Friday, October 26, 2012

பரிசுபெற்ற இலக்கியத் தம்பதிகள்

 


A.J.M. Saly & Mubeena M. Saly
திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவும் மாவட்ட இலக்கிய விழாவும் தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி கேட்போர் கூடத்திலே கடந்த 25.10.2012 அன்று மாலை வெகு கோலாகலமாக நடைபெற்றது.
 
இதிலே தி/ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியால ஆசிரியர் திரு. ஏ.ஜே. முகம்மது சாலி மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி முபீனா முகம்மது சாலி தம்பதிகள் கவிதைப்போட்டி மற்றும் சிறுகதைப்போட்டி ஆகியவற்றிலே பரிசில்களை வென்றிருக்கின்றனர்.
 
திரு. ஏ.ஜே. முகம்மது சாலி கவிதைப்போட்டியிலே பிரதேச மட்டத்தில் முதலாம் இடத்தையும் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். திருமதி முபீனா முகம்மது சாலி சிறுகதைப்போட்டியிலே பிரதேச மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் வெற்றி பெற்றார்.
 
அதேசமயம் இவர்கள் இருவரும் 2011 ம் ஆண்டுக்குரிய போட்டிகளிலும் பங்கேற்று பரிசில்களை வென்றெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இத்தம்பதிகளின் இலக்கிய முயற்சிகள் மீதான  ஆர்வமும் திறமையும் பாராட்டுக்குரியது.
 
Jesslya Jessly

No comments:

Post a Comment