Sunday, February 23, 2014

கவிதை : உன்னைக்காணும் நேரம்!









ரு புதுமலரை முகர்வதுபோல

ஒரு இனிய பாடலை இசைப்பது போல
பிஞ்சுக் குழந்தையின் பஞ்சுமுத்தம்போல
உன்னைக்காணும் நேரம் உணர்கின்றேன்..



காலம் காலமாய் யுகம் யுகமாய்
இந்தப்பிரபஞ்சமெல்லாம் நான் தேடியலைந்த
ஏதோ ஒன்றாய் எனக்கு நீ எப்படியானாய்..?



இனிய நிலாவே -
நீ சிரிக்கும் நேரம் இந்தப்பூமியுருண்டையே
பூரித்து புதிதாகச் சுழல்கின்றதே!



ஓ! கவிதை கவிதையென்று
எத்தனை காகிதங்களை
உன் கரங்களிலே திணித்திருக்கின்றேன்
இருந்தும் என் உணர்ச்சிமிக்க
உயிர்த்துடிப்பான கவிதையே நீதானே..!


-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment