Sunday, December 22, 2013

இஸ்லாம் உண்மையிலேயே வாளால்தான் பரப்பட்டதா?








ஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்றொரு வாதம் அதன் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இதற்கான முதன்மையான ஆதாரங்களாக அவ்வாதத்தை கூறுபவர்கள் முகம்மது நடத்திய போர்களையும், பிற நாடுகளுக்கு முகம்மது அனுப்பிய கடிதங்களையும் முன்வைக்கிறார்கள். முகம்மது நடத்திய போர்கள் மதத்தை பரப்பும் நோக்கத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அடுத்து முகம்மது அனுப்பிய கடிதங்களைக் கவனிப்போம்.

மதீனாவில் முகம்மது ஓர் அரசை ஏற்படுத்திய பிறகு, தொடர்ச்சியாக போர்களை நடத்தி பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அந்த அரசை உறுதிப்படுத்திய பிறகு அண்டை நாடுகளுக்கு முகம்மது கடிதங்களை அனுப்புகிறார். இஸ்லாத்திற்கு அழைப்புவிடுத்து எழுதப்பட்டதாக கூறப்படும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் முதன்மையான செய்தி, “மதீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள், அவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் போர் தொடுக்கப்பட்டு உங்கள் நாடு கைப்பற்றப்படும்” என்பது தான். அந்த கடிதங்களில் ஒன்று ஓமன் நாட்டில் சோஹார் கோட்டையில் இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்வாறு இருக்கிறது,

Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God’s Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom.

இது அப்பட்டமாக ஓமன் நாட்டு மன்னரை மிரட்டுகிறது. இது போன்று அபிசீனியா, எகிப்து, பாரசீகம், ரோம் யமாமா, சிரியா நாட்டு மன்னர்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் மிரட்டல் தான் இருக்கிறதே அன்றி அழைப்பு இல்லை. இதைக் கொண்டு தான் இஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்கிறார்கள். இதை எதிர் கொள்வதற்காக தமிழ் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் அந்தக் கடிதங்களை அதன் வீரியத்தைக் குறைத்து “நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் ஈடேற்றம் பெறுவாய்” என்று மொழிபெயர்த்து சமாளிக்கிறார்கள்.

அபிசீனிய(எத்தியோப்பியா) மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance and believes in Allah and His Messenger. I bear witness that there is no god but Allah Alone with no associate, He has taken neither a wife nor a son, and that Muhammad is His slave and Messenger. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety,
நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக! நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.

எகிப்து மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance. Thereafter, I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam. If you accept Islam, Allah, the Sublime, shall reward you doubly. But if you refuse to do so, you will bear the burden of the transgression of all the Copts.

நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ”நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்”

பெர்சிய (ஈரான்) மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance, believes in Allah and His Messenger and testifies that there is no god but Allah Alone with no associate, and that Muhammad is His slave and Messenger. I invite you to accept the religion of Allah. I am the Messenger of Allah sent to all people in order that I may infuse fear of Allah in every living person, and that the charge may be proved against those who reject the Truth. Accept Islam as your religion so that you may live in security, otherwise, you will be responsible for all the sins of the Magians

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ”நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்

ரோம் நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Blessed are those who follow true guidance. I invite you to embrace Islam so that you may live in security. If you come within the fold of Islam, Allah will give you double reward, but in case you turn your back upon it, then the burden of the sins of all your people shall fall on your shoulders

நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

யமாமா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance. Be informed that my religion shall prevail
everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours

நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்

சிரியா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to
believe in Allah Alone with no associate, thenceafter your kingdom will remain yours

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்

இந்தக் கடிதங்கள் மூலம் இஸ்லாம் பரவியதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஒரு சில மன்னர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். சில மன்னர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எகிப்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதிலாக முகம்மதின் கோரிக்கையை நாசூக்காக மறுத்து மரியா, ஷிரின் எனும் இரண்டு அழகிய பெண்களை பரிசாக அனுப்பிவைக்கிறான் எகிப்தின் மன்னன்.  மரியாவை வைத்துக் கொண்டு (இஸ்லாமிய வரலாற்றில் இந்த மரியாவைச் சுற்றி பெரும் பூகம்பமே ஏற்பட்டது. மட்டுமல்லாமல் குரானில் பல வசனங்களை இரக்க(!) வேண்டியதிருந்தது. அதை பின்னர் பார்க்கலாம்) ஷிரினை ஹசன் பின் தாபித் என்பவருக்கு வழங்கி விட்டார். (ஷிரின் ஒரு அரவாணி என்றும் கூறப்படுகிறது) ஆக இஸ்லாத்திற்கான அழைப்பு அழகான ஒரு அடிமைப் பெண்ணோடு முடிந்து போனது.

இந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பியதுடன் பணி முடிந்து விட்டது. உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வந்த அல்லாவின் தூதன் நானே என அறிவித்துக் கொண்டு அந்த நாட்டு மக்களை இஸ்லாமுக்கு மாற்றுவதற்கு செய்த முயற்சிகள் என்ன? ஒன்றுமில்லை ஆனால் அடிபணிந்த நாடுகளிடமிருந்து முறையாக வரி வசூல் செய்யப்பட்டன. ஆளுனர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது அரசியலில் சேருமா? ஆன்மீகத்திலா?

முதன்மையான கேள்விக்கு வரலாம். 

என்னுடைய புதிய கொள்கையை அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கும், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவதற்கு என்ன தொடர்பு? இஸ்லாத்துக்கு வாருங்கள் என அழைக்கலாம், வந்தால் ஏற்றுக் கொள்ளலாம், மறுத்தால் புரியவைக்கலாம் அல்லது விட்டு விடலாம். ஆனால், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? முகம்மது ஒற்றை ஒருவரைக் கூட இஸ்லாத்துக்கு மாற்றிவிட முடியாது. ஏனென்றால் யார் இஸ்லாத்துக்கு மாற்றுவது யாரை வழிகேட்டில் விட்டு விடுவது என்பதை தீர்மானிப்பது அல்லாதான். அதிகாரத்தில் முகம்மதுக்கு எந்த பங்கும் இல்லை. இதைக் கூறுவதும் ஒரு குரான் வசனம் தான். முகம்மது தன் நெருங்கிய உறவினர் ஒருவரை சாகும் தருவாயிலும் எப்படியவது இஸ்லாத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார். அப்போது இரங்கும்(!) குரான் வசனம் முகம்மதால் ஒற்றை ஒருவரைக்கூட இஸ்லாத்திற்கு மற்றவைக்க முடியாது, அல்லாவின் உதவி இல்லாவிட்டால் என்று முகம்மதை எச்சரிக்கிறது. அப்படி என்றால் முகம்மது எகிறிக்குதித்து முஸ்லீமாக மாறவில்லை என்றால் நாட்டை பிடுங்கிக் கொள்வேன் என்று கடிதம் எழுதுவது ஏன்? இதற்கு ஆட்சி அதிகாரம் தவிர வேறேதும் நோக்கங்கள் இருந்திருக்க முடியுமா? இஸ்லாமியர்கள் என தங்களை அழைத்துக் கொள்வோர் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

Thanks: Senkodi



இதற்கு நம்மவர்களின் பதில் என்ன?

மிரட்டலா அல்லது படுகொலையா? 

-Omar Mukthar

No comments:

Post a Comment