Monday, October 21, 2013

கலாப்ரியா கவிதை



தூங்குமுன்
கழுத்தைக்
கட்டிக்கொண்டு
கதைகேட்ட
குழந்தைக்கு
கதைமுடிந்ததும்
நீதியைச்சொல்ல
ஆரம்பித்தேன்
தூக்க சுவாரஸ்யமோ
அல்லது
போதனையின் அசுவாரஸ்யமோ
போ உன் கதையை
நீயே வைத்துக்கொள் என்று
திரும்பிப்படுத்துக்கொண்டது.
சொன்னபின்
யாருக்குச் சொந்தம் கதை?
சொன்ன பின் கதையை புலனுக்குள் புகுந்து
திரும்பி வாங்கிக்கொள்ளத்தான்
கதைசொல்லிக்கு
முடியுமோ?


Thanks:கலாப்ரியாவின்  'வனம் புகுதல்' கவிதைத் தொகுப்பு

No comments:

Post a Comment