Monday, December 5, 2016

மூதூர் மொகமட் ராபிக்கு மீண்டும் முதலிடம்!





திருகோணமலை மாவட்ட இலக்கிய கலைப்பெரு விழாவும் பரிசளிப்பும் இன்றைய தினம் பிற்பகலில் திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த போட்டியாளர்களிடையே பாடசாலை மட்டத்திலும் திறந்த பிரிவிலுமாக நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் புத்தகப்பரிசுகளும் வழங்கப்பட்டன.



ஏற்கனவே திருகோணமலை பிரதேச மட்டத்தில் இவ்வாண்டிற்கான சிறுகதையாக்கப் போட்டியில் (திறந்த பிரிவில்) முதலிடத்தைப் பெற்றிருந்த எனது நண்பரும் ஊக்குவிப்பாளருமான திரு. மூதூர் மொகமட் ராபி மாவட்ட மட்டப்போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது