Wednesday, January 30, 2013

கமல்ஹாஸன் கவிதை :





 
 
குளத்தடி மீனது...
 
 
 





குளத்தடி மீனது பேய்மழை கேட்டபோல்

உளத்தடி ஞாயம் கேட்பவன் நான்

தலைப்படும் காரியம் தவறெனக் கூறிடும்

மனக்குரல்கேட்பினும் கேளாதிருப்பவன்

பிறன்மனை நோக்கையில்..

அக விளக்கேற்றையில்...

குளத்தடி மீனது பேய்மழை கேட்டபோல்..

உளமொழி நடுவனாய்

இருநதிக்கரையானய் இருப்பவன்

சுகிப்பவன் சகிப்பவன் நான்..

பெருமழைபெய்ததில் இருநதி கூடிடின்

கரையுமில்லை யானுமில்லை என்றுணர்ந்து வாடுபவன்.

நாளையெதுவாகுமென ஆகுமென

யாவரைப்போலவும் யானுமே அறிந்திலேன்

வாழும் குளத்துநீர் வாயெல்லாம் கரிக்கையில்

வரைகடல்பொங்கி பிரளயமே வந்ததென

உணர்ந்தபடி நீந்திடும்..

குளத்தடி மீனது பேய்மழை கேட்டபோல்

உளத்தடி ஞாயம் கேட்பவன் நான்..

 
-கமல்ஹாஸன்
2013.01.29
 
Thanks : Maiam

No comments:

Post a Comment