Friday, October 7, 2011

ஆசிரியர் தினம் (கவிதைகள்)




சிவப்புக்கோடு!






ழகு மிகுந்தசேலைகட்டி

அதற்கு ஏற்ற பொட்டும் வைத்து

அரைநொடியில் முகம் திருத்தி

அவசரமாய்ப் பள்ளிசெல்லும்

உயிருள்ள இயந்திரம் நான்!

** 
திகாலை கண்விழித்து

அரையிருட்டில் அடுப்பெரித்து

விடியும்வரை வாசல்கூட்டி

வெளிச்சம்வர கடைக்கு ஒடி

கட்டிலருகே தேனீர் வைத்து

கணவனைத் துயிலெழுப்பும்

கலியுகத்து நளாயினி நான்!

** 

ரவிரவாய்க் குறிப்பெழுதி

இடதுகையால் தொட்டிலாட்டி

குழாய்நீரில் துணிதுவைத்து

குளிக்கும்போது அழுதுதீர்த்து

படியேறித்துணி உலர்த்தி

பாதம்நோக மடித்துவைக்கும்

பற்றரியில்லா ரோபோ நான்!

** 

குழந்தைகளை வெளிக்கிடுத்தி

குழப்படிக்குப் பதில்கொடுத்து

அவசரத்தில் பவுடர் அப்பி

ஆட்டோவுக்குள் தலைசீவி

கடிகார முள்ளோடு

சதிராடிப் போராடும்

சாட்டையில்லாப் பம்பரம் நான்!

** 

சிவந்து வயிறுகிள்ள

பாணோடு பன்னும் வாங்கி

பாதியிலே கடித்து விழுங்கி

கதவோரம் செருப்புத்தேடி

தெருமுனையில் பஸ்பிடித்து

பந்தயத்துக் குதிரைபோலே

பாய்ந்துநானும் ஓடிவந்தால்.....



ருகைதரும் பதிவேட்டில்

இரக்கமின்றிச் சிரித்திருக்கும்- அந்த

இதயமில்லாச் சிவப்புக்கோடு!

-மூதூர் மொகமட் ராபி


II


இதுதான் கௌரவமா?





ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

நாட்கள் தோறும் மாறுசெய்து

வாரந்தோறும் வாட்டியெடுப்பீர்

தவணைமுறையில் தன்மானந்தீண்டி

ஆண்டு முழுவதும் மனம் சிதைப்பீர்

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

த்தனையும் அழகாய்ச் செய்து

ஆண்டிலொரு நாளில் மட்டும்

தோள்வலிக்க மாலையிட்டு

தொடர்ந்து வந்து வாழ்த்துச் சொன்னால்

ஆசானுக்கு அதுதான் கௌரவமா? 

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

- Jesslya Jessly

No comments:

Post a Comment