Thursday, August 18, 2011

நினைப்பதைக் கூறுங்கள்...

ஒரே நாளில் நடந்த மனதை உறுத்தும் இரு நிகழ்வுகள்!






 ம்மாதம்  (ஆகஸ்ட்) இரண்டாம் திகதி ஒரே நாளில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களைப் பாருங்கள்.

சம்பவம் 1 :

இந்தியாவின் கோவை நகரில் சாவிநகார் (Savinagar) எனும் 4 வயதுச் சின்னஞ் சிறுமி தான் வசித்து வந்த மாடிக்குடியிருப்பின் மின்தூக்கியின்  தானியங்கிக் கதவுகளுக்குள் மாட்டி உடல் நசிந்து உயிரை விட்டாள்.

சம்பவம் 2:

இங்கிலாந்தின் லண்டன் நகரில்  க்றிஸ் ஸ்டேர்ணிபோர்ட் (Chris Sternyford) எனும் 20 வயது இளைஞன் தான் வசித்து வந்த அறையிலே  கணினியில் தொடர்ச்சியாக 12 மணிநேரம் விளையாட்டில் ஈடுபட்டதன் காரணமாக அதீத  அயர்ச்சியின் காரணமாக உயிரை விட்டான். இதனை அங்குள்ள மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். (நன்றி: சுடர் ஒளி)

முதல் சம்பவத்தில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த தாயின் கவனக்குறைவினால் மாடிக்குடியிருப்பின் மின்தூக்கியின் (Lift/elevator) அருகில் வந்த சிறுமி மற்றவர்கள் பொத்தானை அழுத்தி அதனை இயக்குவதைப் பார்த்துவிட்டுத் தானும் அவ்வாறே செய்ய முனைந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. மின்தூக்கியின் தானியங்கிக் கதவுகள் இரண்டும் வேகமாக மூடிக்கொண்ட வேளையில் இதனைத் தள்ளித் தாங்கத் தெரியாதவளான அப்பாவிச் சிறுமி பாவம் பரிதாபமாக நசுங்கி செத்திருக்கிறாள்.

இரண்டாவது சம்பவத்தில் இருபது வயது இளைஞன் கணினி (computer games) விளையாட்டில் ருசி கண்டு தொடர்ச்சியாக 12 மணிநேரம் விளையாடிய பொறுப்பற்ற செயலே அவனது அகால மரணத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த இருசம்பவங்களையும் வெறுமனே வழமையாக நிகழும் விபத்துக்களாகவும் பார்க்கலாம். இதனையே இன்றைய நவீன சமூகப்போக்குகளின் குறியீட்டுச் சம்பவங்களாகவும் காணலாம்.

அதாவது குழந்தைகளைக் கவனிப்பதிலே தாய்,தகப்பன் மற்றும் வீட்டிலுள்ளவர்களின் கவனம் சிதறுகின்றளவுக்கு  இன்றைய வாழ்வியல் கூறுகள் மாறி வருவதை இவ்வாறான சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. மறுபுறம் இன்றைய இளைய தலைமுறையினர் நவீன இலத்திரனியல் சாதனங்களின் பயன்படுத்துதலில்  காட்டும் அபரிமிதமான ஆர்வத்தையும் அதிலுள்ள ஆபத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த இரு சம்பவங்களும் உங்கள் மனதிலே ஏற்படுத்தும் தாக்கங்களை எமக்கு அனுப்பலாம். வெளிப்படுத்தத் தயாராகவுள்ளோம்.
 - Jesslya Jessly

No comments:

Post a Comment