நேரத்தில் யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் பெரும் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்ப யூதர்கள் பலர் இஸ்ரேலுக்கு ஓடியபோது, அவர்கள் வரக்கூடாது என்று ஒரு வருடத்துக்கு 15000 யூதர்கள் மட்டுமே இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டம் போட்டது. அதிலும் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்தது. அங்கிருந்து தப்பி இஸ்ரேலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால், அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு மொரீஸியஸ் போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஹிட்லரின் வெறியாட்டம் அதிகரித்தபோது அங்கிருந்து தப்ப அவர்கள் உதவாக்கரை தோணிகளிலும் படகுகளிலும் இஸ்ரேலுக்கு வந்தபோதும், அந்த படகுகளை பிரிட்டனின் கடற்படையும், சோவியத் நீர்மூழ்கி கப்பல்களும் அழித்தன. போருக்கு பின்னால், ஐரோப்பாவில், 2,50,000 யூதர்கள் அகதி முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ருமன் போன்றவர்கள் கேட்டுகொண்டபின்னாலும், சுமார் 100000 பேர்களே பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிரிட்டன் யூதர்கள் இஸ்ரேலுக்கு வரக்கூடாது என்ற தன் தடையை விடவே இல்லை.
இதனால், சில யூதர்கள் பிரிட்டனுக்கு எதிராக வன்முறை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். பல பிரிட்டன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டனுக்கு எதிரான யூத பயங்கரவாதத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சம் பிரிட்டிஷ் போர்வீரர்கள் இஸ்ரேலுக்குள் நிற்கும் நிர்ப்பந்தம் தோன்றியது.

இந்த இடத்தில் யூத பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிட வேண்டும். யூதர்களிலும் பயங்கரவாத அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. 1940களில் lehl அமைப்பும் irgun அமைப்பும் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டிருக்கின்றன. இது வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட பல பிரிட்டிஷ் தலைவர்களை ஜியோனிஸத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. ஆனால், யூதர்களின் முக்கிய அமைப்பான Jewish Agency, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை 1940 முதற்கொண்டு எடுத்து வந்திருக்கிறது. வன்முறைக்கு எதிராக வன்முறை எடுக்கவேண்டாம் என்று இந்த ஏஜென்ஸி தன் உறுப்பினர்களை வெளிப்படையாக கேட்டுகொண்டிருந்திருக்கிறது. அப்படி எடுத்தால் அது உள்நாட்டு போரில்தான் முடிவடையும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், யூத வன்முறை கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளை கொலை செய்ததுதான், இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்களை தூண்டியது என்று கூறுவார்கள். இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த பின்னாலும், இஸ்ரேலில் பயங்கரவாத இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. குஷ் எமுனிம் Gush Emunim (1979-84), கெஸட் (keshet) 1981-89, Bat Ayin (2002), Brit HaKanaim (1950-53), Kingdom of Israel(1950) ஆகிய அமைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும், கடுமையாக இஸ்ரேலிய அரசால் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரிட்டன் தான் இஸ்ரேலிலிருந்து வெளியேற முடிவு செய்ததை ஐநாவுக்கு அறிவித்தது. ஐநா, United Nations Special Committee on Palestine http://en.wikipedia.org/wiki/UNSCOP என்ற அமைப்பை உருவாக்கியது. இதில் இந்த பிரச்னைக்கு சம்பந்தப்படாத நடுநிலை நாடுகள் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லாவாகியா, குட்டமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து, பெரு, ஸ்வீடன், உருகுவாய், யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்க அழைக்கப்பட்டன. (இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அப்துர் ரஹ்மான், உலக யூதர் பிரச்னையை பாலஸ்தீனத்துக்கு கொண்டுவரக்கூடாது என்று எதிர்பார்ப்பது போல பேசியிருக்கிறார்)
இந்த அமைப்புதான் இஸ்ரேலை மூன்றாக பிரித்து, ஒரு பகுதி அரபுகளுக்கும் ஒரு பகுதி யூதர்களுக்கும், ஜெருசலம் நகரை ஐநாவின் கீழும் வைத்துகொள்ள பரிந்துரைக்கிறது. அதனை ஐநாவும் ஒப்புகொள்கிறது.
இப்படி இருக்கையில் இந்த ஐந்து நாடுகளும் ஏதோ சதி செய்து அங்கு யூத அரசை உருவாக்கியிருப்பதாக எழுதியிருப்பது, தினமணிக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று சிந்திக்கவைக்கிறது.
பாலஸ்தீனியத்திலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பது மட்டுமல்ல இஸ்ரேலின் நோக்கம். இஸ்ரேலிய மக்களவையான “நெஸ்ùஸ’ உறுப்பினர் ஆயிலெட் ஷாகேத் கூறுவதுபோல, ஆண், பெண், குழந்தைகள் என்று ஒருவர்விடாமல் எல்லா பாலஸ்தீனியர்களும் அழிக்கப்படும் வரை இந்த யுத்தம் தொடரும் என்பதுதான் திட்டம்.

ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான ஆயிலெத் ஷாகெத்தை இஸ்ரேலின் சர்வாதிகாரியாக மாற்றியிருக்கும் தினமணியை பாராட்டலாம். இதே மாதிரி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உளறுவாயர்களும், குரூரமானவர்களும் எம்பிகளாகவும் எம் எல் ஏக்களாகவும் நிச்சயம் இருக்கிறார்கள். அப்படி உளறும் எல்.எல்.ஏக்கள் , எம்பிகள் உளறுவதெல்லாம், இந்தியாவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு ஆகிவிடுமா?


http://en.wikipedia.org/wiki/Ayelet_Shaked


ஆனால் ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான இவரது கருத்தையே இஸ்ரேலின் ராணுவ அரசியல் தலைமையின் கருத்தாக சொல்வது தினமணி என்ற ஒரு பத்திரிக்கை, ஒரு சாதாரண பிரச்சார கந்தல் பத்திரிக்கை நிலைக்கு இறங்கி தாழ்ந்துவிட்டதைத்தான் காட்டுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மேற்கு ஆசிய கச்சா எண்ணெயில்தான் அடங்கி இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனிய சர்ச்சையில், சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோல வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

இறுதியில் வழக்கம்போல தி இந்து ஸ்டைலில் மேற்கு ஆசியாவிலிருந்துதான் எண்ணெய் வாங்குகிறோம், ஆகவே, அரபுகள் ஆதரவாகவும் இஸ்ரேலின் எதிர்ப்பாகவும் இந்தியா மாறவேண்டும் என்று கோரிக்கை. இதுதான் உண்மையான காரணமாக இருந்தால், அதற்கு ஏன் இந்த சுற்றிவளைத்து பம்மாத்து? நேரடியாக சொல்லவேண்டியதுதானே? இங்கே ஒழிக்கப்படுகிறவர்கள் இஸ்ரேலியர்கள்தான். ஆனாலும் அரபுகள் ஆதரவாக நின்றால்தான் நமக்கு பெட்ரோல் வரும். ஆகவே அரபுகள் சார்பாக நிற்போம் என்று உண்மையை சொன்னால் அது கொஞ்சம் பச்சையாக இருக்குமோ?
சுமுகமான பேச்சுவார்த்தை என்பது நான் முன்னரே குறிப்பிட்டது போலவும், 1948இலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கேட்டுகொண்டிருப்பது போலவும் ஒன்றே ஒன்றுதான். யூத பெரும்பான்மையான ஒரு இஸ்ரேலை அங்கீகரிக்கப்பட்ட அரசாக ஒப்புக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. அதற்காக தான் வெற்றிபெற்ற நிலத்தை திருப்பி கொடுக்கவும் இஸ்ரேலிய அரசு முன்வந்திருக்கிறது. அப்படி ஒரு யூத பெரும்பான்மை அரசே இருக்கக்கூடாது, அனைத்து யூதர்களும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கோரிக்கை. இதற்கு நடுவே ஒரு பேச்சுவார்த்தை இருக்கமுடியாது. இதில் யாருக்கு நீங்கள் அறிவுரை சொல்லவேண்டும்?


இந்த தலையங்கங்கள் போன்ற பிரம்மாண்டமான பொய்களால் இந்த பத்திரிக்கைகள், இந்திய முஸ்லீம்களை வெறியேற்றுவதை தவிர வேறு எதையும் சாதிக்கப்படப்போவதில்லை.


இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இஸ்ரேல்-அரபு பிரச்னைதான் இருக்கிறது. அதனை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையாக அடையாள அரசியலாக ஆக்கி, அதனை பாலஸ்தீன இனம் என்று இருப்பதாக உருவாக்கி, அதற்கு இஸ்லாமை துணைக்கழைத்து, இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் வெறியேற்றும் வகையில் எழுதும் இப்படிப்பட்ட கட்டுரைகளால் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சாதிக்க விரும்புவது என்ன?


இதே போன்ற வரிக்கு வரி புளுகும் பொய்யும் பக்கச்சார்புடனும் எழுதப்பட்ட இன்னொரு மூத்த பத்திரிக்கையாள கட்டுரை தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” என்ற பெயரில் வெளிவந்தது. வரிக்கு வரி, அது அரபுகளை விதந்தோதியும், இஸ்ரேலியர்களை பழித்தும் எழுதப்பட்ட வக்கிரமான கட்டுரைத்தொடர்.
கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் யூதவெறுப்பின் காரணம் அது மதத்தில் ஊடுருவிய, மத நம்பிக்கையோடு ஊடுருவிய பிரித்தறியப்பட முடியாத நிலைப்பாடு. கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் அல்லாத இடது சாரிகளும், ஏன் இந்த வக்கிர நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? இவர்களுக்கும் பாலஸ்தீனத்துக்கும் என்ன சம்பந்தம்?


பாலஸ்தீனத்தில் இருப்பவர்கள் மனிதர்கள், அதனால் அவர்களுக்கு பரிந்து பேசுகிறோம் என்று பம்மாத்து விடும்போது, அதே இடதுசாரிகள் ஏன், நைஜீரிய கிறிஸ்துவர்களுக்கோ, தாய்லாந்தில் முஸ்லீம்களால் கொல்லப்படும் பௌத்தர்களுக்கோ, அல்லது கிறிஸ்துவர்களால் கொல்லப்படும், அவமதிக்கப்படும் கொரிய பௌத்தர்களுக்கோ, அல்லது முஸ்லீம்களால் விரட்டப்பட்ட காஷ்மீர இந்துக்களுக்கோ, பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் கொல்லப்படும் கிறிஸ்துவர்களுக்கோ, அல்லது இந்துக்களுக்கோ, இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட பாலி இந்துக்களுக்கோ, அல்லது ஈராக்கில் அல்குவேதாவாலும் புத்தம்புது ஒரிஜினல் பிராண்டு காலிபேட்டாலும் கொல்லப்படும் ஷியா, யாஜிதி, கிறிஸ்துவர்களுக்கோ, மனித அந்தஸ்தை ஏன் இவர்கள் தருவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ( இந்தியாவின் இந்துக்கள் எல்லோரும் பார்ப்பன பாஸிஸ பயங்கரவாதிகள் என்று நம் அறிவுஜீவிகள் அறிவித்துவிட்டதால், அதனை பற்றி கேள்வி கேட்பதில் ஒரு பயனும் இல்லை. )


உதாரணமாக இந்த செய்திகளை பாருங்கள்.


1) நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு கடந்த ஆறு மாதத்தில் 2053 பொதுமக்களை கொன்றிருக்கிறது.

2) பாகிஸ்தான் அரசு பலுச்சிஸ்தானில் நடத்தும் அடக்குமுறை ஆட்சியில் இதுவரை 1628 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,40,000 மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

3) பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியமான பக்தூனிஸ்தானில் கடந்த ஜூன் 15,2014இலிருந்து நடத்தும் ராணுவ நடவடிக்கையில்
570 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்து, அகதிகளாக கையேந்தி வாழ்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்தவர்களில் இருக்கும் இந்துக்களுக்கும் பாரபட்சமான உதவி.

4) ஈராக்கில் தோன்றியிருக்கும், இஸ்லாமிய காலிபேட் யாஜிதிகள் எனப்படும் மக்களை படுகொலை செய்யப்போவதாக அறிவித்தே செயல்படுகிறது. இதுவரை 500 ஆண்கள் கொல்லபட்டிருக்கிறார்கள், 500 பெண்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 50000க்கும் மேற்பட்டவர்கள் சிஞார் என்ற மலையில் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சுற்றி இந்த படைகள் நிற்கின்றன. அவர்களை பட்டினி போட்டு கொல்வதற்கு.
சுமார் 2 லட்சம் ஈராக்கிய சிறுபான்மை மதத்தினர் இந்த இஸ்லாமிய காலிபேட்டுக்கு பயந்து தப்பி ஓடிகொண்டிருக்கிறார்கள்
உதவிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வந்தட்போது 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தார்கள்.
இது போல இன்னும் எவ்வளவோ எழுதலாம்.


இவை எவற்றுக்காகவும் தி இந்து, அல்லது தினமணி, அல்லது மூத்த பத்திரிக்கையாளர்களோ தலையங்கங்கள் எழுதியோ, அல்லது இடதுசாரிகளோ போராடியோ பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கமாட்டீர்கள். அதே போலத்தான், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கீழ் யூதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும், மூத்த பத்திரிக்கையாளர்கள் வாய் மூடி இருப்பார்கள். பத்தோடு பதினொன்று என்று யூதர்கள் கொல்லப்பட்டால், நாலாம் பக்கத்தின் மூலையில் புரட்சிகர இஸ்லாமிய போராளிகளால், சதிகார யூதர்கள் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேலில் அமைதி வந்தது என்று எழுதினாலும் எழுதிவிட்டு மறந்துபோவார்கள்.


இது மட்டுமல்ல, இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும், முன்னாள் சிமி போராளிகளின் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களும், சமீபத்தில் உதித்த ஆம் ஆத்மி கட்சியும் தமிழகம், டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், அரபுகளுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் ஆதரவாகவும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஷாருக்கான், சோனாக்‌ஷி சின்ஹா போன்ற மும்பை இந்தி நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் எவரும் காஷ்மீர இந்துக்களுக்காகவோ, அல்லது ஈழத்தில் இறந்த மக்களுக்காகவோ, அல்லது நைஜீரிய கிறிஸ்துவ குழந்தைகளுக்காகவோ, அல்லது பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்து துரத்தப்படும் இந்துக்களுக்காகவோ பேசியதில்லை. நான் இவ்வாறு இவர்களையும் மனிதர்களாக கருதுங்கள் என்று யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. இது ஒரு அவதானம் மட்டுமே. அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பது உண்மை. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸாலும் அல்குவேதாவாலும் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக இந்திய ஷியாக்கள் போராடுவதில்லை. தெருக்களை அடைப்பதில்லை. கல்லெறிவதில்லை. அமர் ஜவான் ஜோதியை காலால் எட்டி உதைத்து உடைப்பதில்லை. ஆகவே ஈராக்கில் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக, இந்திய பத்திரிக்கைகளின் மூத்த பத்திரிக்கையாளர்கள் கட்டுரை வரைவதுமில்லை, அல்லது இந்திய அறிவுஜீவிகளோ போராட்டம் நடத்துவதுமில்லை. எவன் பேயாட்டம் போடுகிறானோ, அவனது சார்பினை எழுதத்தானே பத்திரிக்கைகள் இருக்கின்றன. Victim’s human rights are less important than the victimizer’s human rights என்பதுதானே இந்திய அறிவுஜீவிகளின் அடிப்படை கருதுகோள்.
இந்த மூத்த பத்திரிக்கையாளர்களின் இரக்கத்துக்காகவோ, அல்லது அவர்கள் கும்மிடி பூண்டியில் ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட் கம்யூனிஸ்டுகள் நடத்தும் போராட்டங்களுக்கோ காத்துகொண்டு, தங்களது குழந்தைகளை ஹமாஸ் கொல்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்க தயாராக இல்லை. அவர்கள் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கற்றுகொண்ட ஒரே ஒரு விஷயம், தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திகொள்ளவேண்டும், தங்களை தாங்கள்தான் காத்துகொள்ளவேண்டும் என்பது. (அவர்களது தெய்வமான யாஹ்வே, அவர்களது பைபிளில் சொல்லியுள்ளது போல, மெஸியாவை (மீட்பரை) அனுப்பி அவர்களுக்கு இஸ்ரேலை மீட்டுத்தருவார் என்பதைக்கூட பெரும்பான்மை இஸ்ரேலியர் நம்ப தயாராக இல்லை!) அவர்களுக்கு இரங்கி வருபவர்கள் வரட்டும். உதவுபவர்கள் உதவட்டும். ஆனால், அவர்கள் உதவுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் சொல்லை கேட்டு தங்களை காயப்படுத்திகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பவைதான்.
அந்த அறிவுரைதான் நமக்கும்.
-Sinnakaruppan

Thanks: Thinnai

Tuesday, July 22, 2014

ஃபீதாயின் ரச்சேல்



மெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப் படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.

மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]
ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இசுரேல் அரசையும் அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடும் இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள்.


ரச்சேல் கோரி


ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர் ரச்சேல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. “பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் அவள் முன்னணியில் நின்றதாக ரச்சேலை நினைவு கூர்கிறார்கள் அவளது ஆசிரியர்கள்.

குறிப்பாக பாலஸ்தீன மக்களின் துயரத்தைத் தன் சொந்தத் துயரமாகவே கருதினாள் ரச்சேல். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் தருணத்தில் உலகின் கவனம் அங்கே திரும்பியிருக்கும் போது, பாலஸ்தீனத்தை இசுரேல் விழுங்கி விடும் என்று அவள் அஞ்சினாள்.


ரச்சேல் கோரி


ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர்.
அதைத் தடுப்பது தம் கடமை என்று கருதிய ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர். பாலஸ்தீனத்தில் இசுரேல் அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காசா பகுதியில், ரஃபா எனும் சிறு நகரில் பாலஸ்தீன ஏழை மக்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது அந்த இளைஞர் குழு.
திடீர் திடீரென இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அத்தகைய சம்பவம் ஒன்றினைத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறாள் ரச்சேல்.


“நாங்கள் புல்டோசரை மறித்து நின்றோம். மண்வாரியில் எங்களை அள்ளி வீசினான் ஓட்டுனர். நாங்கள் வீட்டின் ஒரு முனையில் கிடந்தோம். மறுபாதியை இடித்துத் தள்ளியது புல்டோசர்.”

மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள். பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.

“நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஒரு அமெரிக்கக் குடிமகனைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?” என்று தன் பெற்றோருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறாள் ரச்சேல்.


ரச்சேல் கோரி தெரு

ரச்சேல் கோரி தெரு (பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் ரச்சேல் பெயரில் தெரு)


பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.


ரச்சேல் ஒரு மனிதாபிமானியா, வீராங்கனையா, தியாகியா, அல்லது போராளியா? அவள் ஒரு போராளி. ஃபிதாயீன்!


ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். பாலஸ்தீனத்தின் மீசை அரும்பாத இளைஞர்களும் இளம் பெண்களும் தம் உடலையே வெடிமருந்து கிடங்காக்கி வெடிக்கச் செய்து இசுரேலை நிலைகுலையச் செய்கிறார்கள். அவர்களுடைய இலக்கு யூதவெறி அரசு.
ரச்சேலின் இலக்கோ அமெரிக்க சமூகத்தின் அலட்சியம்; உலக மக்களின் மவுனம். வெடிமருந்துகளால் தகர்க்க முடியாத இந்த ‘எதிரியை’ முறியடிக்க அந்த அமெரிக்க மாணவி கண்டுபிடித்த அதி நவீன ஆயுதம் ரத்தம்.

“நாம் வாழும் வாழ்க்கை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தால்…” -  ரச்சேலின் கடிதம்.

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :


சிண்டி, கிரெய்க் கோரி


2007-ம் ஆண்டு நடந்த “ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வா” ஆர்ப்பாட்டத்தில் ரச்சேலின் பெற்றோர். சிண்டி, கிரெய்க் கோரி


நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.


புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

ஒலிம்பியா ஆர்ப்பாட்டம்


அமெரிக்காவின் ஒலிம்பியா நகரில் அமைதி ஆர்ப்பாட்டம்


எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.

ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க… வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…


அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.


நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003

கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் !



kamal_400
மலின் 'உன்னை போல் ஒருவன்' படத்தை சமீபத்தில் தான் டிவியில் பார்க்க நேர்ந்தது, இந்தப் படத்தை பார்க்கும் வரை கமலின் மீது ஓரளவாவது அபிமானம் வைத்து  இருந்தேன், அது சுக்குநூறாக சிதறிப்போனது இப்போது. அந்த படத்தை பார்த்த உடன் ஏற்பட்ட உள்ள குமுறலை எங்காவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. பின்னர், அந்தப் படம் வெளி வந்து வெகு நாளாகிவிட்டது; இத்தனை காலம் கழித்து இந்த விமர்சனம் தேவையா? என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் இன்னொரு எண்ணம் எழுந்து இதை எழுத வைத்துவிட்டது. இந்த ஒரு படத்தில் மட்டும் அல்ல, இதற்கு முன்னர் வந்த படங்களிலும் (உதாரணம்: ஹேராம்) இஸ்லாமியர்களின் மீது அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். இனிமேலும் அடுக்குவார் (விஸ்வரூபம்). அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணம். இதை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அது சொல்ல வந்த காரணத்தை முழுமையாக சொல்லிக்கொண்டே இருக்கும். ஆதலால் அதே அடிப்படையில், கண்டனம் காலம் கடந்த கண்டனம் என்றாலும், பதிவு செய்வது முக்கியமாகப் பட்டது.
 
 
சரி இந்த படம் அப்படி என்னதான் சொல்லவருகிறது? தீவிரவாதத்தை யார் செய்ய வேண்டும் என்பதை இந்தப்படம் சொல்ல வருகிறது. அதாவது யார் வன்முறையை கையில் எடுத்தால் அது தீவிரவாதம், யார் வன்முறையை கையில் எடுத்தால் அது வதம் என்பதையே இப்படம் கயமைத்தனத்துடன் அழுத்தமாகச் சொல்கிறது.
 
 
இந்தப் படத்தைப் பற்றி பேசுமுன் கமலின் நியாயம் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பார்க்க கீற்று இணைய இதழில் திரு.சுப வீரபாண்டியன் எழுதிய சிவனின் அருளும், ராமனின் வாளும் என்ற கட்டுரையைப் படிக்க வேண்டும்.
 
அதற்காக கட்டுரையின் முக்கிய பகுதியை இங்கே கொடுத்துள்ளேன்.
 
 
"திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, ஒரு ஏழைப் பாணனுக்காக விறகு சுமந்த கதை முதலான பல கதைகளைத் தமிழ்ப் புலவர்கள் மேடைகளிலும், ஏடுகளிலும் எடுத்துக் காட்டுவர். ஆனால் மகா பாதகம் தீர்த்த கதை என்று ஒரு கதை அதே திருவிளையாடல் புராணத்தின் 12 ஆவது படலமாக இடம்பெற்றுள்ளது. அதனைப் புலவர்களும், ஆன்மீகவாதிகளும் பல நேரங்களில் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அந்தக் கதை அவ்வளவு மோசமானது.
 
 
குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயும் அதற்கு இணங்குகிறாள். இருவரும் உறவு கொள்கின்றனர். அதனை அறிந்த தந்தை எதிர்க்கின்றார். அவரை அவர் மகனே வெட்டிக் கொன்றுவிடுகிறான். அதனால் அவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிடுகிறது. தந்தையைக் கொன்றதால் அந்தப் பாவம் ஏற்படவில்லை. பார்ப்பனராகிய ஒருவரைக் கொன்றதே பாவத்திற்குக் காரணம் என்கிறது திருவிளையாடல் புராணம். பிறகு அவன் தாயோடு வேற்றூருக்குச் செல்கின்றான். வழியில் அவன் தாயையும், அவனுடைய பொருள்களையும் கள்வர்கள் கவர்ந்து கொள்கின்றனர். இறுதியில், அவன் ஒரு பார்ப்பனன் என்பதால், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.
 
 
இதுதான் திருவிளையாடல் புராணம் கூறும் கதை. இக்கதை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. அவருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னால் வாழ்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதியுள்ள திருவிளையாடல்
புராணத்திலும் இதே கதை இதே வடிவில் இடம் பெற்றுள்ளது.
 
 
இப்புராணக் கதை இப்படி இருக்க, நாம் அனைவரும் அறிந்த ராமாயணக் கிளைக்கதை ஒன்றை இங்கு நினைவுகூர்ந்து, இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். வால்மீகி எழுதிய
ராமாயணத்தில் உத்தரகாண்டம் என ஒரு காண்டம் உள்ளது. அக்காண்டத்தின் 73 ‡ 76ஆம் சருக்கங்களில் சம்பூகன் பற்றிய ஒரு செய்தி உள்ளது.
 
 
ராமர் அரண்மனையில் மன்னராக வீற்றிருக்கும் போது, வயதான பார்ப்பனர் ஒருவர் உயிரிழந்த தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகின்றார். 14 வயது கூட ஆகாத தன் மகன் இறந்துவிட்டான் என்று கூறி கதறி அழுகின்றார். அதுகண்ட ராமரும், மற்றவர்களும் பதறுகின்றனர். ' ராமா, உன் ஆட்சியில் ஏதோ மகாபாதகம் நடந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த தேசத்தில் குழந்தைகளுக்கு மிருத்யுபயம் உண்டாகுமா? ' என்று அந்தப் பார்ப்பனர் குரல் எழுப்புகின்றார். அப்போது அங்கிருந்த நாரதர், ' உன் ராச்சியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். இந்தப் பிராமணனின் மகன் அகால மரணமடைந்ததற்கு அதுவே காரணம் ' என்று தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடித்துச் சொல்கிறார்.
 
 
உடனே தன் புஷ்பக விமானத்தை வரவழைத்து, அதில் ஏறி ஆயுத பாணியாக ராமர் புறப்படுகின்றார். விந்திய பர்வதத்திற்கு அடுத்த சைவலம் என்ற மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், சம்பூகன் என்னும் ஒரு தபஸ்வி ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறார். அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளிக்கிறான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறார். உடனே தேவர்கள் அனைவரும் 'நல்லது நல்லது ' என்று ஆர்ப்பரித்து மகிழ்கின்றனர்.
உத்தரகாண்டச் செய்திகளும், அதில் இடம் பெற்றுள்ள சில வடமொழிச்  சொற்களும், சங்கீத பீஷ்ம, சங்கீத விமர்சகாச்சாரிய, அபிநவ த்யாகப்ரஹ்ம, ஸ்ரீ உ.வே.சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உத்தரகாண்டம் தமிழ் வசனம் என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
 
 
இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?
இவற்றை எல்லாம் கடந்த எழுபது, எண்பது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லி வருகிறது. இன்னும் தொடர்ந்து சொல்ல வேண்டிய கடமையும், தேவையும் நமக்கு இருக்கின்றன."
 
இதுதான் கட்டுரையின் கரு...
 
மேலே விவரிக்கப்பட்ட சம்பவமும் அதற்கு வழங்கப்பட்ட நீதியும் போதும். படத்தில் கமல் எந்த நீதியின் அடிப்படையில் வதம் செய்கிறார் என்று புரிந்துகொள்ள.இந்த படத்தில் தன் கண்முனே பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் பாதிக்கபட்ட காட்சியை பற்றி கமல் உருக உருக விவரித்து பின்னர் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த ஒருவன், அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும் என்று கேள்வி வேறு கேட்டு தீவிரவாதிகளை தான் வேட்டையாட வந்தற்கான முக்கிய காரணமாக அதைச் சொல்லுவார்! ஆனால் இதில் கூத்து என்னவென்றால், அதே சம்பவம் ஒருவனின் மனைவிக்கு நேர்ந்து அதுவும் கமலால் விவரிக்கப்பட்ட அதே முறையில் கொல்லபடுகிறாள்; அதைப் பார்த்த கணவன் அவளை மானபங்கப்படுத்தி கொன்றவர்களை பழி வாங்கவே அவன் தீவிரவாதியாகிப் போனதாக சொல்லுகிறான். அவனை கொல்லத்தான் கமல் அந்தக் கதையை சொல்லுகிறார். மேலும் அவனின் பக்கம் உள்ள நியாயத்தை அசிங்கப்படுத்தும் விதமாக அந்த படத்தில் வரும் ஓர் இந்து ஆயுத வியாபாரி வக்கிரமாக "அதுதான் அவ போனா என்ன? மற்ற ரெண்டு பேர் இருக்காள்கள்ல" என்று சொல்லி அவனின் அத்தனை உணர்வுகளையும், கேலிக்குரியதாக ஆக்கி, இறந்து போனது ஒரு பெண், அதுவும் அவள் பாலியல் வல்லுறவு ஆளாகி  கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதை எல்லாம் தாண்டி, 'அவள் வெறும் ஒரு போகப்பொருள்; அவளுக்குப் பதிலாக, வேறு ஒருத்தி இருந்தால் அதாவது அவனின் 'உடல் பசியைத் தீர்க்க' அப்போது அவள் மரணத்தால் அவனுக்கு எந்த இழப்பும் இல்லை' என்பதைப் போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அவனுடைய மற்ற மனைவிகள் இருக்கும்போது அவன் தீவிரவாதியான செயல் தேவையற்றது என்று சொல்ல வருகிறார்.
 
 
அது மட்டும் அல்ல; இஸ்லாமியர்கள் ஒரு மனைவி போனால் எளிதாக வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண் ஒரு பொருட்டே அல்ல என்று மற்ற மதத்தினர் முன் தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கவே (ஏற்கனவே அப்படி ஒரு கண்ணோட்டம் ஊடகங்களால் உண்டாக்கப்பட்டுவிட்டது வேறு விஷயம்) இப்படி ஒரு காட்சி.
 
 
மேலும் இதில் கமல் சொல்லவரும் நீதி என்ன? இப்படி மதவெறியும், காமவெறியும், கொலைவெறியும் பிடித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நீதி கிடைக்காத காரணத்தாலும் நீதி தாமதமாக கிடைக்கின்ற காரணத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்கு பழி வாங்கப் புறப்படுவதினாலேயே சட்டம் ஒழுங்கு கெடுகிறது, அதிலும் அவன் இஸ்லாமியனாக இருந்தால் அது தீவிரவாதமாகிவிடுகிறது என்றுதான் சொல்லவருகிறார், சரி இதிலும் ஒரு பகுதி நியாயம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்! அதாவது ஒருவன் பாதிக்கப்பட்டாலும் அவன் சட்டத்தின் மூலமே அவனுக்கான நீதியைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தாலும் சரி!  இங்கு அதுவும் இல்லை.. நேரிடையாக பாதிக்கப்பட்ட  ஒருவனே பதிலுக்கு பழி வாங்குவது தவறு எனும்போது, எவனோ ஒருவன் திடீர் என்று தோன்றி, பாதிக்கப்பட்டவர்களையே (பின்னால் இப்படிப்பட்ட கருத்துக்கள் எழும் என்று தெரிந்தே ஒரு இஸ்லாமிய போலீஸ் அதிகாரியை வைத்து கொலை செய்ய வைத்தாலும், கொலைக்கான சூத்திரதாரி என்னவோ கமலாகவே இருக்கிறார். அவர்களை அழித்து தான் அவதாரம் என்பதை உறுதிப்படுத்த, அழித்து முடித்தவுடன், பின்னணி இசையில் சம்பவாமி யுகே யுகே என்று ஒலிக்கிறது) கொலை செய்ய வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
 
 
இந்திய தண்டனை சட்டத்தைப் பொறுத்தவரை ஒருவன் குற்றம் செய்திருந்தாலும் அவன் எந்த காரணத்தால் எந்த சூழ்நிலையில், அந்த குற்றத்தைச் செய்தான் என்பதைப் பொறுத்தே அவனுக்கான தண்டனை தீர்மானிக்கபடுகிறது. பல வேளைகளில் அதை தீர்மானிக்க காலதாமதமும் ஆகிறது. அதனாலேயே அதை ஒப்புக்கு சப்பாக ஆகிவிட்டு அவரவர்களுக்கு மனதில் தோன்றிய முறையில் அல்லது தன்னுடைய மத நம்பிக்கையின் அடிப்படையில், தான்தோன்றித்தனமாக தனக்கு சரியென பட்ட காரணத்தை மட்டும் முன்னெடுத்து வைத்துவிட்டு தண்டனை கொடுத்து விட முடியுமா என்ன? அரசு இயந்திரம் அப்படித்தான் கால தாமதம் செய்கிறது. ஆனால் அப்படி ஆகும் காலதாமதத்தால் எத்தனை இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியரல்லாத இளைஞர்கள் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? உங்களுடைய Point of View (விருமாண்டி) யுக்திப்படி, அவர்களுடைய வாழ்வின் இழந்த பகுதியை யார் தருவார்கள்? இதே உங்களுடைய விருமாண்டி படத்தில் Point of View யுக்தியை பயன்படுத்தி இந்த பக்கம் இருந்து, அந்த பக்கம், அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் என்று சூழ்நிலைகளை விளக்கிக் கூறி, மரணதண்டனையே கூடாது என்று அழுத்தமாகக் கூறினீர்கள். அதன்பிறகு அது படத்தில் மட்டுமே பதியப்பட்ட கருத்தாக மட்டும் இல்லாமல் உங்களுடைய சொந்த கருத்தாகவே பல இடங்களில் பதிவு செய்தீர்கள்.
 
அதே போல (அன்பே சிவம், தசாவதாரம், குருதிபுனல்) பல படங்களில் நீங்கள் சொன்ன பல கருத்துக்கள் உங்கள் தனிப்பட்ட சித்தாந்த நிலைப்பாடாகவும், உங்கள் கருத்தாகவுமே நினைத்து வரவேற்கப்பட்ட போது, அதை ஆமோதித்தீர்கள். இதை நான் ஏன் சொல்லவருகிறேன் என்றால், இதற்குப் பின்னால் பல அறிவுஜீவிகள் படத்தை படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று வாதிட வரலாம். அதற்காகவே இதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த ஒரு படத்திலும் நீங்கள் விரும்பாத ஒரு கருவை வைத்துவிட முடியாது. அதே அடிப்படையில் இது ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் என்றாலும், இதுவும் நீங்கள் விரும்பிய ஒரு கரு தான்.
 
மற்ற எல்லோருக்கும் நீங்கள் மெல்ல இயங்கும் அரசு இயந்திரத்தின் மெத்தனப்போக்கையும், மெல்ல நடைபெறும் விசாரணைகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதை கண்டிப்பதைபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. எல்லா பஜ்ஜியும் கடலைமாவுதான். ஆனாலும் வாழைக்காய், வெங்காயம் என்று உள்ளே உள்ளதுதான் முக்கியம். ஹிந்துத்துவா அமைப்புகள் மற்றும் சங்பரிவார் அமைப்பு போன்றவை இஸ்லாமியர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள்; தீவிரவாதிகள் என்றாலே அது அவர்கள்தான்; காங்கிரஸ், திமுக மற்றும் பாரதிய ஜனதா அல்லாத அரசுகள் இஸ்லாமியர்களின் மேல் பரிவு கொண்டு எந்த ஒரு விரைவான நடவடிக்கையையும் அவர்களின் மேல் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன. அந்த போலி குற்றச்சாட்டை உறுதிபடுத்தவும், பதிவு செய்யவுமே இந்த படம்.
 
மேலும் நாடே அறிந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட எத்தனைபேர் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர்? இதைச் சொல்ல உங்களுக்கு மனம் கூசவில்லையா? பெஸ்ட் பேக்கரி  சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் முழுமையான நீதி கிடைக்காமல் நொந்து போயும் மறைந்தும் வாழ்ந்துகொண்டிருகிறார்கள். உண்மைநிலைகள் அப்படியிருக்க எப்படி உங்களால் அவர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளதைப்போல சித்தரிக்கமுடிகிறது? தெரியவில்லை. ஆனால் இதே குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகள் என்று நாடே அறிந்திருந்தும், பரிவார் அமைப்புகள் மற்றும் குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைபோல பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, உமா பாரதி இன்னும் பல பாரதீய ஜனதா தலைவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களிலும் வழக்கு எப்படி உள்ளது என்பதை இந்த நாடே அறியும். அவர்களின் வழக்கு விசாரணையிலும்தானே பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டியதுதானே?.
 
பார்ப்பனர்கள் எல்லோரையும் நான் குற்றம் சொல்லவரவில்லை. எல்லா மதங்களிலும் மதவெறியர்கள் உண்டு. மதவெறியை பலர் வெளியே துப்பி விடுகிறார்கள். சிலர் அதை விழுங்கி அது செரித்து ரத்தத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் உங்களைப் போன்றோர் வியாபார தந்திரத்தால் விழுங்கியவர்களாகவும் காட்டமாட்டீர்கள்; அதன்மேல் உள்ள பாசத்தால் அதைத் துப்பவும் மாட்டீர்கள். தொண்டையில் நஞ்சாக அதை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 
 
 
ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயம் உணரமுடிகிறது, பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களின் உண்மையான ரூபம் இப்போதுதான் மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கிறது. உங்கள் மனதின் உள்ளே மறைந்திருந்த பூணூல், மெல்ல நாகமாகி, உங்கள் தோள் மேல் ஏறி கழுத்தை சுற்றிக்கொண்டு படம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. உங்களின் கருஞ்சட்டை கிழிந்து புலித்தோலாக மாறிவருகிறது. கம்யூனிசத்தையும் நாத்திகத்தையும் எழுதிய உங்கள் பேனா சூலமாகி, பழைய நூலக வாசம் மறைந்து விபூதி மண‌ம் கமழ நீங்கள் ஓர் அழிவு சக்தியாக விரைவில் விஸ்வரூபம் எடுக்கப் போவதைத்தான் இது காட்டுகிறது.
 
 
அதைத்தான் உங்கள் சமீபத்திய பேட்டியில் கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் என்று கூறியிருக்கிறீர்கள். பக்தியுடன் இருங்கள்; ஆனால் இரட்டைவேடம் போடாதீர்கள். மோடியைப் போல் ஆர்.எஸ்.எஸ். போல் நேரிடையாக எதிர்த்துப் பேசிவிடுங்கள். ரஜினியைப்போல் மதநம்பிக்கையுடன் இருந்துவிட்டுப் போங்கள். நீங்கள் மற்றும் மணிரத்தினம் போன்றவர்கள் எப்போதுமே சமுதாயத்திற்குள் அறிவுஜீவிகளைப் போல் இருந்து கொண்டு மதம் சார்ந்த கொரில்லா தாக்குதலை கலைத்துறையின் துணைகொண்டு செய்துகொண்டிருக்கிறீர்கள். இது நல்லதல்ல. மேலும் இந்த விமர்சனத்தை உங்களின் விஸ்வரூபம் உண்மை என்று நிச்சயம் நிரூபிக்கும்.
 
Thanks: Keetru

“இது ஆண்களுக்கான பெண்களின் படம்”

mathavidai


"எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை"
         
          - கவிஞர் கனிமொழி
 
 
 
மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
 
புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
 
 
பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
 
 
ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?
 
 
மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.
 
 
அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?
 
 
தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி.
 
 
 
இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.
கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.
 
மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.
 
மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.
 
மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
 
சமூகத்தில் ஆண்கள் பெண்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை.
மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.
 
நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது. 
 
Thanks: கருஞ்சட்டைத் தமிழர்  ஜனவரி 2014

Monday, July 14, 2014

ஷியா மசூதிகளை இடிக்கும் சன்னி வாகாபியிஸம்






டக்கு இராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும், வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடிமருந்துகளை வைத்து இவற்றை தகர்த்தெறிந்து அப்படையினர் முன்னேறி வருகின்றனர். வடக்கு மாகாணமான நினேவெஹ்-ல் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.


சிரியாவிலும், இராக்கிலும் சன்னி பிரிவினர் வாழும் பகுதிகளை இணைத்து சன்னி இசுலாமிய நாடு ஒன்றை பிரகடனப்படுத்த முயன்று வருகிறார்கள் இந்த அடிப்படைவாதிகள். இவர்கள் ஷியா பிரிவினரை உருவ வழிபாட்டாளர்கள் என்றும், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் வகாபிச கடுங்கோட்பாட்டு அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றனர். அந்த காஃபிர்களின் வழிபாட்டு ஸ்தலங்களை இடிப்பது தமது கடமை என்றும் கூறிக்கொள்கின்றனர்.


அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையில் இயங்கி வரும் இந்த வகாபிச பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களால் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதும், ஆயிரக்கணக்கில் அகதிகளாக வெளியேறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தாங்கள் அறிவித்துள்ள தனிநாட்டில் ஷாரியத் சட்டப்படி நடைபெறும் இசுலாமிய அரசை (கிலாஃபத்) நிறுவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவின் கூலிப்படையாக இவர்கள் செயல்பட்டு வந்தனர். ஜோர்டானில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களுக்கு சவுதி, கத்தார், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன. சிரியாவில் அப்போது இயங்கி வந்த இன்னொரு அமெரிக்க கூலிப்படை இசுலாமிய அடிப்படைவாத அமைப்பான அல் நுஸ்ரா வுடன் இணைந்து தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு துவங்கப்பட்டது.


மசூதி இடிப்பு



மேற்கத்திய உலகைப் பொறுத்தவரை, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியபோது விடுதலைப் போராளிகளாக காட்சியளித்த இவர்கள் இப்போது இராக்கில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். எண்ணெய் வளம்மிக்க மேற்காசிய பிராந்தியம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மத, இன மோதல்களை உருவாக்குவதும், பதற்ற நிலையை நீடித்திருக்கச் செய்வதும் அமெரிக்காவின் உத்தியாகவே இருக்கிறது.


சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரில் தன் சார்பில் போரிடுவதற்கு வகாபிய குழுக்களை உருவாக்கியது அமெரிக்காதான். சதாம், பின்லாடன் என அமெரிக்கா உருவாக்கி ஆதரித்த நபர்கள் பிறகு அமெரிக்காவிற்கு எதிராக மாறியதும் நடைபெற்றது. கச்சா எண்ணெய் சந்தையை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்தவர்கள் பின்னர் பிரச்சினைக்குரியவர்களாக மாறியதுதான் பிரச்சனைக்கு காரணம். இப்போதும் இராக்கில் ஆட்சியில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட ஷியா அரசை காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்த தான் பாடுபடுவதாக அமெரிக்கா சொல்வது ஏமாற்றுதானே தவிர வேறல்ல. முன்னர் சதாமின் ஆட்சியில் அமெரிக்காவின் சார்பில் இரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்துமாறு விடப்பட்டு இராக் பத்தாண்டு காலம் சின்னாபின்னமாக்கப்பட்டது; சதாம் ஆட்சியில் ஷியாக்களுடன், குர்துக்களும், கம்யூனிஸ்டுகளும் பத்து லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.


மறுபுறம் இசுலாமிய சர்வதேசியம் என்ற கற்பனையான தீர்வை முன்வைக்கும் சன்னி மார்க்க தீவிரவாதிகள் ஷியா பிரிவினரையும், சிறுபான்மை குர்துக்களையும் கொன்றொழிப்பதில்தான் தமது சர்வதேசியத்தை சாதிக்க விரும்புகிறார்கள். மையவாத இசுலாமிய மதப் பிரிவான சன்னி மார்க்கத்தினர் ஷியா பிரிவினரையோ, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் சூபி பிரிவினரையோ ஏற்றுக்கொள்வதில்லை.


மசூதி இடிப்பு


சோவியத் யூனியனின் ஆப்கான் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக இசுலாத்தின் மேன்மையை பிரச்சாரம் செய்த அமெரிக்கா இன்று அதை கட்டோடு வெறுக்க வைக்கும் பிரச்சாரத்தையும் செய்து வருகிறது. இதற்கு பலியான அடிமைகளும், இசுலாமியர்களை தமது சொந்த ஆதிக்கத்தின் பொருட்டு வெறுக்கும் இந்துமதவெறியர், சிங்கள இனவெறியர் போன்றோரும் கூட இத்தகைய அரசியல் பிரச்சினைகள் வரும்போது இசுலாம் எனும் மதமே அடிப்படையில் ஒரு வன்முறையைக் கொண்ட மதம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.  உலகில் இருக்கும் எல்லா மதங்களும் நிலவுகின்ற சமூக பொருளாதார அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கும் என்பதை இவர்கள் தமது சொந்த நலன் காரணமாக மறுக்கின்றனர்.


இதனாலேயே இந்தப் பிரச்சினையில் முதல் எதிரியான அமெரிக்காவை எதிர்க்காமல் இசுலாத்தை எதிர்க்கிறோம் என்று கூறி தமது ஏகாதிபத்திய அடிமைத்தனத்தைக் காட்டிக் கொள்கின்றனர். மறுபுறம் இத்தகைய வகாபியச தீவிரவாதிகளை மதப் போராளிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்கள் என்று இசுலாமிய மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் பிடித்திருக்கும் துப்பாக்கியும் இதர ஆயுதங்களும், போராடுவதற்கு உதவும் நிதியும் முன்பு அமெரிக்கா போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறைக்கின்றனர். இவ்விரண்டு வாதங்களும் தவறு என்பதோடு சாராம்சத்தில் இரண்டுமே அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலனுக்கு சேவை செய்கின்றன.
தங்களை கடத்திச் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் தனிமனித ஒழுக்கத்தை பேணுபவர்கள், பெண்களை கண்ணியமாக நடத்துபவர்கள் என தற்போது அவர்கள் பிடியிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பியிருக்கும் இந்திய செவிலியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் உண்ணாநோன்பு ஏற்கும் புனித ரமலான் மாத்தில் கூட தங்களுக்கு முறையாக உணவளித்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.


மசூதி இடிப்பு


‘இசுலாம் என்பது உயர்ந்த லட்சியத்துடன் கூடிய மார்க்கம் என்பதற்கு இது நல்ல உதாரணம்’ என்று சில இசுலாமிய மதவாதிகள் பேசி வருகின்றனர். அப்படி பார்த்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுவயம்சேவக்கோ, பிரச்சாரக்கோ கூட ஒழுக்கமானவனாக இருக்கும் பட்சத்தில் அவர்களையோ இல்லை இந்துமதத்தையோ ஏற்பதற்கு இசுலாமிய மதவாதிகள் தயாரா? இல்லை “அண்ணன் என்னதான் கொலை, கொள்ளை செய்தாலும் பொம்பள விசயத்தில் யோக்கியமானவர்” என்று சில ரவுடிகள் இருக்கிறார்களே, அவர்களையும் இவர்கள் ஏற்பார்களா?


தனிமனித ஒழுக்கத்தோடு சமூக நடவடிக்கை ஒழுக்கத்தையும் வைத்துதான் ஒரு தனிமனிதனை மதிப்பிட வேண்டும். லஞ்சம், ஊழல் வாங்காமல் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் ஒருவனையும், பாலியல் முறைகேடுகள் எதுவும் செய்யாமல் லஞ்சம் ஊழல் மட்டும் செய்பவனையும் ஏதோ ஒரு நல்லதுக்காக மட்டும் ஆதரிக்க முடியுமா?


ஒருபுறம் சக இசுலாமிய சகோதரனை கொன்று குவித்துக் கொண்டே தம்மிடம் சிறைப்பட்ட பிற மத, நாட்டு செவிலியர்களுக்கு முறையாக உணவு தருவது மட்டும் எப்படி மனிதத் தன்மையுடைய செயலாக இருக்க முடியும்? தமது பெண்களை கட்டாயம் புர்கா அணிந்தாக வேண்டும், வேலைக்கு போகக் கூடாது, படிக்க கூடாது, வீட்டு வேலை மட்டும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மீறுபவர்களை தண்டிக்கலாம், ஷரியத் சட்டப்படி அப்படித்தான் செய்ய வேண்டும் என்பவர்களை எப்படி வரவேற்க முடியும்? ஒரு சிலர் இவையெல்லாம் இசுலாத்தைப் பற்றி தவறான புரிதல்கள், உண்மையான இசுலாம் இது அல்ல என்று வாதிடுகிறார்கள். உண்மையான இசுலாம் எது, குர் ஆனுக்கு அத்தாரிட்டி யார் என்பதிலேயே ஒற்றுமையோ உலக அங்கீகாரமோ இல்லாத போது இதை பேசி என்ன பயன்?


mosque-3


தாம் பேசுவதுதான் இசுலாம் என்று அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட சன்னி வகாபியிசம்தான் இன்று சக இசுலாமிய சகோதர்களை அவர்கள் ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காக கொன்று வருகிறது. அவர்கள் வழிபடும் தலங்களை இடித்தும் வருகிறது. பாகிஸ்தானில் இம்மக்கள் படும் துயர் என்பது பாரிய அவலத்தை கொண்டது. ஷியா பிரிவு மக்கள் கோழைகள், முழுமையாக இசுலாத்தை கடைபிடிக்காதவர்கள் என்றெல்லாம் சன்னி மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.


இதனாலேயே இராக்கில் ஷியா மசூதிகள், தர்காக்கள் இடிக்கப்படுவதை இவர்கள் ஆதரிக்கவும் செய்கின்றனர். இவர்கள் நினைக்கும் இசுலாம்தான் சரி என்று மற்ற இசுலாமிய முறைகளை அழிப்பது சரி என்றால், பார்ப்பனிய ஆதிக்க சாதி வெறியர்கள்  தாம் பின்பற்றும் இந்துமதம்தான் சரி என்று மாட்டுத் தோல் உரிக்கும் தலித்துக்களை கொல்வதும் சரிதானே?


இப்படித்தான் அமெரிக்க ஆசிபெற்ற சன்னி வாகாபியிசம், இசுலாமிய சர்வதேசியம் பேசி இராக்கின் ஷியா பிரிவினரை நாட்டுக்குள்ளேயே கொன்று குவிப்பதுடன் பலரையும் அகதிகளாக்கி வெளியேற்றி வருகிறது. இராக்கை ஷியா, சன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை விரும்பிய அமெரிக்காதான் இதை ஆரம்பத்தில் இருந்து இயக்கி வருகிறது. அமெரிக்காவின் உத்தி மற்றும் நோக்கம் காரணமாக நடக்கும் இந்த உள்நாட்டு சண்டையில் நாம் இருதரப்பினரையும் எதிர்ப்பதே சரியாக இருக்கும்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற அடித்தளங்களில் இருந்துதான் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பை இராக்கில் கட்ட முடியும். அதன்றி இராக் மக்களுக்கு மட்டுமல்ல, வளைகுடா மக்களுக்கும் நிம்மதி இல்லை.

-    கௌதமன் 

Thanks : Vinavu